Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார். தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக…

    • 0 replies
    • 771 views
  2. உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் - ஜனாதிபதி ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருகொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஒரே இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவிற்கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (01) பிற…

    • 4 replies
    • 747 views
  3. தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியானது! ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு…

  4. கற்பிட்டி பிரதேசத்தில் 31 சந்தேகநபர்கள் கைது… May 2, 2019 கற்பிட்டி, மண்டலகுடாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன், 25 – 70 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், கார் ஒன்று மற்றும் 03 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். …

  5. தென்மராட்சி, கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்கள், ஈட்டிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வீதியில் நின்றவர்கள், வீட்டில் இருந்தவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடாத்தினர். சம்பவத்தில் தனது வீட்டில் இருந்த பாலாவியைச் சேர்ந்த 62 வயதான தம்பிராஜா பொன்னுத்துரை என்பவருடைய மார்பில் ஆயுதக் கும்பல் ஈட்ட…

  6. பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலய அந்தோனியார் திருச்சொருபம் இனந்தெரியாதோரால் உடைப்பு May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் இனந்தெரியாதோரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று புதன் கிழமை மாலை தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள மிகவும் சிறப்பு மிக்க இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருட…

  7. பள்ளிவாசல்களைச் சுற்றி வளரும் புற்களை வெட்டுவதற்காகவே வாட்களைச் சேமித்து வைத்திருந்தோம் - முஸ்லீம் சமய கலாசார அமைச்சர் ஹலீம் ! கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் முஸ்லீம் பள்ளிவாசல்களில் ராணுவமும் பொலீஸும் இணைந்து தேடுதல் நடாத்தி வருகின்றன. இத்தேடுதல்களின்பொழுது பல்வேறு வகையான வாட்கள், கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் நாளாந்தம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முஸ்லீம் விவகார அமைச்சரான ஹலீமிடம் பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, தமது பள்ளிவாசல்கள், முஸ்லீம் அடக்கஸ்த்தலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், அவற்றைச் சுற்றி வளரும் புற்கள் பற்றைகளை அழிப்பதற்கு பல்வேறு உத்திகளை தாம் பாவித்துவருவதாகவும், அவற்றில் ஒரு உத்தியே வாட்களைக் கொண்டு…

    • 2 replies
    • 523 views
  8. யாழில் பாரிய சுற்றிவளைப்பு – வீடுகள் சோதனை யாழ்ப்பாணம் – கொக்குவில் தலையாழி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவிலிருந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்த சுற்றிவளைப்பில் குறித்த பகுதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, குடியிருப்பாளர்கள் எவரும் வெளிச்செல்லவோ அல்லது வீட்டைவிட்டு வீதியில் இறங்கவோ இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் இருப்பவர்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றதோடு வீடுகளும் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சோதனைக்கு உட்படுத்த…

  9. ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு? கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா இன்ஸூரன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு தீவிர தேடுதல் இடம்பெற்று வருகின்றது. இன்று (வியாழக்கிழமை) காலை அங்குள்ள மலசலகூடத்தில் மர்ம பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார், இராணுவம் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சோதனையிடப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். http://athavannews.com/ஸ்ரீலங்கா-இன்ஸூரன்ஸ்-தலை/

  10. மட்டு. சீயோன் தேவாலய தாக்குதல் – இதுவரை 30இற்கும் மேற்பட்டோர் கைது! மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து இதுவரையில் 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை காத்தான்குடியின் 01ஆம் வாட்டாரம் உட்பட பல பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். குறித்த தற்கொலைத் தாக்குதல் குறித்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு தேசிய தௌஹீத் ஜமாய்த்துடனான தொடர்புகள் குறி…

  11. இலங்கையில் தொடர் அச்சுறுத்தல் – உதவி கோருகிறது சீனா! இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளதால், இலங்கையில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை அடங்கிய அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்த அறிக்கையில் சீனா கோரியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, சீனா முக்கியமான நட்பு பங்கா…

  12. பண்டாரகம- அட்டுலுகம மாராவ பிரதேசத்தின் பைகுர் ரஹ்மான் பள்ளியில் வைத்தே பெருமாள் சிவலிங்கம் என்ற குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரும், இராணுவத்தினரும் இன்று பண்டாரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 5 வருடங்களுக்கு முன்னர் பண்டாரகம பிரதேசத்துக்கு வருகைத் தந்த குறித்த நபர், மொஹமட் ஹக்கீம் என்ற பெயருடன் பள்ளிவாசலில் கடமையாற்றி வந்துள்ளதுடன், நாளொன்றுக்கு 5 தடவைகள் மத போதனைகளையும் நடத்தியுள்ளாரென ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன், இவர் இதுவரை கிராம அலுவலரைக் கூட சந்தித்து எவ்வித பதிவையும் மேற்கொண்டதில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவரது வங்கிக் கொடுக்கல் வாங்க…

