Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்த பகவானுக்கு சிலை எடுத்த தமிழன் வியாழன், 12 மே 2011 07:13 இலங்கையில் தமிழர் ஒருவர் புத்த பகவானுக்கு சொந்தச் செலவில் மாபெரும் சிலை அமைத்து - கட்டிடம் எழுப்பிக் கொடுத்து உள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி சாம் தம்பிமுத்துவின் புதல்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு மாவட்ட பிரதம இணைப்பாளர்களில் ஒருவருமான அருண் தம்பிமுத்துவே 10 மில்லியன் ரூபாய் செலவில் இத்திருப்பணியைச் செய்து உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா ராம ராஜ மகா விகாரையில் இக்கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று இக்கட்டிடம் திற…

  2.  ஞாயிறு 04-03-2007 14:03 மணி தமிழீழம் ஜசிறீதரன்ஸ வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளை நோக்கி எறிகணை தாக்குதல் - மூன்று இராணுவம் காயம் இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளை நோக்கி விடுதலைப்புலிகளால் எறிகணைத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும். இதன்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரில் மூவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& « முன்னைய பக்கம்

    • 0 replies
    • 804 views
  3. இனிமேலாவது சிந்திப்பீர்களா? கருணாநிதிக்கு பழ.நெடுமாற‌ன் கடிதம் Wednesday, May 18, 2011, 16:41இந்தியா, தமிழீழம்96 views1 comment தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தி‌க்கு இல‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்‌தி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் ப‌கிர‌ங்கமாக கடித‌ம் ஒ‌ன்றை எழு‌தியு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக கருணா‌நி‌தி‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்த‌ி‌ல், மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் …

  4. தற்போதைய ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்க்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஐனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஐயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மலையகம் தென்பகுதி என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடனும் இத் தேர்தலுடன் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோசத்துடனுமே உள்ளதாகவும் கூறினார். கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவு செ…

  5. அரசைக் கண்டிப்பதில் மட்டும் அனைத்துலகம் பின்னடிப்பது ஏன்? இலங்கையில் செயல் இழந்துவரும் யுத்தநிறுத்த ஒப்பந்தம், முற்றாக முறிந்து பெரும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலைகள் தென்படுகின்றன. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இது குறித்து முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் இருதயம் போன்ற மணலாறு (வெலிஓயா) பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கு அரசுப் படைகள் பெரும் எடுப்பில் ஆயத்தமாகி வருகின்றன எனக் குற்றம் சுமத்தியிருக்கும் விடுதலைப் புலிகள், அதனை முறியடிக்கத் தங்களது படைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றனர். அரசுப்படைகள் மணலாறை ஆக்கிரமிக்க முயன் றால் பெரும் போர் மூளும் என எச்சரிக்கும் செய்தியை அன…

  6. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும் - பேராசிரியர் முருகர் குணசிங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி (08.01.2015) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக இரு அதி தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத் தலைவர்கள் பிரதானமாகப் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருமே கடந்த காலங்களில் தமிழர்களையும், தமிழீழ தேசிய விடுதலையையும் அழிப்பதற்கு கைகோர்த்து நின்றவர்கள். மேலும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முதுகில் குத்தி விட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடித்தவர் மகிந்த ராஜபக்ச. இப்பொழுது மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்திவிட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடிப்பதற்கு கிளம்பியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. இவர்கள் அனைவருமே தந்தையைக் கொன்றுவிட்டு அர…

    • 0 replies
    • 423 views
  7. வடக்கு, கிழக்கின் மீது கண் வைக்கும் சீனா சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது. பிராந்திய எரிபொருள் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றும் இலக்குடன் இந்தியா செயற்படுகிறது. முன்னர் போர் நடந்த பகுதிகளில் ஏற்கனவே முக்கியமான வீடமைப்புத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்திருந்தது. இந்த நிலையிலேயே, முன்னர் போர் நடந்த பகுதிகளில் புதிதாக உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், சீனா முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள உட்கட்டமைப்புத் திட்டங்கள் என்ன என்ற தகவல் எதையும் …

  8. உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு ; சம்பவ இடத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்! Published By: Digital Desk 3 27 May, 2023 | 11:55 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் அடாத்தாகாக ஆக்கிரமிப்பு செய்வதை இன்று சனிக்கிழமை (26) பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்…

