ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143255 topics in this forum
-
அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது கார்வண்ணன்Apr 23, 2019 by in செய்திகள் கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள இல…
-
- 5 replies
- 1k views
-
-
இலங்கைத் தாக்குதல்கள் விசாரணைக்கு FBI – INTERPOL உதவி… April 24, 2019 கடந்த உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை நாட்டில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சிறப்பு சர்வதேச காவற்துறைக் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு சென்றுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு அமைய குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங…
-
- 0 replies
- 637 views
-
-
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்தோடு வரக்காபொலயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த வேன்ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனுடன் கட்டான – கட்டுவாபிட்டிய பகுதியில் ஆற…
-
- 1 reply
- 588 views
-
-
நான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் April 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.நகரில் நான்கு அடையாள அட்டையுடன் நடமாடியவர் உட்பட இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணம் நகரில் 4 அடையாள அட்டைகளுடன் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பட…
-
- 0 replies
- 391 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு… விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க, மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பமாகும் என்பதை என்னைப் போலவே நீங்களும…
-
- 2 replies
- 412 views
-
-
பல உத்தியோகபூர்வமாக உறுதிப்படாத செய்திகள் பரவுகின்றன. இருந்தாலும் அவைகளை பகிர்வது நல்லது என்று நினைக்கிறேன். 1. குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது காலிமுகத்திடல் தாஜ் ஹோட்டல். தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் அது இயங்காத காரணத்தால் அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் தாஜ் ஹோட்டல் சீசீடீவீயில் பதிவாகியுள்ளது. கண்டி வலம்பட பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட், தவ்கித் ஜமான் உறுப்பினர்களோடு தாக்குதலுக்காக கொழும்பு வந்து தற்கொலைக் குண்டுகளோடு முதல்நாள் இரவு தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அடுத்துநாள் காலை 9.00 -9.30 வரைப்பட்ட…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புக்கள்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை குண்டுதாரிகளினால் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருந்ததுடன், பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 394 views
-
-
போருக்குப் பின்னரான பூகோள அரசியல் முரண்நிலைக்குள் சிக்குண்டுள்ள இலங்கை உயிர்த்தஞாயிறு தொடர் பயங்கரத் தாக்குதல்கள் இலங்கைத்தீவைக் களமாக்கியது ஏன்? அமெரிக்க-இந்திய அணிவகுப்பு ஒருபுறம், சீன-பாகிஸ்தான் உறவு மறுபுறம் ஈழத்தமிழர் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் தாம் விரும்பிய நேரத்தில் போர்க்கப்பல்களை இத் தீவுக்கு அனுப்பக்கூடிய நிலை அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னைய சூழலில், திருகோணமலையில் மட்டுமல்ல அம்பாந்தோட்டையிலும் இலங்கைக் கடற்படையுடன் தாம் நினைத்த நேரத்தில் கூட்டுப்பயிற்சி செய்வோம் என்பதைச் சீனாவுக்கு அமெரிக்கா வெளிப்படுத்திய மூன்ற…
-
- 0 replies
- 732 views
-
-
கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பிரபல வர்த்தகரான அல்காஜ் மொகமட் யூசுப் இப்ராஹிம் (வயது 65) என்பவரின் மகன்களான இம்சாத் அகமட் இப்ராஹிம் (வயது 33), இல்காம் அகமட் இப்ராஹிம் (வயது31) இருவரும் கிங்ஸ்பெரி மற்றும் சினமன்ட் கிரான்ட் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலை நடத்தியவர்களாவர். அத்துடன் இவரது இளைய புதல்வரான இஸ்மயில் அகமட் இப்ராஹிம் என்பவரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது. த…
-
- 1 reply
- 860 views
-
-
எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது -கோத்தபாய (இராஜதுரை ஹஷான்) தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கோழைகள் எவ்விதமான மனிதாபிமானம் அற்றவர்கள். எந்தவொரு போதனைக்கும், சமய நம்பிக்கைக்கும் அல்லது நற்சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பளிக்காதவர்கள். எமது நாட்டில் பேரழிவு, அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகும். எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் எமது தாய்நாட்டில் இடம் கிடையாது. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் மிலேட்சதனமானது. பல நூற்றுக்கண…
-
- 3 replies
- 918 views
-
-
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், தென்மராட்சி கோவிலாக்கண்டியில் வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது என்னும் அச்சம் இலங்கையர்களை வாட்டிக் கொண்டிருக்கும் இந்நிலையில், அதிபயங்கரமான குண்டுகள் ஆங்காங்கே குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையி்ல இன்று இரவு ஒன்பது மணியிலிருந்து காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை தென்மராட்சிப் பகுதியில் கொள்ளையர…
-
- 0 replies
- 405 views
-
-
மைத்திரி நாட்டு மக்களுக்கு உரை. படைகளின் தலைமைகள் 24 மணிநேரத்தில் மாற்றப்படும் என்றும், நாட்டின் பாதுகாப்பு மீண்டும் கட்டி எழுப்பப்படும் என்றும் அறிவித்தார். http://www.dailymirror.lk/breaking_news/Heads-of-all-security-forces-to-be-changed-within-24-hours:-Prez/108-165824