  13. புர்கா ஆடை தடை ; முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படும் ஆபத்து ; மனித உரிமைகள் குழு விசனம் முகத்தை மூடும் புர்கா ஆடைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக விசனம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் ஞாயிறு தொடர்குண்டுத் தாக்குதல்களையடுத்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தம் செய்யப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. குண்டுத் தாக்குதல்களின் விளைவாக தங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று பல முஸ்லிம்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் மதக்காரணங்களுக்காக முகத்தை மூடும் ஆடையை அணிகின்ற பெண்களை இலக்குவைத்து…

  14. இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும…

    • 9 replies
    • 1.8k views
  15. வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு “வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினார் அதனை வழங்கத் தாயார்” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர் படி…

    • 1 reply
    • 439 views
  16. கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது போல் பௌத்த விகாரைகள் கை வைத்தால் கடும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. விகாரைகள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எதிர்வினைகளை எவராலும் தடுக்க முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார். தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. தற்கொலைதாரிகள் அனைவரும் தேசிய தௌவீத் ஜமாத் மற்றும் ஜமியத்துல் இப்ராஹீம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என உறுதியாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளுக்கு…

    • 3 replies
    • 728 views
  17. முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க (ஆர்.யசி) முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த நாட்டில் மதவாத மோதல்களை உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எவ்வாறான பிரிவினைவாதம், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட எமது புலனாய்வு துறை…

    • 2 replies
    • 443 views
  18. சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது. இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில…

    • 21 replies
    • 2k views
  19. பள்ளிவாசல்களில் கண்டு பிடிக்கப்பட்ட பெருந்தொகையான வாள்கள் , பற்றைகளை துப்புரவாக்குவதற்கு பாவிக்கப் பட்டவையாம்- முஸ்லீம் மந்திரி ! என்னத்தைச் சொல்லுறது சீரிஸில இதுவுமொன்று. இப்படியான செய்திகளை வசித்து பிரஷர் ஏகத்துக்கும் எகிறிப் போய் இருக்கு ! http://www.dailymirror.lk/breaking_news/Swords-may-have-been-used-to-clear-shrubs:-Haleem/108-166278 Swords may have been used to clear shrubs: Haleem 2 May 2019 12:17 am - 0 - 718 AddThis Sharing Buttons Share The caches of swords found from several mosques may have been used to clear shrubs surrounding those mosques, Muslim Religious Affairs Minister M. H. A. Haleem sai…

    • 1 reply
    • 380 views
  20. தலைக்கு 25 மில்லியன் டொலர் விலையுடன் அமெரிக்காவால் தேடப்படும் இஸ்லாமிய அரசின் சூட்சுமதாரி வீடியோவில் தோற்றம் பின்னிணைப்பிலேயே இலங்கைத் தாக்குதல் பற்றி சிலாகித்துள்ளார் ஒசாமா பின் லாடனுக்குப் பின் அமெரிக்காவால் வேட்டையாடப்படும் முதலாம் நம்பர் இலக்கு இஸ்லாமிய அரசு என்ற குழுவின் தலைவனாகத் தன்னைத் தானே 2014 இல் பிரகடனப்படுத்திக்கொண்டவர் அபூ பக்கர் அல் பக்டாடி ஆவார். ஈராக்கைச் சேர்ந்த 48 வயது நிரம்பிய இவர் 2014 இல் ஒரு வீடியோவில் தோன்றினார். ஐந்து வருடங்களின் பின் முதன்முறையாக இந்தத் திங்கட்கிழமையன்று, குறிப்பாக இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, அல் பக்டாடியின் காணொளி…

    • 0 replies
    • 362 views
  21. தொடர் குண்டுத் தாக்குதல் ; இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு (எம்.எப்.எம்.பஸீர் ) தலைநகர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்த மூவர் கொண்ட குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தககுதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள், அதனுடன் தொடர்புடைய வேறு காரணிகள், உள்ளிட்ட விடயங்கள் இக் குழுவால் முதற்கட்டமாக ஆரய்ப்பட்டுள்ளன. இந்த குழுவானது பாதுகாப்பு செயலாரக இருந்த ஹேமசிரி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மேலும் உளவுத…

  22. வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர் சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார். ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நி…

  23. May 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மதத்தை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். அல்லது முழுமையாக அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவரப்படவேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் மனோஞ் வீரசிங்க கோரியுள்ளார்…

  24. தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதிய காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள மொஹமட் ஹாசிம் மதனியா (வயது 25 ) என்ற சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/55132

  25. (இராஜதுரை ஹஷான்) நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் இன்று கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்தைய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.