Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராய்ப்பட்ட சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச தாக்கப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவை மூத்த அமைச்சர் டியூ.குணசேகர தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அது வெறும் வதந்தி என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பியபோது, இது வெறும் கட்டுக்கதை என்றும், அத்தகைய சம்பவம் எதையும் தான் பார்க்கவில்லை என்றும் பதிலளித்து…

  2. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் தற்சமயம் பிரசன்னம் ஆகியுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக தெரியவந்துள்ளது. http://www.virakesari.lk/article/16578

    • 0 replies
    • 341 views
  3. 'வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும். உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான 17 வகையான பயிரினங்களை இனங்கண்டு அவற்றின் இறக்குமதியை மட்டுப்படுத்தினோம். தற்போது அவற்றை உள்நாட்டில் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் எமது விவசாயிகளுக்கும் எமது கிராமங்களுக்குமே கிடைக்கின்றது.' என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஒரு கிலோ நெல்லுக்கு முன்னர் வழங்கிய 32 ரூபாவை 50 ரூபாவாக அதிகரித்ததன் பின்னர் உற…

  4. வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மன்னார் மாவட்டத்தில் சொந்தமாக நட்சத்திர அந்தஸ்திலான உல்லாச விடுதியொன்றை அமைக்க தயாராகி வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=18055

  5. திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்பட்ட அந்தக்குண்டுகள் கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தலைமை காவல்துறை காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ள இந்தக் குண்டுகளில் குசுயுபு- ளுகுபு-87 என பெயரிடப்பட்டிருந்த அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  6. என் உறவுகளே,கடந்த சில நாட்களாக ,தலைவர் இருக்கிறார் இல்லை என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார் இருந்தாலும் இல்லை என்றாலும் போராட்டத்தை தொடர்வோம்.எதிரிகளின் சதிகளிள் விழவேண்டாம்.போர்குற்றத்தை மறைக்க,மக்களின் போராட்டத்தை ஒடுக்க,புலிகளின் மனோவலிமையை குறைக்க,புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய திட்டமிட்டு செய்யப்படும் சதிவலைகளில் நாம் விழவேண்டாம். தலைவர் நலமோடு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.சரியான தருணத்தில் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதில் தலைவர் வாயிலாகவே வரும். நம் அப்பழுக்கற்ற மாபெரும் தலைவனின் லட்சியம் தனிஈழம் என்பதாகும்,எத்தனை தடைகள் வந்தபோதும் மக்களூக்காக ப…

  7. வடகிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று கிடைக்கும்போது முஸ்லிங்களையும் உள்வாங்கியதாகத்தான் இருக்கும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறுபடாது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். எம்.ஆர்.சீ.நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி அண்மையில் கல்முனையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் போது அது முஸ்லிம்களையும் உள்ளடங்கியதாக இருக்கும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களின கருத்தாகவே இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல் தலை…

    • 0 replies
    • 552 views
  8. மேய்ச்சல் தரை காணிகளை குறி வைத்து அபகரிக்கும் பெரும்பான்மையினர் 55 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரமுந்திரிகைச் செய்கை என்ற பெயரில் மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கந்தர்மல்லிச்சேனை, வெட்டிப்போட்டசேனை உட்பட பல பகுதிகளில் இவ்வாறான மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுத…

  9. மலேசியாவில் தற்காலிகமாக வசிக்கும் என்னிடம், தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழ் மீதும் நீங்காத பற்றுக்கொண்ட என் மலேசிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள். விடைதெரிந்தவர்கள் தயவுசெய்து அறியத் தரவும். விடுதலைப் புலிகளின் பாரிய பின்வாங்கலின் பின்னால்... பலமிழந்து விட்டார்களா? தந்திரோபாயமானதா? அவர்களின் ஆயுததளபாடங்கள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) கடற்புலிகளின் நூற்றுக்கணக்கான படகுகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?) அவர்களின் கரும்புலிகள் அணியினர் எங்கே? நூற்றுக்கணக்கான மோட்டார் உந்துகணை செலுத்திகள் எங்கே? (ராணுவம் கைப்பற்றிவிட்டதா?அல்லது அவர்களே தகர்த்து விட்டார்களா?)…

    • 19 replies
    • 5.2k views
  10. என்னிடம் மத வேறுபாடுகளோ சதி வோறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன் என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண.நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்! புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி வி.ஜே…

  11. உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரையில் இலங்கை அனைத்துலக கண்காணிப்பின்கீழ் இருக்கவேண்டும் மற்றுமொரு தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழுத்தம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொ­ழி­களை முழு­மை­யாக நிறை­வேற்றும் வரையில் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மையில் அனைத்­து­லக கண்­கா­ணி ப்பு அவ­சி­ய­மாகும். ஏனெனில் அதற்­கான அவ­சி­யத்தை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் அறிக்கை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு உறு­ தி­யா­னதும், காத்­தி­ர­மா­ன­து­மான தீர்­மா­னத்தை உறு ப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் என்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபை வலி­ய­றுத்­தி­யுள்­ளது. ஜெனீ­வாவில் இடம்­பெ­று­கின்ற 34 ஆவது ஐக்­கிய ந…

  12. கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!! கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாளை (வியாழக்கிழமை) கள விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், சீனாவின் தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்வதற்கான சீனா தூதரகத்தின் அதிகாரம்…

