Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் தொடருந்துகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக தொடருந்து போக்குவரத்தும் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 367 views
  2. சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்: ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுத…

    • 6 replies
    • 1.4k views
  3. ஜெனீவாவில் நடைபெற்ற தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டில் கணேசமூர்த்தி உரை: ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் தேதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, எம்.பி., ஆற்றிய உரையின் சுருக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ‘தாயகம்’ தலைமை நிலையம் சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க., 03.03.2013 சுவிட்சர்லாந்து மக்கள் பேரவை, கனடிய மக்கள் பேரவை ஜெனிவாவில் மார்ச் 2-ஆம் தேதி தமிழர் உரிமைகளுக்கான மாநாட்டினை நடத்துகின்றது. அம்மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆற்றிய உரை வருமாறு: தமிழ் ஈழம் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீர ம…

    • 1 reply
    • 537 views
  4. அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 369 views
  5. “ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது அவசியம்” : மைத்திரி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் நிறைவு செய்யமுடியாது. அடுத்த வருடமே அது நடைபெறும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். நான் ஒருதடவையே ஜனாதிபதியாக இருப்பேன் கூறியதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/13219

  6. யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளைச் சேர்நத பகுதிகளில் பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 163பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குடிபோதையில் கலகம் விளைவித்த 2 பேரும், அடித்துக்காயப்படுத்தியமை தொடர்பில் 40 பேரும், பணமோசடி தொடர்பில் ஒருவரும் , சந்தேகத்தின் பேரில் 24 பேரும் , காசோலை மோசடி தொடர்பில் ஒருவரும், வீதி விபத்தில் ஒருவரும், பொது இடங்…

  7. அனைத்துலக மகளிர் நாளினை முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு, சோசலிச முன்னணி நெறிப்படுத்திய கவனயீர்ப்பு அணிவகுப்பு 'போருக்கு எதிரான பெண்கள்' என்ற தலைப்பில் மெல்பேர்ணில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views
  8. நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததா…

  9. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…

  10. ஜனாதிபதியால் லீ குவான் யூ ஆக முடியாது: சாணக்கியன் சபையில் தெரிவிப்பு

    • 2 replies
    • 1.1k views
  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் மகிந்த அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் புதிய, புதிய கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுவதாகவும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  12. ‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’ அழகன் கனகராஜ் “ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. நாடாளும…

  13. இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). என்ற காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் அடைந்தார். மாரிமுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளிப்பது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5489

    • 6 replies
    • 1.2k views
  14. கடந்தகால யுத்தத்தில் எமது தமிழினம் இழப்பதற்கு எதுவுமில்லை, எமது பாரம்பரிய கலை கலாச்சாரங்களும் அதில் உள்ளடங்கும். ஆகவே எமது பாரம்பரிய கலாச்சாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் அமைந்துள்ள அரசையடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஸ்தாபன விழாவில் இன்று(04) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வானது ஆலய தலைவர் கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது. அங்கு கலையரசன் மேலும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்திற்கு முகவெற்றிலையாக காரைதீவு மண் திகழ்கிறது. வீரம் கல்வி பொருந்திய மண். விபுலானந்த அடிகளாரது பெயரில் உள்ள விபுலானந்த சது…

  15. வசாவிளான்,பலாலியில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அங்கஜன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மாகாணத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 33,861 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், வசாவிளான்,பலாலி பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், …

  16. தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளும், கூட்டணி முடிவுகளும் ஓரளவுக்குத் தீர்மாகிவிட்டது. வாக்காளர்கள் நியமனங்களும், பிரச்சாரங்களும் இன்னமும் தொடங்கப்பட்டாத நிலையிலேயே, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கான எதிர்பிரச்சாரம் வலுத்து வருவதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவினதும், காங்கிரசினதும், ஆதரவாளர்களாக இருந்தவர்களே இத்தகைய எதிர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது இந்தக் கூட்டணியின் தேர்தல் வெற்றிப்பிரச்சாரத்துக்குச் சற்றுச் சவாலாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆடிய நாடகமே இந்த அதிருப்பதி நிலை தோன்றக் காரணமெனச் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர் போராட்டதை ஆதரித்துப் பேசிய, தமிழுணர்வாளர், இயக்குனர் சீமானை, கொளத்தூர் மணி, ஆக…

    • 0 replies
    • 801 views
  17. மஹிந்தவுக்கு மன்மோகன் அழைப்பு- 13ஆவது திருத்தத்தை அமூல்படுத்தவும் வலியுறுத்தல் 11 ஏப்ரல் 2013 கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வ…

