Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வேட்பாளர் ஒருவரை, மற்றுமொரு வேட்பாளர் ஊக்குவிப்பதை தடை செய்ய தீர்மானம்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரை, மற்றுமொரு வேட்பாளர் ஊக்குவிப்பதை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே இது தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஒரு வேட்பாளருக்காக இன்னொரு வேட்பாளர் பரப்புரைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த கலந்துரையாடலின் போது தேர…

  2. யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றுரைத்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையானார். மனுவில…

    • 5 replies
    • 1k views
  3. பேரின்பராஜா சபேஷ், அ.அச்சுதன், பொன்ஆனந்தம் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன், தேர்தல் பற்றிய எவ்விதப் பேச்சுவார்த்தைகளையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இராஜரெட்னம் இராஜேந்திரா திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் செய்கின்றோம் என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களின் அழிவுக்கும் யுத்தமீறல் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூற கோட்டாபய ஆளாகியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை, கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்த…

    • 1 reply
    • 374 views
  4. ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும் அவரைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மன…

    • 5 replies
    • 661 views
  5. வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார். பிரபா கணேசனால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம பாதைகள் செப்பனிடல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயத்தில் மனிதாபிமான முறையில் தீர்வு உள்ளிட…

    • 0 replies
    • 463 views
  6. நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்துடனேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்காக 13 அம்ச கோரிக்கைகளை ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து முன்வைத்திருப்பதாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை பரப்பிவரும் அமைப்புக்களில் ஒன்றான புதிய சிங்களே அமைப்பு குற்றம்சாட்டியிருக்கின்றது. நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்கள் என்றும் புதிய சிங்களே அமைப்பின் தலைவர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் டேன் பிரியசாத் கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் உட்பட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இம்முறை ஜ…

    • 1 reply
    • 598 views
  7. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மடடககளபப-நகக-பயணதத-ரயல-தடமபரளவ/46-240292

    • 0 replies
    • 709 views
  8. தேர்தல் காலத்தில் 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் : குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் தயாகமகே Published by R. Kalaichelvan on 2019-10-22 15:21:52 (ஆர்.விதுஷா) எட்டு இலட்சம் பேருக்கு தேர்தல் காலத்தில் புதிதாக சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 8 இலட்சம் பேருக்கு சமூர்த்தி நிவாரணத்தினை வழங்கியிருந்தோம். இருப்பினும் மூன்றரை இலட்சம் பேர் வரையில் சமூர்த்தி நிவாரணத்தை தேவை உடையவர்களா…

    • 0 replies
    • 256 views
  9. மக்­களை வாழ­வைக்கத் துடிப்­பவர் ஜனா­தி­ப­தியா? மக்­களை கொன்று குவித்­தவர் ஜனா­தி­ப­தியா?: திகா Published by Loga Dharshini on 2019-10-22 12:58:28 நாட்டில் யுத்தம் நடை­பெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்­கான அப்­பாவி மக்­களை கொன்று குவித்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா அல்­லது மக்­களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்­பாங்­கு­டைய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வர வேண்­டுமா என்­பதை மலை­யக மக்கள் ஒப்­பிட்­டு­பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தொழி­லாளர் தேசிய சங்­கத…

    • 0 replies
    • 288 views
  10. கோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி Oct 22, 2019 | 7:09by கார்வண்ணன் in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அகிம்சா விக்ரமதுங்க முடிவு செய்துள்ளார். வெளிநாட்டு அதிகாரபூர்வ விலக்குரிமை இருப்பதாக கூறி, அடிப்படையில், லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக, கோத்தாபய ராஜபக்சவுக…

  11. 13 அம்ச கோரிக்கை ஒரு நாடகம்- வீ. ஆனந்த சங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள் எனவும், இதனை தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாகவே பார்க்கின்றேன் எனவும் தமிழ் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். சமஸ்டி ரீதியிலான தீர்வொன்றை தர முடியாது எனவும், ஒற்றையாட்சியின் கீழ் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என ஜனாதிபதியும், பிரதமரும், தெற்கு அரசியல்வாதிகளும் அறிவித்து வரும் நிலையில், இப்படியான யோசனையொன்றை தமிழ் மக்களுக்காக முன்வைத்திருப்பதன் நோக்கம்…

