Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைத்திரிபால புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென விரும்பியதாக US கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல்:- 09 டிசம்பர் 2014 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- மைத்திரிபால புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென விரும்பியதாக அமெரிக்கா கூறுகின்றது என விக்கிலீக்ஸ் தகவல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென விரும்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்ப…

  2. கண்டியில் ஆரம்பமாகியுள்ள பொது எதிரணியின் பரப்புரைக் கூட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=455883714709759258#sthash.iEyTWZDS.dpuf

  3. மகிந்த கோத்தா ரெஜிமன்டின் இராணுவ நடவடிக்கை தொடர்கிறது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ராவய பத்திரிகையின் ஆசிரியரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.டபிள்யூ. ஜனரஞ்சனவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அண்மையில் பத்திரிகையில் வெளியான செய்தியொன்று தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 59 வீத வாக்குகளையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 41 வாக்குகளையும் பெற்றுக் கொள்வர் என பத்திரிகையில் அண்மையில் கருத்து கணிப்பு தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த தகவல் தொடர்பிலேயே புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். http://globaltamilnews…

  4. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், தனி நாடு ஸ்தாபிக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 05 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் பிரியநாத் டெப், பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்திய கடதாசியில், இந்த நாட்டில் தனி நாடு ஸ்தாபிக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண குறிப்பிட்டார். அதனைத் தெளிவுபடுத்தி, சத்திய கடதாசியொன்றை நீதிமன…

  5. யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் மூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பால்நிலை சமத்துவ கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,நவீன உலகில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்திருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் அவர்களின் முன்னேற்றங்களை ஆணாதிக்க சமுதாயம் இன்னும் அவர்களது வளர்ச்சியை சரியான முறையில் அங்கீகரிக்க தயாரில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எந்த சமுதாயத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வடமாகாணத்தில் 30வருடங்களாக எந்த வன்முறைகளும் நடைபெறவில்லை. பெண்கள் அனைத்திலும் சுயமாக செயற்பட்டார்கள் என்று பெருமையாகக் கூறும் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது? இதற்கு காரணம் என்ன? ஊடகங்களும்…

  6. ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளத் தீர்மானம்? 09 டிசம்பர் 2014 ஆளும் கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரும் இவ்வாறு இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, தபால் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன, எஸ்.பி. நாவீன்ன உள்ளிட்ட சிலர் இவ்வாறு இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் இவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்பப…

  7. ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன கொழும்பு, நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரத்த அழுத்தம் காரணாமகவே இவர் நேற்றிரவு குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இவரது உடல்நிலையில் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும் கிடையாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://tamil24news.com/news/?p=47207

  8. சிங்கள சினிமா நடிகை ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஜனாதிபதியின் ஆலோசகரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலவந்தமாக ஜீப் வண்டியில் ஏற்றி குறித்த நடிகையின் கைகளை கழுத்துப் பட்டியினால் கட்டி, வாகனத்திற்கு உள்ளேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக நடிகை குற்றம் சுமத்தியுள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் துணை முகாமையாளர்களில் ஒருவரும் ஜனாதிபதி ஆலோசகருமான முதியன்சலாகே சமன் திஸாநாயக்க என்பவரே இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார். பத்தரமுல் சத்சிறிபாயவிற்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து குறித்த நடிகை பலவந்தமான முறையி…

  9. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நேற்று மாலை வடமாகாணசபை உறுப்பினர்கள் நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினர். சமீபத்தில் கடும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளில் 25 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். இதுபற்றி மாகாணசபையின் கவனத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மேரிகமலா குணசீலன் ஆகியோர் கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேற்படி 25 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க முன்வந்தார். அதன்படி நேற்று முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் தலைமையில் அவரது பணிமனையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந…

  10. ஒன்று போனால் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் விசேட திறமை படைத்தவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல, சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று. திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர். நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த போது குண்டசாலையில் ஐ.தே.க. அமைப்பாளராக அவர் செய…

