ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இரண்டு மாதங்களின் பின்னர் வழமைக்குத் திரும்பும் யாழ்ப்பாணம்! யாழ்ப்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைக் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ். மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும். எனினும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய ப…
-
- 1 reply
- 473 views
-
-
[size=4]By Farhan 2012-11-17 16:09:46[/size] [size=4]முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்காக இத்திரைப்பட குழுவினர் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கேட்டதை வரவேற்பதோடு இதற்காக ஜனநாயக ரீதியல் போராட்டம் நடத்திய தமிழக முஸ்லிம்களை பார்த்து இலங்கை முஸ்லிம்கள் பாடம்கற்க வேண்டும் என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப்போராட்டத்தை சினிமாவில் கொச்சைப்படுத்துவதை இந்திய, அமெரிக்க சினிமாக்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. சமூக விடுதலைப்போராளிகள் சில தவறுகளை விடுகிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் திரைப்ப…
-
- 3 replies
- 873 views
-
-
இலங்கை விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு குறித்தான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் நிலைப்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பு, கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறித்த விடயம் தொடர்பில், ஆணையாளர் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டினை வரவேற்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் ஊடான பரிகார நீதியே அரசியல் தீர்வுக்குப் பொருத்தமான பொறிமுறையாக அமையும் என்பதனை ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் அரசியல் தீர்வுத்திட்டம் தொட…
-
- 0 replies
- 332 views
-
-
பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வரலாறு முழுக்க சுயாதீனமானவர் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட முன்னமேயே, அவர் பக்க சார்பற்றவர் என நாட்டுக்கு நீரூபித்தவர் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விடுதலை புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்க தவறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அவர் மீதான வெட்கம் கெட்ட அழுத்தத்தை அரசு நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது என்றும் இதன் நடுநிலையாக தேர்தல்கள் அணைக…
-
- 12 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று யாழ்ப்பாணத்தில் பெருமளவான இராணுத்தினரும் புலனாய்வுத்துறையினரும் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். பல்கலைக்கழக சூழலில் நேற்று மாலை தொடக்கம் பெருமளவான புலனாய்வாளர்களின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழக ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதிக்கு முன்னால் 20 மேற்பட்ட புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவ் வீதியால் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில், அவரை வழிமறித்து புலனாய்வாளர்கள் விசாரணை ந…
-
- 1 reply
- 661 views
-
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்க…
-
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
சிறீலங்காப் படையில் மேலும் 10 ஆயிரம் பேரை இணைக்க நடவடிக்கை சனி, 08 நவம்பர் 2008, 14:38 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காப் படையினருக்கு ஆட்திரட்டும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக் கொள்ளவுள்ளோம் என சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது 3300 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன
-
- 1 reply
- 700 views
-
-
போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற வடக்கின் நால்வர் கைது.! போலி விசாவைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை குற்றப்புலனாய்புப் பிரிவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ். முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளாவார். மேலும், இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது. துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான டி.கே 731 இலக்க விமானத்திலே இவர்கள் செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றப்புலனாய்புப் பிரிவினர் குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
-
- 1 reply
- 365 views
-
-
In இலங்கை June 2, 2020 10:50 am GMT 0 Comments 1135 by : Yuganthini முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரவீந்திர விஜேகுணரட்ன என்னிடம் மறைமுகமாக கப்பம் கோரினார். அத்துடன் இரண்டு பேரை ஆயுதங்களுடன் அனுப்பி என்னை கொலை செய்யவும் முயற்சித்திருந்தார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்ப…
-
- 0 replies
- 317 views
-
-
கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க 12 Feb, 2026 | 02:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ப…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
நாமல் என்ன செய்கிறார்: அம்மா கண்ணீர் வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தன்னுடைய தாய், ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்;வையிட்டுள்ளனர். நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் என்று, அவருடன் ச…
-
- 1 reply
- 1.8k views
-
-
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை Jun 07, 20200 உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியதையடுத்து, நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இறை வழிபாட்டுத் தலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வழிப்பாட்டு நடவட…
