ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
வணக்கம் திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் குபேரன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் மீது வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, நாங்கள் தமிழர் பேரவை மீது சேறு பூச முற்பட்டு உங்களிடம் கருத்துக் கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்ததற்காகத்தான் உங்களைப் பற்றிய ஆக்கத்தை எழுதியதாகக் குறிப்பிட்டீர்கள். உங்களிடம் நாம் கருத்துக் கேட்டது என்பது உண்மை. ஆனால் ச…
-
- 0 replies
- 2k views
-
-
புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(03) ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105800-2014-04-04-08-43-51.html
-
- 2 replies
- 591 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களப்படையினர் இடித்து தரைமட்டமாக்கி அழித்துவருவது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் அந்த இடிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களில் படையினர் தற்போது படை முகாம்களை நிறுவி வருகின்றனர். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், மற்றும் வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியன இவ்வாறு முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு சிங்கள படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. Eelanatham
-
- 3 replies
- 959 views
-
-
புதிய தேர்தல் முன்னணிக்கு பேரவை இணங்கி வராது முதலமைச்சர் அடித்துச் சொல்கிறார் கஜேந்திரகுமார் – சுரேஷ் பிரேமச்சந்தி ரன் இணைந்து உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பேரவை இதற்குப் இணங்காது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ் வரன் தெரிவித்தார். ‘‘தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் அரசியல் முன்னணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூறியிருக்கின்றார் களே. என்று வ…
-
- 0 replies
- 376 views
-
-
அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம் இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும். தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, கொமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை கனடா நிறுத்தியுள்ளது குறித்து கொமன்வெல்த் அமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா ஏமாற்றம் வெளியிட்டுள்ளார். கொமன்வெல்த் அமைப்புக்கு சிறிலங்கா தலைமை தாங்கும் அடுத்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது குறித்து கமலேஸ் சர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பரஸ்பர மற்றம் தன்னார்வ நிதியம் கொமன்வெல்த் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது. தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கொமன்வெல்த் நிதியத்துக்கு கனடா நீண்டகாலமாக – பெறுமதிமிக்க உதவிகளை அளித்து வந்த…
-
- 4 replies
- 326 views
-
-
அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் மற்றும் அந்த சமாதான முயற்சிகள் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய செவ்வி. உங்களின் தென்னாபிரிக்கப் பயணத்தின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே நாம் அங்கு சென்றோம். தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவே இது. கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் கொமன்வெல்த் மாநாட்டின் பக்க நிகழ்வாக தென்னாபிரிக்காவின் முன்முயற்சியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அப்போது தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா எனது தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 1 reply
- 620 views
-
-
வடக்கு முதலமைச்சர் குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் செயற்பட வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அவர் தொடர்ந்தும் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். தமது கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளார். தனது தேர்தல் அறிக்கையில் இருந்து கூட்டமைப்பு பிளவுபடாது இருந்திருக்குமேயானால், அதில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது எனவும், ஒற்றையாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டமை, மிகப்பெரிய தவறு எனவு…
-
- 2 replies
- 364 views
-
-
http://www.yarl.com/articles/files/100727_ira_sathiyanathan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 486 views
-
-
தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம்: சம்பந்தன் 'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் …
-
- 0 replies
- 287 views
-
-
ரூபாய்க்கு நிகரான... வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் ! ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாயாகவும் கொள்விலை 355.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. மேலும் பவுண்ட்ஸ் ஒன்றின் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும் கொள்விலை 435.13 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்விலை 435.13 ரூபாய் விற்பனை விலை 452.22 ரூபாயாகவும், அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 259.26 ரூபாயாகவும் கொள்விலை 247.82 ஆகவும் பதிவாகியுள்ளது. https://athavannews.com/2022/1287763
-
- 1 reply
- 307 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.உருத்திரகுமாரன் திகதி: 04.08.2010, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான முழுமையான செவ்வி கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தனது முதலமர்வினை மேற்கொண்டதன் பிற்பாடு அதன் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலமர்வில் தனக்கான அரசியல் அபைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும் உடனடியான முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழுஇ அரசியல் அமைப்பு உபகுழுஇ கல்வி, பண…
-
- 2 replies
- 693 views
-
-
'இனப்படுகொலையில் - அரசியல் தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டெழுவது கடினம்' இலங்கையில் நடக்கும் அரச செயற்பாடுகள் இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலே.ஆனால் இதனை சர்வதேச விசாரணையுடன் தொடர்புபடுத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இலங்கைப்பாராளுமன்றத்திலேயே இங்கு நடப்பது இனப்படுகொலையே என்பதை நானும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ்பிறேமச்சந்திரனுமே பேசியிருந்தோமென்பதை மறக்க கூடாதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அரசு சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வர அனுமதி மறுத்தாலும் சர்வதேச ரீதியினில் விசாரணைகள் நடக்கும். ஏற்கனவே பல நாடுகள் தொடர்பில் அவ்வாற…
-
- 0 replies
- 644 views
-
-
சிறீலங்கா இராணுவத்தினருக்கு மீண்டும் அமெரிக்க இராணுவ பயிற்சிகள் திகதி:12.08.2010, சிறீலங்காஇராணுவத்தினருக்கு மீண்டும் அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராணுவ அகடமிகளில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள சிறீலங்காபடையினருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் காரணமாக அமெரிக்கா இந்தத் தடையை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிராக தடை விதிப்பதற்கு உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். குறித்த அரச சார்பற்ற நிறுவன தலைவர்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக திவயின ச…
-
- 1 reply
- 535 views
-
-
