ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்தில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிக் துப்பாக்கி ரவைகள் துளைத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நுவரெலியாவைச் சேர்ந்த குமார (வயது 22) என்பவரே மரணமானவர். இவர் இராணுவத்தின் 66 ஆவது பிரிவின் 18 ஆவது கஜபாகு றெஜிமன்ட் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து வரப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilthai.com/?p=28211
-
- 2 replies
- 1.2k views
-
-
கடற்படையின் பலம் அதிகரிக்கப்படுகிறதா? -விதுரன்- வடக்கே களமுனையில் சற்று மந்த நிலையே காணப்படுகிறது. எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட பகுதி கடந்த வாரம் முழுவதும் மிகவும் அமைதியாகவேயிருந்தது. பாரிய மோதல்களோ, சிறுசிறு நகர்வுகளோ கூட இடம்பெறவில்லை. வடக்கு - கிழக்கில் பருவ மழை பொழியத் தொடங்கப் போகிறது. கடும் மழைபெய்யும் பட்சத்தில் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. அத்துடன், கிழக்கில் பெரும் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதால் அங்கு ஆளணியை முடக்க வேண்டிய கட்டாய நிலை படையினருக்கேற்பட்டுள்ளது. பருவமழையும் ஆளணிப் பற்றாக்குறையும் வடக்கில் பாரிய படை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாததொரு சூழ்நிலையை அரசுக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க மஹிந்த அரசு முயற்சி செய்கிறது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சா ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசின் தூர நோக்குள்ள மஹிந்த சிந்தனையை தமிழ் அரசியல் கட்சிகள் குழப்பிவருவதாக தெரிவித்த அவர் காணிகளை மீள பதிவு செய்வதனுடாக தமிழர் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். காணிப் பதிவு வடகிழக்கு மாத்திரமல்ல நாடு முழுவதும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தனியான அரச சுற்றுநிருபம் அனுப்பப்பட்டு காணிப் பதிவுகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு காணிகள் மீள்பதிவு செய்யம் படும் போது வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் காணிகள் அபகரிக்கும் திட்டத்திற்காக வட…
-
- 0 replies
- 585 views
-
-
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்க கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் ஒன்று கூடியவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரி பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு நடைபயணத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்தி வரை சென்று, இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைக்கழக வாயிலை நடைபயணம் அடைந்தது. பல்கலைகழக வாயிலிலும் சில நிமிடங்கள் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெற்று நடைபயணம் நிறைவடைந்தது. வல்லமை சமூக மற்ற…
-
- 0 replies
- 289 views
-
-
23 FEB, 2024 | 10:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தேசிய அடையாளம் மற்றும் நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆகிய இரண்டு விடயங்களையும் பாதுகாத்துக்கொண்டால், இந்த நாடு சிங்கப்பூரையும் மிஞ்சிய நாடாக இருந்திருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சின் கீழ் இருந்துவரும் தேசிய சமாதானம் மற்றும் நல்லிணக்க பணியகத்தின் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற மாவட்ட சகவாழ்வு சங்கம் அமைக்கும் செயற்பாடுகளின் மூன்றாவது கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இற்றைக்கு…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி விஜயம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் , சோல் பேர்க் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் வவுனியா சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் அங்கிருந்த எ9 நெடுஞ்சாலை மூலம் கிளிநொச்சி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விஜயம் செய்யும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் விடுதலை புலிகளின் சமாதான செயலக பணிப்பாளார் புலித்தேவனை சந்தித்து பேசவுள்ளார். எனினும் இச் சந்திப்பு வழமையான தொன்றென தெரிவிக்கப்படுகிறது
-
- 1 reply
- 1.5k views
-
-
February 20, 2019 மறைப்போம் அழிப்போம் என கட்சி நலன் சார்ந்து செயற்படுபவர்களின் மத்தியில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் இடம்பெற்றிருந்ததன் அடையாளமாக காணப்படும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு சூட்டப்பட்ட மைதானத்தின் பெயரை மறைக்கும் அல்லது மாற்றும் கங்கணம் ஏற்புடையது அல்ல என முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரு வார்த்தைக்குள் சிந்திக்க தோன்றியும், மக்களை நேசித்து சுயநலன்களை முன்னெடுக்காமல் மக்களின் நலனுக்காக அபிவிருத்திகளை முன்னிறுத்தி செயற்பட்டவரின் பெயரை மூன்று தசாப்தங்களின் பின்பாக, மாற்…
-
- 0 replies
- 262 views
-
-
அவர்களைக் கைது செய்யக் கோருகிறது ஜே.வி.பி. அவசரகாலச் சட்டத்ததைப் பயன்படுத்தி அராஜகத்திலும்,ஊழல்,மோசடிகளில
-
- 0 replies
- 769 views
-
-
முன்னாள் புலிகளின் உறவினரை துன்புறுத்தும் புலனாய்ப்பிரிவு – சிறிலங்கா கார்டியன் Wednesday, November 2, 2011, 10:48 சிறிலங்காப் படையினரிடம் சிறைப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்கள் சிறிலங்கா அரசின் தீவிரவாத முறிடிப்பு பிரிவு காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே மாதம் போரின் இறுதியில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்களிடம் சென்று தீவிரவாத முறியடிப்பு காவல்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர். சரணடைந்த இந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பேருந்து ஒன்றில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றுக்கு ஏ…
-
- 0 replies
- 518 views
-
-
சட்டபூர்வமான புலனாய்வு செயற்பாடுகளையே முன்னெடுத்தோம் – என்கிறார் கோத்தா போரின் இறுதிக்கட்டத்தில் தனது கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டபூர்வமானவையாகவே இருந்தன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் “எலிய” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அப்போது, பல புலனாய்வு அமைப்புகள் பணியாற்றின. அந்த காலத்தில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்களின் செயற்பாடு மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. சிலர் கூறுவது போன்று, எமது அரசாங்கத்தில், வெ…
-
- 1 reply
- 458 views
-
-
இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின் அரசியற் பலம் எவ்வாறானது?!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜ திங்கட்கிழமைஇ 07 நவம்பர் 2011இ 07:48.32 யுஆ புஆவு ஸ தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளைக் செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது. தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும்இ புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது. சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில்இ இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பம…
-
- 3 replies
- 1k views
-
-
இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ். பல்கலையிலிருந்து ஆரம்பம் March 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள குறித்த ஊர்தி பவணி வடமாகாணம் முழுவதும் சென்று மீண்டும் பல்கலைகழகத்தை வந்தடைந்து பேரணியில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2019/115826/
-
- 0 replies
- 496 views
-
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் வனவிலங்கு பரிதாபமாக பலி முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வன விலங்கொன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நேர்ந்துள்ளது. குறித்த விலங்கின் உடல் ஏ9 வீதியிலிருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த வன விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த விலங்கு இரை தேடி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்டபோது விபத்து நேர்ந்திருக்கலாமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வடக்கில் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. சாரதிகளின் கவனயின்மையே இவ்வாறான விபத்துக்கள் பதிவாக காரணமாக அமைகின்றது. http://atha…
-
- 0 replies
- 468 views
-
-
15 APR, 2024 | 11:47 AM யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள மகிழங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்களும் அவர்களது தாத்தாவும் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்றைய தினம் (14) இரவு சாவகச்சேரி பகுதியிலிருந்து தனது இரண்டு பேரப் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற தாத்தா, மகிழங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டபோது, பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர்களது தாத்தா என மூன்று பேரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்…
-
- 0 replies
- 617 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் புதிய பிரதமராக தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவை பிரதமராக்க இரகசிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள வார ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 843 views
-
-
பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வ…
-
- 0 replies
- 904 views
-
-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விஷேட வர்ததமானி அறிவித்தல் மூலம் விடுவிக்கப்பட்ட காணிகள் மீது தொடரப்பட்ட வழக்கினை இலங்கை உயர்நீதிமன்றம் சட்டமாதிபரின் வாதத்தினை தொடர்ந்து இரத்துச் செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் மீண்டும் குடியேறலாம். - தகவல் sooriyanfm காலை செய்திகள். காலையில் மனம் நிறைந்த செய்திகள்!!
-
- 36 replies
- 2.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 23 APR, 2024 | 06:26 PM ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெறடற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இரு…
-
-
- 2 replies
- 435 views
- 1 follower
-
-
இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிய பன்னிரு வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு அகவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 09:14 GMT ] [ நித்தியபாரதி ] "எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார். இவ்வாறு AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிவருகின்றனர். சிறிலங்காவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள காடுகளில் 2009 ஏப்ரல், மே மாதங்களில் …
-
- 0 replies
- 564 views
-
-
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்! [Wednesday 2015-07-15 19:00] நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் அரச அச்சகத்திற்கு தேவையான அனுமதி நேற்று வழங்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களில் குறித்த வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=135928&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 1.5k views
-
-
April 2, 2019 சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல தயாராக இருந்ததாக தெரிவித்து 11 இளைஞர்கள் புத்தளம் களப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புத்தளம் காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் உட்பட குறித்த 11 பேரும் கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தமான நிலையில், வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வ…
-
- 0 replies
- 336 views
-
-
Published By: VISHNU 01 MAY, 2024 | 09:37 PM வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் எ…
-
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச்சாசனம் போராட்டம் என்கிறார் அமைச்சர் சந்திரசேகரன் வீரகேசரி நாளேடு தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கூறி ஒப்பந்தத்தினை மேற்கொண்டதன் மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. மூன்று தொழிற்சங்கங்கள் இந்த அடிமைச் சாசனத்தை எழுதியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் 300 ரூபா அடிப்படை சம்பளம் கோரி ஒரு வருடத்துக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். வாழ்க்கை செலவு மலைபோல் உயர்ந்துள்ள நிலையில் இன்று 200 ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது வேடிக்கை. இதனை ந…
-
- 3 replies
- 1.1k views
-
-
விஜயபாகு காலாட்படைப் பிரிவினரின் நலன்புரிச் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்காக குருநாகலில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதற்கான 50 ரூபா நுழைவுச்சீட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் படையினரால் கட்டாயப்படுத்தி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குருநாகலில் உள்ள போயகன மோட்டார் ஓட்டப் பந்தயத் திடலில் இந்தப் போட்டி மார்ச் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பந்தயத்திற்கான 50 ரூபா பெறுமதியான டிக்கெட் படையினரால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த டிக்கெட் அதிஷ்டலாபச் சீட்டாகவும் குலுக்கப்படவுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் வாகனத்தில் சென்றவர்களை மறித்த படையினர் மே…
-
- 1 reply
- 631 views
-