Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் …

  2. புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்களை நினைவுகூருவது தவறா? – பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலவந்தமாக அவர்களது இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மரணமான அச்சிறுவர்களின் பெற்றோர் அவர்களை ஏன் நினைவு கூர முடியாது? ஒரு நாடு, ஒரு சட்டம் என்றால், தெற்கில் ஜே.வி.பி காலத்தில் படையினரால் கொல்லப்பட்ட ஜே.வி.பியினரை நினைவு கூர முடியுமென்றால், ஏன் தமிழ் மக்களால் அவ்வாறு முடியாது? இவ்வாறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது அமர்வில் சாட்சியமளித்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த 14 ஆம் திகதி அன்று பி.எம்.ஐ.சி.எச் மண்டபத்தின் துலிப் கூட்ட அறையில் …

  3. சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும் [படங்கள் இணைப்பு] ‘சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்’ என்ற தலைப்பில் மதுரையில் 13.08.2009 வியாழக்கிழமை காலை கருத்தரங்கமும், அன்று மாலை மாநாடும் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் துவக்கவுரை நிகழ்த்திய இலங்கையில் Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த நிமல்கா பெர்ணான்டோ, வன்னியில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்ட்டுள்ள முகாம்கள் திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே உள்ளன என்று கூறினார். 18 பேருக்கு ஒரு கழிப்பரை வசதி இருக்க வேண்டிய இடத்தில் 800 பேருக்கு ஒரு கழிப்பரை வீதம் உள்ளது என்றும், அவைகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கின்றன என்றும் முகாம்க…

  4. இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார். முக்கியமாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த காலத்தில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்மை, சிறார்கள் கடத்திச் செல்லப்பட்டமை ஆகியன தொடர்பிலும் விசாரணைக…

    • 2 replies
    • 416 views
  5. யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html

    • 2 replies
    • 553 views
  6. செங்கல்பட்டு சிறப்புமுகாம்(சிறை)வாசிகள் விடுக்கும் அறிவித்தல் விடுநர் முகாம்வாசிகள் சிறப்பு முகாம் செங்கல்பட்டு. செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம். நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து ம…

  7. 'நல்லாட்சி அரசாங்கம் தீர்வுக்கு தயாரில்லை' -எஸ்.நிதர்ஷன் “நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றதே தவிர, வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தமிழ் மக்களுக்கான தீர்வைப்பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் படுகொலைகள் ஒவ்வொன்றும் வரலாறு. தமிழ் மக்களின் படுகொலைகள் அனைத்தும் அவர்களின் உர…

  8. நவநீதம்பிள்ளை இலங்கை சென்ற போது றோ அவரை பின்தொடர்ந்ததா? 08 செப்டம்பர் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்த காலப்பகுதியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ, அவரை பின்தொடர்ந்ததாக தெரியவருகிறது என திவயின தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய உளவு பிரிவு இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணையாளர் இலங்கைக்கு வந்த நாள் முதல் அவர் இலங்கையில் இருந்து வெளியேறும் நாள் வரை அவரது சகல நடவடிக்கைகள் குறித்தும் றோ தகவல்களை திரட்டியுள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் றோ புலனாய்வாளர்கள் அதிகளவான காலத்தை இலங்கையின் வடக்கில் செலவிட்டுள்ளதாக தெரியவருக…

  9. விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம் இன்று மதியம் விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளது. வீட்டின் மீது போடப்பட்டிருந்த தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில் தாயும் இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர் இருப்பினும் துரதிஸ்ட வசமாக யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை நாதன் திட்டம் கிராமத்தை பொறுத்த வரையில் ,மீள்குடியேற்றம் செய்யப்பட்டது முதல் மக்கள் இவ்வளவுகாலமும் தற்காலிக வீடுகளிலையே வசித்து வருகின்றனர். சென்ற மாதம் அளவிலையே தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட…

  10. சிறிலங்காவுடன் தனது அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தோரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்ப…

