ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
கல்வி அதிகாரி திருந்துவாரா? ‘காதோடு காதாக’ அராலியூர் குமாரசாமி ‘செயலாளர் என்றால் பெரிய பதவியா? சிறிய பதவியா? அண்ணை.’ என்று கவுண்டமணியை செந்தில் கேட்பது போல பாடசாலை பக்கம் போகாத எனது நண்பன் என்னிடம் கேட்டான். நானோ ‘செயலாளர் என்பது பதவியல்ல அவர் செய்யும் கடமையில் இருக்கிறது.’ என்றேன். அவனோ ‘உங்க ஒருவர் ஓடித்திரிகிறார் வீ…வீ…வீ……..என்று ரயர் தேய ஒருவர் வாகனத்தில மாவட்டம் தாண்டி ஓடித்திரிகிறார் இவரை விட இவரின் மனைவி தான் இவரின் வேலைக்கு கொடுத்த அரச வாகனத்தில ஓடித்திரிகிறார். இந்திரன் தான் வழிவிட்டிருப்பார் என்று நினைக்கிறன்’; என்றான் யாரடா அந்த இந்திரன் என்று கேட்க முன்னர் பாடசாலை பக்கம் போகாத அவன் பறந்து சென்று விட்டான். வேட்டி உரிய உ…
-
- 1 reply
- 399 views
-
-
விடுதலைப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கக் கூடும் எனவும், முஸ்லிம் அடிப்படைவாத அச்சுறுத்தல்கள் குறித்து அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23368
-
- 5 replies
- 555 views
-
-
வாள்வெட்டில் தேடப்பட்டு வந்த முக்கியமான மூவர் கொழும்பில் கைது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். தனஞ்சயன், விக்ரம் மற்றும் பாரத் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். குறித்த மூவரும் தப்பி ஓடி கொழும்பு கொட்டேனா பகுதியில் வீடொன்றில் மறைந்து வாழ்ந்து வந்தனர். குறித்த நபர்கள் தொடர்பாக பொலிஸார் தேடுதல் நடாத்தி வந்த நிலையில் நேற்று கொட்டேனா பகுதியில் மூவரும் தங்கியிருந்த வீட்டில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந…
-
- 0 replies
- 246 views
-
-
பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் எமது முன்னோர்களால் பனம் பொருள்கள் அழகு சாதனப் பொருள்களாகவும், மருந்துப் பொருள்களாகவும் பயன் படுத்தப்பட்டு வந்தன. எனினும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப அவை ஒரு காலத்தில் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் பனம் பொருள்கள் ஊடாகக் கிடைக்கக் கூடிய நன்மைகளை இழக்க நேரிட்டுள்ளது. இதனை மீளப் பயனடையச் செய்யும் நோக்குடன் சவர்க்காரம், முகப்பூச்சு(கிறீம்), சம்போ, பற்பசை போன்ற அழகு சாதனப் பொருள்களை…
-
- 0 replies
- 412 views
-
-
ஜெனிவாவில் எதிரொலித்த காணி விவகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விரைவாக மீள்வழங்கப்படவேண்டுமென மிகவும் தீவிரமாக வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக விவாதத்தில் உரையாற்றிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் காணி விடுவிப்பு என்ற விடயத்தை முன்வைப்பதற்கு மறக்கவில்லை. முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாள…
-
- 0 replies
- 367 views
-
-
தேசிய சாமாதானப் பேரவையினால் மட்டக்களப்பு விடுதி ஒன்றில் இன்று (27.07.13) ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் மட்டக்களப்பு மங்கராமய விகாரதிபதி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். இக் கருத்தரங்கிற்குள் பிரவேசித்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இந்த கருத்தரங்கு தவறான முறையில் நடைபெறுவதாகக் கூறி குழப்பத்தில் ஈடுபட்டார். கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணி பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செயலமர்வொன்று நடத்தப்பட்டது. தேசிய சமாதான பேரவையினாலேயே இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சே…
-
- 1 reply
- 520 views
-
-
விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆனால் தமிழருக்கு கண்ணீரும் சுடுகாடும் உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க எச்சரித்திருப்பது எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிணமெரிக்கும் பொறுப்பை பெற்றுக்கொள்வதற்கான திட்டமா என ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தவிசாளரும் ஊவாமாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் வினா எழுப்பியுள்ளார். சம்பிக்க ரணவக்கவின் கருத்து குறித்து கே.வேலாயுதம் இன்று (31) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வட, கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தக்கூடாது நடாத்தினால் பாரிய விளைவுகளையெல்லாம் சந்திக்க நேரிடும் என வாய்கிழிய வீராப்பு பேசிய சம்பிக்க இந்திய …
-
- 1 reply
- 481 views
-
-
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சரத் என் சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமைப் பொறுப்பை வகித்த காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு 10 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கண்டியைச் சேர்ந்த பத்மசிறி பாலசூரிய என்பவர் கோரியுள்ளார். தம்மை சுமார் 294 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு சரத் என் சில்வா உத்தரவு பிறப்பித்திருந்தார் என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்கு ஒருவரினால் காணி மோசடி செய்…
-
- 0 replies
- 786 views
-
-