வடக்கு, மேற்கு, மலையகத்தில் தனித்தும் சேர்ந்தும் சேவல் கூவும் க.ஆ.கோகிலவாணி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில், சில பகுதிகளில் தனித்தும் சில பகுதிகளில் ஏனையக் கட்சிகளுடன் கூட்டாகவும் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக, மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது, “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது, எதிர்வரும் உள்ராட்சிமன்றத் தேர்தலில், சில தொகுதிகளில் தனித்து தனது சேவல் சின்னத்திலும் சில பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய…
-
- 0 replies
- 193 views
-
-
இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம் -ஜெயராஜ்- யுத்த நிறுத்த மீறல் என்பது தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்; யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள,; அனுமதிகள் என்பனவற்றிற்கும் அப்பால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்ற வடிவத் தினை முற்றுமுழுதாகப் பெற்றுக்கொண்டு விட்டது. இவற்றிற்குத் தொடர்ச்சியான பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டமுடியும். அதாவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான நிழல் யுத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகள் அண்மைக்காலத்தில் மிகத் தீவிரம்பெற்று இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் காடுகளை அழித்து மரமுந்திரிகைச் செய்கை: சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ! திகதி:21.08.2010 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழித்து அங்கு மரமுந்திரிகையை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரச வளங்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ணவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அரச அதிகாரிகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வடபகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிளைப் பணித்துள்ளார். முன்னர் இந்த நிலப்பரப்பில் மரமுந்திரிக…
-
- 0 replies
- 568 views
-
-
கொக்குத்தீவு விசமிகளால் தீ வைத்து எரிப்பு : பறவைகள், பறவை முட்டைகள் எரிந்து நாசம் மட்டக்களப்பில் கொக்குத் தீவு என அழைக்கப்படும் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவுள்ள பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம், பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்குத்தீவு என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசாமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் உடன் லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து, தொடர்ந்து கழக உறுப்பினர்களினால்…
-
- 0 replies
- 273 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிபந்தனையற்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து உடன் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான 'செங்கடகல பிரகடனத்திற்கு' மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள் கைச்சாத்திட்டனர். செங்கடகல பிரகனடத்திற்கு கைச்சாத்திடல் இன்று கண்டி நகரில் உள்ள கெப்பட்டிபொல நினைவு தூபி அருகில் இடம்பெற்றது. பிரகடனத்தில் சிவில் அமைப்பினர், பொது மக்கள் உட்பட பலர் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி பதவி விலகல், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், சர்வக்கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக செங்கடகல பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய …
-
- 13 replies
- 726 views
-
-
ஆரியவதியின் 24 ஆணிகள் அறையப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சிறீலங்கா அரசாங்கம் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றிருந்த இலங்கை பெண்ணான ஆரியவதி மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மிகப்பெரிய மனித உரிமை மீறல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமை மீறல் அடிப்படையிலான சர்வதேச ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஆத்தாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். இந்த இலங்கைப் பணிப்பெண்ணின்; உடலில் சவூதி தொழில் தருனர் ஒருவரால் 24 ஆணிகள் அறையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதனை அடுத்து இலங்கை திரும்பிய ஆரியவதிக்கு சத்திர சிகிச்சையின் பின்னர், 18 ஆணிகள் எடுக்கப்பட்டன. எனினும் ஏனைய ஆணிகள் எடக்கமுடியாத நிலை இருப்பதாக வைத்…
-
- 0 replies
- 649 views
-
-
பாக்கியசோதி சரணவமுத்து ஐ.நா பதவியொன்றுக்காக விண்ணப்பம்:- மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர மத்திய நிலையத்தின் தலைவரும், முன்னணி மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பதவியொன்றுக்காக விண்ணப்பம் செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுயாதீன நிபுணர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நிர்வாகத்தின் கீழ் இந்த பதவி வழங்கப்பட உள்ளது. சட்டவிரோத தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதியாக செயற்படும் நோக்கில் வி;ண்ணப்பித்துள்ளார். பாக்கியசோதி உள்ளிட்ட பத்து பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…
-
- 5 replies
- 588 views
-
-
சர்வதேசத்தின் அதிருப்திக்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகம் உடனடியாக தொழிற்படவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் விடயத்தில் பாதிக்கப்பட்டோர், சிவில் சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த சட்டத்தை அகற்றிவிடுமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம…
-
- 0 replies
- 450 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பணிப்பொறுப்பினை ஏற்றாா்! மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று(30) காலை பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர். மன்னார்-தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு மன்னார்-தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் …
-
- 0 replies
- 412 views
-
-
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010 இனப்பிரச்சினைக்கும், அபிவிருத்தி மற்றும் மீள்குடியமர்வு, புனர்வாழ்வுக்கும் அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தத்தமக்குத் தனித்தனி குழுக்களை நிறுவ உள்ளனவாம். அந்தக் குழுக்கள் இணைந்து குறிப்பிட்ட விடயங் கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இணக்கத்துக்கு வரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வகையில் அரசாங்கம் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும் குழு உறுப்பினர்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி சம்பந் தமாக ஆராயும் குழுவின் உறுப்பினர்களையும் நியமித்துவிட்டன. எனினும் இரு தரப்புகளின் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை அவை வெளியிட மறுக்கின்றன. அரசியல் தீர்வை ஒருபுறமாகவும் அபிவிருத்தி மீள்குடியம…
-
- 0 replies
- 750 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் வெளி நாட்டுப் பயணத்தில் இலங்கைக்கு முதலிடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது முதல் வெளி நாட்டுப் பயணத்தை பூட்டானுக்கு மேற்கொள்ளவுள்ளார். இவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் மற்றும் தங்குமிட ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று பூட்டானுக்குப் பயணமாகிறது. தற்போது நடைபெறும் இந்திய பாராளுமன்ற அமர்வுகள் முடிந்த பின்னர், இம்மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தப் பயணம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பதவிய…
-
- 0 replies
- 529 views
-