-
- 0 replies
- 267 views
-
-
போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்? [19 நவம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை] 2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
லலித்தும் குகனும் கடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு கடக்கிறது! - [sunday, 2012-12-09 11:22:35] லலித், மற்றும் குகன் காணமல் போய் இன்று ஒரு வருட மாகி விட்டது . எத்தனையோ கடத்தல்கள், காணமல் போதல்கள் நிறைந்த எம் மண்ணில் தான், இவர்களின் கடத்தலும் காணமற் போதலும் நடந்து இருக்கின்றது. ஆனால் இந்தக் கடத்தல் வித்தியசமானது. அந்த வகையில் கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களுக்காக போராடியதால், தோழர்கள் லலித்தும் குகனும் காணாமல் போனார்கள். அதுவும் சர்வதேச மனிதவுரிமை தினத்தன்று கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்திப் போராடுவதற்காக முயன்ற போது, அவர்கள் இருவரும் காணமல் போனார்கள். காணாமல் போன தமிழர்க்காக போராடிய சிங்களவரும் தமிழரும் சேர்ந்தே காணாமல் போய் இருக்கின்றன…
-
- 1 reply
- 294 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சு பதவியை அல்ல வீதியை கூட்டுவதற்குக் கூட தகுதியற்றவர் என தேசப்பற்றுடைய பௌத்த பிக்குகள் அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சோ, அதனால் ஒட்டுமொத்த இராஜபக்ச குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட தேசப்பற்றுடைய பௌத்த பிக்குக…
-
- 1 reply
- 309 views
-
-
பிரான்சில் இன்று நடைபெற்ற சிங்கள மக்களின் போராட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகர் பரிசிலுள்ள ரொக்கடரோ ஈபிள் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள அரசு இனப்படுகொலையை நியாயப்படுத்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாத்திற்காக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காதபோதும் இறுதியில் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிங்களவர்களின் உண்மைக்குப் புறம்பான போராட்டத்…
-
- 24 replies
- 2.7k views
-
-
கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்படாவிடின், மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூபம் போடும் நடவடிக்கையாக அது அமையும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 'யாழ்.பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தை அடுத்து சில தமிழ்- சிங்கள இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் மிகமோசமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், " சிங்கள மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்ட…
-
- 0 replies
- 405 views
-
-
போலி பொலிஸ் அதிகாரி கைது பொலிஸ் அதிகாரியாக நடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 ஐ சேர்ந்த இளைஞரே (வயது-23) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிவதாகவும் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை தான் பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபரான குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளார் https://newuthayan.com/போலி-பொலிஸ்-அதிகாரி-கைது/
-
- 0 replies
- 351 views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்க…
-
- 0 replies
- 624 views
-
-
இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனின் முக்கிய கடைத் தொகுதி ஒன்றில் இந்த இளநீர் விற்பனை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக பதில் உயர்ஸ்தானிகர் தெரிவி…
-
- 0 replies
- 329 views
-
-
அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கோமாரி கடற்கரையில் கரையொதியுள்ளதுடன் இதனை பார்வையிடுவதற்காக கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரிப்பகுதி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர…
-
- 2 replies
- 787 views
-
-
அணு விடயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள ஈரான், இலங்கையில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்கிறது. 106 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் 180,000 குடும்பங்களுக்கு மின் விநியோகிக்கப்படவுள்ளது. ஈரானின் SUNIR என்ற நிறுவனத்துடன் 2009ம் ஆண்டு அப்போதைய இலங்கை மின்துறை பிரதி அமைச்சர் சாகல ரத்நாயக்க "RE8," என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் நிறுவனம் மின் உற்பத்தி திட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதற்கான காப்புறுதியை ஈரான் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வழங்குகிறது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாதென இலங…
-
- 1 reply
- 643 views
-
-
எமது மக்கள் எப்பொழுது புலம்பெயரத் தொடங்கினார்களோ அன்றிலிருந்தே கூட்டுக் குடும்ப வாழ்வு குலைந்து தனிக்குடும்ப வாழ்வுக்குத் தள்ளப்பட்டு விட்டனர். அது மட்டுமன்றி எமது மக்கள், எமது கலாசாரத்தில் இருந்து விலகிச் செல்வதையும் காண முடிகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார். உதயன் பரிசுக் கொண்டாட்ட நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு உதயன் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது மக்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தனர். அவர்க…
-
- 0 replies
- 643 views
-
-
இலங்கையில் காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கையை ஜெர்மன் நாடு கேட்டுக் கொண்டது.…
-
- 2 replies
- 732 views
-
-
அம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020 அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு த…
-
- 2 replies
- 485 views
-