    • 4 replies
    • 975 views
  13. ஈழத் தமிழர்களை அழிப்பதற்குப் துணை போன இந்திய அரசுக்கும், அதற்குத் துணை போன தமிழக முதல்வருக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழுக்கு அவர் அளித்த கேள்வி - பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறை குறித்து? ஈழத் தமிழர்களை அழிப்பதற்குப் துணை போன இந்திய அரசுக்கும் அதற்குத் துணை போன தமிழக முதல்வருக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. போர் நிறுத்தம் செய்வதற்கு கருணாநிதி எடுத்த முயற்சிகள், வெளியிட்ட அறிக்கைகள், உண்ணாவிரதங்கள், கண்டனங்கள் அனைத்தும் போலியானவை. சட்டமன்றத்தில்கூட நான் வற்புறுத்திய பிறகு…

    • 0 replies
    • 393 views
  14. நீதி, நேர்மை, இறைபக்தி மிகுந்த ஒருவரது தெரிவை எல்லாம் வல்ல ஆண்டவனும் விரும்பியுள்ளார்: - மன்னார் ஆயர் கருத்து தமிழ்மக்கள் மிகப்பெரிய இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களின் விடிவிற்காக பாடுபடக்கூடிய ஒருவர் வடமாகாண முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது ஆண்டவனின் தெரிவு என்று மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், வடக்கு மாகாணசபையின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "இந்தத் தெரிவு தமிழினத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் சிந்தனை வல்லமையை காண்பிப்பதுடன் காலத்தை நுணுக்கமாக நோக்கி…

  15. யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்று உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அரசியல் வேலைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று வியாழக்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்வதற்கு பாதுகாப்பு வழங்காமை குறித்து உடனடியாகத் தலையிடுமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையிட்டதையடுத்தே தற்போது பாதுகாப்பு அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்குச் செ…

    • 0 replies
    • 398 views
  16. நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது – யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் 5 Views இவ்வாண்டு மே 18 தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம் என மே 18 தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள் குறித்து யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழி விட…

    • 1 reply
    • 509 views
  17. தாம் அரசாங்கத்துடன் இணையவதற்கு 25 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டதாக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார். அத்துடன், அவ்வாறு நான் 25 கோடி பெற்றிருந்ததாக நிரூபிக்க முடியுமாவெனவும் கட்சியில் இருந்து விலகிய தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாந்துவுக்கு சவால் விடுத்துள்ளார். ஹெட்டிபொல நகரில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "இப்பொழுது கூறுகிறார்கள் 25 கோடியை வாங்கிக்கொண்டுதான் தயாசிறி அரசுக்கு சென்றாராம். அவ்வாறான கருத்துக்கள் பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவர் போகும்போது கூறும் பொதுவான வாரத்தைதான் அது…

    • 0 replies
    • 587 views
  18. வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 652 views
  19. எண்ணம்பாலப்பூவல் மற்றும் முண்டாளமடு கிராமத்தில்...

    • 0 replies
    • 182 views
  20. ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 291 views
  21. கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் - இது சரியா?? : வளர்மதி on 14-07-2009 20:39 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம் திசையெட்டும் திரிந்து நா வளர்த்த மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு வழமையான ரசம்தான் என் ரசம் அலாதி அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய எரும உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு உப்பில்லாத பண்டம் குப்பையிலே எவரோ சொன்னது பழந்தமிழர் வீரமறவராம் இருக்கலாம் மற்றவர்க்கு எப்படியோ எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு. கவிதை எழுதப் பழகிய புதிதில் 'க…

  22. சந்திரபோஸ் சுதாகரன் கொல்லப்பட்டு ஒரு தசாப்தம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் நிலம் என்ற தமிழ் இதழின் ஆசிரியருமான எஸ்.போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகரன் கொல்லப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் ஊடகங்களில் எழுதி வந்த சுதாகரன் வீரகேசரி பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவர் வவுனியாவில் திருநாவற்குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2007, ஏப்ரல் 16ஆம் திகதி இரவு இனந்தெரியாத கொலையாளிகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈழத் தமிழ் இனத்தின் குரல்களை ஒழிக்கும் ஒரு கொடுஞ்செயலாக இவரது கொலை கருதப்படுகிறது. இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதம் த…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடாவே அதிக நிதியுதவி வழங்கியுள்ளது நெசனல் போஸ்ட் : தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அதிகளவு சர்வதேச நிதியுதவி கனடாவிலிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளதென பிரபல இணைய தளமான நெசனல் போஸ்ட் தெரிவித்துள்ளது. வருடாந்தம் 12 மில்லியன் டொலர்கள் பணம் கனடாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கனேடிய புலம்பெயர் தமிழர்களே அதிகளவு விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் 10 முதல் 12 மில்லியன் டொலர் பணம் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரொரன்டோ மற்றும் மொன்றியல் பகுதிகளில்…

    • 1 reply
    • 1.2k views
  24. நாடுபூராகவும் மீண்டும் கடுமையான வரட்சி, இலட்ச கணக்கான மக்கள் பாதிப்பு : எப்போது மழை பெய்யும் : வளிமண்டலவியல் தகவல் எம்.எம்.மின்ஹாஜ் நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடுபூராகவும் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.…

  25. இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் என குழுவின் தலைவர் பேராசிரியர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அமர்வுகளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு இந்த வாரத்தில் முன்வைக்கப்படவிருக்கும் இந்த இறுதி அறிக்கையில், அரசியல் அமைப்பில் செய்யப்பட வேண்டிய பல திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட அரச தலைவர் ஆட்சி முறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நாடாளுமன்ற ஆட்சிமுறையை நடைமுறைக்குக் கொண்டுவர…

    • 0 replies
    • 377 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.