ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
பொன்னாலை - பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு By Vishnu 01 Sep, 2022 | 09:46 AM யாழ்ப்பாணம், கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து விடப்பட்டது. ஆனாலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலையே மக்கள் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து …
-
- 0 replies
- 366 views
-
-
அம்மாவும் அம்மாவின் குடும்பமும் நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அளப்பரியயவை. காலநேரமின்றி களமாடிய பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்துக் காவலிருந்து தனது கடமைகளைச் செய்த அம்மாவின் பிள்ளைகள் களங்களுக்குப் போனபோது அவர்களுக்காயும் அம்மா சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். போராளிகளுடன் வாழ்ந்த அம்மாவின் பிள்ளைகளின் துணைகளும் போராளிகளாக குடும்பமே கொள்கைக்காக தங்கள் சக்திக்கு மேற்பட்டு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். 2005 அம்மாவின் மகள் ஆயுதக்குழுவொன்றினால் கிழக்குமாகாணத்தில் கடத்தப்பட்டாள். அந்த மகளின் துணைவனைக் கொண்டுவரும்படி அம்மா வயர்களால் தாக்கப்பட்டாள். வலிமை மிக்க அம்மாவின் உறுதி மருமகனைக் காப்பாற்றியது. வன்னியில் களமுனையில் நின்ற மருமகனை யாரும் கொள்ளையிடாமல் …
-
- 11 replies
- 2k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிடுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், விசாரணையை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்? இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒரு வேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே சிறிலங்கா அரசாங்கம் இதனைப் புறக்கணிக்கும். குறைந்த…
-
- 1 reply
- 480 views
-
-
தென்னிலங்கையின் மாறாத விசுவாசம்! இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய! இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திரும்புமுனைகளுடன் இன்றைய மணித்துளிகள் நகர்ந்து செல்கின்றன. 2015ல் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கடந்து மூன்று வருடங்களாக ராஜபக்ஷர்களினால் வகுக்குப்பட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு இன்று மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. பறிபோன அதிகாரங்களை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்ட ராஜபக்ஷகள் அதற்கான ஆணையை முழுமையாக பெற்றுள்ளதாகவே இன்றைய தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ராஜபக்ஷ மீண்டும் இலங்கையை முழுமையாக ஆட்சி செய்வதற்கு தென்னிலங்கை மக்கள் விரும்பம் கொண்டுள்ளதாக தமது ஜனநாயக …
-
- 23 replies
- 2k views
-
-
இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலிற்கான தடைகளை உருவாக்கியுள்ளனர் - அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் By RAJEEBAN 07 SEP, 2022 | 01:07 PM சர்வதேச சட்டங்களை பாரிய அளவில் மீறியவர்கள் துஸ்பிரயோகம் செய்தவர்களை அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பாரியளவில் மீறியவர்களை இலக்குவைத்து உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாக கொண்;ட மூலோபாயத்தை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நம்பகதன்மை வாய்ந்த உண்மையை கண்டறியும் பொறிமுறை தற்காலிக சிறப்பு நீதிமன்றம் ப…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
பத்திரிகையாளருக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை [11 - July - 2006] [Font Size - A - A - A] பத்திரிகையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் ஈராக் முதலிடம் வகிக்கிறது. அங்கு அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் ஆரம்பமான காலம் முதல் இன்று வரை 125 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்றே இலங்கையில் கடந்த 16 மாத காலத்தில் 4 பத்திரிகையாளர்களும் ஊடகத்துறையில் பணி புரியும் 2 உத்தியோகத்தர்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெ…
-
- 0 replies
- 922 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள் என்றால் என்ன? இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புமுறை தேர்தல்முறைமையில் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடந்துமுடிந்திருக்கிறது. இங்கு புதுப்புது விடயங்கள் தகவல்கள் பொறிமுறைகள் மக்களுக்கு தெரியவந்தன. சுனாமி என்றசொல்லே சுனாமி இலங்கையைத்தாக்கியபிறகே இலங்கை மக்களுக்குத் தெரியவந்தது. அதுபோல தொங்கு உறுப்பினர்கள் முறைமையும் தற்போது தேர்தல் முடிந்த பிற்பாடே தெரியவந்தது. வர்த்தமானியில் ஒன்றைக்கூறிவிட்டு எப்படி உறுப்பினர்களைக்கூட்டுவதென்று பலரும் கேள்வியெழுப்பினர். அதற்குக் காரணம் போதிய விள…
