Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய பிறழ்வு... எந்த நேரத்திலும் நாட்டிற்குள் நுழையலாம் – அசேல குணவர்தன எச்சரிக்கை நாட்டிற்குள் எப்போதுவேண்டுமானாலும் புதிய கொரோனா பிறழ்வு நுழையலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பட்டுள்ள அதேவேளை துறைமுகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதால் புதிய மாறுபாடுகள் நாட்டுக்குள் பரவி கணிக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார். எனவே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டார். இதற்கிடையில், மொத்த மக்கள்தொகையில் 67 சத…

  2. அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு, முதுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வோடு இலங்கையில் நீங்கள் வசித்து வருவதாக அறிந்தேன். மகிழ்ச்சி எல்லாம் இல்லை. ஆனால் மனித வளத்தை இழந்து விட்ட ஈழத் தமிழினத்திற்கு ஆக்க பூர்வமான உங்கள் பணிகள் எமது எதிர்காலக் குழந்தைகளுக்குத் தேவை. ஆமாம் அறிவாயுத்தத்தை எமது அடுத்த சந்ததி ஏந்த வேண்டும் என்ற அலாதி ப்ரியத்தோடு எங்களுக்கான வழிகாட்டியாக திகழ வேண்டிய உங்களுக்கு இம்மடல் எழுத நேர்ந்த சூழல் துரதிருஷ்டவசமானது. வருகிற ஜூன் மாதம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத் தலைவராக நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் சூ…

  3. ஆஸி. சென்ற மற்றுமொரு படகைக் காணவில்லை எனத் தகவல் வீரகேசரி இணையம் 11/3/2009 5:26:20 PM - இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றும் ஒரு படகு அவுஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு அருகில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 பேருடன் சென்ற இந்தப் படகுடன் வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நீரில் முழ்கிய 40 பேருடன் சென்ற படகிற்கு பின்னால் இந்தப் படகு சென்றதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

  4. காணொளி: பாஜவின் அதி முக்கிய உறுப்பினரான ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் இலங்கைத் தூதுவர் காணொளியைப் பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9682:2013-10-22-10-16-29&catid=1:latest-news&Itemid=18

  5. “இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்” உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு! இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான த…

    • 2 replies
    • 265 views
  6. மண் டிப்பரில் பயணிக்கும் மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் 28 அக்டோபர் 2013 கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நேற்று (27.10.13) திறந்து வைக்கப்பட்ட நிலையில் மண் டிப்பர்களில் பயணம் செய்யும் தமது வாழ்க்கையை கவனப்படுத்துமாறு முல்லைத்தீவு மக்கள் குளோபல் தமிழ் செய்திகளிடம் கேட்டுக்கொண்டதாக குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலிருந்து முல்லை நகரத்திற்கான பேரூந்துகள் மிகவும் குறைவாகவே செல்லுகின்றன. அவ்வப்போது செல்லும் வரும் பேரூந்துகளை எதிர்பார்த்தபடி நாள் முழுவதும் மக்கள் காத்திருப்பது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கின்றது. மாங்குளம் சந்தியிலிருந்து ஒலுமடு, கரிபட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை …

  7. காரைநகர் பிரதேச சபை சுயேட்சை குழு வசமானது! November 10, 2021 காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில, இன்றைய தினம் நடைபெற்றது. குறித்து அமர்வின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் போட்டியிட இருந்த போதிலும், அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில், சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை என்பவர், தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டு, ஈபிடிபி கட்சியின் ஆதரவுடன் வெற்றியீட்டியுள்ளார். இந்த தவிசாளர் தெரிவு விசேட அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சா…

  8. இலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம். போருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என …

  9. தாங்கள் நினைத்தமாதிரி முழுமையாக முல்லைத்தீவை அபகரிக்கலாம் என்று யாரும் அதிகாரம் செலுத்த முடியாது - ரவிகரன் ! முல்லைத்தீவில் காடுகளை அழித்து திட்டமிட்டு புதிய குடியேற்றங்களை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவை பிரதிநிதுத்துவபடுத்தும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் காடுகளை அளித்து அப் பகுதியில் புதிய முஸ்லீம் குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவரும் நிலையில் அதற்க்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பி வருகின்றது.இந்த நிலையில் இந்த காடழிப்பு தொடர்பில் வடக்கு மாகானசபை உறுப்பினர் ரவிகரன் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவில் …

