Jump to content

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்: புதிய திசைகள்


Recommended Posts

newdirections.jpg
பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதோ அல்லது அந்த "ஜனநாயகத்தின்" மகுடத்தை அலங்கரிக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை மீதோ நம்பிக்கை வைத்து இலங்கை மக்கள் வாக்களிப்பதில்லை. இவ்வகை தேர்தல்கள் மக்களின் தேர்வுகளுமல்ல. மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான எந்த ஜனநாயக ரீதியான தேர்வு முறைகளும் இலங்கையில் இதுவரை இருந்ததில்லை.

1978ம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையில் உருவாக்கிய அழிவுகள், ஒடுக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் எண்ணிலடங்காதவை. புலிகளின் அழிவு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஆகிய இரண்டு அடித்தளத்தில் இருந்து கொண்டு சிங்கள மக்களின் ஜனநாய உரிமைகளை பறிப்பதுடன் ஜனாதிபதி ஆட்சி மூலம் இதுவரைகாலம் பயனடைந்து வந்த ஆளும் மறுபிரிவின் உரிமைகளும், கொள்ளையிடலில் பங்கும் இந்த ராஜபக்ச அரசினால் பறிக்கப்படுகிறது.

மக்களின் உரிமை பறிக்கப்படுகிறதே என்ற கரிசனையிலிருந்து இன்றைய ஜனாதிபதி முறை மாற்றமோ அல்லது தேர்தல் கோரிக்கையோ வைக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்கின்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு நடத்தப் படும் குடும்ப ஆட்சிக்கெதிரான ஆளும்பிரிவில் உள்ளவர்களின் குரல் முக்கியமானதாகவும், குடும்ப சர்வாதிகாரத்தால் இருந்த மிச்ச சொச்ச உரிமைகளையும் இழந்து வரும் மக்களின் ஜனநாயக குரலையும் இணைத்து ஒரு கருத்துருவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்பீட்டு அடிப்படையிலேயே மக்கள் ஜனநாயகத்தை தெரிவு செய்ய முடிகிறது.

கால காலமாக தேர்தல்கள் கொள்கைக்காக புறக்கணிக்கப்படுவதும், தந்திர ரீதியாகவும், பெரும் பண கைமாறல்களினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. கொள்கைக்கான புறக்கணிப்புகள், அதற்கான மாற்றீடுகளை உருவாக்குவதில் இதுவரை வெற்றி காணாமையினால் அவை மக்கள் தேர்வுகளாக மாற முடியவில்லை. தந்திரம், ஊழல் வகைப் புறக்கணிப்புகள் இதுவரை பேயை துரத்தி விட்டு பிசாசை ஆட்சிக்கு கொண்டு வந்த வரலாற்றையே கொண்டிருக்கின்றன.

இன்று இருக்கும் இந்த ஜனநாயக ஆட்சிமுறைக்கு மாற்றான ஒரு மக்கள் ஜனநாயகத்தை யாரும் முன் வைக்காத வரை மக்களை தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் படி கோருவது எம்மை போன்ற சக்திகளின் ஒரு தேர்வாக அமைய முடியாது. அதே நேரம் இத் தேர்தல் காலங்களில் மக்கள் அரசியல் ரீதியில் அதிகம் விழிப்பாக இருக்கும் சூழ்நிலை காணப்படுவதால் தங்கள் உரிமைகளை தேவைகளை உயர்த்திப்பிடித்து, குரலெழுப்பும், போராடும் வகையில் ஊக்கிவிக்கப்படுவது சாத்தியமானதாகும்.

குறிப்பாக தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் தமிழ் பிரதிநிதிகளை நோக்கியும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரிவுகளை நோக்கியும் குறைந்தபட்சமாக கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்பது எமது முன்மொழிவு.

1. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப் பட வேண்டும்
2. இராணுவ முகாம்கள் நீக்கப் பட்டு உள்நாட்டு யுத்தத்திற்கு முந்தைய காலத்து நிலைக்கு இராணுவ நிலைகள் நகர்த்தப் படவேண்டும்
3. சிறுபான்மையினர் மீதான நில ஆக்கிரமிப்பு நிறுத்தப் பட வேண்டும்
4. காணாமல் போனோர் விபரம் திரட்டப் பட்டு நியாயமான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்
5. அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் படவேண்டும்
6. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் துரிதப் படுத்தப் பட வேண்டும்

இந்த முன்மொழிவுகளைத் தழுவிய பல்வேறு விதமான உரிமைக் கோரிக்கைகள் தமிழர் வாக்குகளைக் குறி வைத்து வருவோர் முன் பகிரங்கமாக வைக்கப் பட வேண்டும். திரை மறைவில் நடக்கக் கூடிய பேரம் பேசல்கள், அரசியல் சாணக்கியர்களின் காய்நகர்த்தல்களில் நம்பிக்கை வைப்பது இனிவருங் காலங்களில் தமிழ் மக்கள் முன் செல்லுபடியாகப் போவதில்லை. இந்த வகைக் குறைந்த பட்சக் கோரிக்கைகளைக் கொள்கையளவில் கூட ஏற்க முடியாத தரப்பினரை மக்கள் சுலபமாக இனங் கண்டு கொள்ள முடியும்.

http://www.kural.co.uk/2014/news/election

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.