ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
ஜெனீவா மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணைக்கு சாட்சியம் வழங்கும் நபர்கள்; கைது செய்யப்படுகின்றமை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சாட்சியம் வழங்கிய நபர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டமை மற்றும் புலனாய்வு துறையினரின் தேவையற்ற விசாரணைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் பேரரிசிரியர் பீரிஸிடம் கடும் கண்டனம்; வெளியிட்டதாக கூறப்படுகின்றது. சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படமாட்டாது என அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைச் சபையின் கூட்டத்தொட…
-
- 0 replies
- 327 views
-
-
கடந்த 25 ஆம் திகதியுடன் வட மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் குறித்த வருடத்தில் சுமார் 138 தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ஆனாலும் தீர்மானங்கள் நிறைவேற்றும் சபையாக நாம் இருக்கவில்லை எனவும் அவர் கூறினார். மாகாண சபையின் ஒரு வருட நிறைவின் பின்னர் 18 ஆவது அமர்வு பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவைத் தலைவர் மேற்கண்டவாறு கூறினார். அமர்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் - நாம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கின்றோம். இந்த ஒரு வருடகாலத்தில் மொத்தமாக 138 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம். வெளியில் உள்ளவர்கள் சில விம…
-
- 1 reply
- 266 views
-
-
கொழும்பு, மலே வீதி போக்குவரத்து பொலிஸுக்கு சொந்தமான 3.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய 600 சீசீ மோட்டார் சைக்கிளை களவாக எடுத்துச்சென்ற குற்றத்தை ஒப்புகொண்ட 3பேரும் அரசசெலவாக தலா 3000 ரூபாய் செலுத்த வேண்டுமென கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் பிரபல காப்புறுதி நிறுவனம் மற்றும் அரச கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊழியர்களாவர். இவர்கள் அரசாங்க சேவையிலிருப்பதை கவனத்திலெடுத்த நீதவான், அவர்களுக்கு ஆகக் குறைந்த பட்ச தண்டனை விதித்தார். மலே வீதி, பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அண்மையில் தனக்கு கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மலே வீதியில் நிறுத்திவைத்தபோது களவு போய்விட்டதாக ஒக்டோபர் 2ஆம் திகதி மலே வீதி பொலிஸில் முறைப்பாடு செ…
-
- 5 replies
- 832 views
-
-
வன்னியிலிருந்து எடுத்ததாக ஜனாதிபதி கிளிநொச்சியில் கையளித்த நகைகளை போன்றே யாழிலிருந்தும் எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகளினையும் மீளளிக்க வேண்டுமென வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 1995, 1996 ஆம் ஆண்டுகளில் பொதுமக்களால் இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகளில் அடகுகள் மற்றும் கணக்குகள் வைக்கப்பட்டன. எனினும் நாட்டின் யுத்த சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட நகைகள் மீள திருப்பி மக்களிடம் கொடுக்கப்படவில்லை. எனவே அவற்றை மீளத்திருப்பிக் கொடுக்க வேண்டும் என அரசிடம் கோருவது தொடர்பான பிரேரணை இன்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபையின் 18ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது. அதில் அவைத்தலைவர் சீ.…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில நிர்வாகக் கட்டுப்பாடுக்காக மேற்கொள்ளப்படும் பாஸ் நடைமுறையால் பார்வையாளர்கள் அவதிப்படுவதோடு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதுடன் தன்மானப் பிரச்சனைக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவாகள் தொவிக்கின்றார்கள். யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது அதிக வசதிகள் மற்றும் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் நோயாளர்களை பார்வையிடச்செல்லும் அவர்களது உறவினர்கள் பாரியளவு அசௌவ்கரியங்களையும் மனஉழைச்சல்களுக்கும் ஆளாகிவருகின்றனர். நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் மக்களுக்கு பாஸ் நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளமையால் இரண்டு நபர்களுக்கு மேல் நோயாளர்ரைச் சென்று பார்வையிடமுடியாதுள்ளது. வடமாகாணத்தில் முக்கிய வைத்தியசாலையாக விளங்கும் யாழ்.போதனா வ…
-
- 0 replies
- 367 views
-
-
இந்த இடத்தில் ஒரு விடயம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உரையாடலை பதிவு செய்தது யார்? இந்த உரையாடல் இப்போது பிரிசித்தப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன? அனைத்து தூதுவர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களை ஒரு பலம் மிக்க சக்தி பதிவு செய்கிறது. தமக்குத் தேவைப்படுமிடத்து அவற்றை பிரசித்தப்படுத்தி தமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தயாராயிருக்கிறது.
