ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
The UN's human rights chief and rights advocates reiterated on Thursday the need for an independent probe into the conduct of the war in Sri Lanka after Human Rights Council, the UN's top rights assembly rejected calls for an inquiry. UN rights chief reiterates the need for SL probe
-
- 0 replies
- 928 views
-
-
வவுனியா, பாரதிபுரத்தில் வசித்துவரும் மலையக மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21116
-
- 1 reply
- 440 views
-
-
ஐ.நா.அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 299 views
-
-
உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு தர முயற்சிக்கிறதா? – சிவாஜி கேள்வி உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களுக்கே தற்போது அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறான நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்க…
-
- 0 replies
- 444 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 7, ஜூன் 2009 (21:26 IST) தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால்----: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும், முகாமில் உள்ளவர்களையும் கண்டு அவர்களின் நிலையறிய ஊடகங்கள் முயர்ச்சித்தன. ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதி மறுத்து வந்தது. அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்கள் என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் அதிபர் மகிந்த ராஜபக்சே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் நடந்த இச்சந்திப்பில், ’’தமிழர் பகுதிக்கு சென்று அவர்களின் நிலையை அறிய அனுமதி அளிக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது! கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின், வருடாந்திர பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாட்டிலுள்ள அனைத்து ஆல…
-
- 22 replies
- 1.6k views
-
-
இலங்கைப் பிரச்சினைகளுக்கு இலங்கையரே தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23862
-
- 6 replies
- 950 views
-
-
செவ்வாய்க்கிழமை, 7, ஜூலை 2009 (19:2 IST) தமிழக மீனவர்களின் வலை, மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டகாசம் தமிழக மீனவர்களின் மீன்பிடி வலை, இறால்மீன்கள், நங்கூரங்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நான்காம் தேதி ஐந்து விசைபடகுகளில் மீன்படிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று அனுராதபுரம் சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் மண்டபம் வடக்கு பகுதியிலிருந்து கடந்த ஆறாம் தேதி ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. கோயில்வாடி பகுதியை சேர்ந்த ஜான்போஸ் விசைப்படகு உட்பட நான்கு படகுகளை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து, மீனவர்கள் பிடித்த இறால், நண்டு, கணவாய்மீன்க…
-
- 1 reply
- 451 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எட்டி உதைத்தாலும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மகிந்த தரப்பின் காலை நக்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதற்கு மகியங்கணை பள்ளி வாசல் சம்பவம் உதாரணமாகும். மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் புனித ரமழான் மாதத்தில் பன்றியின் உடற்பாகங்களை சிறிலங்கா அரச தரப்பினர் வீசியுள்ளனர். ஆனாலும் மகிந்த ராசபக்சவின் காலையே றிசாத் பதியுதீன் ரவுப் ஹக்கீம், அதாவுல்லா போன்றவர்கள் நக்கிக்கொண்டிருக்கின்றனர். இதேவேளை மகியங்கணை சம்பவத்தை கண்டித்து தாங்கள் தந்தை செல்வாவின் வழியில் சாத்வீக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் நேற்று மாலை முஸ்லிம் காங்கிரஸின் தலைமையமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள…
-
- 2 replies
- 587 views
-
-
அக்கால மன்னன் சிறி சங்கபோதியை அழிப்பதற்கு கோத்தா செயற்பட்டதைப் போன்று இன்று மஹிந்த அரசை அழிக்க ஒரு கோத்தா செயற்படுகின்றாரா என்று எண்ணத் தோன்றுகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிவேரிய சம்பவத்தின் பின்னணியில் பாதுகாப்புச் செயலர் உள்ளார். ஏனெனில் இச்சம்பவத்தில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே. எனவே இதற்கு பொறுப்புக் கூறாது பாதுகாப்புச் செயலர் உள்ளமையானது அக்காலத்தில் சங்கபோதி மன்னனை அழிக்க கோத்தா செயற்பட்டதைப் போன்று தற்காலத்திலும் ஒரு கோத்தா …
-
- 1 reply
- 571 views
-
-
புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் vanee 17 hours ago தமிழீழம் 12 Views தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்க…
-
- 0 replies
- 311 views
-
-
'நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்': மனந்திறந்தார் ரணில்..! (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாராளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றா…
-
- 1 reply
- 558 views
-
-
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாக்குகளைச் சேகரிக்கும் நோக்குடன் தீவிரவாதம் தொடர்பான விடயங்களில் மென்போக்கு கடைப்பிடிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவடட்மாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 454 views
-
-
நீதிமன்றத் தடையுத்தரவையும் மீறி கொழும்பில் இன்று எதிர்க்கட்சிகள் ஆா்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தினா். வெலிவோயாவில் மக்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனா். கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர முற்பட்டனா். ஆனால் பொலிஸார் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. எனினும் ஜனாதிபதி செயலகத்துக்கு செல்வதற்கு இருவருக்கு பொலிஸார் அனுமதி வழங்கினா். ஐக்கியதேசிய கட்சியின் பொதுச் செயலாளா்…
-
- 1 reply
- 318 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26 th April 2017, 1PM
-
- 0 replies
- 296 views
-
-