-
- 0 replies
- 226 views
-
-
விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வன்மையான கண்டனம். தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.p…
-
- 0 replies
- 887 views
-
-
நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு சி.சந்திரமௌலிசன் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும் நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. “கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில…
-
- 7 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பெரும்பாலும் எந்த ஆசிய நாடும் இடமளிக்காது என்று கூறியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இது சந்தர்ப்ப வசத்தாலோ அல்லது விபத்தாகவோ வந்த விடயம் அல்ல என்றும், இந்த நாடுகளை அத்தகைய தீர்மானத்துக்கு வருவதற்கான இணக்க நிலைக்கு இலங்கை அரசே வரவழைத்தது என்றும் கூறினார். கடந்த வார இறுதியில் குருநாகலில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். மேற்குலகின் அரசியல் நலன்களுக்காக இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அநீதியானது என்பதில் பூமிப் பந்தின் பெரும்பாலான நாடுகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளன என்றார் அவர். எங்கள் நா…
-
- 3 replies
- 467 views
-
-
திண்டாட்டத்தில் கொழும்பு அரசியல்! 500 மில்லியனுக்கு சொகுசு வீடு வாங்கும் அமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் 500 மில்லியன் பெறுமதியான சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த நபர் சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ப்ளு சிப் நிறுவனத்தினால் சொகுசு வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரினால் தற்போது வரையிலும் அந்த வீடு கொள்வனவு செய்வதற்காக கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நிறுவனத்தினால் அது வரவேற்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சர் கடந்த 3 வருடங்களில் பாரிய முன்னேற்றம் கண்ட ஒருவராகும் என குறித்த ஊடகம் குறிப்பி…
-
- 0 replies
- 315 views
-
-
மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நீர்த்தாங்கி By VISHNU 20 SEP, 2022 | 09:44 PM பாறுக் ஷிஹான் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இவ்வாறு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கு தேவையா…
-
- 3 replies
- 462 views
- 1 follower
-
-
மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…
-
- 5 replies
- 1.6k views
-
-
-நவரத்தினம் கபில்நாத் சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் இறுதி யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தமது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இப்பொழுது இந்தக் குழந்தைகளின் குடும்பத்தினர் வறு…
-
- 0 replies
- 240 views
-
-
ஜெனிவா சமர் இன்று ஆரம்பம் : கடும் அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ள அல் ஹுசைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசென் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மனித உரிமை பேரவையின் தலைவர் தலைமையில் நடைபெறும் இந்த 37 ஆவது கூட்டத் தொடரில் நிலையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. இதேவேளை 37 ஆவத…
-
- 0 replies
- 183 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்கும…
-
- 0 replies
- 199 views
-
-
மத்தள விமான நிலையத்தின் வருமானம் தயிர் விற்பனை செய்யும் பெண் ஒருவரின் வார வருமானம் ஆக 7, 2014 சொகுசுகார் கலாசாரமும் ஜனாதிபதியின் சொந்த ஊர் பொருளாதாரமும் பொது மக்களின் தனிநபர் வருமானத்தை அபிவிருத்தி அடைய செய்யவில்லை மாறாக நாட்டின் ஒரு சதவீததின் கையில் கோடிகோடியாக சென்றடைகின்றது. அரசின் கொள்கை நாட்டின் சகலருடைய வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் ஒருசிலர் லம்போகினி வாகனமும், நான்கு லட்சம் டொலர் செலவழித்து அணியும் கைகடிகாரங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் ஒரு சிலரின் கோடிக்கணக்கான வருமானம் இல்லை. மாறாக அது நாட்டின் அனைவரின் வருமானத்திலும் தங்கியுள்ளது. மக்கள் விமானங்களே இறங்காத விமான நிலையங்களை கேட்கவில்லை, 39 ஆயிரம் மில்லியன் ர…
-
- 2 replies
- 644 views
-
-
