ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கை இராணுவத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசுவரர் ஆலயத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கஇ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூஜை வழிபாடுகளின் போது பிடிக்கப்பட்ட படங்கள் (படங்கள்:ஷண்) http://tamil.dailymirror.lk/--main/85120-2013-10-08-15-24-33.html கொலைகாரர்களுக்கும் கொடுமைக்காரருக்குமான இடமாக மாறிவிட்டது கோவில்கள்
-
- 1 reply
- 592 views
-
-
இலங்கைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய விடுதலை தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டினை இலங்கையில் நடாத்த கூடாது என வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் இவர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கைக்கு இந்தியா யுத்தக்கப்பல்களை வழங்கக்கூடாது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கக்கூடாது மற்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளையும் இவர் முன்வைத்திருந்தார். இவரது உண்ணாவிரத…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ்.நகரிலுள்ள முன்னணி பிடவையகம் இன்று தீக்கிரையாகியுள்ளது. எனினும் தீவிபத்திற்கான காரணமேதும் தெரியவரவில்லை. எனினும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையினில் யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களது அனுசரணையினை கோரியிருந்தனர்.எனினும் போதிய தீயணைப்பு வாகனங்கள் இல்லாமையே தீயை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணமென கூறப்படுகின்றது.1978 ம் ஆண்டினில் தோற்றுவிக்கப்பட்ட தீயணைப்பு பொறிமுறைமையே தற்போது வரை பயன்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/27418/57//d,article_full.aspx
-
- 0 replies
- 466 views
-
-
நாம் ஏற்கனவே சில மாநகர விதிகள் பற்றி பார்த்திருந்தோம். அதிலும் முக்கியமாக விளம்பரச் சுவரொட்டிகள் பற்றியும் அதனால் சந்திக்க இருக்கும் சட்டச் சிக்கல்கள் பற்றியும் பார்த்தோம். இதில் அடுத்த முக்கியமான விடயங்களில் ஒன்றாக வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை நிறுவது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. முக்கியமாக பெருமளவான வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் எந்த விதமான அனுமதிகளோ முறையான விண்ணப்பங்களோ செய்யப்படாமல் நிறுவப்பட்டுள்ளன. இது தண்டனைக்குரிய குற்றமாகும். மாகநரசபையால் இதற்கான குற்றப்பணம் விதிக்கப்பட்டால் அது பெயர்ப்பலகை நிறுவப்பட்ட நாளிலிருந்து ஒரு நாளிற்கு 500 ஈரோக்கள் வரை அமையக்கூடியது. இது வர்த்தக நிலைத்தையே அடியோடு அழித்துவிடும் அளவிற்குப் பாரதுரம…
-
- 0 replies
- 650 views
-
-
06.10.2013 ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சுத் தேர்வு எழுதும் மையமான Maison des Examen மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுவிசு நாட்டில் இருந்து வினாத்தாளினை கொண்டுவந்த பரீட்சை மேலாளரிடம், அலுவலகரீதியில் பிரான்சு தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. nஐயக்குமார் அவர்கள் மற்றும் கலை ஆசிரியர்கள் பரீட்சை மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நடனம், வாய்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம் ஆகியவற்றிற்கான எழுத்துப்பரீட்சைகள் நடைபெற்றன. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. புலம் பெயர் மண்ணில் நடாத்தப்படுகின்ற தமிழ்கலையில் தாயகத்திற்கு ஒப்பானதாகவும், சற்று கடுமையானதாவும், அதே நேரத்தில் தகுதிவாய்ந்த தரம் …
-
- 0 replies
- 451 views
-
-
அரசியல் பழிவாங்கல் காரணமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் இன்று முதல் அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசாங்கத்தின் சிபார்சு பட்டியலில் பெயர் வழங்கப்பட்டவர்களிற்கே பல்கலைக்கழக நிர்வாகம் நிரந்தர நியமனம் வழங்கியுள்ளது. எனினும் நீண்ட கால சேவையுள்ள பணியாளர்கள் தி;ட்டமிட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படாது விரட்டப்படுவதாக கூறப்படுகின்றது. வடக்கு தேர்தலில் தமக்கு போதிய ஆதரவை வழங்கவில்லையென ஆளும் தரப்பு பல தரப்புக்கள் மீதும் அதிர்ப்திர்தியில் உள்ளது. அவ்வகையில் தமக்கு ஒத்துழைக்காதவர்கள் என்ற வகைப்படுத்தலில் பல தற்காலிக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் கைங்கரியத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அ…
