ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
கடலில் குதித்து ஆராச்சி செய்த 3 பாராளுமன்ற உறுப்பினர்கள்! கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக மீன்பிடித்துறை அமைச்சு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையிலேயே எமது கடற் பகுயை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கற்பிட்டி கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்…
-
- 5 replies
- 512 views
-
-
இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதையே, கடந்த வாரம் புகழ்பெற்ற ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் காட்டுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 299 views
-
-
கெல்லம் மெக்ரே - "அந்த நாள் வெகு தொலைவில்" இல்லை எஸ். சிறிதரன் - கூறியதாக சிங்கள வார இதழ் கூறுகிறது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் நாளிலேயே தமக்கு நித்திரை வரும் எனவும் அப்போதே தாம் மகிழ்ச்சியடைவேன் எனவும் இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான நோ பையர் ஷோன் என்ற படத்தை இயக்கிய கெல்லம் மெக்ரே கனடாவில் நடைபெற்ற தமிழ் கலாசார விழாவின் போது கூறியுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என கூறியதாக அரசாங்கத்தின் சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது. தமிழ் கலாசார விழாவை புலிகளின் ஆதரவு அமைப்பான கனேடிய தமிழர் ஒன்றியம் நடத்தியது. மலேசியாவில், க…
-
- 0 replies
- 618 views
-
-
சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளையவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தினர் என அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் ஆயுதப…
-
- 0 replies
- 193 views
-
-
கோதாபய ஒரு உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, ஒரு வெற்றுடல்” – அனுரகுமார திசநாயக்கா கடும் சாடல் “கோதாபய ராஜபக்சவின் ஆணவத்தினால்தான் இந்நாட்டு மக்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்” என, ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக ஆற்றிய தனது உரையின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசநாயக்கா சாடியிருக்கிறார். “நந்தசேன கோதாபய ராஜபக்ச ஒரு கருணையற்ற, நாட்டு மக்கள் மீது எந்தவித பொறுப்புணர்வும் கொண்டிராத ஒரு வெறும் உலர்ந்துபோன கோது” என ஊடகவியாளர் மத்தியில் திசநாயக்கா தெரிவித்தார். “மருத்துவ அதிகாரிகள் தமது உண்மையான அனுபவங்களையும், கருத்துக்களையும், புத்திமதிகளையும் ஜனாதிபதிக்கு முன்னால் கூறுவதற்கு அஞ்சுகிறார்கள். தமது கருத்…
-
- 1 reply
- 979 views
-
-
"உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்" என்று சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ ரத்து செய்துள்ளார். பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94488/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 445 views
-
-
12 பேரின் உயிரைக் காவுகொண்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் : உதவி புரிந்தவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை! புறக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 2008 ஆம் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது, விடுதலை புலிகள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பியசேன ரனசிங்க இன்று பிறப்பித்துள்ளார். கனகசபை தேவதாசன் என்ற நபருக்கே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பேஸ்போல் அணி வீரர்கள் 8 ப…
-
- 2 replies
- 424 views
-
-
"...நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்..."bullet இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி. bullet பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். bullet நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது. bullet மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. bullet ஒ…
-
- 1 reply
- 3.8k views
-
-
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம், ஆனால் யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது, விசாரணைகளை மேற்கொள்வது, ஊடகவியலாளர் மாநாடு நடத்துவது என்பவற்றை அனுமதிக்க முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவானது சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பாகும். எனவே, அதன் ஆணையாளர் நாயகம் என்ற ரீதியில் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதையோ, அரசாங்கம் உட்பட அரசியல் தலைவர்களை சந்திப்பதையோ, பேச்சுவார்த்தைகளை நடத்துவதையோ நாம் எதிர்க்கவில்லை. அதை விடுத்து யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது…
-
- 1 reply
- 537 views
-
-
ரிஷாட் இராஜினாமா? கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவ…
-
- 0 replies
- 329 views
-
-
வடமாகாணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் போட்டியிடும் எந்த ஒரு குழுவினரும் ஆயுதங்களைக் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என காவல்துறையினர் இன்று அறிவித்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 296 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – கோயில்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்! ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மேலும் இதன்போது, பாடசாலைகளை கோயில்களிலும் மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகளை கட்டங்கட்டமாக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில …
-
- 0 replies
- 179 views
-
-
மக்களை மீளக் குடியமர்த்துவதில் எவருக்கும் அக்கறை இல்லை – நல்லெண்ணத்துக்கான மக்கள் அமைப்பு பலவழிகளிலும் அல்லலுறும் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தும் எண்ணம் ஒருவருக்குமே இல்லை என அமைதி மற்றும் நல்லெண்ணத்துக்கான மக்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைக் கண்காணிப்பதற்காக கொழும்பில் இயங்குகின்ற மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்ப்பாணம் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தலைமையிலான அந்தக் குழு நேற்றுக்காலை யாழ் ஆயர் இல்லத்தில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியபோது பலவழிகளிலும் அல்லலுறும் மக்களை அவர்க…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிலறி கிளின்ரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 412 views
