Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 600 வெளிநாட்டவர்களை நாடு கடத்த சிறிலங்கா பிரதமர் உத்தரவு இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், போதனைகளில் ஈடுபடும், 600 வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா நுழைவிசைவு மூலம், சிறிலங்கா வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகளிலும், மதரசாக்களிலும், மத போதனை மற்றும் அரபுமொழியை கற்பித்து வருகின்றனர். இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், இவ்வாறான மதப் பாடசாலைகளை தடை செய்யுமாறும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களை, வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா…

  2. தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிடுகையில், அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர், மூத்த பிரதி காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அதிபரிடம் விரிவான அறிக்கையை வழங்கினார். அதிகாரபூர்வமான மற்றும் பல ஆதாரங்களை அவர் அறிந்திருந்திருந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. அவ்வாறான அறிக்கைகளில் ஒன்று, புத…

    • 0 replies
    • 337 views
  3. முஸ்லிம் மாணவிகளும் முகத்தை மூடக்கூடாது - அஸாத் சாலி (எம்.ஆர்.எம்.வஸீம்) மேல்மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் செல்லும் மாணவிகள் முகத்தை மூடும்வகையில் சீருடையில் வருதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கான சுற்று நிறுபத்தை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் நிகாப் மற்றும் புர்கா அணிந்துகொண்டு பொது இடங்களுக்கு செல்லவேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மேல்மாகாணத்தில் இருக்கும் பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம். அதற்காக…

    • 7 replies
    • 1.8k views
  4. இஸ்லாமிய பயங்கரவாதிகள் தெளிவான வெரிப்பிடித்த சமய மணநிலை உடையவர்கள் என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளில் செயற்படும் மிலேச்ச பயங்கரவாதிகளே இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பதை நாம் தயக்கமின்றி கூறுகிறோம். 2012 - 13 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ எஸ் அமைப்பு கிலாபத் ஆட்சியை பிரகடணம் செய்த பின்னர் இலங்கையில் இருந்து ஒரு குழு ஐ எஸ் இல் இணைந்துகொண்டது.அதற்கு தலைமை தாங்கியது கண்டியை சேர்ந்த திருத்துவ கல்லூரி மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்ற நிலாம் என்பர். அதனை பலர் மறுத்த போதும் இப்போது அவ்வாறு அவர்கள் குடும்பத்துடன் 45 பேர் வரை சென்று சிரியாவில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்து போரில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. …

    • 6 replies
    • 1.1k views
  5. அரச புலனாய்வு அமைப்பின் தலைமை அதிகாரியான நிலாந்த ஜெயவர்தனே, ஜனாதிபதி மைத்திரிக்கு, இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டம் குறித்து, ஏப்ரல் 11, 16 மற்றும் 20ம் திகதிகளில் எச்சரிக்கை அறிக்கைகளை அனுப்பி வைத்திருந்தார். எந்த ஒரு அறிக்கை குறித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சரவைக்கோ, ரணிலுக்கோ கூட தெரிவிக்காமல், இந்தியா, சிங்கப்பூர் என்று கிளம்பி சென்றுவிட்டார் அவர். ஏப்ரல் 11ம் திகதி நேரடியாக ஜனாதிபதியிடம் தாக்குதல் திட்டம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. தவிர வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள், முக்கியமாக இந்தியா கூட 20ம் திகதி, தாக்குதல் நடக்கப் போகின்றது என திட்டவட்டமாக அறிவிக்கப் பட்டிருந்தது என பல பத்திரிகைகள் உறுதிப்படுத்தி உள்ளன. …

    • 2 replies
    • 1k views
  6. (எம்.எப்.எம்.பஸீர்) ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டதாக கூறபப்டும் வீடொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பயங்கரவாதிகளின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டதாக மேல் மாகாண உளவுப் பிரிவினர் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதியை அண்மித்த, மெசஞ்ஜர் வீதி, பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் இருந்தே குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

  7. பங்கு பற்றியோர் பத்திரிகையாளர் திரு வித்யாதரன் , அரசியல் ஆய்வாளர் திரு யதீந்திரா. தொகுத்து வழங்கியோர் அருள் மற்றும் பூபால்

    • 0 replies
    • 407 views
  8. "சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறிய அரசாங்கம் இன்று சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது" போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோனே்றே கடந்த யுத்தத்தால் …

  9. இந்தியா எந்த படையையும் அனுப்ப வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... ராஜபக்சே அதிரடி..! தேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தீவிரவாதத்தை நாங்களே சமாளிப்போம் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 21-ஆம் தேதி 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த அதிபயங்கர சம்பவத்தில் 350 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்க இலங்கை முயற்சித்து வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க இன்டர்போல் முந்துவந்தது. அதேபோல இலங்கைக்கு உதவ உலக நாடுகள் தயாராக உள்ளது. அந்த வகையில் இலங்கையில் …