  10. சுமந்திரன், சாணக்கியன் மீது கடுமையான விமர்சனம் - திலீபன் - ஸ்ரீதரனுக்கிடையில் சபையில் வாக்குவாதம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) முஹம்மது சாணக்கியன் எனவும் வன்னியில் யுத்தத்தில் இறந்த மக்களின் நகைகளை திருடிய சுமந்திரன் எம்.பி என .பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் கூறிய விமர்சனத்தினால் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17) இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட எம்.பி.யான கு.திலீபன் உரையாற்றியபோது, அவர் வழக்கம் போலவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை கடுமையாக சாடியும் விமர்சித்தும் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது தமிழ்நாட்டில் உள்ள சீமான் போன்று …

  11. இலங்கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important

  12. ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள ஈரோஸ் அலுவலகத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், "தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள். தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை அவரால் மாத்திரமே தீர்க்க முடியும். சரத் பொன்சேகா ஓர் இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் அறிவென்பது பூஜ்யம் தான். இத்தகைய ஒருவரால் ஜனநாயக காட்டை ஆட்சி செய்ய முடியாது. கிழக்கு மாகாண மக்கள் வாழ்வில் நிம்மதியை கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே தமிழ் மக்க…

  13. அம்­பாந்­தோட்­டை­யில் 112 கோடி டொலர் முத­லி­டு­கி­றது சீனா உடன்படிக்கை நேற்­று சபை­யில் சமர்ப்­பிப்பு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தைச் சீனா­வின் மேர்ச்­சன்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்­குக் குத்­த­கைக்கு வழங்­கும் ஒப்­பந்­தத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்த நிலை­யில், அது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பற்­துறை அமைச்­ச­ரான மகிந்த சம­ர­சிங்­க­வி­னால் சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­தப்­பட்ட குறித்த ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் அம்­பாந்­தோட்­டைத் முறை­மு­கத்­தில் சீனா 112 கோடி அமெ­ரிக்க டொலர்­கள்­வரை முத­லீ­டு­க­ளைச் செய்­ய­வுள்­ளது. இலங்கை துறை­முக அதி­கா­ரச்­ச­பைக்­க…

  14. கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்! நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுககு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டி…

  15. ஊதிய உயர்வு வழங்கப்படும் விதம் விளக்கப்பட வேண்டும் ‐ விக்ரமபாகு 24 December 09 02:06 pm (BST) ஊதிய உயர்வு வழங்கப்படும் விதத்தை விளக்குமாறு கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஊழியர்களது சம்பளத்தை எவ்வாறு 10000 ரூபாவினால் அதிகரிக்க முடியும் என்பதனை சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். சம்பளம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமையிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாரியளவு சம்பள அதிகரிப்பை வழங்குவதென்பது நடைமுறைச் சாத்தியப்பாடற்றதென அவர் சுட்டிக்காட்டியு…

  16. தமிழ் மக்களாகிய எமது புனித நாட்களில் மாவீரர்களை நினைவு கூரும் நாள் மிக முக்கிய நாளாகும் . இந்நாள் எமது ஈழ மண் விடிவிற்காகவும் , சுதந்திர சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடி தம்முயிரை ஆகுதியாக்கி , மண்ணுக்கு உரமாகி , எமது உயிருடன் கலந்துவிட்டவர்களின் நினைவு நாளாகும் . உங்களது உயிரிலும் மேலான பிள்ளைகளும் , எமது சக போராளிகளுமான இந்த மாவீரர்களின் தற்கொடை , அர்ப்பணிப்பு , தியாகம் , உணர்வுகள் , கனவுகள் , இலட்சியதாகம் யாவும் எங்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்து , சணமும் மறக்கப்பட முடியாதவையாகும் . இப் புனிதர்களை எப்படி மறக்க முடியும் ? . இப்புவியில் தமிழ் மக்கள் வாழும்வரை இவர்களை நினைவு கூர்ந்து , சுடரேற்றி , மலர்தூவி வீரவணக்கம் செலுத்துவது தமிழர்களது தலையாய கடமையாகும் . இம்மாவ…

