Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம்-சித்தார்த்தன் இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தீர்மானங்களை இலங்கை தமிழரசு கட்சி தனித்தே மேற்கொள்கிறது. பங்காளிக் கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்துவதில்லை. இதன்விளைவாகவே ஏனைய கட்சிகள் முரண்பட நேரிட்டது. ஆனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, எதற்காக ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துக் கொண்டத…

  2. கே.பி- கருணாவை விசாரிப்பதன் மூலம் அரசாங்கம் பொறுப்பு கூறலை தொடங்கலாம் – றணில் தலைமையிலான ஐதேகவின் பலே ஐடியா! இலங்கை அரசாங்கம்- கே.பி என்றளைக்கப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் மற்றும் கருணா எனப்படும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக் கூறலை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனை கூறியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புபட்டவர்களர்கள் எனவும் ஐக்கியதேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  3. இலங்கை இராணுவ வீராங்கனைகள் மாலி பயணம்! மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் பதினெட்டுப் பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டனர். ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவ வீரர்கள் 150 பேர் அடங்கிய குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. இவர்கள், ஒரு வருட காலம் மாலியில் இருந்து பணியாற்றவுள்ளனர். அதன்படி, இதுவரை மொத்தமாக 168 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவி…

  4. தமிழர்கள் கடத்தல் வழக்கில் கமாண்டர் பிரசாத்திற்கு சர்வதேச பிடியாணை தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரான கடற்படை லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு சர்வதேச பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அத்துடன் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8ஆவது சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரி காமினி என்பவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட…

  5. 'வித் யூ, வித்அவுட் யூ' சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம். 'டைரக்டர்ஸ் ரேர்' என்ற தலைப்பில் சர்வதேச விழாக்களுக்கு செல்லும் படங்களை, பி.வி.ஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்ற வாரம் அவர்களால் வெளியிடப்பட இருந்த இப்படம், சர்ச்சைக்குள் சிக்கி பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இலங்கை அரசால் முதலில் தடைசெய்யப்பட்டு, பிறகு வெளியிடப்பட்ட இப்பட…

    • 0 replies
    • 859 views
  6. 2020ல் ஜனாதிபதி மைத்திரி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார் – கீதபொன்கலன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார் என பேராசிரியரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எஸ்,ஐ. கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவர் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். மீளவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரகாசமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார…

  7. 2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை விரட்டும் சூழ்ச்சி (ஆர்.யசி) உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்­னரும் பிர­தான இரண்டு கட்­சி­களின் தேசிய அர­சாங்­கமே முன்­னெ­டுக்­கப்­படும். 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்சி தனித்து கள­மி­றங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­ப­தி­யாக்கும் போராட்­டத்தை கையாளும் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சியை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின் தேர்தல் பிர­சார கூட்டம் வென்­னப்­புவ பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம்…

  8. மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் தந்தை, மகள் படுகாயம் : வவுனியாவில் சம்பவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் வாகனத்துடன் மோட்டார் சைக்களொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வவுனியா - கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து யாழில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திரும்பி கொழும்பு நோக்கி வந்து கொண…

  9. இலங்கையில் உள்ள... தமது குடிமக்களை, எச்சரிக்கின்றது... இந்தியா!! இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின் பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கையில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. இது தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். …

  10. செவ்வாய்க்கிழமை, நவம்பர் 2, 2010 கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், நேற்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. நேற்று காலை பொலிசாருக்கும் பொது மக்களுக்kumக் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறினர் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மீளக்குடியேறிய மக்களின் 20 இற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப…

  11. கூட்டமைப்புடன் பேசுவதை எதிர்க்கமாட்டோம் என்கிறார் வீரவன்ச! [Tuesday 2014-07-15 09:00] தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி என்று கூறப்படும் சிறில் ரமபோஸாவின் இலங்கை விஜயத்தை தலையீடு என்று எண்ணவில்லை, என்றும், அது ஒரு கலந்துரையாடலே என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் அவர், சிறில் ரமபோஸா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தமையானது, இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே. ரமபோஸாவை மத்தியஸ்தர் என்ற நிலையில் அரசாங்கம் பார்க்கவில்லை. அதற்கான உறுதிமொழி தமக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் அந்த வேளையில் தமது கட்சி தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்ளும். தமது கட்சி ஏற…

  12. ‘ஜனாதிபதி, தனது பதவி தொடர்பில் சிந்திக்க வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “ஜனாதிபதி தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்திக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, “காணாமலாக்கப்பட்டோரை எங்கும் தேடிவிட்டோம். கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார். இக்கருத்து தொடர்பாக இன்று (07) கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், “காணாமல் போனவர்களின் உறவினர்கள் மி…

  13. இலங்கை ஜனாதிபதி, பிரதமருக்கு மக்கள் கேள்வி: "ஓய்வு வயது குறைப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?" ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை குறைப்பதற்கு அரசாங்கம் சமீபத்தில் எடுத்துள்ள தீர்மானம், தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஓய்வூதியம் பெறும் வயது 65 என காணப்பட்ட நிலையில், அந்த வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இடைகால வரவு செலவுத்திட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதி அம…

