Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சாய்ந்தமருது தாக்குதலுக்கு உதவி – சந்தேகத்தில் வான் ஒன்று புளியம்குளத்தில் பறிமுதல்.. சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வான் ஒன்றினை காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வான் கெகிராவ காவற்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  2. சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதுகுறி…

  3. மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் கைது..!: இன்றும் தொடரும் அதிரடி சோதனை மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து …

  4. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்க வேண்டுமென சிங்களப் பேரினவாத அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்! இது தொடர்பான விசேட கூட்டம், மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்றது." தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படை உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை! இன்றைய சூழ்நிலையில் தமிழர் பகுதிகளை பாதுகாக்க தமிழ் இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கூட்டம் …

    • 5 replies
    • 1.2k views
  5. யாழில் முப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முப்படையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 51ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை 4 மணிமுதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது. குருநகரின் சுமார் 300 வீடுகள் இவ்வாறு சோதனையிடப்பட்டது. எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது. கடந்த உயிர்த்த …

  6. சமூகவலைத்தளம் மீதான தடையை நீக்க ஜனாதிபதி பணிப்பு! சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களினூடாக பரவிய பொய்யான வதந்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி தீவிரவாதத்தை திணிக்கும் நடவடிக்கைகள் போன்ற காரணத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகவலைத்தள நடவடிக்கைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்தார். இந் நிலையிலேயே 8 நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். http://www.virakesari.lk/article/54993

  7. ஜஹ்ரானின் மனைவி மகளின் நிலை எவ்வாறு உள்ளது- ரொய்ட்டர் தகவல் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறையில் மோதல்கள் இடம்பெற்ற வீட்டிலிருந்து ஜஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சய்தாவும் நான்கு வயது மகள் முகமட் ருசானியாவும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சாதியாவிற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை தேசிய வைத்தியசாலையில் கிசிச்சை பெற்றுவருகின்றனர். தாயும் மகளும் பத்துமுதல் 15 வீத எரிகாயங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவமனையின் பொது…

  8. April 29, 2019 வெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தன்னை சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். காணா…

  9. மே 30 க்குள் மூன்று தேவாலயங்களும் மீள்நிர்மாணம் செய்யப்படும் (ஆர்.யசி) பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான மூன்று தேவாலயங்களையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் நிர்மாணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் உயரிய சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் மீள் நிர்மாணம் செய்யும் வகையில் முப்படை பிரதானிகளுடன் பாராளுமன்றத்தில் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில். அவர் மேலும் கூறியதானது, புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்…

  10. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மத்திய நிலையம் ஆமர் வீதியில் கண்டுபிடிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீடொன்று கிராண்ட்பாஸ், ஆமர் வீதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண உளவுத்துறையினர் குறித்த வீட்டினை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது தேசிய தெளஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐ.எஸ். ஐ.எஸ். இன் கருத்துக்கள் அடங்கிய இறுவெட்டுக்கள், கணினி, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச் சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கு …

  11. உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் இத்தாக்குதல்களுக்குப் பின்னரான தேடுதல்களின்போது வெளிவந்துகொண்டிருக்கும் பயங்கரவாதிகளின் பாரிய வலையமைப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இவற்றை கண்காணித்து அழிக்கும் நோக்குடன் இந்திய ராணுவத்தின் முன்னணி தீவிரவாத எதிர்புக் கொமாண்டோக்களான என் எஸ் ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படைப்பிரிவின் உதவியை இலங்கை கோரியுள்ளது. இஸ்லாமியப் பயங்கரவாதிகளினைக் கண்காணித்தல் மற்றும் அழித்தல் நடவடிக்கைகளில் சிறப்புபயிற்சிபெற்ற இப்படைகள், இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்கவிருக்கின்றன. மூலம்: கொழும்பு டெயிலி மிரர்

  12. பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கியில் பாங்கு செல்வதை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார் . கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார். புர்கா தடை செய்யப்பட்டமையையிட்டு எம்மை விட முஸ்லிம் பெண்களே மிகவும் சந்தேஷம் அடைந்துள்ளதாக ரன்ஞன் ராமநாயக்க குறிப்பிட்டார் https://www.madawalaenews.com/2019/04/blog-post_101.html

  13. 600 வெளிநாட்டவர்களை நாடு கடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா நுழைவிசைவு மூலம், சிறிலங்கா வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும் அரபுமொழியை கற்பித்து வருகின்றனர். இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களை, வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா…

  14. தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிடுகையில், அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர், மூத்த பிரதி காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அதிபரிடம் விரிவான அறிக்கையை வழங்கினார். அதிகாரபூர்வமான மற்றும் பல ஆதாரங்களை அவர் அறிந்திருந்திருந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அவ்வாறான அறிக்கைகளில் ஒன்று, புத…