  9. சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம். -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம் எதிர்வரும் 22.ம் திகதி முதல் மீண்டும் செய்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பல்கலைகழக துணைவேந்தர் ரவீந்திர நாத், இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு இது வரை என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழக தமிழ்துறைத் தலைவர் பாலசுகுமார் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கடந்த மாதம் வவுனியா விவசாயகல்லூரியில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் மூன்று மாணவர்கள் ப…

  10. சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுத்துள்ள வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தகவல் கொடுத்த ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடகவியலாளர் பிரசன்ன கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகியதையடுத்து சுவிட்டசர்லாந்துக்குத் தப்பிச் சென்று அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவரே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவுக்கு முதன் முறையாகத் தகவலைக் கொடுததிருந்தார். வன்னி இறுதி யுத்தத்தின் போது கள நிலவரம் தொடர்பான தகவல்களை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்புவதற்காக இவர் இர…

    • 1 reply
    • 669 views
  11. இலங்கையின் ஐனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துத்தும். இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராகவும் தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதிய கட்டடிடத்தொகுதியில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/36633/57//d,article_full.aspx

    • 0 replies
    • 557 views
  12. கோத்தா காலத்­தி­லேயே சிங்­கள குடி­யேற்றம் (ரொபட் அன்­டனி) மத்­திய அரசுடன் விக்கி பேச முன் வ­ர­வேண்டும் என்­கி­றது அர­சாங்கம் முல்­லைத்­தீவில் அர­சாங்கம் எந்­த­வொரு சிங்­க­ளக்­கு­டி­யேற்­றத்­தையும் செய்­ய­வில்லை. சிங்­கள குடி­யேற்­றங்கள் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் காலத்­தி­லேயே இடம்­பெற்­றன. தற்­போ­தைய அர­சாங்­கத்தில் எது வும் இல்லை என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். முல்­லைத்­தீவில் சிங்­கள குடி­யேற்­றங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்பில் தன்­னிடம் சாட்­சிகள் இருப்­ப­தாக வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் கூறி­யுள்ளார். அவ்­வாறு சாட்­சிகள் இருந்தால் அவை தொடர்பில் விக்­கி­னேஸ்­வரன் மத்­த…

    • 1 reply
    • 698 views
  13. ராஜபக்ஸ சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராஜேந்திரன் 01 ஜூன் 2011 18 மே 2009 ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், போர் நடந்து கொண்டிருந்த வேளையில், 23 மார்ச் 2009 இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரும் தென் கொரியப் பிரஜையுமான பான் கி மூன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அந்தக் கூட்டறிக்கையில் போர்நிகழ்வுக்கான ‘பொறுப்புக் கூறலையும் வெகுமக்கள் அதனால் அடையும் துயர்களையும் கவனம் கொள்வது’ என இருவரும் ஒப்புக் கொண்டார்கள். இலங்கை ஜனாபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் என இருவரதும் கூட்டறிக்கையினை நடைம…

  14. அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு JAN 08, 2015 | 22:03 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பின்னர், பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கொழும்பு நகரின் வேறு சில பகுதிகளிலும், சிறில…

  15. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலிருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவ…

  16. தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் [22 - March - 2007] -ஆர்.ஹரிஹரன்- தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர்த்து அண்மையில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் அக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஆற்க்காடு வீராசாமி, மு.க.ஸ்ராலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளில் இந்திய மீனவர…

  17. ஞாயிற்றுக்கிழமை, 5, ஜூன் 2011 (9:45 IST யாழ்ப்பாணம் சிறையில் ராமேசுவர மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 1ந் தேதி பாம்பன் அக்காள்மடம் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜெயக்குமார், பிரதாப், மாரி, சுந்தர் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 2 ந் தேதி கரைதிரும்ப வேண்டும். ஆனால் கரைதிரும்பவில்லை. எங்கு சென்றார்கள், அவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்கள் இலங்கையில் கரையேறியது தெரியவந்தது. கடந்த 2 ந் தேதி இரவு இவர்கள் சென்ற படகு காற்றில் சிக்கியதில் பலகை உடைந்து விட்டது. கடலில் திசைமாறி இலங்கை நெடுந்தீவு பகுதியில் மூழ்கியதால் ஜெயக்குமார் உள்பட 4 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல் துறை பகுதியில் நீந்தி கரையேறினர்.…