-
- 3 replies
- 707 views
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்காக போராட தயாராக இருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார். அண்மையில் வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மாணவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகிறமை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர். இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்ட ஒன்று. நாங்கள் மாணவர்களைத் தவறான பாதைக்கு ஒருபோதும் இட்டுச் செல்லவில்லை ஆட்சியிலுள்ள அரசாங்கம் தான் மக்களையும் மாணவர்களையும் குழப்புகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல போன்ற கொடுப்பனவுகள் சரியான முறையில் வழங்கப்படுவதி…
-
- 0 replies
- 753 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு மலைஉச்சியை அடைவதற்க்கு சிறிதளவு தூரமேயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கான விஜயத்தின்போது விடுதலைப்புலிகள் சார்பு அமைப்பு எதனையும் சந்திக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சியின் பிரதித்தலைவர் சஜித்பிரேமதாஸாவும் எதிர்வரும் தேர்தல்களில் கட்சிக்கு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113015/lan…
-
- 0 replies
- 417 views
-
-
வடக்கு மாகாண சபையை “புதிய பிரேரணை சபை” என பெயர் மாற்ற வேண்டும் என ஈபிடிபி ஒட்டுக்குழு எஸ்.தவராசா கூறினார் . கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து இதுவரை வட மாகாண சபை 17 தடவை கூடியுள்ளது. முதலாவது அமர்வு சம்பிரதாயபூர்வமானது ஏனைய சில அமர்வுகளின் போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இறுதியாக இடம்பெற்ற அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. அதனைத்தவிர 14 தடவைகள் கூடியுள்ளது. அதன் போது 150ற்கும் அதிகமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் என்னிடம் உள்ளன. அதில் என்ன விடையங்கள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏதாவது ஒன்றைக் கூறுவார்கள். இல்லாவிடின் வேறு …
-
- 3 replies
- 554 views
-
-
தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன் வைக்கவில்லை அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே கோருகின்றனர்:- பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்- அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் கூட தனித் தமிழீழமொன்றை கோரி நிற்கவில்லை எனவும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண…
-
- 8 replies
- 715 views
-
-
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அதுதொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடு இதுவரை பதிவாகவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்தி தகவல்களை சேகரித்து அது தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஏஸ்லி டி சில்வா அத தெரண செய்திப் பிரிவிடம் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட்…
-
- 0 replies
- 512 views
-
-
-பொ.சோபிகா குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த 22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, அரியாலை முள்ளி வீதியை சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார். இதன்போது, அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் க…
-
- 10 replies
- 986 views
-
-
யாழ். மாவட்டத்தில் தற்போது பியர் கலாச்சாரமும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான கலாச்சாரத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என சர்வமத குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ். மாவட்ட சர்வமத குழுவின் மாதாந்த ஒன்று கூடல் யாழ். கிறிஸ்துராசா தேவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அதன்போதே குழுவினர் மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் இளைஞர்கள் பியர் போத்தல்களுடன் சர்வசாதாரணமாக நடமாடும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நாம் நேரடியாக காண்கின்றோம். அதுமட்டுமல்ல இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதும் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து…
-
- 90 replies
- 6.3k views
-
-
இந்தியாவின் 50 ஆயிரம் வீடு திட்டம்: இலங்கை அமைச்சர்கள் தொண்டமான் - டக்ளஸ் கடும் வாக்குவாதம்! கொழும்பு: இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் தொடர்பாக இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமானுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கையில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் குறித்து ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இத்திட்டத்தை வடக்கில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். ஆனால் 50 ஆயிரம் வீடுகளும் இந்திய வம்சா…
-
- 2 replies
- 715 views
-
-
யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானியாவின் குரோய்டன் எனும் இடத்தில் வாகனம் மோதியதால் மரணமடைந்துள்ளார். குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது நண்பர்களினால் செல்வம் என அறியப்படுகின்ற ஜெயரட்னம் கந்தையா (வயது 43) என்பவரே நேற்றையதினம் இவ்வாறு மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்று 14 வருடங்களாகின்றன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/131136-2014…
-
- 0 replies
- 367 views
-
-
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்க்கு செல்லவுள்ளது: 28 அக்டோபர் 2014 ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்க்கு செல்லவுள்ளவுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவமளிக்கும் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கைக்கு வலியுறுத்துவதற்காக பாதுகாப்புச்சபையின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட குழுவினர் இலங்கை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பின்போதும், யாழ்ப்பாண விஜயத்தின் போதும் இக்குழுவினர் இதனை வலியுறுத்தவுள்ளனர். பயங்கரவாதத்தை இராணுவநடவடி…
-
- 1 reply
- 301 views
-
-
ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஸ்ணராஜா (வயது - 57) கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.முன்னதாக வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்ற புலனாய்வுப் பிரிவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று கொழும்பு 4ம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே சின்னத்தம்பி கிருஸ்ணராஜாவை உடன் விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புக்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, சிவபுரம், கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஸ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற கு…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டோமெனவும் அவ்வாறு தலை தூக்கினால் தலையிலேயே அடிப்போம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமொன்றினால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் தலை தூக்கும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புலிகள் தலை தூக்கினால் அதன் தலையிலேயே அடிப்போம். கடந்த க…
-
- 0 replies
- 437 views
-
-
கிளிநொச்சி நாச்சிக்குடாவைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணராஜா (51) என்பவர் ஜ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைக்கு சாட்சியங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுpறிலங்கா அரசின் இச் செயலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் இவரை விடுவிப்பதற்கு ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். ஜ.நா சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைக்கு சாட்சியங்கள் வழங்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில் அதற்கு சாட்சியங்களை வழங்க பாதிக்கப்பட்டவர்கள் பலரும் ஆ…
-
- 0 replies
- 760 views
-
-
புலிகளை அழித்துவிட்டோம் எனக் கொண்டாடிய அரசு இன்று புலம்பெயர் தமிழர்களை புலிகளாகச் சித்திரித்து தமது இனவாத அரசியலை மேற்கொள்கின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்கும் செயற்பாட்டுக்கு வடக்கு மாகாணசபை இடம்கொடுக்காமையினாலேயே அரசு எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது. - இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமது குற்றங்களை மறைக்கவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பையும் மீறி வடக்கில் அரசு ஆக்கிரமிப்பினை மேற்கொள்கின்றது. வடக்கு மாகாணசபை மீதான அரசின் குற்றச்குற்றச்சாட்டினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களின் தேவைக்கு ஏற்பவே வடக்கு மாகாண …
-
- 0 replies
- 521 views
-
-
நாகர்கோவில் கிராமத்தின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது கூகிள் ஏர்த்! [Tuesday 2014-10-28 09:00] மனிதாபிமான பணிகளுக்கு உதவும் வகையில் இலங்கையின் வடக்கில் நாகர்கோவில் கிராமத்தின் செயற்கைக்கோள் படங்களை பெற்றுக் கொள்ள முடியும் என கூகிள் எர்த் (Google Earth) அறிவித்துள்ளது. ஹெலோ ட்ரஸ்ட் நிறுவனம் பிரதேசத்தில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றியுள்ளதுடன், மக்கள் மீள பிரதேசத்திற்கு திரும்புவதற்கும், 84 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையிலும் அங்கு 40 ஹெக்டேயர் விவசாயத்தை சரிபார்க்க உதவவும் இந்த மேம்படுத்தப்பட்ட படங்கள் பயன்படுத்தப்படும் என ஸ்கை பொக்ஸின் இணை ஸ்தாபகரும் கூகிள் அவுட்ரீச்சின் விரிவாக்கல் சட்டத்தரணியுமான ஜூலியன் மான் தெரிவித்துள்ளார். உயிர்களை பாதுகாக்கவும் சூழலை பாதுகாக்கவும…
-
- 0 replies
- 395 views
-
-
நாடாளுமன்றத்துக்கு வந்த கரட்! – சூடான விவாதம். [Tuesday 2014-10-28 09:00] 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று அவைக்கு வருகை தந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜனமானவே இவ்வாறு கரட்டுடன் அவைக்கு வருகை தந்தார். அவர், வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் இரண்டு கரட்டுகளையும் காண்பித்து உரையாற்றினார். அவைக்குள் கரட் கொண்டு வந்தமை தொடர்பில் எம்.பி.யிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கிராசனத்தில் இருந்த ஜனக பண்டார எம்.பி, படைகல சேவிதர்களுக்கு பணித்தார். இடைமறித்த நலின் பண்டார, 'நானோ இரண்…
-
- 0 replies
- 317 views
-
-
விடுதலைப் புலிளுக்கு எதிரான தடை குறித்த வழக்கு விசாரணை இன்று இந்திய நீதிமன்றில்... 27 அக்டோபர் 2014 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் இந்திய நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. நீதவான் ஜீ.பீ. மித்தால் தலைமையிலான நீதவான் குழு தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் நீதிமன்றில் இந்த வழக்கினை விசாரணை செய்ய உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26, 27ம் திகதிகளில் சென்னையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, புலிகளின் சார்பில் ஆஜராகவுள்ளார். காங்கிரஸ் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான…
-
- 2 replies
- 542 views
-
-
கட்டுநாயக்காவில் விமானமொன்று விபத்து திங்கட்கிழமை, 27 ஒக்டோபர் 2014 17:53 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புறத்திலுள்ள இடதுபக்க டயர் வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று இன்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்றது. இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் சிறியரக விமானம் ஒன்று எனவும் இதில் மூவர் மாத்திரமே பயணிகளாக இருந்துள்ளனர் என்றும் இந்த விபத்தால் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டயர் விபத்துக்குள்ளானதை அடுத்து, புதிய டயரொன்று பொருத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/13105…
-
- 1 reply
- 692 views
-
-
LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் – கமலேஸ் சர்மா:- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகள் மூலம் சிறந்த நன்மைகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கமலேஸ் சர்மா ஜனாதிபதியை சந்தித்த போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார…
-
- 0 replies
- 754 views
-