  11. புளத்சிங்கள ஏகல்ஓயா விஹாரைக்கு இன்று அதிகாலை வேளையில் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் விஹாராதிபதி தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புளத்சிங்க பொலிஸார் தெரிவித்தனர். கிராமத்திற்கு இரண்டு விஹாரைகள் தேவையில்லை என்று புளத்சிங்கள பிரதேச சபைத்தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://www.seithy.com/breifNews.php?newsID=92661&category=TamilNews&language=tamil

  12. கதிரவன், திருமலை 11/09/2009, 16:24 மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு சிறீலங்கா அரசு பெயர்மாற்றம்! நினைவுத் தூபிகளை இடித்து அகற்றக் கட்டளை! திருமலை மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று, வெருகல் ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் பொழுது மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்களை மாற்றியமைக்கும் வரலாற்றுச் சிதைப்பு நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதல் 2007ஆம் ஆண்டு சனவரி மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில், பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களை ஆக்கிரமித்த சிறீலங்கா அரசு, அங்கிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களையும், நினைவாலயங்களையும் மிகவும் க…

  13. தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டி... காணொளியைப் பார்வையிட... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9291:2013-09-21-10-13-47&catid=1:latest-news&Itemid=18

  14. "வீடுகளை அமைத்து எங்களுடைய உயிர்களை காப்பாற்று" மலையக அரசியல் தலைமைகளிடம் புலம்பும் தோட்ட மக்கள் நாட்டில் சில பாகங்களில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக அடைமழை பெய்து வருவதோடு மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பலர் பலியாகியுள்ளதுடன் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள இதேவேளை தங்களுடைய சொத்துக்களையும் உடமைகளையும் உறவுகளையும் இழந்து எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். மலையக அரசியல்வாதிகளை பொருத்தவரையில் மலையக மக்களுடைய தேவைகளை அல்லது அவர்களுடைய ஆபத்துகளை கேட்டு அறிந்து செயல்படுகின்றார்களா என அக்கரப்பத்தனை போட்மோர் தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டத்தில் கடந்த …

  15. வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் பரம்பல் சொல்வதென்ன தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த வகை­யில் வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளது அரச மருத்துவ மனை களும் சிங்­கள மருத்துவர்களது பரம்­ப­லுக்­குள்ளே அகப்­ப­டு­கின்­றன என்­றால் அதற்கு நிச்­ச­ய­மாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூ­கத்­து­டன் ஒன்றி வாழ்­வ­தி­லி­ருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. அந்த வகை­யில் தற்­போ­தைய சிங்­கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்­றும் அத்­து­றை­சார் ஏனைய தர ஊழி­யர்­…

  16. இந்தியத் துரோகத்தால் நாம் இழந்தது போதும்! – பாரிஸ் ஈழநாடு தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறீலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் துரோகத்தால் நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே அதிக ஆபத்தானவர்கள்’ என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கமான கருத்து. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளால் பலவீனமுற்றது என்பதிலும் பார்க்க, துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிதைவுற்றது என்பதே உண்மை. இப்போது ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு எதிரிகளு…

  17. இலங்கை அரசாங்கம் தற்போது 75,000 கோடி ரூபா கடனில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார். தேசிய சேமிப்பு வங்கி நூற்றுக்கு ஒன்பது வீத வட்டிப்படி 750 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய மாநாட்டுக்காக 500 கோடி செலவு செய்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அம் மாநாடு முடிந்ததன் பின்னர் அமைச்சர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த போதும் வாக்குச்சீட்டுகள் மீட்கப…

  18. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்~ அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரை இடம்பெறச் செய்யத்திருந்தாக வெளிவிகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள பெயரிடப்பட்டுள்ள எவரையும் சர்வதேச போர்க் குற்றம் தொடர்பில் கைதுசெய்ய முடியாது. ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் பெயர்பட்டியலில் தனது பெயரையும் இடம்பெறச் செய்து அதன்மூலம் கிடைக்கும் சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்ட கோத்தபாய சபைக் கூட்டங்கள் எதிலும் …

