Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்ணன் சம்பந்தனின் கோரிக்கைகளை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்த நான்; பதவிகள், அதிகாரங்களை அடைய வேண்டும் என என்றுமே அவாக் கொண்டதில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைத்தமை ஒரு சிலரின் மனதை பாதித்திருந்தால் அதற்கும் சம்பந்தனே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். காலைக்கதிர் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தன் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவேளை, வடக்கு முதலமைச்சர் பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தது. அது ஒ…

    • 1 reply
    • 463 views
  2. ஈழத்தமிழ் மக்கள் நாளாந்தம் கொன்றொழிக்கப்படும் கொடும் போரை சிறீலங்கா அரசு அன்றி, இந்தியாவே நடத்தி வருவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசும் வெறும் பொம்மைகளாக இருக்க, அவர்கள் மூலம் இந்தியாவே போரை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், இதனாலேயே அனைத்துலக நாடுகள் இதில் தலையிடுவதில் இராசரீக சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகின் இடதுசாரிகள், மற்றும் தொழிற்கட்சிகளை உள்ளடக்கிய நான்காம் மண்டல அமைப்பின் அனைத்துலக மாநாடு கடந்த 21ஆம் நாள் முதல் 25ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெறும் போர் பற்றி ப…

  3. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது. குறிப்பாக விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்…

  4. கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற போதும், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்கின்றது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்…

  5. மட்டக்களப்பு சிறைச்சாலை மாந்தீவுக்கு மாற்றம்: முரளிதரன் வியாழக்கிழமை, 14 மார்ச் 2013 07:40 -ஏ.எச். அப்துல் ஹுஸைன் மட்டக்களப்பு சிறைச்சாலையை மாந்தீவுக்கு அகற்றுவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக தற்போது இது மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம் பெற்ற அவசர மற்றும் விபத்துச் சேவைப் பிரிவை ஆரம்பிக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், …

  6. புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான…

  7. வடபகுதியில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாகவும், அதிகரித்து வரும் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாகவும் அமெரிக்காவின் ஆழ்ந்த கவலையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளிண்டன், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடலு. இடம் பெற்றது. சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு உரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தியதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்…

  8. கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன் மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்…

    • 1 reply
    • 813 views
  9.  ‘தமிழக முதல்வர்கள் வந்த வரலாறு இல்லை’ அழகன் கனகராஜ் “இந்தியாவைப் போன்றே, தமிழகத்துடனும் நாங்கள் நல்லுறவை வளர்க்கவேண்டும். தமிழக முதலமைச்சர்களில் ஒருவர்கூட இலங்கைக்கு உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட வரலாறு இல்லை” என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “எமது பிரச்சினைகளை நாங்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்க்கம…

  10. இலங்கையிடம் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது? “உயிர்களைக் காப்பாற்றுவதில், இலங்கை ஆயுதப்படைகள் நிபுணத்துவத்தையும், அக்கறையையும் காண்பித்தனர். இந்த அவசர சூழ்நிலைகளில் அவர்கள் வழங்கிய உதவிகள் ஆழமாகப் பாராட்டப்பட வேண்டியது.” இவ்வாறு இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார், அட்மிரல் ஹரி பி ஹரிஸ். இவர் 70 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி. கடந்தவாரம், கொழும்பில் கோல்பேஸ் விடுதியில் நடந்த காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது தான் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் இவ்வாறு கூறியிருந்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைக் க…

  11. உலகில் இணையத்தள வேக தரவரிசையில் இலங்கை 62 ஆவது இடம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62 ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14285

  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140447/dada.jpg பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்.பி, வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில…

  13. இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றிலேயே இந்தக் கருத்தை தமிழக மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 501 views
  14. பாராளுமன்றத்தில் இடம்பிடித்த மலையக மக்களின் காணி விவகாரம் Parliament is nothing but talking என்று சொல்­வார்கள். அதா­வது பாரா­ளு­மன்­றத்­தினால் பாரிய விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. ஆனாலும் அங்கு பேச்­சுக்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் என்­பதே இதன் அர்த்­த­மா­க­வுள்­ளது. ஊட­க­வி­ய­லா­ள­ராக செய்தி சேக­ரிக்க பல தடவைகள் பாரா­ளு­மன்றம் சென்­ற­துண்டு.எனினும் ஒரு ஊட­க­வியல் மாண­வ­ராக கடந்த வாரம் பாரா­ளு­மன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்­தது. அதன்­போது சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் சந்­திப்பை மேற்கொள்வதற்கான ஒழுங்கும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதன்­போது மாண­வர்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பதி­ல­ளித்­தனர். இந…

