ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143502 topics in this forum
-
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள படை அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடும் கோபத்திற்குள்ளான சிறீலங்கா அரசு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுடனான உறவுகள் குறித்து அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 57 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பின்னர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராகவும் பணியாற்றியவர். அண்மையில் அமெரிக்காவில் மேலதிக பயிற்சிக் கருத்தரங்கிற்கு இவரது பெயர் இராணுவத் தளபதியினால் முன்மொழியப்பட்ட போது அமெரிக்கா அதனை நிராகரித்திருந்தது.இந்தநில…
-
- 0 replies
- 356 views
-
-
அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றய தினம் செவ்வாயக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன், வாசிங்டனில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், பிரதிகள் சபை உறுப்பினர்கள், மற்றும் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அச்சந்திப்பின்போது தமிழ்த் தேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விளக்குவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96090&ca…
-
- 4 replies
- 532 views
-
-
வரலாற்றில் முதல் முறையாகவே பிரித்தானிய பட்டத்தை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க போவதாக கூறும் அளவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முட்டாள்களாக இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளவரசர் சார்ள்ஸ் மீரிகமவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிஸ மாணவர் சங்கம் நேற்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜர் ஒன்றை கையளித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் எதனையும் அறியாத மாடுகளாக உள்ளனர். இவர்கள் முட்டாள்கள் அல்ல மாடுகள் அதுவும் எருமை மாடுகள். காரணம் இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழ…
-
- 2 replies
- 497 views
-
-
அமெரிக்கத் தூதுவர் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்துள்ளார்:- 30 அக்டோபர் 2013 சந்திப்பு குறிப்பு குறித்து முதலமைச்சர் மற்றும் அமெரிக்க தூதுவர்ர் ஆகியோர் அளித்த விளக்கம் ஒலிவடிவில் இணைப்பு:- அமெரிககத் தூதுவர் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கைகுலுக்கும் முதலமைச்சர் மற்றும் அமெரிக்க தூதுவர்களுக்கிடையில் கொழும்பு ரட்மலானை இந்துக் கலலூரியின் முன்னாள் அதிபர் மன்மதராஜனும் காணப்படுகிறார். ஆமெரிக்கத் தூதுவர் சிசன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். வடக்கில் வாழ்வாதாரம் மற்றும் கல்வி அபி…
-
- 7 replies
- 634 views
-
-
"சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார். வலிகாமம் வடக்குச் சம்பவம் இராணுவத்தின் அராஜகத்தை மீண்டுமொரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வலி. வடக்கு கட்டுவன் பகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் சிறப்புரிமையை மீறும் வகையில் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்து அவருடன் முரண்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வலி. வடக்குத் தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதைப் பார்வைய…
-
- 1 reply
- 358 views
-
-
-கெலும் பண்டார 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமென அபிப்பிராய வாக்கெடுப்புகள் காட்டும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தும் செயல்முறையை தொடங்கியுள்ளது என அக்கட்சியின் உத்தியோகத்தர்கள் கூறினர். பிரதானமாக தான் மருத்துவ காரணங்களினால் கடந்தவாரம் தமிழ் நாட்டுக்கு சென்ற போதிலும்இ பா.ஜ.கட்சியின் தமிழ் நாட்டு தலைவர்களுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். பா.ஜ.க வின் தமிழ் நாட்டு கிளையின் தலைவர் என்.ராதாகிருஷ்ணா மற்றும் முன்னாள்; தலைவர் எல்.கணேசன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் என பலரை இரா.சம்பந்…
-
- 1 reply
- 506 views
-
-
மாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் வடக்கில் முன்னர் குடியிருந்த சிங்கள மக்களை அங்கு குடியேற்ற வேண்டும். அவர்களை குடியேற்றுவதன் மூலம் இனப் பரம்பலில் மாற்றங்கள் ஏற்படாது. வீடுகள், காணிகள் கொள்ளையிடப்பட்டு ஏற்கனவே அப்படியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புலி…
-
- 14 replies
- 1k views
-
-
(suntharam karan) வடக்குமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களாலான உதவிகளை வழங்க தமது நாடு தயாராகயிருப்பதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அத்தோடு தென்கொரியாவிற்கு மேற்படிப்புக்காக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவரும் வருகை தருவதில்லை இது எமக்கு மிகுந்த மனவேதனையளிக்கின்றது எனவும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கோவில் வீதியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்றைய தினம் காலை சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் …
-
- 2 replies
- 364 views
-
-
கம்பளை நகரில் கஞ்சா போதைப்பொருள் கலந்த மோதகங்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை நகரில் உள்ள ஆயுர்வேத மருத்துவ விற்பனை நிலையங்களில் பொலிஸார் மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையின் போதே கஞ்சா போதைப்பொருள் கலந்த மோதக உருண்டைகளை விற்பனை செய்வதை அறிந்துள்ளனர். இதனையடுத்து குறித்த விற்பனை நிலையங்களிலிருந்து கஞ்சா போதைப்பொருள் கலந்த 225 மோதக உருண்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். http://www.virakesari.com/?q=node/358831