  18. பிரதம நீதியரசர் மொகான் பீரிசுக்கு 48 மணிநேர காலக்கெடு JAN 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், சட்டவிரோதமான முறையில் பதவியில் அமர்த்தப்பட்ட சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிசை பதவி விலகக் கோரி இன்று உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 500 இற்கும் அதிகமான சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தினால், சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வரவில்லை. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு, பதவி நீக்கப்பட்ட சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும், பிரதம நீதியரசராக நியமிக்க வ…

  19. எப்போதும் உங்களுடனேயே இருப்போம் சம்பந்தனுக்கு உறுதியளித்த மோடி The Prime Minister, Shri Narendra Modi with a delegation led by the Speaker of the Sri Lankan Parliament, Mr. Karu Jayasurya, in New Delhi on September 10, 2018. இலங்கை எமது அயல்நாடு. அங்கு மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம். எம்மை நம்புங்கள். நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இலங்கை அரசு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும். இதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி தனக்கு உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்த…

  20. அனைத்துலக ஊடகங்களின் பார்வையில் தமிழீழ வான்படையின் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 05:47 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலானது அனைத்துலக ஊடகங்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் வலிமையையும், அரசாங்கத்தின் விமான எதிர்ப்புப் பிரிவின் பலவீனத்தையும் தெளிவாகக் காட்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'தி ஏஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. எங்களை மிகவும் குறைவாக எண்ணாதே, எங்களை இராணுவ ரீதியாக தோற்கடிக்கலாம் என எண்ணாதே என இந்த தாக்குதல் மூலம் விடுதலைப் …

    • 17 replies
    • 2.9k views
  21. கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 ஜனவரி 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிர் பலிகளுக்கும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களுக்கும் கோதபாய ராஜபக்ஸ பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வெல இடங்களைச் சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரியும், கழிவுகள் நீரில் கலப்பதனை தடுக்குமாறு கோரியும் போராட்டம் நடத்தியி…

  22. தமி­ழ­ருக்கு ஆளத் தெரி­யா­தாம் – விக்னேஸ்வரனின் சட்­டத்­த­ரணி !! தமி­ழர்­க­ளுக்கு ஆட்சி செய்­யத் தெரி­யாது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி கன­கேஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உட்­பட மூன்று பேருக்கு எதி­ராகத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணை­யின்­போது முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி தமி­ழர்­க­ளுக்கு ஆட்சி செய்­யத் தெரி­யாது என்று நீ…

  23. யாழில் தாக்குதலுக்கு அஞ்சி நடந்தே படைமுகாம்களுக்கு படைமாற்றம் செய்யும் படையினர் யாழில் படையினரின் தொடரணி வாகனங்கள் கிளேமோர்த் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக தொகுதி தொகுதியாக படையினர் நடந்தே படைமுகாம்களுக்கான மாற்றத்தை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர். தென்மராட்சி கிழக்குப் பிரதேசங்களில் உள்ள படைமுகாம்களுக்கான விநியோகமார்க்கங்கள் படையினர் செல்லும் பாதைகள் அனைத்தும் பூரண படைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் எந்தவேளையிலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக தற்பொழுது படையினர் இரவு வேளைகளில் பிரதானசாலைகளை தவிர்த்து உட்பாதைகள் ஊடாக பயணம் மேற்கொள்கின்றனர். வரணியில் இருந்தும் எழுதுமட்டுவாள், உசன் பிரதேசங்களில் இருந்தும் கச்சாய், கோய…

    • 0 replies
    • 1.1k views
  24. பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு JAN 21, 2015 | 13:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுக்களை அடுத்தே, மொகான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், பழிவாங்கும் வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட, சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவிக்கு அமர்த்தும் நோக்கிலேயே, மொகான் பீரிசை பதவியில் இருந்து விலக வைக்க அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்த…

  25. ‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’ மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிட்ட எந்தக் கொள்கைகளும் இல்லை. அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அதனிடம் பொதுவான சின்னமும் இல்லை. முறைப்படி, கிரமமான கூட்டங்களை நடத்துவதும் இல்லை. எமது மக்களின் தேவைகள், அபிலாசைகளை பிரதிபலிப்பதை கைவிட்ட ஒரு குழுவினால் இயக்கப்படுகிறது. மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.