ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
2019-11-01 11:39:34 சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news
-
- 12 replies
- 1.6k views
-
-
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல. ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான். 2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன? கடந்த நான்கரை ஆண்டுக் காலம் அரசாங்கத்தைத் தாங்கிப் பிடித்தீர்கள் அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்டியதா?எனத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடையம் தொடர்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை(9) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள…
-
- 3 replies
- 677 views
- 1 follower
-
-
03 FEB, 2025 | 08:09 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர், வனஇலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதால், மக்கள் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரச இயந்திரங்கள் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச்செய்தால் மக்கள் வீதிகளிலா குடியிருப்பது எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணுக்காய் பிரதேச ச…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
வேலூர் சிறையில் நளினியுடன் பிரியங்கா சந்தித்;து பேசியபிறகு நளினியுடன் அவர் கணவர் முருகன் பேச மறுத்து விட்டார். இன்று நடக்கும் சந்திப்பில் நளினியுடன் முருகன் பேசுவாரா? அல்லது புறக்கணிப்பார்ர? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நளினியும் அவரது கணவர் முருகனும் 15 நாட்களுக்கு ஒரு முறை, சனிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் 30 நிமிடங்கள் பேச அனுமதி வழங்பகப்படுகிறது. பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைக்காவலர்கள் ஆண்கள் சிறையிலிருந்து பெண்கள் சிறைக்கு முருகனை கூட்டிச் சென்று வருவார்கள் பிரியங்கா நளினி சந்திப்பு நடத்து 3 நாட்கள் கழித்து மார்ச் 22ம் திகதி நளினியும் முருகனும் சந்தித்து பேசினார்கள். அப்போது பிரியங்கா தன்னை சந்தித்து சென்ற த…
-
- 1 reply
- 882 views
-
-
வடக்கு வரும் ஜனாதிபதியும், பிரதமரும் கைதிகளை விடுவிக்க உதவ வேண்டும் : சரவணபவன் எம்.பி கோரிக்கை தேசிய பொங்கல் விழாவுக்காக வடக்குக்கு வருகை தரும் ஜனாதிபதியும், பிரதமரும் அரசியல் கைதிகள் தொடர்பில் திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகள், ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போது பொங்கல் விழாவை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது விட…
-
- 0 replies
- 379 views
-
-
கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. சிறுவனின் உறவுகள், மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
புலத்தில் – நிலத்தில் மகிந்தருக்கு எதிராக போராட்டம்- யாழ் மாணவர்களால் யாப்புக்கள் தீக்கிரை தமிழீழம் | Admin | June 6, 2012 at 19:00 -------------------------------------------------------------------------------- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டனில் தங்கியள்ள நிலையில் மீண்டும் இலங்கையின் அரசியல் யாப்பு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.கடைசியாக தமிழ் அரசன் சங்கிலியன் ஆட்சி செய்த நல்லூரிலுள்ள புனித யோவான் தேவாலய கல்லறையில் அரசியல் யாப்பு மாணவர்கள் கழு ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வாகனங்களினில் சென்றிறங்கிய மாணவர்கள் குழு ஒன்றே அரசியல் யாப்பை தீக்கிரையாக்கியுள்ளது. சுலோக அட்டைகளில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் நடைமுறையை அமுலுக்கு கொண்டு வந்த பிரி…
-
- 2 replies
- 974 views
-
-