  19. நீண்ட காலத்துக்குப் பிறகு எமது மக்கள் வடமாகாணசபை தேர்தல் ஊடாக முதல் தடவையாக வடக்கு முதல்வரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், எதிர்காலம் பற்றிய அச்சம் தரும் நிகழ்வுகளை அகற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் மக்கள் காத்திருக்கிறார்கள். முதல்வரும் உறுப்பினர்களும் அந்த நம்பிக்கையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீண்டகாலம் பல துன்பங்களை சுமந்து களைத்துப் போயுள்ள எம் மக்களுக்கு உடனடியாக பல அவசர தேவைகள் உள்ளன. இதனைச் செய்வதற்கு வட மாகாணசபைக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அரசாங்கத்துடன் நட்பு ரீதியான அணுகுமுறையின் ஊடாக எம் மக்களின் தேவைகளை விரைவாக …

  20. வடக்கில், வேலைவாய்ப்பின்னமையே... வன்முறைகள், போதைப்பொருள் பாவனை அதிகரிக்க காரணம்! வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்று (புதன்கிழமை) மாலை ஆயர். இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ் ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்.எஸ். பியாக, டி.ஐ.ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாண ம…

  21. நாசி வதைமுகாமில் நவநீதம்பிள்ளை அஞ்சலி – முள்ளிவாய்க்காலில் அனுமதி மறுப்பு [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:59 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் போரின் போது, மரணமான அனைவருக்காகவும், முள்ளிவாய்க்காலில் இறுதி வணக்கம் செலுத்த, தனது சிறிலங்கா பயணத்தின் போது, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார். ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்பினால், அந்த முடிவை அவர் கைவிட நேர்ந்தது. தான் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில், இவ்வாறு அஞ்சலி செலுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்த, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இந்தநிலையில், ஜேர்…

  22. சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பதவியை விட்டு விலகினார். இதையடுத்தே, சிறிலங்கா அதிபரின் செயலராக, தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்றும் ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். அடுத்த மூன்று நாட்களுக்குள் தாம் சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளதாக ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஒஸ்ரின் பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றி…

    • 0 replies
    • 277 views
  23. என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்று சித்திரிக்க முயற்சி - சபையில் பிள்ளையான் கடந்த காலத்தில் என்னை பழிவாங்கவும், அரசியலில் இருந்து வெளியேற்றவும் சிறையில் அடைத்தனர். என்னினும் இவர்களின் சதித்திட்டத்தில் இருந்து மீண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளேன் என்பதற்காக அதனை சகித்துக்கொள்ள முடியாது தற்போது என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண்கொள்ளையில் ஈடுபடுகின்றேன் என சித்தரிக்க முயற்சிகின்றனர் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சி…

    • 1 reply
    • 337 views
  24. சிறிலங்கா குற்ற தடுப்பு திணைக்களத்தினை சேர்ந்த, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை வடபகுதி தமிழர் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 22 அதிகாரிகள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இவர்களில் 18 பேர் ஏற்கனவே மாங்குளம் பகுதிக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும் லக்பிம பத்திரிகை கூறுகின்றது. குற்றம் இழைத்த பாதுகாப்பு அதிகாரிகளை போரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புவதற்கான காரணம் என்ன? ஏன் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இங்கு அனுப்ப படுகின்றார்கள். தண்டனை இடமாற்றம் செய்வதற்கு தமிழர்கள் இடம்தானா அதிலும் பல்வேறு இன்னல்கள் மத்தியில் குடியேறப்போகும் மக்களுக்கு மீண்டும் துன்பங்களை கொடுப்பதற்காகவே இவர்கள் அனுப்ப படுகின்றார்களா என்ற எண்ணம் மக்கள் மனதில் த…

  25. இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி இந்திய இராணுவத்தால் 1987 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஈகைச் சுடரை வைத்தியசாலையின் வைத்தியர்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந் நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி சிறிஸ்கந்தராஜா, வைத்திய கலாநிதி பவானந்த ராஜா, தாதியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=41762238…

    • 4 replies
    • 864 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.