-
- 3 replies
- 628 views
-
-
10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். “தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. 48 மணி நேரத்துக்கு…
-
- 3 replies
- 1.2k views
-
-
'உலகத்துக்கு ஒரே கடவுள்' என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம் 23.04.2019 பி.ப 04.45 வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, #. WP BCY- 2183 (Black Red TVS Scooty #. NWP VP 7783 (Midnight Black Bajaj pulsar 150) #. SG PH 3779 (Bl…
-
- 2 replies
- 1.3k views
-
-
உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடே இந்த குண்டுத் தாக்குதல்கள் எனவும் அதற்கு தனது கண்டனத்தினையும் அவர் தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தகவல்களை வழங்கியபோதும் அவற்றினை கவனத்திற்கொள்ளாமல் இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது அவர் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்தக்குரிய பொன்னைய…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை! தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்டத் தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தயாராவதாக இந்திய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளு…
-
- 0 replies
- 294 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட வேன் ஒன்றும், சிறிய ரக லொறியொன்றும் பிரவேசித்துள்ளதாக இன்று உளவுத்துறை பாதுகாப்புத் தரப்பை எச்சரித்த நிலையில், தலைநகர் எங்கும் பதற்றத்துடன் காணப்பட்டது. உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க ஊடாக கொழும்பில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு, விபரீதம் ஒன்று ஏறபடுவதை தடுக்க பிற்பகல் முதல் விஷேட சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இன்று மாலை வரை உளவுத்துறை குறிப்பிட்ட இரு வாகங்களும் கண்டுபிடிக்கப்படவ…
-
- 1 reply
- 938 views
-
-
குண்டு வெடிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல் கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ; ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்…
-
- 63 replies
- 7.8k views
- 1 follower
-
-
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து April 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது. நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதியின் இல்ல வாயி…
-
- 1 reply
- 881 views
-
-
சினமன் ஹொட்டல் பணியாளர்களான 4 மதத்தவர்களும் குண்டுவெடிப்பில் சாவு கொழும்பு சினமன் கிராண்ட் ஹொட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், அங்கு பணிபுரியும் நால்வர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் நான்குபேரும் இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாமிய மதத்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. சாந்தா, சஞ்சீவனி, இப்ராகிம், நிசார் ஆகியாரே அவர்கள். அவர்களில் சஞ்சீவனி சமையற்கட்டில் பணிபுரிபவரெனவும் ஏனைய மூவரும் உணவு பரிமாறுபவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/11/வெடி-குண்டுகளுக்கு-மதங.html
-
- 0 replies
- 346 views
-
-
கொழும்பில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், திருமணமாகி சில மாதங்களேயான தம்பதியர் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சங்கரில்லா விடுதிக்குச் சென்ற நிலையில் குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளனர். கண வர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு சங்கரில்லா விடுதிக்கு தம்பதியராகச் சென்றுள்ளனர். இதன்போதே குண்டுவெடிப் பில் சிக்கியுள்ளனர். கணவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். குண்டுவெடிப்பால் அதிர்சியடைந்த மனைவி நேற்றுமுன்தினம் முழுவ…
-
- 0 replies
- 832 views
-
-
நெல்லியடியில் விடுதி சுற்றிவளைப்பு யாழில் பெரும் பரபரப்பு 2 FacebookTwitter அங்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விவரங்களைக் கூறுவதற்கு பொலிஸார் மறுத்துவருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் வெடிபொருள் உள்ளதென இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தேடுதல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/நெல்லியடியில்-விடுதி-சுற.html அவர்களுக்கு …
-
- 0 replies
- 650 views
-
-
கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இதேவேளை பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , பஸ்களும் சோதனையிடப்படுகின்றது. http://www.virakesari.lk/article/54512
-
- 0 replies
- 427 views
-
-
(நா.தனுஜா) நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வருகின்ற இனத்தவர்களாவர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே அடிப்படைவாதத்தைப் புகுத்தி, தீவிரவாதத்தை பரப்பும் நோக்கிலே சிலர் செயற்பட்டு வருவதாக நாங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தோம். அதனைக் கருத்திற்கொள்ளாமல் நாங்கள் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டினார்கள். அந்த அலட்சியத்தின் விளைவால் இன்று அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன என்று பொதுபலசேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை அடுத்து பொதுபலசே…
-
- 0 replies
- 320 views
-
-
மானிட்டரிங் பிரிவு பிபிசி படத்தின் காப்புரிமை fb screenshot …
-
- 0 replies
- 698 views
-