Published on January 11, 2016-6:38 pm · No Comments தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரே குரலில் பேசுதல், வினைத்திறன் மிக்க மாகாண நிர்வாகம் இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. என முதல்வரிடம் தெரிவித்தனர் வட மாகாணசபை உறுப்பினர்கள். வட மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும், வட மாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று [11-01-2016] முற்பகல் 10:00 மணிமுதல் முதலமைச்சர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வட மாகாணசபையின் ஆளும்தரப்பு உறுப்பினர்களின் கூட்டான வேண்டுகோளுக்கிணங்க முதலமைச்சர் அவர்கள் இந்த சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கித்தந்திருந்தார். மேற்படி சந்திப்பில் 18 ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்…
-
- 0 replies
- 635 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சியொன்று கடந்த திங்கள்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்:- "தனது தொழில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி னேன். நான் வீடு திரும்பியதும் எனது மனைவி வீட்டு கதவை பூட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எனது வீட்டுக்கு முன் வாகனமொன்றிலும் டிப்பர் ஒன்றிலும் சுமார் 20 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த கும்பல், " டேய் ராஜன்" "வீட்டுக்கு வெளியே வாடா" என்று கத்தி சத்தமிட்டனர். நான் வீட்டைத் திறக்காமல் அருகிலுள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு, பின்பக்கத்தால் சென்று அங்கிருந்து வந்தவர்கள் யார் என்…
-
- 0 replies
- 674 views
-
-
தெஹிவளையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினர் இணைந்து பிரதேசத்தில் இன்று காலை 6 மணி முதல் முற்பகல் 9.30 வiர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, பருத்தித்துறை,.............. தொடர்ந்து வாசிக்க............... http://isoorya.blogspot.com/2008/05/4.html
-
- 0 replies
- 787 views
-
-
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு, குறித்த திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த ஊழியர்களின் பெயர் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெயர் பட்டியில் இன்று (25) அதிகாலை விமான நிலையத்தின் குடிவரவு - குடியகல்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், பெயர்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ப…
-
- 3 replies
- 893 views
-
-
பிணத்துடன் தவிக்கும் கிராமம்! இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை கிராமங்கள் வரை கொண்டு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிக்கொண்ட போதிலும் அந்த அபிவிருத்திகள் பல கிராமங்களை சென்று சேரவில்லை என்பதே உண்மையானது என தெரியவருகிறது. வட, கிழக்கு பகுதிகளில் மாத்திரமல்ல தென் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாத நிலைமையை காணமுடிகிறது. இதற்கு மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவல பள்ளயாய கிராம் ஒரு உதாரணமாகும். இந்த கிராமத்து மக்கள் ஊரை கடந்து செல்ல ஆற்றை கடக்க பாலம் ஒன்றில்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். …
-
- 0 replies
- 389 views
-
-
ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 1575…
-
- 0 replies
- 235 views
-
-
யாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அ…
-
- 2 replies
- 969 views
-
-
25 Mar, 2025 | 05:09 PM மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற…
-
- 0 replies
- 124 views
-
-
விமானங்களால் கொழும்பில் மக்கள் பீதி வீரகேசரி இணையம் 5/29/2008 9:02:14 AM - கொழும்பில் நேற்றிரவு பறந்த மர்ம விமானங்களால் நகர மக்கள் மிகவும் பீதியடைந்தனர். வெளிச்சம் அற்ற நிலையில் விமானங்கள் பறப்பதை நேற்றிரவு 7.15 மணியளவில் கொழும்பு நகரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானித்துள்ளனர். தொடர்ந்தும் இந்த மர்ம விமானங்கள் பறந்தமையால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் நேற்றிரவு தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மேற்படி விமானங்கள் விமானப்படைக்கு சொந்தமானவை எனவும் விமானப்படை விமானங்கள் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டதாகவும் விமானப்படை தலைமையகம் தெரிவித்தது.