-
-
கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான ஒருநாள் கருத்தரங்கு கிளிநொச்சியில் கடந்த 11.08.2013 அன்று நடைபெற்றது. இங்கு கருத்துரை வழங்கையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராசா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 48 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மிகக்குறைந்தளவிலேயே பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் அமைந்திருப்பது துரதிஸ்டமானது. அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தி பெண்கள் தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வடக்கிலுள்ள பெண்கள் அனைவரும் கூட்டமைப்பின் சா…
-
- 2 replies
- 260 views
-
-
கப்பல் விபத்தினால்... பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, டக்ளஸ் தேவானந்தாவினால்.. உபகரணங்கள் வழங்கி வைப்பு! எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய, தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://athavanne…
-
- 8 replies
- 759 views
-
-
சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிர்ச்சியில் ;லண்டன் சென்ற விரிவுரையாளர்கள் 12 பேராம் லண்டனில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, மாநாட்டில் பங்கேற்க 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சென்றுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது என உயர்கல்வி அமைச்சின் செயலர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக, லண்டன் மாநாட்டில் பங்கேற்க, ஊவா, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நால்வர் சென்றுள்ளதாக அரச புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாகவும், இவர்கள் நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா உயர்கல்வி அமைச்சும…
-
- 0 replies
- 969 views
-
-
இலங்கையிய்ல் நிலையெடுக்கும் சீனாவும், அதை கண்டு மிரளும் இந்தியாவும். இரண்டு நாட்களுக்கு முன் இலங்கையில் வந்திறங்கியுள்ள சைனீஸ் ராணுவ கட்டட வல்லுணர்கள்/ மற்றும் ஆயிரக்கணக்கில் சைனீஸ் '''மேசன்மாரும்''' இந்தியாவின் வயத்துல புலியை கரைத்துள்ளார்கள். இது பற்றி இலங்கை அதிகாரிகள் கூறுகையில்.. வந்த சைனீஸுக்கள் சும்மா கட்டடம் கட்டித்தர வந்தவை எண்டும், அணுநீர்மூழ்கி துறைமுகத்துடன் கூடிய... அண்ட கண்ட ராடர் தளங்களுடன்... போர் விமான தளத்துடன்... கூடிய ஆயிரமாயிரம் ஏக்கர் பாரிய முகாம் அமைக்க வரவில்லை எண்டும் கூறியுள்ளார்கள்.... மேலதிக வாசிப்புக்கு.. ஆங்கிலத்தில்...
-
- 0 replies
- 1k views
-
-
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசேப்பு இன்று கொழும்பில் சந்தித்துப் பேசவுள்ளார். கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. வன்னி மற்றும் மன்னார் பிராந்தியத்தின் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கே, மன்னார் ஆயருக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, அரசியல் கைதிகள், மீள்குடியேற்றம், காணாமற்போனோர் மற்றும் போருக்குப் பின்னர் உள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து, நவநீதம்பிள்ளையிடம் மன்னார் ஆயர் விபரித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முள்ளிக்குளம் பிரதேசத்தில் மீள்குடியேற…
-
- 1 reply
- 632 views
-
-
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை வரலாற்றில் டொலரின் இருப்பு மிகக்குறைந்த மட்டத்தில் வீழ்ச்சியடைகிறது. இலங்கை கண்ணுக்கு தெரியாத படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இன்று (25) கொழும்பில் உண்மையான தேசபக்தர்கள் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் இருண்ட யுகமாகக் கருதப்படும் கறுப்பு ஜூலையின் 38 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இந்த ஊடக மாநாட்டை நடத்த முடிவு செய்தோம். கருப்பு ஜூலை ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் பேரழிவின் மற்றொரு மைல்கல்லாக விவரிக்கப்படலாம். 1948 இல் நாங்கள் சுதந்த…
-
- 1 reply
- 263 views
-
-
கேபி கைது செய்யப்படும்வரை அவருடனும் ஏனைய புலி உறுப்பினர்களுடனும் ராம் தொடர்பு கொள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார் ‐ லங்கா கார்டியன் ‐ தமிழாக்கம் ‐ GTN (செய்தியை வெளியிட்ட குளோபல் தமிழ் நியூஸ் ஆசிரியர் ஊடகவியலாளர் நடறாஜா குருபரன். ) கே.பி பற்றிய எவ்வித ரகசியங்களையோ அல்லது விசாரணைகளின் போது அவர் சொல்லும் விடயங்கள் குறித்தோ என்னுடைய அனுமதியில்லாமல் எவராவது ஊடகங்களுக்கு தெரிவிப்பார்களாயின் அவர்களை அலுவலகத்திலிருந்து துரத்தி விடுவேன் என அண்மையில் தொலைபேசியூடாக தனது சிரேஸ்ட பாதுகாப்பு அலுவலருக்குத் தெரிவித்திருந்தார் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும…
-
- 7 replies
- 3.3k views
-
-
நாவற்குழி சமுத்தி சுமண விகாரையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் குறித்த விகாரையில் இடம்பெற்றது. குறித்த விகாரைக் கோபுரத்துக்கான அடிக்கல்லினை 523 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் திஸாநாயக்க நாட்டி வைத்தார். நாவற்குழி மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்றத்துக்கு அருகில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த விகாரையில் “களன மிதுரு” கோபுரம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த வகையில் குறித்த கோபு ரம் அமைப்பதற்கான ஒரு தொகுதி நிதியை களன மிதுரு பௌத்த அபிவிருத்தி நிலையம் வழங்கவுள்ளதுடன் மேலதிக நிதியை பல தரப்பினரிடமும் நிர்வாகத்தினர் கோரியுள்ளனர். இந் நிலையில் நேற்றை…
-
- 2 replies
- 756 views
-
-
நல்லூர் கந்தனின்... திருவிழாவை, 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி! வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான சுகாதார வழிகாட்டலின்படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே இந்த வருட ஆலய உற்சவத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு அனைத்து தரப்…
-
- 7 replies
- 793 views
-
-
பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழர் படுகொலை காணொலி குறித்து நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துக்கள் அவர் இலங்கை பிரச்சினையில் பக்கச் சார்பான அனுசரணையாளராகவே செயற்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என சிறிலங்கா வெளிவிவகாரத் துறை அமைச்சு இன்று சனிக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-