  14. சந்திரிகா மீதான கொலை முயற்சி வழக்கு- தண்டனையைக் குறைக்குமாறு தமிழ் இளைஞர் மேன்முறையீடு திகதி:09.11.2010 சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் மீது கொழும்பு நகர மண்டபத்தில் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கில் 30 வருடச் சிறைத்தண்டனையைப் பெற்ற தமிழ் இளைஞர் தனது தண்டனையைக் குறைக்கும்படி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சக்திவேல் இலங்கேஸ்வரன் என்ற இளைஞர் இந்தத் தாக்குதலுக்கான வெடிபொருட்களை வன்னியில் இருந்து கொழும்புக்குக் கடத்தி வர தான் உதவியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு 30 வருடச்சிறைத்தணடனையை கொழும்பு நீதிமன்றம் விதித்திருந்தது. கொழும்பு புத…

  15. இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. ஐ.நா.மனிதஉரிமைகள் கவுன்ஸில் வட்டாரங்கள் இந்ததகவலை வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களின்படி, இலங்கையின் போர் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்குழுவிடம் சாட்சியம் அளிக்க வட அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் இலங்கையின் மனித உரிமைகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியமளிப்பதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக நியூயோர்க், ஜெனீவா, பாங்கொக் நகரங்களுக்கு சென்று சாட்சியமளிப்பதில…

    • 1 reply
    • 537 views
  16. பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகுவாரா ரணில்?? Report us Dias 55 minutes ago பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகக் கூடும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே தற்பொழுது சந்திப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகலுக்கான முடிவினை எடுப்பாராயின் நாட்டில் பெரும் குழப்பகரமான அரசியல் சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த த…

  17. ரணிலின் அமைச்சரவையில் ராஜபக்ஷ உறவினர் - போராட்டக்குழு கோபம் 41 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி இலங்கையில் ராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (வயது 46) ஒருவர். இதற்கு முன்னரும் சசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராகப் பதவி…

  18. மாவிலாறு அணையை திறக்காமல் கொழும்புக்கு திரும்பப் போவதில்லை - ஹெல உறுமய சூளுரை [30 - July - 2006] [Font Size - A - A - A] மாவிலாறு அணைக்கட்டை திறந்து கிராமவாசிகளுக்கு மீண்டும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளாமல் அப் பகுதிக்குச் சென்றிருக்கும் தமது கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு திரும்பப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய சூளுரைத்துள்ளது. ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே சோபித தேரரினால் இதற்கான அறிவித்தல் நேற்று சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. மாவில் ஆற்றுக்கால்வாயை விடுதலைப் புலிகள் வழிமறித்து 9 நாட்கள் கடந்து விட்டது. இதனால் சேருநுவர பிரதேசத்திலுள்ள 30 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமான விளைச்சல் நிலம் நாசமடைந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கவென …

    • 13 replies
    • 3.2k views
  19. கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு 2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார். “வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு, 20 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக நாங்கள் பெற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

    • 3 replies
    • 280 views
  20. ஏதிலி(அகதி)த்தமிழனும் ஏமாறும்தமிழனும் – சூரிய தீபன் (செயப்பிரகாசம்) தமிழ் தேசியத்தலைவரின் அகவை 56 மற்றும் மாவீரர் நாள் 2010 க்காக தேசியத்தலைவருக்கு அறிமுகமான எழுத்தாளர் சூரிய தீபன் நம் மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வி… http://meenakam.com/2010/11/27/14720.html

  21. பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் தூக்கிலிட துடித்தார் ஜெயவர்த்தனா”: நட்வர்சிங்;! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும்.. மேயர் துரையப்பா கொலை வழக்கில் அவரை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா கோரிக்கை விடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்கின் சுயசரிதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ராஜிவ் காலத்தில் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் நட்வர்சிங்கும் ஒருவர். நட்வர்சிங் 410 பக்கங்கள் கொண்ட தமது சுயசரிதை புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் ராஜிவ…

  22. பனம் வெல்­லத்­துக்கு பெரும் மவுசு பனம் வெல்­லத்­துக்கு பெரும் மவுசு தெற்­கி­லும், புலம்­பெ­யர்­நா­டு­க­ளி­லும் யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பெரும் கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது எனவே பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தியை ஆரம்­பிக்­கும் நட­வ­டிக்­கையை பனை அபி­வி­ருத்தி சபை ஆரம்­பித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. யாழ…

  23. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக பிரித்தானிய மேல் நீதிமன்றத்தில் பிரித்தானியாவின் தமிழர் ஒன்றியம் மனு தாக்கல்: [Friday, 2010-12-03 05:22:13] கடந்த வருடம் மே மாதம் நிறைவடைந்த யுத்தத்தின் போது, இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தகுற்றங்கள் தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோரிய மனு இன்று பிரித்தானியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரித்தானியாவின் தமிழர் ஒன்றியம் இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அங்குள்ள பல மனித உரிமை அமைப்புகளும் இந்த மனுவில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 1997ம் ஆண்டு சிலி நாட்டின் சர்வாதிகாரி ஒகஸ்டோ பினோசேயை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.