ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிக…
-
- 0 replies
- 196 views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற…
-
- 6 replies
- 1.5k views
-
-
மனித கடத்தல் வியாபாரம்; இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் பதிவு மனித கடத்தல் வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுக்கு கடந்த இரண்டரை மாதங்களில் 15 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் மனித கடத்தல் வியாபாரத்தை முற்றாக கட்டுப்படுத்த முடியுமான நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனித வியாபாரத்துக்கு எதிராக முறையிடுவதற்காக விசேட பிரிவொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.…
-
- 0 replies
- 400 views
-
-
யாழ் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்..! நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் நாடு பூராகவும் இன்றையதினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பொதுமக்களுக்கு நோய்த்த…
-
- 0 replies
- 450 views
-
-
2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு! 2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் (NCPA) பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவான முறைப்பாடுகளில் 545 பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை, 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை. இதேவேளை, கடந்த ஆண்டு 79 பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகளையும் அதிகார சபை பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஒன்பது சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் வன்கொடுமை வழக்குகள், சிறுவர்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதி…
-
- 0 replies
- 113 views
-
-
எமக்கு விடிவு கிடைக்கும் வரை எழுச்சிப் போராட்டங்களை தொடருங்கள்: இந்திய தமிழர்களிடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் [வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2008, 01:32 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமானதும் நீதியானதுமான வாழ்வு கிடைக்கும் வரையில் உங்கள் எழுச்சிப் போராட்டங்கள் தொடரவேண்டும் என்று இந்தியா வாழ் தமிழ் உறவுகளிடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆயுதமுனையில் பயணக் கைதிகளாக அகப்பட்டுள்ள சிக்கித் தவிக்கும் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இந்திய உறவ…
-
- 0 replies
- 657 views
-
-
சட்டரீதியான சிக்கல் இல்லையாயின் தேர்தலை நடத்துவதவற்கான மற்றொரு திகதியை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலககன-வற-தகத-அறவககபபடம/175-251199 இறுதி தீர்மானம் நாளை பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மனுக்க…
-
- 1 reply
- 426 views
-
-
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணி…
-
- 0 replies
- 77 views
-
-
ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 673 views
-
-
சிறீதரனின் இல்லத்திற்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கம்! [Tuesday, 2012-12-04 09:25:02] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அறிவகத்தின் பொலிஸ் பாதுகாப்பு இன்று மாலை அதிரடியாக விலக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவகத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் அவர்களின் மேலிட உத்தரவின் பேரில் பாதுகாப்பு கடமையில் இருந்து அதிரடியாக இன்று விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பா.உறுப்பினர், சி.சிறீதரன் உரிய இடங்களுக்கு முறையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இதேவேளை வடக்கில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லப் பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த வகையில் யுத்தக்குற்ற சம்பவங்கள் குறித்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 401 views
-
-
ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து இலங்கையில் தமிழர்கள் துன்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார். இதனை ரசிகர்கள் புரிந…
-
- 9 replies
- 2.9k views
-
-
ஸ்ரீலங்கா அரசுக்கு அடித்த லொத்தர்! நிரூபித்துக்காட்டிய சம்பந்தன் https://www.youtube.com/watch?time_continue=184&v=PvtiK6gQnbk&feature=emb_logo
-
- 0 replies
- 508 views
-
-
மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என எமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது. ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டு…
-
- 0 replies
- 119 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் ஆட்கொலைகளை கண்டிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என பாராளு மன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்ப…
-
- 2 replies
- 978 views
-
-
தடுப்பிலுள்ள மாணவர்கள் தொடர்பில் - பல்கலை நிர்வாகத்தினர் இராணுத்தினர் பலாலியில் சந்திப்பு! [Friday, 2012-12-21 09:52:44] யாழ். பல்கலைக்கழக நிரவாகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.12.2012)காலை 10 மணியளவில் பலாலி படை தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பீடாதிபதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்துவதற்காகவேதாம் இச்சந்திப்பு என ஏற்பாடு செய்துள்ளதாக பல்கலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தச்சந்திப்பில் தாம் கலந்துகொள்வது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர…
-
- 1 reply
- 350 views
-
-
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து அம்பகாமம் கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 827 views
-
-
இலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு தினம் இலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள். மூதூர் தாக்குதலில் 54 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது விடுதலைப்புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னர் அந்த பிரதேசம் பல மணித்தியாலங்கள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. ஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது அவ்வேளையில்தான் தங்களை வெளியெறுமாறு விடுதலைப்புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரி…
-
- 3 replies
- 610 views
-
-
ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை “அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில், ஆட்சி ஏற்றதும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது. அரசியல் பழிவாங்களுக்கான திட்டமிடல்களை மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள். பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில்…
-
- 0 replies
- 259 views
-
-
திறமையானவர்களை மக்கள் ஆதரிக்கவேண்டும் – கே.சிவாகரன் by : Vithushagan பொது தேர்தல் தமிழர்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும் எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவில்லையெனின் தமிழ் மக்கள் இல்லாமல் போய்விடுவோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிகட்சியில் போட்டியிடும் வேட்பாளர் கே.சிவாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியிலுள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அக்ருத்து தெரிவித்த அவர், “கிழக்கு தமிழ் மக்கள் முக்…
-
- 0 replies
- 325 views
-
-
'நான் என் நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்?
-
- 1 reply
- 2.7k views
-
-
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு இந்தியா உதவி! by : Vithushagan வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளைப் போன்று அபிவிருத்தி தேவையைக் கொண்ட நா…
-
- 0 replies
- 479 views
-
-
உல்லாச பயணிகள் சிறிலங்கா செல்வதை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குச் செல்வதாக இந்திய உல்லாச பயண சபையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 582 views
-