  10. ஐ எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத மதப் பயங்கரவாத அமைப்பின் தலைவன்... 2014ம் ஆண்டுக்கு பின் மீண்டும்.. காணொளி மூலம் தோன்றி சிறீலங்காவில் நிகழ்ந்த தாக்குதல் ஐ எஸ் பயங்கரவாதிகளின் இறுதி கட்டுப்பாட்டுப் பிரதேசமும் ஈராக் - சிரிய எல்லையில் இழக்கப்பட்டதற்கு பதிலடி என்று கூறியுள்ளார். இந்த தலைவரை தாங்கள் கொன்று விட்டதாக அமெரிக்காவும்.. ரஷ்சியாவும் கூறி வந்துள்ள நிலையில்.. தற்போது சிறீலங்கா தாக்குதல் வெற்றியின் வெளிப்பாடாக இவர் தோன்றியுள்ளார். மேலதிக செய்திகள் https://www.bbc.co.uk/news

  11. நா.தினுஷா) மத்ரசாக்கள் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டவையல்ல. முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் கீழாகவே மத்ரசாக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் தற்போது முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சுடன் கலந்துரையாடிவருகின்றோம். தடைச்செய்ய வேண்டிய மத்ரசாப் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அதனை குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/54949

  12. அமைச்சர் ரிஷாட் பதியூதீன், எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் கோரிக்கையை விடுத்துள்ளது. https://newuthayan.com/story/15/முஸ்லிம்-அமைச்சர்களை-பதவ.html

    • 2 replies
    • 928 views
  13. கிளிநொச்சி சுற்றிவளைப்பில் கமரா, துப்பாக்கி ரவைகள் மீட்பு! கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநாச்சி பொலிசாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து கையடக்க தொலைபேசிகள், கமரா, துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன. எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர். இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…

    • 6 replies
    • 1.3k views
  14. வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. பஸ் தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில் போக்குவரத்தை தடை செய்ததோடு குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி பொதியை பரிசோதனை செய்தனர். இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்த…

  15. கடந்த 21 ஆம் தகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டிருந்தது. மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்ஹக, பாதிமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையே பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 6 பேரும் அட…

  16. April 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn சாந்த கோத்தகொட பாதுகாப்பு அமைச்சன் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிகிக்ப்பட்டுள்ளார். கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் இராணுவத் தளபதியாகவும் பின்னர் பிரேஸில் மற்றும் தாய்லாந்து நாடுகளி…

  17. April 29, 2019 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த 21 வயது…

  18. April 29, 2019 இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்2 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் கேரளாவில் நேற்று கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் அவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள் சிம் கார்ட்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹமட் அரபாத்( Ahamed Arafat) மற்றும் அபூபக்கர் சித்திக்…

  19. மஹிந்த - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ? எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று மஹிந்த - கோத்தா சந்திப்பு ! பேசப்பட்டதென்ன ? எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புத்தரப்புகளின் பிரதானிகளுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் பொலிஸ் மா அதிபரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல்.பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, உதய கம்பன்பில மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நாட்டில் தற்போதைய நி…

  20. நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்…

    • 8 replies
    • 1.5k views
  21. சியோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சைப் பெற்று வந்த நபர் மரணம் Published by Loga Dharshini on 2019-04-29 09:56:35 மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 21ஆம் திகதி, நாட்டின் தேவாலயங்கள் உள்ளடங்களாக எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில், 250 ற்கும் மேற்பட்டோர் மரணித்தும், 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வந்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ள…

  22. நிந்தவூர் பாதுகாப்பு இல்லங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்! (எம்.எப்.எம்.பஸீர்) தொடர் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் இதுவரை தீர்க்கப்படாது இருந்த முக்கிய இரு குற்றங்களின் ஆதி அந்தம் கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானின் வாகன சாரதியாக கடமையாற்றிய கபூர் மாமாவைக் கைதுசெய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அது தொடர்பில் மேலும் இரு காத்தான்குடியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் நிந்தவூர் மற்றும், புத்தளம் - வணாத்துவில்லு பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பாத…

  23. தொடர் குண்டுத் தாக்குதல்களினால் பாக்- ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு சிக்கல் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்து இலங்கையில் தங்கியிருந்த கிறிஸ்தவ அகதிகள், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகள் தங்குவதற்கு தேவையான எந்ததொரு ஏற்பாடுகளையும் அரசு இன்னும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அருட்தந்தை சக்திவேல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அக…

  24. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியில் பொலிஸார் நடத்தும் தேடுதல் சுற்றிவளைப்பில் அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாட்டில் …

  25. (நா.தினுஷா) புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.