  17. சற்று முன் இயக்கச்சியில் வாள்வெட்டு: மூவர் காயம் இயக்கச்சி, சங்கத்தார் வயல் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16967.html

  18. இலங்கையின் வட-கிழக்குப் பகுதியிலிருந்து போரினால் வெளியேறிய சிங்களவர்களை அங்கு உடன் மீளக்குடியமர்த்த வேண்டும் என சிங்கள பெளத்த இனவாதக் கட்சி வலியுறுத்துகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pL2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 508 views
  19. மன்மோகன் விரைவில் பதவியில் இருந்து தூக்கியெறிப்படுவார் இந்தியா ஒரு சுரண்டும் நாடு என இலங்கை எம்.பி.சூரியபெருமா தாக்கு 11:53:13 Monday 2013-12-09 இந்தியா ஒரு சுரண்டும் நாடு எனவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒரு வயதான முட்டாள் என்றும் இலங்கை நாடாளுமன்ற ஆளும்கடசி உறுப்பினர் ஜே.ஆர்.பி. சூரியபெருமா காட்மாக விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் ராஜ்பக்சே கட்சியின் எம்.பி.யான அவர் இலங்கை வெளியுறவு அமைச்சரவை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு வருவதாக வாக்குறுதி அளித்து விட்டு வராமல் புறக்கணித்த…

  20. ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும். – ஐரோப்பிய ஒன்றிம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது. நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே அந்த நீதி கிடைக்க வேண்டும் . அதில் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு வழிவகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதே சமூகமோ பாதிக்கப்பட்டவர்களோ வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்ட…

  21. மணமகன் பிரதீப் பெயரை மதிவாணன் என மாற்றுவதற்கு, தாத்தா என்ற முறையில் எனக்கும் உரிமை உள்ளது,'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். மேலும் கருணாநிதி என்பது எல்லா கடவுளுக்கும் பொதுவான பெயர் என்றும் விளக்கினார். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகனின் இல்லத் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:அண்ணா விரும்பிய செல்லப் பிள்ளைகளில் ஒருவராக, தர்மலிங்கம் விளங்கினார். தர்மலிங்கம் இன்று இருந்திருந்தால், தனது பேரனுக்கு பிரதீப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்காது. அதற்கு பதிலாக, நல்ல தமிழ் பெயர் தான் இருந்திருக்கும். சில நண்பர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். "நீங்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறீர்கள், உங்கள் பெயரை மட்டும் கருணாநிதி என்ற…

    • 7 replies
    • 1.4k views
  22. வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கை…

  23. தொடருந்துத் தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் கஞ்சாச் செடிகள் தென்மராட்சி-மீசாலை மற்றும் மண்டுவில் பகுதிகளில் டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கஞ்சாச் செடிகள் வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினரால் குறித்த பகுதிகளில் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மண்டுவில் பிரிவில் உள்ள தொடருந்துத் திணைக்கள தண்டவாளப் பணியாளர்களுக்கான விடுதியில் டெங்கு பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் விடுதிக்குப் பின்பகுதியில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அங்கே வெண்டிச் செடிகளுடன் கஞ்சாச் செடிகள் காணப்பட்டதை அவதானித்த அலுவலர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தக…

  24. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுப்பு – சித்தார்த்தன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.அரசு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வேறு பல திணைக்களகங்கள் ஊடாகவும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது.குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனது வேலைத்திட்டத்தை தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. இன்று தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை ப…

  25. பொன்சேகாவை சிவில் நீதிமன்றில் விசாரிக்கவேண்டும்: கொழும்பில் பிரிட்டன் எம்.பி. லியம் பொக்ஸ் தெரிவிப்பு . .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் அரசதலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா விவகாரத்தை சிறிலங்கா அரசு தற்போது கையாண்டுவரும் விதம் சர்வதேச ரீதியில் சிறிலங்காவின் நன்மதிப்பை சீர்குலைக்கும் அச்சுறுத்தும்வகையில் உள்ளது. - இவ்வாறு பிரிட்டன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் மந்திரிசபையின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். பொன்சேகா கைதினை அடுத்து கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமநிலையின் பின்னர் கொழும்புக்கு விஜயம் செய்த லியம் பொக்ஸ் நேற்றைய தினம் அரசதலைவர் மகிந்தவை சந்தித்து பேசினார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.