-
- 4 replies
- 617 views
-
-
சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர்கள் கொழும்பில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்:- 30 அக்டோபர் 2013 (ஹேட்டேலுக்கு சென்ற குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டவரையும் விசாரணை செய்கின்றனர்) சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர் ஜக்கி பார்க், பிரதிப் பணிப்பாளரும் திட்ட இணைப்பாளருமான ஜான் வுறோத்திங்ரன் ஆகியோர் கொழும்பில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். ஊடக அமைப்புகளுக்கான வேலைத் திட்டம் ஒன்று தொடர்பாக கொழும்பு ஜானகி ஹேட்டேலில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் ஹேட்டேலுக்கு சென்ற குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டவரையும் விசார…
-
- 2 replies
- 585 views
-
-
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே பாலியல் ஊக்க மருந்து பாவணை அதிகரித்துள்ளதாக வாசனை திரவியங்கள் மற்றும் ஒடதங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பாலியல் ஊக்க மருந்து பழக்கம் பிற்காலங்களில் பக்கவிளைவுகளையும், பாலியல் ரீதியான பாதிப்புக்களையும் ஏற்படும் என அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இளைய சமூதாயம் மன ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். ''Sildenafil'' என்ற ஊக்க மருந்தின் பாவணையே தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஊக்க மருந்து பல்வேறு பெயர்களில் இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாது தனியார் மருந்தகங்களில் இந்த ஊக்க மருந்துகள் அநேகமாக இவை விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் மருந்தகங்களில் இந்த விற்…
-
- 3 replies
- 955 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசமுடியாது! - சிறிலங்கா அரசாங்கம் கட்டுப்பாடு!! கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு இடமளிப்பதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இம்மாநாட்டில் பங்கேறகவுள்ள சில அரசியல் தலைவர்கள் இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்லும் போது, மனிதவுரிமைகளுக்கு மதிப்பு அளிக்காத சிறிலங்கா அரசாங்க…
-
- 3 replies
- 547 views
-
-
சிறீலங்கா அரசுடன் முரண்படுவதைத் தவிர்த்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வாதிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பிலும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பிலும் தீவிரமாக ஆராயப்பட்டது. கூட்டத்தின் பின்னர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். இருப்பினும் அன்றைய ஒன்றுகூடலில் கலந்துரை…
-
- 0 replies
- 452 views
-
-
சென்னையில் அமைந்துள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலய அலுவலகம், மஹாபோதி சங்கம், இலங்கை வங்கி ஆகியவற்றின் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு இந்தியத் தபால் நிலையங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்குதலுக்கு உள்ளானமையைத் தொடர்ந்து மேற்படி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இலங்கையுடன் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங்குபற்றுவதை எதிர்க்கின்ற தமிழ் அமைப்பு ஒன்று இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-…
-
- 0 replies
- 223 views
-
-
மூதூரில் 4 தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2013 - 14:02 ஜிஎம்டி http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/932bef73_nageswaran_131029_trincoattack_au_bb.mp3 இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமது வயல்களுக்கு சென்ற 4 தமிழ் விவசாயிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 4 விவசாயிகளான, ஏ. தேவமனோகரன், மாணிக்கம் கோணலிங்கம், சிதம்பரப்பிள்ளை துளசிநாதன், வைரமுத்து கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூதூர் பொலிஸாரால் சிகிச்சைக்காக மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரான நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். திருக…
-
- 2 replies
- 501 views
-
-
இராணுவ அராஜகங்களுக்கு விரைவில் முடிவுகட்டுவோம்; அமெரிக்கா செல்ல முன் மாவை சூளுரை "சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார். வலிகாமம் வடக்குச் சம்பவம் இராணுவத்தின் அராஜகத்தை மீண்டுமொரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வலி. வடக்கு கட்டுவன் பகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் சிறப்புரிமையை மீறும் வகையில் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்து அவருடன் முரண்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலிய…
-
- 1 reply
- 583 views
-
-
முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வின்பின் நான்காண்டுகள் - புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைகிறார்களா? [ செவ்வாய்க்கிழமை, 29 ஒக்ரோபர் 2013, 09:12 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் தொடரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்க வேண்டும் எனக் கோருவதுடன் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தம் கொடுப்பதே தற்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் முக்கிய திட்டமாக காணப்படுகிறது. இவ்வாறு 'IPS - Inter Press Service' ஊடகத்திற்காக Samuel Oakford எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. முப்பதாண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவிலிருந்து புற…
