ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை - கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைப்பு By T. Saranya 09 Nov, 2022 | 09:49 AM (நா.தனுஜா) நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த…
-
- 10 replies
- 346 views
-
-
தமிழர்களின் பிரதேசங்களை விட்டு அரசாங்கம் வெளியேறிவிட வேண்டும்அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காட்டம் கொழும்பு,ஒக்ரோபர் 6 அரசாங்கத்தால் தமிழர்களைச் சரியான முறையில் கவனிக்க முடியாவிட்டால் எங்கள் பிரதேசங்களை விட்டு அரசு வெளியேறி விடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ் வாறு கூறினார். அவர் தொடர்ந்து தமது உரையில் கூறியதாவது: அரச படையினர் வடக்கு கிழக்கில் தமி ழர்கள் மீது மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்கள் அட்டூழியங்கள் போன்றவை அதிகரித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் !! 7 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய ஆளுநர்கள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் இலங்கை பெண்! 2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொடவும் இடம்பெற்றுள்ளார். உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட, இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு திடீரென காணாமல் ஆக்கப்பட்டார். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரை போலவே காணாமல் ஆக்கப்பட்ட மற்றவர்கள் சார்பிலும் குரல் கொடுத்து …
-
- 0 replies
- 205 views
-
-
அறிவுச்சோலை மீது விமானக்குண்டுத் தாக்குதல். ஒருவர் காயம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த அறிவுச்சோலை ஆதரவற்றவர் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறார்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். நேற்று மாலை இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செஞ்சோலை காப்பகத்தின் சகோதர காப்பாக இந்த அறிவுச்சோலை மையம் திகழ்கிறது. 216 சிறார்கள் தங்கியுள்ள இந்த காப்பகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வீசிய இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. விளையாட்டு மைதானத்தில் இந்தக்குண்டுகள் வீழ்ந்ததினால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. யுத்தநிறுத்தக் கண்காணிப்கழுவினர் இன்று சம்பவ இடத்…
-
- 0 replies
- 902 views
-
-
சீனாவுடன் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்து! - இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 21ம் நூற்றாண்டில் பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கும் சீனாவின் திட்டத்துக்கு இந்த உடன்படிக்கை உதவும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த சீன ஜன…
-
- 0 replies
- 424 views
-
-
அமெரிக்க கப்பலில் வந்த இரு யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென…
-
- 0 replies
- 286 views
-
-
அண்மையில் அருளினியன் பக்கங்களில் சிங்களத் திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களுடனான ஒரு நேர்காணல் வெளியாகி இருந்தது. அதனை வாசித்த பின் என்னுள் எழுந்த உணர்வலைகளைப் பகிரவேண்டும் எனத் தோன்றுகிறது. நேர்காணல் முழுவதும் மிகவும் முற்போக்கான கருத்துகளைக் கூறிச் செல்கிற பிரசன்ன அவர்களிடம் கீழ்வரும் கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அவர் கீழ்வருமாறு பதில் அளிக்கிறார். இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இறுதிப் போரின் இறுதி நாட்களில் நடைபெற்றஉயிரிழப்புகள் பற்றிய சரியான தரவுகள் யாரிடமும்இல்லாத நிலையில் இது சம்பந்தமாகக் கருத்துக் கூறவிரும்பவில்லை. இந்தக்கேள்வியையும் பதிலையும் முகப்புத்தகத்தில் என் நிலைத்தகவலில் பதிவு செய்தும் இருந்தேன். பல நண்ப…
-
- 0 replies
- 371 views
-
-
யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர். விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக…
-
- 14 replies
- 2.2k views
-
-
மைத்திரி, டலஸ், விமல் அணிகளின் அரசியல் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது ! By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 02:49 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இல்லாமல், தலைமைத்துவ சபை ஊடாக பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த அரசியல் கூட்டணிக்கு சுதந்திர மக்கள் கூட்டணி என பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுத…
-
- 5 replies
- 918 views
- 1 follower
-
-
வெள்ளவத்தையில் தமிழர் தொடர்மாடியில் திடீர் தீ! சனி, 12 பெப்ரவரி 2011 01:50 தலைநகர் கொழும்பில் வெள்ளவத்தையில் உள்ள மயூரா பலஸ் தொடர்மாடியில் இன்று மாலை திடீரென தீ பற்றியது. இத்தொடர்மாடியில் உள்ள வீடுகளில் மூன்று எரிந்தன. வேறு ஆறு வீடுகளில் தீ மூண்டு இருந்தது. ஆயினும் அயலவர்கள் தீயை அணைத்தனர். தொடர்மாடியில் தங்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். எவருக்கும் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்பட்டு இருக்கவில்லை. தீயணைப்புப் படையினரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருந்தனர். தீ எப்படி பற்றிக் கொண்டது? என்பது இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்கள்.