    • 0 replies
    • 440 views
  12. அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவை Oct 22, 2019 | 6:48by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் இருந்து முதல் விமானம் யாழ்ப்பாணத்துக்குப் பயணத்தை மேற்கொண்டது. இதன்போது திருச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையே அந்த விமானத்தைக் கண்காணித்தது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்தகட்டமாக, யாழ்ப்பாணத்துக்கும் திருச்சிக்கும் இ…

    • 0 replies
    • 335 views
  13. ஹோமாகமை கொடகம பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரை மீகொட பொலிஸார் கைது செய்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. சந்தேக நபரான மருத்துவரை , பெண்ணின் கணவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதுடன் அவர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கொடகம பிரதேசத்தில் தனியார் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் என பொலிஸார் குறிப்ப…

    • 0 replies
    • 279 views
  14. 5 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியா: கஜேந்திரகுமார் கண்டுபிடிப்பு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐந்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளதெனவும், அவற்றின் கோரிக்கையின் ஊடாக கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியா அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் உண்மையாக இந்த 5 கட்சிகளும் இந்தியா கொடுத்த ஆலோசனையின் படிதான் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்- கோத்தாவிற்கிடையிலான தேர்தல் அல்ல. இது கட்சிகளுக்கிடையிலான போட்டி தேர்தலும் அல்ல. வல்லரசுக்களிற்கிடையிலான போட்டியாகும்…

  15. 2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019 கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவரே பெண்ணை கொலை செய்துள்ளதாகவும், அவர்பெண்ணை இழுத்துச் சென்று உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தனல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளார் என்றும் நீதி விசாரணைகளில் தெரியவந்தது. வயோதிபப் பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புகள் என்பனவும் கொலைகாரர் அபகரித்துச் சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். கோண்டாவில் நெட்டிலிப்பாய் ப…

  16. கோட்டாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது, அமெரிக்க நீதிமன்றம். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பாக தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்…

  17. (ஆர்.யசி) பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். …

  18. ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஐந்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்திய தூதுவர்களிடம் அனுமதி பெறாமல் மசலக்கூடம் போக மாட்டார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும், அப்படிப்பட்டவர்கள் எப்படி இந்தியா தடை செய்த கோட்பாடுகளை ஒன்றிணைந்து கைச்சிட்டனர் என்பது தான் கேள்வி. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. …

  19. 5 தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் பேச்சு Monday, October 21, 2019 - 6:00am யாரை ஆதரிப்பது? 23ம் திகதி முக்கிய சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் எம்.பி நேற்று தெரிவித்தார். …

  20. (ஆர்.யசி) ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, எனினும் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கையை மாத்திரம் ஏற்றுகொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜே.வி.பியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி இதனைக் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கின் தமிழ் தரப்பு 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ளனர். இதில் வடக்கு கிழக்கு தனி அழகாக்கும் கோரிக்கைக்கு நா…

    • 4 replies
    • 607 views
  21. இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. உள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ள…

  22. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த தலைவரென்றால் அது சஜித் பிரேமதாசவே என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்பாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் எதிர்நோக்க இருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலானது, முக்கியமாக இரு வேட்பாளர்களான புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் இ…

  23. (எம்.மனோசித்ரா) இராணுவ கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட ஒருவருக்கு ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினமாகும். எனவே நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு நாம் உரிய கௌவரத்தையும் மரியாதையையும் வழங்க முடியுமே தவிர நாட்டை ஒப்படைக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் பெருமலவில் இனவாத மோதல்கள் ஏற்பட்டன. அதன் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாரிய சேவையாற்றியுள்ளார். அந்த சேவையை ஒருநாளும் எம்மால் மறக்க முடியாது. எனவே சஜித் அரசாங்கத்தில் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படடுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என்றும் அவர் கூறினார். ஐக்க…

    • 0 replies
    • 468 views
  24. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று (21) நடைபெற்றது. (படப்பிடிப்பு: என்.ராஜ், எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நனவ-தனம/46-240227

    • 0 replies
    • 376 views
  25. திறக்கப்பட்டது யாழ். விமான நிலையம் – தரையிறங்கியது முதல் விமானம் Oct 17, 2019by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்திய நகரங்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இ தன் முதற்கட்டமாக சென்னையில் இருந்து, வந்த அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.