Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாகனங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் சில வாகனங்கள் வெளி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்ட வாகனங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115492/langu…

  2. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ எம்.பி., மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஜே.வி.பி. இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு தாக்கல் செய்யவுள்ளது. ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத், சுனில் ஹந்தனெத்தி எம்.பி., மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வடகல ஆகியோர் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளனர். மக்கள் சொத்துகளை கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதனூடாக ஜே.வி.பி. முன்வைக்கவுள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த வி…

  3. இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறித்தும் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறித்தும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி இலங்கையில் இன்னமும் பல சவால்கள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்காக புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உதவுவதற்கு தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை வெளிப்படுத்துவற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள கெரி, அதற்கு சில நாட்களு…

  4. மனைவியோடு....அமெரிக்கா வந்தடைந்தார், பசில் ராஜபக்ச! லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்ச…

  5. மங்கள சமரவீரவை புதுடெல்லி வருமாறு சுஸ்மா அழைப்பு JAN 13, 2015 | 0:32by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புதுடெல்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார். இதன்போதே அவர், புதுடெல்லிக்கு வருகை தருமாறு, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். http://www.puthinappalak…

  6. போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து மைத்திரியுடன் பான் கீ மூன் பேச்சு JAN 13, 2015 | 0:27by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிகழ்ச்சி நிரல் குறித்து, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் தகவல் வெளியிடுகையில், “சிறிலங்கா அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது மற்றும், அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்கு, ஐ.நா பொதுச்செயலர் வாழ்த்துக் கூறினார். பான் கீ மூனும், மைத்த…

  7. சிறிலங்காவுடன் பலமான உறவை எதிர்பார்க்கிறது பிரித்தானியா JAN 13, 2015 | 0:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு டுவிட்டரில் அவர் வாழ்த்துக் கூறியுள்ளார். அந்தச் செய்தியிலேயே, புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீனப் பிரதமரும் ரணிலுக்கு வாழ்த்து சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சீனப் பிரதமர் லீ க…

  8. இன்று காலை கொழும்பு வருகிறார் பாப்பரசர் JAN 13, 2015 | 0:00by கார்வண்ணன்in செய்திகள் பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றிரவு தனி விமானம் மூலம் சிறிலங்காவுக்குப் புறப்பட்டுள்ளார். அவர் பயணம் செய்யும் விமானம், இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும் வரவேற்பர். அதையடுத்து கட்டுநாயக…

  9. “அவர்கள் எல்லோரும் ஒரே வழியிலேயோ அல்லாது வேறு வழியிலேயோ சீனாவின் பக்கம் திரும்புவார்கள்" - எலன் பாரி - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்- ரோப்பிடோக்கள் மற்றும் ஏவுகணைகளையும் 360 பவுண்ட் எடையுள்ள வெடிபொருட்களையும் காவும் 329 என்ற இலக்கத்தையுடைய சீன கடற்படை நீர்மூழ்கி ஒன்று நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறன்று முன்னறிவிப்பின்றி கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சானது அது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான வழமையான செயற்பாட்டு ஒத்திகைக்கான வருகை மட்டுமே எனக் கூறிவிட்டு அது பற்றி எதுவும் மேலதிகமாக பேசவில்லை. ஆனால், அப்போதைய இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் சீனாவானது இந்தியாவின் கொல்லைப்புறத்திற்கு வந்துவிட்டதற்கான பிரகடனம் என …

  10. மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி JAN 12, 2015 | 13:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் மனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், குஜராத் மாநிலம் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வாழ்த்து தெரிவித்திருந்தார் ஜோன் கெரி. இந்த நிலையில் இன்று சிறிலங்கா விவகாரம் குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவின…

  11. இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஸ கொழும்பில்... தனது இல்லத்திலேயே தங்கியிருப்பதாக கொழும்பின் முக்கிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது... பசில் ராஜபக்ஸவும் அவரது மனைவியும் மட்டுமே அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றதாகவும் அண்ணனை தனித்து கைவிட்டு போக விரும்பாத அவர் வருவதை எதிர்கொள்ள தாயாரன நிலையில் இருப்பதோடு ஆயளும் புதிய அரசாங்கத்திற்கு அண்ணன் மகிந்தவுடன் இணைந்து தலையிடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது... இலங்கையின் யுத்த வீரர்களாக வர்ணிக்கப்படும் கோத்தாபய மற்றும் மகிந்த சகோதரர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் எடுக்க முடியாது என்பது மகிந்த சகோதரர்களுக்கு தெரியும். ஆடசியை இறுகத் தக்கவைக்காமல் யுத்த வீரர்களுக…

