ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக பதுளை - வில்ஸ்பாக் மைதானத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது. சர்வமத வழிப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். எதிர்கால ஜனாதிபதியே வழ்க , எங்கள் தலைவரே வாழ்க போன்ற வாழ்த்து கோஷங்களுடன் பெரும் மாலைகளை அணிவித்தும், பொன்னாடை கௌரவம் என சஜித் பிரேமதாசவிற்கு வர்வேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேரணியில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ரவீந்ர சமரவீர, அஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்க, சந்ராணி பண்டார , லக்ஷ்மன் செனவிரத்ன, அரவிந்ந குமார், இராஜாங்க …
-
- 2 replies
- 884 views
-
-
'எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்': குமார் ரூபசிங்க "எதிர்காலத்தில் சிங்கள மக்களும் பதுங்குகுழிகளை அமைக்க வேண்டி ஏற்படலாம்" என்று சிறிலங்காவின் போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவரும், ஆய்வாளருமான குமார் ரூபசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் 'த ஐலன்ட்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "கடந்த மாதத்தில் அரசின் முக்கிய மையங்களை விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பல தடவைகள் தாக்கிவிட்டு எதுவித சேதங்களும் இன்றி தளம் திரும்பிவிட்டன. முதாலாவது தாக்குதல் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. இது அதிகளவு சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் அரசுக்கும், அன…
-
- 2 replies
- 1.2k views
-
-
'எதிர்ப்பை சமாளித்து ஜெயாவை சந்தித்துப் பார்ப்போம்' “தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே, எதிர்ப்பினை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பார்ப்போம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பதாக இருந்தால் டெல்லியில்…
-
- 2 replies
- 502 views
-
-
நோர்வே அரசு, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் தொடர்ந்து சமாதான அனுசரணையாளராக தொழிற்பட விரும்புகிறது. அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உதவிகள் புரியவும் தயாராக உள்ளது." இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்தாவது வருடத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு, தேசிய அமைதி சபையினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு. கனவான்களே மற்றும் சீமாட்டிகளே, "இந்த வருடம் பெப்ரவரி 22 …
-
- 0 replies
- 646 views
-
-
'எந்தவித தலையீட்டிற்கும் கீழ்படிய வேண்டாம்' மேல் மாகணத்தில் எந்தவொரு இடத்திலும் காணிகளை நிரப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லையென அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிரான எந்தவித தலையீட்டிற்கும் கீழ்படிய வேண்டாமென உத்தியோகத்தர்களுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இது தொடர்பாக நேரடித் தீர்மானங்களை எடுக்கும் உத்தியோகத்தர்கள் சார்பில் தான் தெரிபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது சம்பந்தமாக ஏற்கெனவே ஏதேனும் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தயக்கமின்றித் தனக்கு அறியத்தருமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு முன்னர் மாகாணத்தில் காணிகளை நிரப்பு…
-
- 0 replies
- 277 views
-
-
தனக்கு எதிராக சேறுபூசும் இணையத்தளங்களின் உரிமையாளர்கள் இருக்கும் இடத்தை தான் சரியாக அறிந்து கொண்டால், அவ்வாறான நபர்கள் உலகில் எங்கிருந்தாலும் அங்கு சென்று அவர்களை சந்தித்து மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னை குறித்து இணையத்தளம் ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மறைந்திருந்து சேறுபூசாமல், நேருக்கு நேர் மோதலுக்கு வருமாறு தான் இணையத்தள உரிமையாளர்களுக்கு சவால் விடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கு முன்னர் …
-
- 3 replies
- 784 views
-
-
'எனக்கு மேசை கதிரைகள் கூட இல்லை': அனுரா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:08 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "தனது அமைச்சகத்துக்கான பணிகளை செய்வதற்கு காரியாலயமோஇ அதற்குரிய பொருட்களோ இல்லை என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எனது அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் தான் நிர்மாணிக்கப்பட்டது. இன்று வரை எனக்கு காரியாலயமோ ஏனைய அத்தியாவசிய வசதிகளோ வழங்கப்படவில்லை. உதாரணமாக மேசைஇ கதிரை கூட இல்லை. எமது துறைகளில் வெற்றிடங்கள் உள்ளனவா என்ற கே…
-
- 12 replies
- 2.6k views
-
-
'எனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து பிள்ளையான் வெளியேற வேண்டும்' - பொலிஸ்மா அதிபரிடம் அருண் தம்பிமுத்து முறைப்பாடு [Tuesday, 2013-04-09 08:16:24] முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி. சந்திரகாந்தன், முதலமைச்சராக கடந்த 2008ம் ஆண்டு பதவியேற்ற காலத்திலிருந்து மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைப்பாளரான தம்பிமுத்துவின் வீட்டிலேயே தனது உத்தியோக பூர்வ இல்லத்தினை வைத்து நடாத்தி வருகின்றார். தற்போது குறித்த வீடும் சொத்துக்களும் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்துவின் பெயரில் உள்ளது. அருண் தம்பிமுத்து தற்போது வெளிநாட்டிலிருந்து வந்து மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளராக பதவியேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடு…
-
- 1 reply
- 488 views
-
-
'எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளே எனதுமகனுக்கு வினையாகிப் போனது' மஹிந்த ராஜபக்ஷ: 'எனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, எனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், 16 வயத…
-
- 0 replies
- 294 views
-
-
-எம்.றொசாந்த் எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காணியின் உரிமையாளர் தம்பிராசா மகேஸ்வரி இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். யாழ்., மிருசுவில் ஆசைப்பிள்ளையேற்றத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக அதனை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட இருந்தது. இதனை, மகேஸ்வரியும், அவரது உறவினர்களும் இணைந்து போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்பிராசா மகேஸ்வரி மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 592 views
-
-
'எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது' "என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சருக்கு, ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவி, மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியை, ஊவா மாகாண முதலமைச்சருக்கே மீண்டும் வழங்கியமை, நீதிக்கிடைக்குமென இத்தனை நாட்கள் காத…
-
- 0 replies
- 324 views
-
-
நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களைப் பழிவாங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்தால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு தாம் இணங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை புதிய ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவ…
-
- 0 replies
- 759 views
-
-
'எனது மகன் இறுதியாக பாலச்சந்திரனுடன் நின்றார்' -எம்.றொசாந்த் எனது மகன் இறுதித் தருணங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுடன் நின்றதாக கண்டவர்கள் எனக்குக் கூறினர். பாலச்சந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதில் சில இளைஞர்களின் சடலங்களும் அருகில் இருந்தன. அவற்றில் எனது மகன் இருப்பாரே எனத் தெரியவில்லையென காணாமற்போன ஐங்கரன் என்பவரின் தந்தை மார்க்கண்டு அருளானந்தம் தெரிவித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர…
-
- 0 replies
- 643 views
-
-
'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைத்தானே. ஒருவருக்கு என்னைப் பிடிக்கும் மற்றவருக்கு என்னைப் பிடிக்காது. இதுவே நியதி' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குமாறு, கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் கூறிய கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இந்த விடயம் தொடர்பில் தற்போது பதில் சொல்ல முடியாது. அதற்கான பதிலை நான் தாயார் செய்து விரைவில் அது தொடர்பில் அறிவிப்பேன் என்றார். http://www.tamilmirror.lk/159067/-%E0%AE
-
- 12 replies
- 742 views
-
-
'எனது முழுகுடும்பத்தையும் ஏன் என்னையும் சிறையில் தள்ளலாம் நாட்டுமக்களின் நலனிற்காக என்பணி தொடரும்" நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு தனது அரசாங்கம் மீது பழிசுமத்துவதற்கு சிறிசேன அரசாங்கம் முயன்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் .தனது அரசாங்கம் பெற்றுக்கொண்ட அளவுக்கதிகமான கடன்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தான் இரகசிய கடன்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் மகிந்தராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். தனது இன…
-
- 4 replies
- 457 views
-
-
'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்' திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 18:08 -நவரத்தினம் கபில்நாத் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவை…
-
- 4 replies
- 1.4k views
-
-
கோடைகாலம் வெயில் வாட்டி வதைக்கிறது, ஓயாத வேலைப்பணிகளுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக இந்திய தூதர்கள் என்.கே.நாராயணனும்,சிவஷங்கர்ம
-
- 0 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டி இருந்தார். இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தானும், மற்றுமொரு மாநகரசபை உறுப்பினரான கந்தையா அருமைலிங்கமும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரபாகரன் தமிழோசைக்குத் தெரிவித்து இருந்தார். மாநகரசபையால் கட்டப்பட்ட புதிய கடைகளின் ஒதுக்கீடு குறித்த ஒரு விவகாரம் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாகவும் பிரபாகரன் கூறினார். இதற்கிடையே தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்தி…
-
- 0 replies
- 851 views
-
-
'என்ன நடந்தாலும் அபிவிருத்தி தொடரும்' -ஜே.ஏ.ஜோர்ஜ் 'என்ன நடந்தாலும் நாட்டை முன்னேற்ற முன்னெடுத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களை கைவிடமாட்டோம். இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் போதும், இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும், அந்தத் திட்டங்களின் பயனை பெற்றுக்கொண்ட போதுதான். அதன் பெறுமதியை உணர்ந்துள்ளனர்' என நீர்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ந…
-
- 0 replies
- 244 views
-
-
Published By: VISHNU 25 DEC, 2023 | 08:20 PM (நா.தனுஜா) இலங்கையில் கடந்தகாலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் 'என்ன நேர்ந்தது' என்பதைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அவை 'யார் அதனைச் செய்தது' என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், எனவே தற்போதைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் அதனை ஒத்த நடவடிக்கையா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில்…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
'என்னிடம் இனவாதம் இல்லை' 'நான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்' என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெகிராவ பகுதி விஹாரையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178320/-என-ன-டம-இனவ-தம-இல-ல-#sthash.7LCCeOTR.dpuf
-
- 5 replies
- 504 views
-
-
'என்னுடன் பேச்சு நடத்த ஜனாதிபதி இணக்கம்' முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சேவை சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய, அபயராம விஹாரையில் நேற்றுத் திங்கட்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்ட விடயம் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்க…
-
- 0 replies
- 329 views
-
-
'என்னை செம்மறி என்று நினைத்தீர்களா?': சி.வி.கே. காட்டம் -எம்.றொசாந்த் வடமாகாண சபை அமர்வு விடயங்களை பதிவு செய்யும் ஹன்சாட்டில் செம்மறி என்ற வார்த்தை பதிவாகிய சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் இடம்பெற்றது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்துக்கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, 'சபை அமர்வு ஒழுங்கு முறையில் கொண்டு செல்லப்படவில்லை. நிகழ்ச்சி நிரலின்படி நடக்காமல் விவாதம் மட்டும் நடக்கின்றது. மேலும், வடமாகாண கல்வி சீரழிந்தமைக்கு, வடமாகாண அமைச்சின் நிர்வாகம் பொறுப்பேற்கவேண்டு…
-
- 0 replies
- 257 views
-
-
'என்மீது போர்க் குற்றமா?'- மகிந்த கேள்வி விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://www.intertam.net/
-
- 0 replies
- 373 views
-