  18. யாழில் கடந்த 10மாதத்தில் 69 இலட்சம் லீற்றர் கள்ளு விற்பனை யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ள தாக மதுவரித்திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் தெரிவித்தார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் , யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெப்பரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கள்ளு இறக்கப்படுவதில்லை இதேபோல் அக்டோபர் மாதத்திற்கு பிற்பட்ட காலங்களிலும் பெரியளவில் கள்ளு இறக்கப்படவில்லை இதனடிப்படையில் பெப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகளவான கள்ளு நுகரப்பட்டு…

  19. About one thousand Tamil Tiger supporters block Elizabeth Street at peak hour, protesting against violence in Sri Lanka. http://media.smh.com.au/national/breaking-...est-467558.html

  20. பொருத்தமான வீட்டுத்திட்டம் அவசியம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு உற­வு­க­ளையும், வீடு­க­ளையும், சொத்­துக்­க­ளையும் இழந்த மக்­களின் தேவைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளன. அந்த மக்­களின் தேவைகள் பிற்­போ­டப்­ப­டக்­கூ­டி­ய­வையோ, அல்­லது காலம் தாழ்த்­தப்­ப­டக்­கூ­டி­ய­வையோ அல்ல. அந்த மக்­களின் தேவைகள் விரை­வாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதிலும் விசே­ட­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீட்டுப் பிரச்­சினை என்­பது பாரிய பூதா­க­ர­மான விட­ய­மாக மாறி­யுள்­ளது. குறிப்­பாக யுத்தம் கார­ண­மாக தமது வீடு­களை இழந்த மக்கள் இது­வரை வீடு­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள…

  21. அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் நோக்கத்துடன் சுவிற்சர்லாந்தின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்று சனிக்கிழமையும் பேர்ண் மாநகரில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில் வீதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடை செய்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 378 views
  22. தமிழீழ, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உள்ள தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் அவர்களோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை விதைத்தவர். அவருடைய பாசத்திற்குரிய பிள்ளையான சிவந்தி ஆதித்தனுடைய மறைவு ஈடு செய்ய முடியாததாகும். ஐயா சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய நிறுவனங்களை தொடர்ந்து வளர்த்து காத்து வந்தவர். தென் தமிழ்நாட்டில் கல்விநிலையில் பின் தங்கிய பிற்பட்ட மக்களுக்கு உறுதுணையாக ஐயா ஆதித்தனார் தொடங்கிய கல்லூரிகளை மேலும் விரிவுபடுத்தி பொறியியல் கல்லூரி போன்றவற்றை நிறுவி அறிவியல் வளர்த்தவர். ஐயா தொடங்கிய தினந்தந்தி இதழ் தொடக்கம், அத்துடன் இணைந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் சிறப்புடன் நடத்தியவர். தமிழ்நாட…

  23. மூன்று மாதங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் டக்ளஸ் எட்டு மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார். எங்கள் காணிகள் பறிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எங்களை எங்கே கொண்டு சென்று மீள்குடியமர்த்தப் போகிறார் என்று வலி.வடக்கு மக்கள் நேற்றுக் கேள்வியெழுப்பினர். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது பிரதேசங்கள் நிரந்தரமாக இராணு வத்தினரால் பறிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேட்டன…

    • 2 replies
    • 799 views
  24. யுத்த நிறுத்தம் என்ற சொல் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது - ரம்புக்வெல யுத்த நிறுத்தம் என்ற ஒரு வார்த்தை சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட வார்த்தை என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்திற்குப் பயந்து யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது. மகிந்த ராஜபக்ச தனது உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். படைத்துறை ரீதியாக பிரபாகரனை வெல்ல முடியாது என்ற அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை அவர் தவிடுபொடியாக்கியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினை குறித்த தெளிவில்லாது வெளிநாட்டு அமைச்சர்கள் யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக இருப்…

    • 2 replies
    • 731 views
  25. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கள் ஸ்தம்பிதமடைந்திருப்பதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைபே ஏற்றுக் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் செவ்வியொன்றை வழங்கிக் கருத்து வெளியிட்ட ஜானாதிபதி, பேச்சுகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும், ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் வீணாக அரசை குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார். முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தீர்வுப்பேச்சுக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப்பொறுப்பையும் இலங்கை அரசே ஏற்…

    • 1 reply
    • 407 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.