ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
அனைவரையும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரிக்கை : கடமைக்கு திரும்பாதோர் தாமாகவே விலகியதாக கருதப்படுவர் பொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனும…
-
- 0 replies
- 233 views
-
-
ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை கரம்பன் கிழக்கில் அமைந்துள்ள தேவ வார்த்தை மிஷனரி சபை என்ற கிறிஸ்தவ சபையிலேயே காலை ஆராதனை நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை இந்த கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 9.40 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது சபையில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். சம்பவத்தின்போது 15 வயதுடைய ஆனந்தராசா பியூலா பாடசாலை மாணவியின் வலது கண்ணில் கல்லொன்றுபட்டதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இச்சம்பவம் தொடர்ப…
-
- 1 reply
- 323 views
-
-
தீயது செய்வோரை அறிவுரைகளால் திருத்த முயலுங்கள் தீய செயல்கள், போதைப்பொருள் பாவனை, களவுகள் என்பவற்றில் ஈடுபடக்கூடிய மிகக் குறுகிய தொகுதியினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த முயலுங்கள். அதுமுடியாவிட்டால் சட்டரீதியாகவாவது அவர்களைத் திருத்தி அவா்களையும் இந்தச் சமுதாய நீரோட்டத்தில் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். காக்கைதீவு பொதுச் சந்தைக் கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே …
-
- 0 replies
- 342 views
-
-
‘மயானப் பிரச்சினையில் தலையீடு இல்லை’ “புத்தூர் மயானப் பிரச்சினையில் தலையீடு செய்வதில்லை” என வட மாகாண சபை முறைப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போதே அவைத்தலைவர் இவ்வாறு தெரிவித்தார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் உடல்களை எரிப்பதற்கு, மயானத்தைச் சூழ உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் புத்தூர் கலைமதி மண்டப முன்றலில், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் குறித்த மக்கள் ஈட…
-
- 0 replies
- 252 views
-
-
இன்னுமொரு இனத்தின் எந்த கோரிக்கையினையும் தட்டிப் பறிக்கவில்லை எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடிவதாகவம் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ…
-
- 2 replies
- 359 views
-
-
ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 90 வீதமானவர்கள் தனக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fp2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 410 views
-
-
நவம்பர் மாதம் 01ம்,02ம்,03ம் திகதிகளில் அமெரிக்க மாநாடு இடம் பெற்றது. அமெரிக்க தமிழ்ச்சங்கமும் அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவும் இணைந்து இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்க தமிழர் சங்கம் ஒரு பழமையான தமிழர் அமைப்பாகும் இது தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களில் அக்கறை கொண்டிருக்கின்றது. அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு அரசியல் விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அமெரிக்க சட்டமன்றம் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் தமிழர் விவகாரங்களுக்காக தொடர்ச்சியாக பேசிவருகின்றது. இம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார், அனந்தி, சுமந்திரன், மாவைசேனாதிராசா, என்போரும் சிவில் சமூகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரனும் ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். http://www.virakesari.lk/article/23174
-
- 0 replies
- 166 views
-
-
மன்னார் மறைமாவட்டத்திற்கு போப் பிரதிநிதி விஜயம் போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார். மன்னார் நகருக்குச் சென்ற அவர், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மறைமாவட்டத்தின் முக்கிய குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பின்னர், அவர் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து, பொதுமக்களையும், குருமார்களையும் சந்தித்துள்ளார். மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்த அவர், வவுனியா பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வருகி;ன்ற போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்…
-
- 0 replies
- 510 views
-
-
கடந்த கால போர் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து தற்போது சொந்தக் கிராமத்தில் குடியமர்ந்த பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாசார் கிராமத்தில் குடியமர்ந்துள்ள சில குடும்பங்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துத்தரப்படாத நிலையில் மழை ஆரம்பித்துள்ளதால் பிள்ளைகளுடன் சிறுகுடிசைகளிலேயே தங்கியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர் . இப் பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் கிடைத்துள்ளன . வன்னிக்கு இடம்பெயர்ந்து செல்லாமல் குடாநாட்டினுள் தங்கியிருந்தவர்களுக்கும் நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன . நிரந்தர வீடுகள் கிடைத்து வீடுகள் கட்டி முடித்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருப்பதால் சில வீடுகள் பூட்டப்பட்ட நிலையிலும் உள்ளன . இந்த நில…
-
- 0 replies
- 365 views
-
-
புனர்வாழ்வு முகாம்களில் தங்கியிருந்த முன்னாள் புலிகள் 566 பேர் நேற்று விடுதலை பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 566 பேர் நேற்று விடுதலை செய்யப்பட் டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் விடுதலைப் புலி உறுப் பினர்களை அவர்களது உறவினர்கள் மற் றும் பெற்றோரிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்ததாக நீதி மற்றும் சட்ட மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு நிலையங்களில் இவர்களின் மனநிலையை விருத்தி செய்யும் விசேட செயற் றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டவர்கள் அவர் களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள…
-
- 0 replies
- 430 views
-
-
க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk/exam/contact.html இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/?q=node/360034
-
- 16 replies
- 4.7k views
-
-