செந்திலின் தலையீட்டால் இரத்தினபுரி த.ம.விக்கு புதிய காணி இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர். …
-
- 0 replies
- 925 views
-
-
இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். ஹிமால் இணையத்தளத்திற்கு அளித்த பிரத்தியேகமான பேட்டியொன்றில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது. சுமார் 2 இலட்சத்து 87 ஆயிரம் பேர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இப்போது 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எமது அடுத்த இலக்கானது விடுதலைப் புலிப் போ…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்... முக்கியஸ்தர் ஒருவருக்கு, பொலிஸாரினால் அழைப்பாணை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இத்தகைய மக்களுக்கு, தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் மஸ்கெலியாவில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப.தவபா…
-
- 2 replies
- 460 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது நாயன்மார்கட்டிலுள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்ற ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அதனைத் தடுக்க முயன்ற காவல்துறையைச் சேர்ந்தமவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலர் படுகாயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 465 views
-
-
எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்ப, காத்தான்குடியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான 36000 சிகரெட்டுக்களை காத்தான்குடி பொலிஸார் இன்று கைப்பற்றியதுடன் அவற்றினை வைத்திருந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் உத்தரவின் பேரில் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.எதிரிசூரிய தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ்.திலகரட்ன, எம்.லக்மல், எஸ்.கே.பி.டி.எம்.தெண்ணக்கோன், டி.எம்.என்.மதுசங்கர் ஆகியோர் இந்த ச…
-
- 0 replies
- 195 views
-
-
“பலவிடயங்களை சகித்துக்கொண்டே கூட்டமைப்பில் இருக்கின்றோம்” - விக்கி தரப்புடனான கலந்துரையாடலின் போது ரெலோ (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக்கட்சியினுள் ஒன்றாக இருக்கும் ரெலோ பல விடயங்களை சகித்துக்கொண்டு தான் அதனுள் இருக்கின்றது என்று விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் ரெலோவின் முயற்சியின் மற்றொரு கட்டமாக விக்னேஸ்வரன் தரப்பினை அவருடைய யாழ்.இல்லத்தில் ரெலோ சந்தித்திருந்தது. இதன்போது, விக்னேஸ்வரன் தரப்பில் விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் கடந்தகாலச் செயற்பாடுகளை சுட்டிக்காட்டினார்கள். குறிப்பாக, …
-
- 1 reply
- 408 views
-
-
"அவுஸ்திரேலிய தமிழர் பேரவை" எனும் புதிய கட்டமைப்பு, இன்று (சனிக்கிழமை) அவுஸ்திரேலியாவில் உதயமானது.காலத்தின் தேவை கருதியும்,தமிழர்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டும் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் கட்டுமானமாக உருவெடுக்கிறது இந்தப் பேரவை. சுமார் ஐநூறு மக்கள் வருகை தந்திருந்த இன்றைய நிகழ்வில், 400 உறுப்பினர்களோடு அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் விக்ரோறியாக் கிளையும் தொடங்கப்பட்டுள்ளது. சகல அமைப்புகளினதும் பூரண ஒத்துழைப்போடும்,அவர்களின் தனித்துவமான ஆலோசனைகளோடும் "ஒரே குடையின் கீழ் அணிதிரள்வோம்" என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இன்றைய தினம் உருவாக்கம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் விடிவிற்காகவு…
-
- 0 replies
- 584 views
-
-
காணாமற்போனோர் விவகாரத்தில் தனது அதிகூடிய கவனத்தைச் செலுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, காணாமற்போனோரின் உறவினர்கள் 300 பேருடன் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வடக்கு - கிழக்குக்கான பயணங்களின் போது காணாமற்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனவீர்ப்புப் போராட்டங்கள், கையளிக்கப்பட்ட மனுக்கள் ஆகியவற்றை அடுத்து நாளை கொழும்பில் இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான தனது பயணத்தின் போது 3 நாட்களை நவநீதம்பிள்ளை வடக்கு - கிழக்கில் செலவிட்டிருந்தார். இதன்போது காணாமற் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி நவநீதம்பிள்ளை செல்லும் இடமெல்லாம் பின்த…
-
- 0 replies
- 324 views
-
-
வவுனியாச் செய்தியாளர் கோபி 23/08/2009, 16:01 வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாமில் 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை வைத்திருந்தும் செல்ல முடியா நிலை சிறீலங்காப் படையினரின் யுத்த முன்னெடுப்புகள் காரணமாக வவுனியா ஏதிலிகள் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கபட்டுள்ள 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் பல்கலைக்கழகம் செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. எதிர்வரும் மாதங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி ஆண்டு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கையெழுத்துடன் அனுமதியை வைத்திருக்கின்றபோதும் படையினர் பல்கலைக்கழகத்தில் செல்லவிடாது தடுத்துள்ளனர். இந்த மாணவர்களின் எ…
-
- 3 replies
- 425 views
-
-
நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் சிங்கள அரசு முதலில் தேசியக் கொடியிலுள்ள வாளேந்திய சிங்கத்தை தூக்கி எறிந்து விட்டுச் சிறுத்தைப் புலியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சூழலியலாளரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான பொ.ஐங்கர நேசன் தெரிவித்தார். புத்தூரில் நேற்று மாலை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எங்கள் ஆயுதங்களைப் பறித்து தோற்கடித்த அரசு இப்போது வாக்கு ஆயுதத்தையும் அபிவிருத்தியைக் காட்டி எம்மைத் தோற்கடிக்கப் பார்க்கின்றது. இன்று இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிப் புனரமைப்பு, கட்டடங்களும் அபிவிருத்தியா? இங்கு அபிவிருத்தி நடந்திருக்கு மானால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும். அ…
-
- 4 replies
- 453 views
-