விரைவில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தனித்து ஆட்சி ரணிலுக்கு ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்கிறார் டிலான் (ஆர்.யசி ) ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மேலாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலில் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விட வேண்டும் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்…
-
- 1 reply
- 195 views
-
-
இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை அனுப்பியது சுவிட்சர்லாந்து! இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ளது. அதன்படி, அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சோதனை பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களையே இவ்வாறு அனுப்பியுள்ளது. இலங்கையின் கடுமையான பொது சுகாதார நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாகவும், COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. இலங்கை அதிகாரிகள் வழங்கிய தேவைகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்து வழங்கக்கூடிய பொருட்களின் பட்டியல் மத்திய பாதுகாப்பு, …
-
- 0 replies
- 212 views
-
-
சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும் 8 ஆயிரத்து 400 தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த நாட்டு அதிகாரிகள், எரித்திரியாவைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்களே அங்கு பெருமளவுக்கு அடைக்கலம் கோருவதாகவும் தெரிவித்தனர். அடைக்கலம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சுவிற்சர்லாந்தில் இந்த வருடத்தில் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த சுவிற்சர்லாந்தின் குடிவரவு அலுவலக அதிகாரிகள், அடைக்கலம் கோரி வருபவர்களில் சிறிலங்காவில் இருந்து வருபவர்களே இரண்டாது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 8 ஆயிரத்து 400 ஈழத் தமிழ…
-
- 0 replies
- 391 views
-
-
எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வேலையற்ற பட்டதாரிகள்..! மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டத்தில் குதித்து இன்றுடன் 55 நாட்கள் கடந்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அரசோ அதிகாரிகளோ எடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் எத்தனையோ பெயர் வந்து வாக்குறுதிகளை வழங்கினார்கள் அவைகள் அனைத்தும் வெறும் வாக்குறுதிகளாவே இருக்கின்றது. ஆனாலும் தங்களது தொழில் உரிமை கிடைக்கும் வரை போராட்டங்களை கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையுடன் தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/19064
-
- 8 replies
- 838 views
-
-
விடுதலைப்புலிகளின் எரிபொருள் தாங்கி கண்டுபிடிப்பு – சிறிலங்கா ராணுவம் [படங்கள் இணைப்பு] போர் நடைபெற்ற பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையின்போது எரிபொருள் நிரப்பட்ட தாங்கியொன்றை மீட்டெடுத்துள்ளதாக சிங்கள ராணுவம் கூறியுள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் இப்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் நிரப்பட்ட தாங்கியும் பல தகர டிரம்களில் அடைக்கப்பட்ட இயந்திர எண்ணெய்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி 25,000 லீற்றர் பெற்றோலும், 230 லீற்றர் கொள்ளளவுடைய 9 இயந்திர எண்ணெய் டிரம்களும் புதைக்கப்பட்ட நிலையில் 56 ஆவது பிரிவு படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை புதுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரச அதிபர் தலைமையிலும் கேரதீவு உப்பள விவகாரம் தோல்வியில் முடிவு தென்மராட்சி தெற்கு கேரதீவு கடலேரியில் உப்பளம் அமைக்க யாழ்.அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலும் தோல்வியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தென்மராட்சி பிரதேச செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின்போது கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அப் பகுதி கமக்கார அமைப்புகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள் போன்றவையின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று யாழ் செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கேரதீவில் உப்பளம் அமைப்பது தொடர்பான கலந்…
-
- 0 replies
- 486 views
-
-
யாழ்.மாநகர சபையில் ஆட்சிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வறிவித்தலை கடந்த யூலை மாதம் 29 ஆம் திங்கட்கிழமை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யின் ஆட்சியில் இருக்கும் குறித்த யாழ்.மாநகர சபையானது எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமையுடன் ஆட்சிக்காலம் முடிவடைகின்றது. இந்நிலையில் அதனது ஆட்சிக்காலத்தினை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளதான சிறிலங்கா சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரினை மூலம் அறிவித்தர் யாழ்.மாநகர சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. http://w…
-
- 1 reply
- 336 views
-
-