  11. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சரவையில் இருந்து மேலும் இரு அமைச்சர்கள் கட்சிதாவவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் தங்களுடைய அமைச்சுக்களில் தமக்கு தேவையான கோப்புக்கள் மற்றும் முக்கிய ஆவனங்கள் தொடர்பில் அதிகமுக்கியத்துவம் கொடுத்து தயார்படுத்திவருகின்றனர். இவர்களின் இந்த செயல் அரசைவிட்டு விலகி எதிரணியுடன் இணைவதற்கான முனைப்பாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் அமைச்சர் ஜீவன், ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ஹிருனிகா மற்றும் முல்லேரியா பிரதேச சபையின் தலைவர்…

  12. நாட்டின் நலனுக்காகவும், சர்வதேசத்துக்கு எதிராகவும் மட்டுமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் எனப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் இவர் தேவையின்றி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியதில்லை. மாறாகப் போர் இடம்பெற்ற காலத்தில் அதிகளவில் சர்வதேச அழுத்தங்கள் காணப்பட்டன. அவற்றை முறியடிப்பதற்காகவே ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என பசில் ராஜபக்ச http://onlineuthayan.com/News_More.php?id=523993714009852308#

  13. யாழ்தேவி வந்தும் நாங்கள் போகவில்லை சொந்த நிலத்திற்கு......

  14. ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று காலை ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கையேற்கப்பட்டன . வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 19 வேட்பாளர்களும் இன்றைய தினம் சுப நேரத்தில் தேர்தல்கள் செயலகத்திற்கு நேரில் வருகை தந்து தமது வேட்பு மனுக்களையும் கையளித்துள்ளனர். இவர்களுள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் முக்கியமானவர்களாவர். ஜனாதிபதி தேர்தலில் இவர்களிருவருக்குமிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வேட்பு மனு கையேற்பினை முன்னிட்டு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகப் பிரதேசம் பாதுகாப்புப் பிரதேசம…

    • 2 replies
    • 541 views
  15. https://www.youtube.com/watch?v=NQRbVdsZT9M#t=16 உயர்ச்சிக்கு ஊனம் ஒரு தடையல்ல Uthayan TV

    • 0 replies
    • 619 views
  16. நெல்சன் மண்டேலா ஒரு மாமனிதர் என்பதற்கு ஏனையவற்றை விட இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சுதந்திரப் போரில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், தோல்வியுற்ற வெள்ளையர்களை அவர் பழிவாங்கவில்லை. இரண்டு, ஒருமுறைக்கு மேல் ஜனாதிபதி பதவியிலிருக்கும்படி நாட்டு மக்களும் , கட்சியும் எதிர்பார்த்தும் கூட அவர் அதை மறுத்து ஓய்வு பெற்றார். இங்கே போரில் புலிகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றி, தமிழ் மக்களுக்கு எதிராகப் பெற்ற வெற்றியாகக் கணிக்கப்படுகிறது. அதைவிட அது இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது, ஆயுட்காலம் முழுக்க ஜனாதிபதி பதவியில் ஒருவரையும், அவரைத் தொடர்ந்து அவர் குடும்பத்தையும் வைத்திருக்க முயற்சி நடக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேச…

  17. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது. ஆயினும் அதை விடவும் முக்கியத்துவம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் தங்கியிருக்கின்றது. பொது எதிரணியாக செயற்படும் போது தனி நபர் தொடர்பில் அக்கறைப்பட அவசியம் இல்லை என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்றில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசிம் செயற்படுவார் எனவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று பொது எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து அனைவரும் களத்தில் இறங்கியுள்ளோம். பல விட்டுக…

    • 0 replies
    • 1.3k views
  18. மைத்திரிபாலவின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது - திஸ்ஸ அத்தநாயக்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது என ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது எதிரணியின் வேட்பாளருக்குத் தனது ஆதரவைத“ தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல், அரசிலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல், 100 நாள்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் என்பன அடங…