  15. புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் வடக்கு - கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்க நிர்வாகத்தில் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற பொய்யான பிரசாரத்தை செய்வதற்காக சித்திரை புத்தாண்டு நாளன்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பலாத்காரமான ஏற்பாடுகள் அங்கு இடம்பெறுவதாக யாழ். அரச அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 609 views
  16. மாவையின் தலைமைக்கு சோதனை ; மேயர் யார் எனத் தீர்மானித்த டக்ளஸ் – அகிலன் 164 Views பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தமிழரசுக் கட்சியில் ஏற்பட்ட தலைமைத்துப் போட்டி இப்போது யாழ். மாநகர சபையை இழக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. இது மாவை. சேனாதிராஜாவின் தலைமைக்கு ஏற்பட்ட கடும் சோதனை. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புதிய சவால் ஒன்றைச் சந்தித்திருக்கின்றது. மாநகர சபையில் அதற்கிருந்த 13 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் மணிவண்ணனுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பது கஜேந்திரன்களுக்குப் பலத்த அடியாக விழுந்திருக்கின்றது. எந்தக் கட்சியிலிருக்கின்றார் என்பதே தெரியாமல் தனித…

    • 9 replies
    • 1.4k views
  17. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 373 views
  18. கிளிநொச்சி பகுதிக்கு கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணம் மிகவும் இரகசியமாக வைக்கக்பட்டதுடன் அதிகளவிலான பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு கடந்த வியாழக்கிழமை (16.04.09) மேற்கொண்ட திடீர் பயணமானது மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவே ஒழுங்கு செய்திருந்தார். அதனை அவர் மிகவும் உயர்ந்த இரகசியமாக பேணியிருந்தார். கிளிநொச்சியின் பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டன. அதற்கான கட்டளைகள் இராணுவப் படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட…

  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 289 views
  20. முக்கியமான கடற்பாதைக்கு அருகே அமைந்துள்ள சிறிலங்காவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் நோக்கிலும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், சிறிலங்காவுடன் ஜப்பான் இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது உயர் நிலைப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா சென்ற ஜப்பானின் பிரதிப் பிரதமர் ராரோ அசோ நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தினார். அத்துடன், 800 மில்லியன் டொலர் செலவில் ஜப்பானின் உதவியுடன் விரிவாக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுகத்துக்கும் ஜப்பானிய பிரதிப் பிரதமர் சென்று பார்வையிட்டுள்ளார். 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், எழுந்து வரும் சந்தை வ…

  21. 27/04/2009, 21:13 [ வன்னியன்] சிறிலங்காவின் சர்வதேசத்தை ஏமாற்றும் வித்தை சிறிலங்கா அரசு வெளியிடுகின்ற தகவல்களை அப்படியே உள்வாங்கி அறிக்கைகளை வெளியிடுவது இப்போது சர்வதேசத்திற்கு ஒரு வழக்கமாகிவிட்டது. அதன், நம்பக்தன்மை குறித்தோ, அதன் உறுதிப்பாடு குறித்தோ எந்தவித ஆராய்வினையும் மேற்கொள்ளாமல் உடனடியாகவே வரவேற்று அறிக்கை வெளியிடுவதென்பது இப்போது இயல்பாக அமைந்துவிட்டது. அந்தவகையில் சிறிலங்கா இன்று வெளியிட்டிருந்த அறிவிப்பு ஒன்றினை ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. விடுதலைப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்று உடனடியாகவே மறுத்திருந்த சிறிலங்கா, சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக இன்று புதிய அறிவிப்பொன…

    • 1 reply
    • 907 views
  22. யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். எனவே பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்…

  23. முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…

  24. 200 முகமூடிகள் வட்டுவாகல் பக்கமாக படையினர் கொண்டுசென்றனர்.படையினர் பாரிய தாக்குதலுக்கான தயார்.இராசயன ஆயுத தாக்குதலுக்கு தயார். மக்கள் பீதியில். Source Link: 200 gas masks were transported by the SLA to Vadduvaikal Courtesy:TamilNational.Com

    • 1 reply
    • 2.2k views
  25. சுனிலா அபயசேகரா பற்றி தமிழ் பேசும் நல்லுலகம் நிறையவே அறிந்திருக்கிறது. இவரது தந்தை சாள்ஸ் அபயசேகா இனத்துவத்திற்கும் நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பின் (சரிநிகர் பத்திரிகையை வெளிக்கொண்டுவந்த மேர்ஜ் அமைப்பு) தலைவராக இருந்தவர். சுனிலா தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ்பேசும் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் இலங்கையில் ஒட்டுமொத்த சமூகம் எதிர்கொண்ட அடக்கு முறைகளுக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். அதனால் அவர் தனது சொந்த நாட்டில் வாழ முடியாமல் நெதர்லாந்தில் அஞ்ஞாததவாசம் புரிந்தவர். இவருக்கு உதவும் தருணம் இது என சுனிலா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் குழுவின் வேண்டுகோளுடன் குளோபல் தமிழ்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.