    • 0 replies
    • 336 views
  15. முஸ்லிம் மாணவிகளும் முகத்தை மூடக்கூடாது - அஸாத் சாலி (எம்.ஆர்.எம்.வஸீம்) மேல்மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவிகள் முகத்தை மூடும்வகையில் சீருடையில் வருதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கான சுற்று நிறுபத்தை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மேல்மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதற்காக…

    • 7 replies
    • 1.8k views
  16. இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளில் செயற்படும் மிலேச்ச பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் தயக்கமின்றி கூறுகிறோம். 2012 - 13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ எஸ் அமைப்பு கிலாபத் ஆட்சியை பிரகடணம் செய்த பின்னர் இலங்கையில் இருந்து ஒரு குழு ஐ எஸ் இல் இணைந்துகொண்டது.அதற்கு தலைமை தாங்கியது கண்டியை சேர்ந்த திருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்ற நிலாம் என்பர். அதனை பலர் மறுத்த போதும் இப்போது அவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் 45 பேர் வரை சென்று சிரியாவில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. …

    • 6 replies
    • 1.1k views
  17. அரச புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரியான நிலாந்த ஜெயவர்தனே, ஜனாதிபதி மைத்திரிக்கு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டம் குறித்து, ஏப்ரல் 11, 16 மற்றும் 20ம் திகதிகளில் எச்சரிக்கை அறிக்கைகளை அனுப்பி வைத்திருந்தார். எந்த ஒரு அறிக்கை குறித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சரவைக்கோ, ரணிலுக்கோ கூட தெரிவிக்காமல், இந்தியா, சிங்கப்பூர் என்று கிளம்பி சென்றுவிட்டார் அவர். ஏப்ரல் 11ம் திகதி நேரடியாக ஜனாதிபதியிடம் தாக்குதல் திட்டம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தவிர வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள், முக்கியமாக இந்தியா கூட 20ம் திகதி, தாக்குதல் நடக்கப் போகின்றது என திட்டவட்டமாக அறிவிக்கப் பட்டிருந்தது என பல பத்திரிகைகள் உறுதிப்படுத்தி உள்ளன. …

    • 2 replies
    • 1k views
  18. (எம்.எப்.எம்.பஸீர்) ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

  19. பங்கு பற்றியோர் பத்திரிகையாளர் திரு வித்யாதரன் , அரசியல் ஆய்வாளர் திரு யதீந்திரா. தொகுத்து வழங்கியோர் அருள் மற்றும் பூபால்

    • 0 replies
    • 406 views
  20. "சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறிய அரசாங்கம் இன்று சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது" போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோனே்றே கடந்த யுத்தத்தால் …

  21. இந்தியா எந்த படையையும் அனுப்ப வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... ராஜபக்சே அதிரடி..! தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை நாங்களே சமாளிப்போம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த அதிபயங்கர சம்பவத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்க இலங்கை முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க இன்டர்போல் முந்துவந்தது. அதேபோல இலங்கைக்கு உதவ உலக நாடுகள் தயாராக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் …

  22. ஐ எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத மதப் பயங்கரவாத அமைப்பின் தலைவன்... 2014ம் ஆண்டுக்கு பின் மீண்டும்.. காணொளி மூலம் தோன்றி சிறீலங்காவில் நிகழ்ந்த தாக்குதல் ஐ எஸ் பயங்கரவாதிகளின் இறுதி கட்டுப்பாட்டுப் பிரதேசமும் ஈராக் - சிரிய எல்லையில் இழக்கப்பட்டதற்கு பதிலடி என்று கூறியுள்ளார். இந்த தலைவரை தாங்கள் கொன்று விட்டதாக அமெரிக்காவும்.. ரஷ்சியாவும் கூறி வந்துள்ள நிலையில்.. தற்போது சிறீலங்கா தாக்குதல் வெற்றியின் வெளிப்பாடாக இவர் தோன்றியுள்ளார். மேலதிக செய்திகள் https://www.bbc.co.uk/news

  23. நா.தினுஷா) மத்ரசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டவையல்ல. முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் கீழாகவே மத்ரசாக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் தற்போது முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சுடன் கலந்துரையாடிவருகின்றோம். தடைச்செய்ய வேண்டிய மத்ரசாப் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அதனை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/54949

  24. அமைச்சர் ரிஷாட் பதியூதீன், எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையை விடுத்துள்ளது. https://newuthayan.com/story/15/முஸ்லிம்-அமைச்சர்களை-பதவ.html

    • 2 replies
    • 926 views
  25. கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு! கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.