-
- 0 replies
- 897 views
-
-
ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 'ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப…
-
- 13 replies
- 1.5k views
-
-
செமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்ப அதிகார சபையின் அனைவருக்கும் நிழல் அல்லது வீடு (செமட்ட செவன) என்ற வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி கிராமம் இன்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 25 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பி…
-
- 0 replies
- 463 views
-
-
அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ் அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிப…
-
- 0 replies
- 522 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவான புதிய விதிகளுடன் அமுலுக்கு வந்தது சமாதானப் பேச்சு முயற்சிகளை பாதிக்காது என்கிறது அரசு. பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (Prevention of Terrorism Act) இலங்கைத் தீவு முழுவதும் நேற்று முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் புதிய பல துணை விதிகள் சேர்க்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமுலுக்கு வந்திருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர…
-
- 10 replies
- 2.7k views
-
-
தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ”மாத்தறையில் எமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும். எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும். மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப…
-
- 0 replies
- 720 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்ப…
-
- 4 replies
- 713 views
-
-
கொழும்பு பங்கு சந்தையில் நேற்று பாரிய வீழ்ச்சி உணரப்பட்டுள்ளது. கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து ஜே.வி.பி வெளியேறியமை ஆகியவற்றால் பங்கு பரிமாற்றங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இதுவரை இல்லாத அளவில் இலங்கை நாணயத்தின் மதிப்பு டொலர் பெறுமதிக்கு எதிராக கடுமையான வீழச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
கப்பல் பயணத்தில் பெண் ஒருவர் மரணம். - பண்டார வன்னியன் Friday, 22 December 2006 10:36 யாழ் குடாநாட்டுக்கான தரைவழிப்பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் யாழ் மக்களின் போக்குவரத்துக்கள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந் நிலையில் பெரும் இராணுவக் கெடுபிடிகளிற்கும் நெருக்கடிகளிற்கும் மத்தியில் மக்கள் தமது போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்கின்றனர். இந் நிலையில் திருகோணமலையில் இருந்து நேற்று காங்கேசன்துறைவந்து சேர்ந்த பயணிகள் கப்பலில் பயணித்த இணுவிலைச் சேர்ந்த கோபல் சிவவதனி (வயது 29) பெண் ஒருவர் மரணமானார். http://www.sankathi.org/
-
- 0 replies
- 777 views
-
-
வடக்கு மாகாண சபையை “புதிய பிரேரணை சபை” என பெயர் மாற்ற வேண்டும் என ஈபிடிபி ஒட்டுக்குழு எஸ்.தவராசா கூறினார் . கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து இதுவரை வட மாகாண சபை 17 தடவை கூடியுள்ளது. முதலாவது அமர்வு சம்பிரதாயபூர்வமானது ஏனைய சில அமர்வுகளின் போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இறுதியாக இடம்பெற்ற அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. அதனைத்தவிர 14 தடவைகள் கூடியுள்ளது. அதன் போது 150ற்கும் அதிகமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் என்னிடம் உள்ளன. அதில் என்ன விடையங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏதாவது ஒன்றைக் கூறுவார்கள். இல்லாவிடின் வேறு …
-
- 3 replies
- 552 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் முன்னெடுப்பு! கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டதோடு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மேலும் பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை இளைஞர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1323056
-
- 3 replies
- 729 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் கொழும்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் உத்தியோக பூர்வமாக நிபந்தனைகளையோ ஏனைய விடயங்களையோ கூட்டமைப்பு முன்வைக்க வில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பேச்சுவார்த்தைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமாயின் அது குறித்து அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவும் வர முடியும்…
-
- 0 replies
- 259 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற மேற்குலகு முயற்சித்தது - தகவல் தருகிறது விக்கிலீக்ஸ் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-20 08:29:00| யாழ்ப்பாணம்] விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் மறைந்திருந்த இடத்தை இலங்கை இராணுவம் சுற்றிவளைக்காமல் தடுப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் முயன்றதாக விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது. யுத்த இரகசியங்கள் தொடர்பாக விக்கி லீக்ஸினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் மறைந்திருந்த பகுதி நோக்கி கடும் யல் வீச் சினை மேற்கொண்டு அவரை உயிருடன் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பு களுக்கும் இடையிலான போர் நிறுத்த முயற்சி ஒன்றை சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது. என்னை இந்த ம…
-
- 2 replies
- 717 views
-
-
“சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. சபாநாயகர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டிருந்தார். …
-
- 6 replies
- 1.2k views
-