  19. -வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில்; கடந்த 24 மணித்தியாலத்தினுள் 169 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் தா.சதாநந்தம் தெரிவித்தார். இதற்கமைவாக, ஞாயிற்றுக்கிழமை காலை(7) 8.30 மணி முதல் திங்கட்கிழமை காலை 8.30 மணி வரைக்குமான 24 மணித்தியாத்துக்குள் 169 மில்லி மீற்றர் மழைவீழச்சி பதிவாகியுள்ளது. இம் மழைவீழ்ச்சியானது, இழுக்குச்சேனையில் 72.2 மில்லி மீற்றரும் சாகாமத்தில் 64.5 மில்லிமீற்றரும் அதி கூடிய மழைவிழ்ச்சி பதிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மழைக் காரணமாக மக்களது இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் வீதிகள் என்பன முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி…

  20. மகிந்தவுக்கு எதிராக அடுத்தகட்டப் போரைத் துவக்கினார் சந்திரிகா Dec 08, 2014 | 0:21 by கார்வண்ணன் மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். நேற்று அத்தனகலவில் நடந்த கூட்டம் ஒன்றில், முன்னாள் துடுப்பாட்ட வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்கவை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிப்பதாக சந்திரிகா அறிவித்துள்ளார். அத்தனகல தொகுதி பண்டாரநாயக்க குடும்பத்தின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதி அமைப்பாளராக அர்ஜீன ரணதுங்கவை நியமிப்பதாக அறிவித்துள்ள சந்திரிக…

  21. ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல், எஸ்தானியா, பல்கேரியா, போலந்து, இலக்சம்பெர்க், லத்தீவியா போன்ற நாடுகளின் தூதர்களை கழகப் பொதுச்செயலாளர் வைகோ இன்று (9.12.2014) காலை சந்தித்தார். வர்த்தக, கலாச்சார, அரசியல் உறவுகளைப் பற்றிப் பேசினார்கள். வைகோ, தமிழக அரசியல் - தேசிய அரசியல் நிலை குறித்தும், ஈழத்தமிழர்கள் சந்தித்து வருகின்ற பிரச்சினைகள் குறித்தும், ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி விவரித்துப் பேசினார். ஈழத்தமிழர் பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளின் உதவியும், பங்களிப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்திக்…

  22. வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது. புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக் கையளிப்பதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது தமது யோசனையையும் கவனத்தில் கொள்ளும் எனத் தாம் நம்புவதாக சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். http://seit…

  23. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இரு வேட்பாளர்களும் தீர்வுகளை முன்வைக்கவில்லை – சுரேஸ் 09 டிசம்பர் 2014 தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அன்றாட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ காத்திரமான தீர்வுத் திட்டங்கள் எதனையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை நம்பியிருக்கப் போவதில்லை என்ற ஓர் நிலைப்பாட்டை ஆளும் கட்சி கொண்டுள்ள…

  24. http://www.lankasurveys.com/ Who will win the presidential election 2015? Mr. Mahinda Rajapaksha Mr. Maithripala Sirisena This online pool not related or reflection of Official Sri Lanka Presidential Election 2015. This is just a online poll for internet users. - See more at: http://www.lankasurveys.com/#sthash.SbZ3J1lz.dpuf

  25. பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதோ அல்லது அந்த "ஜனநாயகத்தின்" மகுடத்தை அலங்கரிக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை மீதோ நம்பிக்கை வைத்து இலங்கை மக்கள் வாக்களிப்பதில்லை. இவ்வகை தேர்தல்கள் மக்களின் தேர்வுகளுமல்ல. மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான எந்த ஜனநாயக ரீதியான தேர்வு முறைகளும் இலங்கையில் இதுவரை இருந்ததில்லை. 1978ம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையில் உருவாக்கிய அழிவுகள், ஒடுக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் எண்ணிலடங்காதவை. புலிகளின் அழிவு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஆகிய இரண்டு அடித்தளத்தில் இருந்து கொண்டு சிங்கள மக்களின் ஜனநாய உரிமைகளை பறிப்பதுடன் ஜனாதிபதி ஆட்சி மூலம் இதுவரைகாலம் பயனடைந்து வந்த ஆளும் மறுபிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.