-
- 1 reply
- 1.9k views
-
-
இன,மத அவமரியாதையை தடுப்பது ஊடகங்களின் பொறுப்பு எந்தவொரு மதத்தையும் , இனத்தையும் அவமரியாதை செய்யும் செயற்பாடுகளை தடுப்பது ஊடகங்களின் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் . நேற்று பதுளையில் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார் . அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் நல்லாட்சியின் கீழ் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி புதிய பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அதன்படி முதலீட்டாளர்கள் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துக் கொண்டிருகின்றனர் . ஜனநாயகம் மோசடி தொடர்பாக இலங்கை சர்வதேசத்தில் பெற்றிருந்த அவப்பெயரில் இருந்து…
-
- 0 replies
- 294 views
-
-
ரணில் அவசர இந்திய விஜயம்: இந்திய அரசு அழைப்பு Sunday, 08 June 2008 எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து ஈழப் பிரச்சினையில் இந்தியா மீண்டும் தன்னுயை பங்களிப்பொன்றை மேற்கொள்வதற்கு முற்பட்டுள்ளதா என்ற கேள்வி கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களில் உருவாகியிருக்கின்றது. இந்தியாவின் அவசர அழைப்பை ஏற்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனது மனைவியுடன் சென்னை சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மும்பாய், புதுடில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்லவிருக்கின்றார். இந்தியாவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
டெசோ மாநாடு - ஏன்..? எதற்கு..? பின்னணி குறித்து ஈழதேசம் பார்வையில்..! போன தடவை டெசோ மாநாடு இந்திய அரசியலை பேசியது. இந்த தடவை டெசோ மாநாடு சர்வதேச அரசியலை பேசப் போகிறதா..? அதாவது 80 களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட டெசோ மாநாடு, இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த பல்வேறு ஆயுத குழுக்களை முன்வைத்து, அவர்களின் கோரிக்கையான சுதந்திர ஈழம் என்ற கருத்தாக்கங்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் தி.மு.க. நிர்பந்திக்கப்பட்டன அல்லது அதை நோக்கி தள்ளப்பட்டன. அப்பொழுது தமிழக மக்களின் பொதுப் புத்தியில், இரண்டு கழக உடன்பிறப்புகளின் பொதுப் புத்தியில் எம்.ஜி.ஆர்.தமிழர்களின் வாழ்வுக்காக, அவர்களின் ஏழ்மையை போக்குவதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்றும், மு.கருணா…
-
- 4 replies
- 575 views
-
-
சிங்கப்பூர் அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம் மற்றும் சட்டம் தொடர்பான அமைச்சர் கே.சண்முகம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். மேலும் அவருடன் ஐந்து பேர் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வந்துள்ள அமைச்சர் கே.சண்முகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடவுள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சிங்கப்பூர்-அமைச்சர்-இலங/
-
- 1 reply
- 528 views
-
-
இலங்கையிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்துவருபவர்களிடம் விடுதலைப் புலிகள் பணம் சேகரிப்பதற்கு அனுமதித்திருப்பதானது பிரித்தானியா பயங்கரவாதத்துக்கு எதிரான விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதை தெளிவுபடுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். விபரம்: http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 926 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஹம்மது நபி (ஸல்) பெருமானையும் புனித குர்ஆனையும் புறந்தள்ளி விட்டு மஹிந்த சிந்தனை யைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசுக்குத் தாரை வார்க்கும் நோக்கிலேயே மு.கா. கிழக்கில் தனித்துக் களமிறங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், நபி(ஸல்)பெருமானை துன்பப்படுத்திய குரேஷியர்கள் போல் ஆட்சி நடத்தும் மஹிந்த அரசுடன்தான் இன்று மு.கா. ஒட்டிக்கொண்டுள்ளது என்றும் ரணில் கூறினார்.அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கிழக்கில் தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ…
-
- 0 replies
- 703 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது! பிரஸெல்ஸ், ஜனவரி 13, 2020 ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து இந்த வருடமும் விடுதலைப் புலிகளின் பெயர் அகற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபியின் தீர்மானம் 1373 / 2001 இன் பிரகாரம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அமைப்புக்களயும், தனி மனிதர்களையும் பட்டியலிட்டு அவர்கள் மீது பலவிதமான தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்து வருகிறது. 2006 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் அப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது, 21 அமைப்புகளினதும், 15 தனிமனிதர்களுடையதும…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
16 MAY, 2025 | 01:32 PM உலகின் பல நாடுகளை போல இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால், பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும். எங்களால் இதனை செய்ய முடியாது. உலகின் பல நாடுகளை போல நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம், ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம். பாலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
[size=4][/size] [size=4]கொழும்பில் திடீரெனப் பெருமளவு தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில், கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளதை சிறிலங்கா காவல்துறையும், பிராணிகள் நல அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. கொழும்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில், கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர், ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். அதேவ…
-
- 7 replies
- 1.3k views
-