சர்வதேச தரத்திற்கு நிகராக வடக்கு மற்றும் கிழக்கில் மூன்று வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் - மன்னார், மன்னார் - வவுனியா, தம்புள்ள - திருகோணமலை ஆகிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உள்நாட்டு அனுமதி மற்றும் காணி சுவீகரிப்பு போன்…
-
- 4 replies
- 572 views
-
-
கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச் சென்ற படகோட்டி இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கெளதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கெளதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கெளதார…
-
- 1 reply
- 554 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு செயல் வடிவம் கொடுப்பதிலும் அதன் கட்டமைப்பிற்கு வடிவம் கொடுப்பதிலும் ஆர்வமாக உள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரனுக்கு இது குறித்து அனுப்பியுள்ள கடிதத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கும் தங்களது பிரித்தானிய பிரதிநிதிகளுக்கும் இடையில் 27, ஜூலை அன்று நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஜனநாயகப் பண்புகளைக்கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய, அகிம்சா வழியில் உருவாகின்ற, அடிப்படை அரசியல் தளத்தில் இருந்து சகலரினதும் பங்குபற்றுதலு…
-
- 3 replies
- 541 views
-
-
மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுவையாக நோக்குகின்றனர் – மஹிந்த ராஜபக்ஷ மத்தள விமான நிலையத்தை சிலர் நகைச்சுiபாயக நோக்குகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், விமான நிலையத்தின் ஊடாக நாடு அடைந்துள்ள நன்மைகளை எவரும் கண்டுகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப முடியாத விமானங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இன்று அந்த நிலை மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார் கொழும்புத் துறைமுகம் சர்வதேச தரத்தில் காணப்படுவதாகவும் …
-
- 2 replies
- 577 views
-
-
யாழ்., வவுனியா தேர்தல்களிலும் அடையாள அட்டை வழங்கப்படாததால் பாதிப்பு மலையகத் தமிழ் மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்காமல், அவர்களின் வாக்குரிமைகளைப் பறித் தெடுக்கும் சதி இந்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவருகின்றது என்று தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் "கபே" அமைப்புத் தெரிவித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆயிரக்கணககான தோட்டப்புற மக்கள் தேசிய அடையாள அட்டைகள் இன்மையால் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்களிடம் இருந்த தற்காலிக அடையாள அட்டைகள் வாக்களிப்பு நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் "கபே" மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஊடகப்பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கூறியவை வருமாறு: நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் த…
-
- 1 reply
- 613 views
-
-
புலிகளின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும்! - என்.சிறீகாந்தா [Saturday 2017-05-06 18:00] 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது. கோண்டாவில் அன்னங்கை வீதியில் அவர் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் இந்த நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண அமைச்ச…
-
- 0 replies
- 591 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை தற்கொலைத் தாக்குதல் ஒன்றின் மூலம் படுகொலை செய்வதற்காக வகுக்கப்பட்டிருந்த திட்டம் ஒன்று காவல்துறையால் இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கணவர் ஒரு பயங்கரவாதியல்ல என்று இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் கணவர் கோபி பிள்ளை ஒரு பயங்கரவாதியாவார். எனவேதான் நவநீதம்பிள்ளையும் அவரின் பாதையை பின்பற்றி விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார் என்று இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியிருந்தார். இதன் அடிப்படையிலேயே அவர் திருகோணமலைக்கான விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியை சந்தித்ததாகவும் ரணவக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள இலங்கையின் முன்னாள் ராஜதந்திரியும் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவருமான தயான் ஜயதிலக்க, கோபி பிள்ளை தென்னாபிரிக்காவில் வெள்ளை இன நிறவெறியா…
-
- 1 reply
- 499 views
-
-
கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரிசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய வினோதன் ராஜேந்திரனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது 30 குற்றச்சாட்…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப விழா ஒத்திவைப்பு! புதிய பல்கலைக்கழகமான வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வு மறு அறிவித்தல் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் புதிய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஆரம்ப ஆரம்ப விழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்தார். கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விழாவை மறுஅறிவித்தல் வரையில் ஒத்தி வைக்க தீர்மானிக்கப்…
-
- 0 replies
- 161 views
-