-
- 1 reply
- 452 views
-
-
இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற உள்ள சூழலில், கடந்த ஆண்டு இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே மீது நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தி பதவி இறக்கம் செய்த வழிமுறை,( இம்பீச்மெண்ட்), இலங்கையின் அரசியல் சட்டத்துக்கு முரணானது, மற்றும் காமன்வெல்த் விழுமியங்களுக்கும் முரணானது என்று காமன்வெல்த் நாடுகள் அமைப்பால் சட்டக் கருத்து வழங்கிய பிரிட்டிஷ் வழக்கறிஞர், ஜியாப்ரி ஜோவெல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாக, இணைய தளமொன்றில் செய்தி கசிந்திருக்கிறது. இந்த அறிக்கையை காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள் காமன்வெல்த்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு தராமல் மறைத்துவிட்டார் என்று முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், காமன்வெல்த்தின் தகவல் தொட…
-
- 0 replies
- 476 views
-
-
வடக்கில் இருந்து படையினரை விலக்கவோ, முகாம்களை அகற்றவோ முடியாது! - மகிந்த அறிவிப்பு!! வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை விலக்கிக் கொள்ளவோ, படை முகாம்களை அகற்றிக் கொள்ளவோ முடியாது என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை வெளியேற்ற வேண்டும் என முன்வைக்கப்படும் யோசனை நடைமுறைச்சாத்தியமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: …
-
- 0 replies
- 415 views
-
-
தேர்தல்களில் இராணுவத்தினர் தலையீடு செய்தனர் – பொதுநலவாய நாடுகள் அமைப்பு:- 30 அக்டோபர் 2013 நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தினர்தலையீடு செய்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் படையினரின் தலையீடு வெகுவாகக் காணப்பட்டது எனவு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் தேர்தல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் இராணுவத்தின் தலையிடு பாரதூரமான நிலைமை எனவும் இது குறித்து விசாரணை செய்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்த நடவட…
-
- 0 replies
- 395 views
-
-
-கெலும் பண்டார இலங்கைக்கான கொரிய தூதுவர் ஜோன்-மூன் சோய் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். இவ்விஜயத்தின் போது யாழ். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை காலை 10.30 மணியளவில் சந்திக்கவுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தூதுவர் வடக்கின் நிலவரம் குறித்தும் குறிப்பாக வடபகுதி மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் கவனம் செலுத்துவார் எனவும் பேச்சாளர் கூறினார். நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் தொடர்பாகவும் அவர் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/87568-2013-10-29-13-42-25.html
-
- 2 replies
- 465 views
-
-
கொமன்வெல்த் தொடக்கவிழாவில் மன்மோகன்? - மகிந்தவுடன் பேசாமல் உடன் திரும்புவார் [ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 01:39 GMT ] [ கார்வண்ணன் ] கொமன்வெல்த் மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், தனி விமானத்தில் வந்து விட்டு உடனடியாகத் திரும்பிச் செல்லக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு இன்னமும் சுமார் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சிறிலங்காவின் அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங், இந்த மாநாட்டில் பங்கேற்பாரா இல்லையா என்று இன்னமும் அறிவிக்கவில்லை. சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும், ஏனைய அரசியல் கட்சிகளும் இந்திய…
-
- 6 replies
- 848 views
-
-
தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி. ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்…
-
- 24 replies
- 1.7k views
-
-
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டின் போது எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கூட்டு எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன. மாநாடு நடைபெறும் போது கூட்டு எதிர்க்கட்சிகள் இணைந்து தொடர்ச்சியான எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்தும் என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். எமது நாட்டின் உன்மை நிலையை மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகநாடுகளுக்கு சுட்டிக்காட்டுவததே இந்த எதிர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார். தமது அயல்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முக்கியமாக இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகள், இனவெறி தொடர்பில் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் மேலும் கூறினார். காணாமல் போனவர்களை நினைவுகூறும் முகமாக நவம்பர் 14 மெழுகுவர்…
-
- 0 replies
- 362 views
-
-
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா நிச்சியமாக பங்குபற்ற வேண்டுமென "எக்கொனமிக் ரைம்ஸ்" எனும் இந்திய நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. இந்த மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென மாநிலமட்ட அரசியல் கட்சிகளும் தமிழ் நாடு அரசாங்கமும் கேட்டுள்ளதை இந்த தலையங்கம் கண்டிக்கின்றது. அரசியல் நோக்கங்கொண்ட இந்த நடவடிக்கைகளை ஏற்க முடியாதெனவும் அது கூறியுள்ளது. தற்போது இலங்கை அரசாங்கம் வடக்கிலுள்ள மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு ஒரு சுதந்திரமானஇ நீதியானஇ அமைதியான மாகாணசபைத் தேர்தலை நடத்தியுள்ளதெனவும் இந்த ஆசிரியர் தலையங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களை இந்தியா கவனத்தில் கொள…
-
- 0 replies
- 577 views
-