Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திறைசேரி செயலரும் தப்பிச் சென்றார் JAN 11, 2015 | 0:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில், சர்ச்சைக்குரிய பங்கு வகித்து வந்த திறைசேரியின் செயலர் பி.பி.ஜெயசுந்தர, தேர்தலுக்கு முதல் நாளே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள், மற்றும், கடன்கள் உள்ளிட்ட விவகாரங்களில் ராஜபக்ச அரசின் மோசடிகளுக்கும் முடிவுகளுக்கும் மூலகாரணமாக இருந்தவர் பி.பி.ஜெயசுந்தர. நாட்டைச் சீரழிப்பவர் என்று முன்னர் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பி.பி.ஜெயசுந்தர, கடந்த புதன்கிழமையே சிறிலங்காவை விட்டு வெளியேறியிருக்கிறார். அவருக்கு, சீனாவுடன் நெருக்கமான தொடர்புட…

  2. இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார். இந்நிலையில் தமிழர்கள் அளித்த தோல்வியை ஏற்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த மஹிந்த முடிவுகள் முழுமையாக வெளிவருதற்குள் அலரி மாளிகையில் இருந்து நள்ளிரவே அவசர அவசரமாக வெளியேறினார். கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மெகமுல்லனாவில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற ராஜபக்சே அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எதிராக வாக்களித்ததே தமது தோல்விக்கு காரணம் என்று கூறினார். இருப்பினும் தமிழர்களின் வாக்க…

  3. தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்படும் தகவலோ அல்லது அதில் இணையும்படி அழைப்பு எதுவுமோ தங்களுக்கு புதிய அரசுத் தலைமையிடமிருந்து இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ) என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை புதிதாகப் பதவியேற்கும் அமைச்சரவை பற்றிய ஆரூடச் செய்திகள் தற்சமயம் கொழும்பிலிருந்து பரவலாக உலாவருகின்றன. அவற்றில் மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கு வழங்கப்படுகின்றது என்ற தகவலும் உள்ளடங்கியிருந்தது. அது குறித்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தலை…

  4. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான இறுதிக்கட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகைக்கு வரவழைத்து தனக்கும், சகோதரர்கள் இருவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டு கோள்விடுத்ததாக மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளரான டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தனது குடும்பத்தின் பாதுகாப்பு பற்றியே மகிந்த ராஜபக்ஷ பேசினார் எனவும் ராஜித சேனாரத்ன செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். முக்கியமாக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு மகிந்த ராஜபக்ஷ கோரியதாகவும் ராஜித தெரிவித்தார். மகிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வ…

    • 1 reply
    • 930 views
  5. தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே! - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். இந்தச் சம்பவம் இன்றிரவு(09) இடம்பெற்றது. இன்று மாலை புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி நேற்றிரவு இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போதே புதிய பிரதமர் மீது இப்படிப் பாய்ந்து விழுந்தார் மனோ கணேசன். இன்று(09) மாலை பதவி…

    • 31 replies
    • 3.3k views
  6. இலங்கை: கிழக்கு மாகாணசபையிலும் ஆட்சி மாற்றமா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள். எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள். 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை வென்றிருந்தாலும் ஆட்…

  7. ஊவா மாகாண முதலமைச்சராக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ எதிர்வரும் 13 ஆம் திகதி முற்பகல் பதவியேற்கவுள்ளார். ஊவா மாகாண சபையின் புதிய அமர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பதுளையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி தரப்பிலிருந்து நான்கு உறுப்பினர்கள் சபையின் புதிய அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். இவ் இணைவுடன் தமக்கு பெரும்பான்மை பலத்தை ஊவா மாகாண ஆளுனரிடம் உறுதிப்படுத்தி…

  8. முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணி சார்பாகப் போட்டியிட்டு இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்துவார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு தலதா மாளிகையைச் சென்றடைவார். அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - http://www.malarum.com/article/tam/2015/01/10/8032/%E0%AE%9E%E0%AE%BE%E0%…

  9. வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகளிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறத் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது. தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை அவரது உடமைகளும் கொண்டு செல்லப்பட்டுவிடும் என்றும் தெரிகின்றது. நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில் அவரது நிர்வாகத்தின் கீழ் சந்திரசறி பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதையடுத்து பதவி விலகி, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துகொள்ள அவர் தீர்மானித்துள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமான …

  10. (“த இந்து” பத்திரிகையில் வெளியான தமிழ் சிவில் சமூகத்தின் பேச்சாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் சனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்) எந்தவொரு தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கும் சிறிசேனதீர்வு வழங்குவார் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் பெருமளவில் வாக்குப்பதிவு இடம்பெற்றமையை ராஜபக்சவிற்கு எதிரான வாக்களிப்பு எனவே நான் விளக்கமளிப்பேன். ராஜபக்ச நடாத்திய போரிற்கும் அவர் போரிற்குபிந்தையசூழலில் மேற்கொண்ட தமிழர் விரோத செயற்பாடுகளிற்கும் எதிரான எதிர்ப்புணர்வாகவே இந்த வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது. இந்த வாக்குகளை மைத்திரிபால சிற…

  11. மைத்திரியின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது : அநுரகுமார திஸாநாயக்க பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின் றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் கட்சியின் தலைவரிடம் தேர்தல் வெற்றி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட…