  12. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக ஐக்கிய …

  13. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று கிளிநொச்சியினில் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்திலே அவர் படுகாயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக திரும்பியபோது பின்னே வந்த வாகனம் அவர் மீது மோதியதிலேயே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/news/36896/57//d,article_full.aspx

  14. தேர்தல் முடிவுகளை கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் முகமான பதிவிது. இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதி அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்படும் என்பதால் இது குறித்த விபரத்தை தரும் முகமாக தேர்தல் தொகுதி விபரங்களை இங்கே இணைக்கிறேன்

    • 159 replies
    • 18.7k views
  15. ஆட்சி மாறியது எப்படி? இறுதி நேரத்தில் அலரிமாளிகையின் திக் திக் நிமிடங்கள்! ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும் அதிர்ச்சிக்கதைகள் புதைந்துள்ளன என்பதை இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. முதலில் ஒன்றை நினைவூட்டலாம். மகிந்த அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நேரம் காலை 6.30. அந்த சம…

  16. முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவரின் பாதுகாப்பு இதுவரை அகற்றப்படாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை ஞாயிற்றுக்கிழமை இன்று தமது ஊரான பேத்தானையில் தமது ஆதரவாளர்களான மக்களை அவரது வீட்டுக்கு அழைத்து 150 குடும்பங்களுக்கு பால்மா உதவிகளை வழங்கி வைத்தார். இவ் உதவியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனர்த்த சேவைகள் அமைச்சால் வெள்ள நிவாரணத்திற்கான கொடுக்கப்பட்ட பொருட்களை இப்போது பிள்ளையான் பயன்படுத்துகின்றார் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இவருடை பாதுகாப்பை இன்னும் அகற்றப்படாமையால் இவரின் குழுக்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே…

    • 3 replies
    • 735 views
  17. தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி JAN 11, 2015 | 16:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு டர்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், ”என்னுடன் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே என்று 42 மத்திய குழு உறுப்பினர்கள் மீள உறுதி செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். இதேவேளை சிறிலங்க…

  18. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் அரசாங்கத்தில் பங்காளி கட்சிகளாக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளோ, பிரதி அமைச்சுக்களோ இல்லாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கண்டியில் விடுத்த அழைப்பை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் அவருக்கு ஆதரவு வழங்க இவ்விரு கட்சிகளும் தீர்…

  19. வடமராட்சியின் பருத்தித்துறை கற்கோவளம், பகுதியைச சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா 9வயது) ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லியடியிலுள்ள வங்கியொன்றுக்கு சென்று வருவதாக நேற்று காலை சென்ற இவ்விருவரும், இதுவரையில் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115472/lang…

  20. குடியுரிமை வழங்க்பபட்டு பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்! [Monday 2015-01-12 12:00] குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர். எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பண…

    • 10 replies
    • 883 views
  21. "பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள்" 12 ஜனவரி 2015 அமைச்சரவையில் இணைவது குறித்து சிந்திக்கலாம்- இரா சம்பந்தன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜிதசேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா சம்பந்தன் நிராகரித்தார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்றைய சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடை…

  22. ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர்– ஜனாதிபதி: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்: 12 ஜனவரி 2015 ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினர் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினர் அமைச்சர்களா, பிரதி அமைச்சர்களா, பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லது சாதாரண பொதுமக்களா என பாரபட்சம் பார்க்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்து உடைய அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கும் குறைவா…

  23. தமிழ் பேசும் மக்களின் வாக்குகளினால் அமோக வெற்றியீட்டி புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொ…

  24. மைத்திரி அரசுக்கு புதிய நெருக்கடி – கருணா, சஜினுக்கு கடும் எதிர்ப்பு JAN 12, 2015 | 13:16by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரும், முன்வந்துள்ள நிலையில், ஐதேக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்த்தன, உதித் லொக்குபண்டார மற்றும் முன்னாள் அமைச்சர்களான டியூ குணசேகர, ஜோன் செனிவிரத்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஆகியோரும் இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை மைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.