அரசியல்வாதியின் ஆலோசனையால் காட்டில் அல்லலுறும் மக்கள் வடமாகாணத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டமானது வடக்கே எல்லையாக யாழ் மாவட்டத்தையும், கிழக்கு தெற்கு எல்லைகளாக முல்லைத்தீவு மாவட்டமும், தெற்கு, மேற்கு எல்லைகளாக மன்னார் மாவட்டத்தையும் கொண்டு விளங்குகின்றது. இயற்கை வளங்களாக இரணைமடுக்குளம், சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம், வன்னேரிக்குளம் பறவைகள் சரணாலயம், மற்றும் கௌதாரிமுனை கடற்கரை என்பன விளங்குகின்றன. கிளிநொச்சி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் நெற்செய்கையுடன், உப உணவு பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, பழமரச்செய்கை மற்றும் மீன்பிடித் தொழில் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் ம…
-
- 0 replies
- 426 views
-
-
இரு கனேடிய தமிழர்களுக்கு கடும் சிறைத்தண்டனை ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்ட…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 281 views
-
-
திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. 2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு எழுத்து மூலமாக குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளது. ஜெட் பயணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் பல கேள்வியை எழுப்ப…
-
- 3 replies
- 347 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 31, ஜனவரி 2010 (11:44 IST) ராஜபக்சேவை ஆதரித்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி கூட்டணி சார்பில், தற்போதைய அதிபரான 64 வயது ராஜபக்சே போட்டியிட்டார். எதிர்க்கட்சி கூட்டணி சார்பில், இலங்கை ராணுவத்தின் முன்னாள தலைமை தளபதியான சரத் பொன்சேகா (வயது 59) அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். அதிபர் தேர்தலில் ராஜபக்சே 18 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இரண்டாவது முறையாக ராஜபச்சே இலங்கை அதிபராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்கிறார். இதை அவரே தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய…
-
- 0 replies
- 630 views
-
-
இலங்கையில் புதிதாக மத வழிபாட்டு தலங்களை நிர்மாணிப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் எழுத்து மூல அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.புத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் எம். கே. பீ. தர்மதாசாவினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் உள் நாட்டு பத்திரிகைகளில் இன்று வெளியாகியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் விகாரைகள், கோயிலகள், மசூதிகள், தேவாலயங்கள், தியான நிலையங்கள், ஜெப நிலையங்கள் ஆகியவை எவ்வித தர நிர்ணயங்களும் இன்றியும் அனுமதி இன்றியும் பரவலாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. அரச மரம், சிலைகள், தர்மச் சக்க…
-
- 2 replies
- 247 views
-
-
“எனக்கு கோபமூட்டாதீர்கள்’’ (படம்: தமித் விக்கிரமசிங்க) நாம் தவறு செய்யவில்லை. எனக்கு கோபமூட்டாதீர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் இன்று (11) தெரிவித்தார். சிறைத் தண்டனைப் பெற்று,சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவையும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவையும் பார்வையிடுவதற்காக சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே கோபத்தில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். “சில் ஆடைகளை வழங்குமாறு நானே பணிப்புரை விடுத்தேன். அது தவறல்ல. மக்களிடமிருந்து கிடைத்த வேண்டுக…
-
- 5 replies
- 614 views
-
-
எம்.பி.க்கள்-அமைச்சர்கள் குழு இலங்கையை விட்டு வெளியேற முயற்சி? -சி.எல்.சிசில்- நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாத கால விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளதுடன், வீதிகள் மற்றும்…
-
- 2 replies
- 325 views
-
-
இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது இலக்கை நிறைவேற்றிக்கொள்வதற்காக தற்போது ஏனைய வழிகளில் செயற்பட முயன்றுவருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம குற்றஞ்சாட்டியுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அகமட் ஷஹிட்டுனான சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகள் அச்சுறுத்தல்களுக்கான ஆபத்தை எதிர்நோக்கிவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் எனவும் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/1019-2010-02-23-04-42-48.html
-
- 1 reply
- 784 views
-
-
இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பெண் நடன கலைஞர்களை இலங்கையில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். வீசா வரைமுறைகளை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். பொரலை பகுதியில் இயங்கி வரும் இரவு நேர விடுதி ஒன்றில் நடனமாடுவதற்காகக் குறித்த கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்கள் பயண வீசாவில் வந்து இலங்கையில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தற்போது குடிவரவு துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.pathivu.com/news/29051/57//d,article_full.aspx
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் தனித் தமிழ் ஈழத்திற்கான பயணத்தை ஆரம்பித்து விட்டார் என தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் ர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. எனவே வரலாற்றை புதிதாக எழுத வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் விக்னேஸ்வரனுக்கு உதவிபுரிய ஆரம்பித்து விட்டது. இதற்காக இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல பல்லினங்கள் வாழும் நாடு என்ற வரலாற்றை எழுத அரச சார்பற்ற சக்திகள் ஆரம்பித்து விட்டன. இது கால வரையும் ஈழராஜ்ஜியத்தை ஆதரித்தவர் விக்னேஸ்வரன். அன்று நீதித்துறையில் இருக…
-
- 1 reply
- 538 views
-
-
எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று நீதிமன்றத்தில் தகவல் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Ezhilan-was-not-surrened-to-army
-
- 3 replies
- 518 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் எரிபொருளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் வரிசையில் காத்திருக்கின்றனர். சில பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகிலும், சமையல் எரிவாயு விற்பனை நிலைய வளாகங்களிலும் இரவிரவாக மக்கள் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு இன்று கொழும்பு - ஒருகொடாவத்தை பிரதேசத்திலுள்ள லாஃப் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண்ணெய்ணெய் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் , அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் வரிசையில் காத்திருந்த மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் …
-
- 1 reply
- 270 views
- 1 follower
-