  12. சிவில் அதிகாரியின் கையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு JAN 10, 2015 | 13:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக, பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில், கோத்தபாய ராஜபக்ச வகித்த பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பஸ்நாயக்க, முன்னர், சுற்றாடல் அமைச்சின் செயலராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக, இராணுவப் பின்னணி கொண்ட ஒருவரின் கட்டுப்பாட்டின் இருந்து வந்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் பதவி, சிவில் சேவை அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்…

  13. ‘சிறிலங்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ JAN 10, 2015 | 12:49by நித்தியபாரதிin சிறப்பு செய்திகள் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் போலல்லாது சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிகத் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அண்மையில் சிறிலங்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவை இத்தேர்தலில் தோற்கடித்துள்ளார். “எதிரணியால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் ப…

  14. 6 ஆயிரம் ரூபாவுடன் நடந்த மைத்திரியின் பதவியேற்பு – படங்களுடன் செய்தித்துளிகள் JAN 10, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பதவியேற்பு விழாவுக்கு 6000 ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான பூங்கொத்துக்கும், சுதந்திர சதுக்கத்தில் ஏஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்துக்குமே இந்த செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் கொடுத்த பூங்கொத்து சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டவுடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியத் தலைவர்களிடம் …

  15. :- ஜானகி அபேவர்தன, சாந்தி சச்சிதானந்தம், பிரேமா கமகே கிறிஸ்டீன் பெரேரா, விசாகா திலகனரத்ன, மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களே, எங்களுடைய நம்பிக்கையினைக் காப்பாற்றுங்கள்:- நாம் இந்தக் கடிதத்தை எழுதும் வேளையில், நீங்கள் இலங்கையின் 6ம் நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். சவால்கள் நிறைந்த பாதையில் நடைபோடத் தொடங்கும் இந்தக் கணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றோம். “100 நாட்களில் முடிக்க வேண்டிய நிகழ்ச்சி நிரல்” என வழிகாட்டிப் பலகை நாட்டியிருக்கும் உங்கள் சவால் மிகுந்த பாதையானது பல முக்கியமான நடவடிக்கைகள் கொண்டதாக உள்ளது. 18ம் திருத்தச் சட்டத்தினை அகற்றுதல், நிறைவேற்று ஜனாதிபதிப் …

  16. 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க இந்தியா தொடர்ந்து புதிய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்திய அரசாங்கம் தொடர்ந்து சிறிலங்காவுக்கு ஒத்துழைப்பை வழங்கும். எனினும் சிறபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்அடிப்படையில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாப்பதற்கு, இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தை வலியுறுத்தும் என்று அவர் கூறியுள்ளார் .http://www.pathivu.co…

  17. கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு செயலாளராக பசநாயக்கவை அதிபர் மைத்ரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலொல் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார். இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வ…

  18. புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய பாதுகாப்பு கட்டமைப்பில் பதவியில் உள்ள இராணுவத்தளபதி, விமானப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்திலேயே இந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோரை பதவியில் இருந்து விலகிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வின் பின்னரும் இருதடவைகள் பதவி நீடிப்புச் செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

  19. 1. அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­ நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி மாத சம்­ப­ளத்­திற்கு 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளையும் உள்­ள­டக்கி ஒன்­றி­ணைந்த சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டதன் பின்னர் மிகுதி தொகையுடன் மிகுதி சம்­பள அதி­க­ரிப்பை வழங்­குதல். 2. மோட்டார் சைக்கிள் வழங்கும் போது அசா­தா­ர­ணத்­திற்கு உள்­ளான அரச ஊழி­யர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்­க­ளுக்கும் நிவாரணம் வழங்குதல். 3. அர­சியல் அடிமை வேலை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பட்­ட­தா­ரி­களை அரச சேவைக்கு உள்­ளீர்த்து அவர்­களின் தகை­மை­க­ளுக்கு ஏற்ற பதவி உயர்வு திட்­டத்தை ஏற்­ப­டுத்தல். 4. ஓய்­வூ…

  20. தலைவிதியின் தண்டனையானது பல்வேறு விதமாக அமைவதுண்டு. அந்த தலைவிதியின் தண்டனை சக்கரம் தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ தனது பலமிக்க அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் சட்டத்தின்படி வருடாந்தம் ஒதுக்கப்படும் 27 கோடி ரூபா நிதியை கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 6 கோடி ரூபாவாக குறைத்தார். நிதியை குறைத்து சந்திரிக்காவுக்கு மனவலியை ஏற்படுத்தி விட்டு, தனது ஒரு நாள் செலவுக்கு 2.5 கோடி ரூபாவை ஒதுக்கினார். வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்கள் மாத்திரமே கடந்தது. மகிந்த ராஜபக்ஷவு ஜனாதிபதி பதவியை இழந்தார். ஒரு நாளைக்கு 2.5 கோடி ரூபாவை செலவு செய்த அவ…

    • 1 reply
    • 540 views
  21. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிலுள்ள பல இராணுவ முகாம்களின் மீது கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தை மறுத்து இராணுவப் பேச்சாளர் விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சமாதானமானதொரு சூழல்நிலை காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியும் உண்மைக்குப் புறம்பானது எனவும் இராணுவப் பிரிவு மேலும் அறி…

  22. மகிந்தராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கைஎடுத்து வருவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செய்தி இணைத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை கைது செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மகிந்தவின் இளைய மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் அமைக்கவும் முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36815/57//d,article_full.aspx

    • 1 reply
    • 731 views
  23. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/137379

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.