யாழ்- கோட்டையை வழங்கினால் மக்களின் காணிகளை விடுவிக்க முடியும்! யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாம்களை அங்கு நகா்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என இராணுவத்தினா் தெரிவித்ததாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபா் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தாா். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வடமாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இராணுவம், பொலிஸாா் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடா்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே யாழ்ப்பாண மாவட்ட செ…
-
- 1 reply
- 436 views
-
-
பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன? நேற்றைய தினம் (05) பிரதமருக்கு இடையிலான சந்திப்பில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதே இருபத்தி இரண்டாவது திருத்தத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நாட்டின் வக்குரோத்து நிலைக்கு அடிப்படையான தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் தனி நபர் வாத முறையை ஒழித்தல் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குறித்த சந்திப்பில் இது தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது போனதாகவும் தெரிவித்தார்.…
-
- 0 replies
- 169 views
-
-
சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவனின் பரிதாப நிலை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு காணமடைந்த சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவனிடம் அந்த காயங்களை அவர் சுயமாகவே ஏற்படுத்திக் கொண்டதாக மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினர் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவன் தாக்கப்பட்டதாலேயே காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் மிரட்டி வாக்குமூலம் பெறும் முயற்சி இடமபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNE…
-
- 0 replies
- 249 views
-
-
புலிகளுடன் பேச்சுக்களை நடத்த 3 நிபந்தனைகள் அரசாங்கத்தால் முன்வைப்பு. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : 12 டிசம்பர் 2010 ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் .. கருணா உண்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார் : மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கவுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள அமர்வுகளில் கருணா சாட்சியமளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதக் குழு உறுப்பினராகவும், அரசியல்வாதியாகவும் கருணா கடந்த மூன்று தசாப்த யுத்தத்தில் மாறுபட்ட பங்களிப்புக்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983ம் ஆண்டு முதல் 2004 ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் கருணா தமிழீழ விடுதலைப் புலிக…
-
- 1 reply
- 644 views
-
-
இறந்தவர்களின் பெயரில் உறுதி முடிப்பு; ஒருவர் விளக்கமறியலில் – நொத்தாரிசு உள்ளிட்டவர்களை மன்றில் முற்படுத்த உத்தரவு October 20, 2022 யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தி…
-
- 2 replies
- 277 views
-
-
விழித்துக் கொள்வோமா? தமிழர்கள் தமது தனித்துவத்தைக் காப்பாற்றத் தவறி வரு கிறார்களா என்கிற விவாதத்தை எழுப்பியிருக்கிறார் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பேராசிரியரான ஆசி.கந்தராஜா. எழுத்தாளருமான அவர் யாழ்ப்பாணம் முகாமையாளர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரை யாடலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். பூகோளாமயமாக்கல் சூழலில் அதிக விளைச்சலையும் அதிக லாபத்தையும் நோக்கி நாம் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எமக்குச் சொந்தமான, பாரம்பரியமான, எமது அடையாளங்களான பலவற்றையும் பேணிக் காக்கத் தவறியிருக்கின்றோம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். யாழ்ப்பா…
-
- 0 replies
- 260 views
-
-
டயானா கமகேவின் கடவுச்சீட்டு விவகாரம் : அறிக்கை வேண்டுமென நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 10:26 AM (எம்.எப்.எம்.பஸீர்) பிரித்தானிய பிரஜையாக இருந்துகொண்டு, போலியான தகவல்களை சமர்ப்பித்து, இரு கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தி பாரளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அவ்விசாரணையின் முன்னேற்றம் குறித்த பூரண அறிக்கையினை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 27) உத்தரவிட்டது. சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரிக்கு, க…
-
- 2 replies
- 237 views
- 1 follower
-