-
- 0 replies
- 403 views
-
-
காமன்வெல்த் மாநாடு: பொருத்தமான இடத்தில், மிகப்பொருத்தமான நபரால்.... -ஆதவன் தீட்சண்யா இலங்கையில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாடு பற்றி கருத்துரைக்குமாறு ஊடக நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் என்னால் சொல்லப்பட்டவை: 1. அடிமைப்படுத்திய நாடுகளின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி கோடிக்கணக்கான மக்களை கொன்றொழித்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் அமைப்புக்கென்று ஏதோ மதிக்கத்தக்க மாண்புகள் இருப்பதாகவும் இலங்கையில் அதன் மாநாடு நடப்பதால் அந்த மாண்புகள் கெட்டழுகிப்போகுமென்றும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால், ராஜபக்சே போன்ற கொடுங்கோலர்களால் நடத்தப்படக்கூடிய அளவுக்கானதுதான் அதன் மாண்புகள். ஆகவே இப்போதாவது பொருத்தமான இடத்த…
-
- 1 reply
- 560 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைச்கலநாதன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ்.மாவட்டத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன். ஆனால், எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும…
-
- 10 replies
- 759 views
-
-
பலத்த இழுபறிகள் மத்தியில் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்த மாகாணசபைக்கான அமைச்சுக்கள் பதவி தொடர்பில் தற்போது முடிவு எட்டப்பட்டுள்லது. இந்தப் பேச்சுக்களின் முடிவில் அமைச்சுப் பதவிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா கல்வி அமைச்சராகவும், அந்தக் கட்சியின் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராகவும், ரெலோவைச் சேர்ந்த மன்னார் மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சராகவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த யாழ்.மாவட்ட மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் விவசாய அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்ச…
-
- 19 replies
- 1.4k views
- 1 follower
-
-
வட மாகாண முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 07 அக்டோபர் 2013 2ஆம் இணைப்பு வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில்இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் த…
-
- 38 replies
- 2.3k views
-
-
கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக…
-
- 31 replies
- 1.6k views
-
-
-
- 16 replies
- 765 views
-
-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் பின்னர் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார். இந்த விஜயங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகார் பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர். படங்கள்:சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், ரொமேஷ் மதுசங்க ' …
-
- 0 replies
- 422 views
-
-
காணொளி : வடக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் ,தமிழர்களின் வெற்றியா? ராஜபக்சேயின் சூழ்ச்சியா? காணொளியை பார்வையிட,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9512:2013-10-08-12-55-26&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 545 views
-
-
தேர்தல் வெற்றியுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடாது - இந்தியாவுக்கு விளக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [Tuesday, 2013-10-08 10:12:42] வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதுடன் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்று எண்ணிவிடக் கூடாது என இந்தியாவுக்கு எடுத்து விளக்கியுள்ளது கூட்டமைப்பு.இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போதே இதுகுறித்து விளக்கப்பட்டது. இரு நாள் பயணமாக நேற்று நண்பகல் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பலதரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்று இரவு 7 மணிக்கு விடுதியயான்றில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழ…
-
- 0 replies
- 357 views
-
-
தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் புதிய தளமாக இலங்கை உருவெடுத்து வருகிறது என்று தி சண்டே கார்டியன் ஏடு தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து கடல்வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி சண்டே கார்டியன் ஏடு, நேபாளத்தைப் போல இலங்கையை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் தமது புதிய தளமாக மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளது. அந்த ஏட்டின் கட்டுரையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப்பின் ஆதரவுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் புதிய தளமாக இலங்கை வேகமாக மாறிவருகிறது. இத்தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சியைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 422 views
-
-
காத்தான்குடி முஸ்லீம்களால் ஆரையம்பதி தமிழ் கிராம காணிகள் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆரையம்பதி பிரதேச மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் பொதுமயானம் என்பனவை திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட செயலகத்தின் வாயல்கதவினை மூடி பெருமளவான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்தான்குடி நகரசபையின் முதல்வர் அஸ்பர் தனது உறவினர்களின் பெயரில் அதிகளவான காணிகளை இப்பகுதியில் திட்டமிட்ட வகையில் அபகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்…
-
- 0 replies
- 408 views
-
-
வடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பதவிகளை புறக்கணிப்பதென கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகள் அனைத்தும் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழரசுக்கட்சி ஏற்கனவே முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தன்வசம் கையகப்படுத்தி வைத்துள்ளது. ஏனைய இரு அமைச்சுக்களையும் பங்காளிக்கட்சிகள் மூன்றும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை முன்வைக்கப்பட்டு வந்திருந்த போதும் அதனை அவை நிராகரித்திருந்ததுடன் கட்சிக்கு ஒன்று எனும் வகையினில் அமைச்சை பங்கிட கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை தமிழரசுக்கட்சி நிராகரித்துவிட்டது. இதனையடுத்தே அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்காதிருக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜ…
-
- 1 reply
- 495 views
-
-
எம் தாயகமண்ணின் விடுதலைக்காய் ஈகம் செய்த எம் தேசத்தின் மாவீரச் செல்வங்களுக்கு சுடரேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.இந்நாளில் மாவீரத் தெய்வங்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் துணைவன், துணைவி, பிள்ளைகள் தம் உறவுகளின் திருவுருவப்படத்திற்கு உரிய வீரவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வழமைபோல் பிரான்ஸ் மாவீரர் பணிமனை செய்துவருகிறது. இந்த வகையில் எதிர்வரும் 27.11.2013 நண்பகல் 12 மணிக்குVIPARIS LE BOURGET ( Hall 5 ) 96,avenue de le division le Clerc 93350 le Bourget ( 2011 தேசிய மாவீரர்நாள் நடைபெற்ற மண்டபம்) என்னும் இடத்தில் எம்மால் நடாத்தப்படும் எழுச்சி நாளுக்கு குறித்த நேரத்திற்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்வதுடன். நவம…
-
- 0 replies
- 387 views
-
-
பாரிய அரசியல் பொருளாதார சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் இந்த அரசாங்கம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் மேல்மாகாணசபை தேர்தலையும் நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலையும் அதையடுத்து பாராளுமன்ற தேர்தலையும் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே வருட ஆரம்பத்தில் மேல் மாகாணசபை தேர்தலுக்கும் வருட நடுப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கும் நாம் தயாராக வேண்டும். எனவே அடுத்த வருடம் நமக்கு தேர்தல் வருடமாகும். வடக்கிலும் மலையகத்திலும் நமது தமிழ் இனம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு சமானமான வெற்றிகளை மேல்மாகாணசபை தேர்தலில் கொழும்பு கம்பஹா களுத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாம் பெற வேண்டும். நமது கட்சியின் தனித்துவ பலத்தை உறுதிப்படுத்தி உருவாகப்போகும் புதிய ஆட்சியில் ஒரு பலமிக்க பங்காளி கட்சியாக …
-
- 0 replies
- 396 views
-
-
யாழ்.குடாநாட்டிலுள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த வேளையில் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது. பிரதேச செயலர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இதில் ஒரு வங்கியில் பணியாற்றும் சமுர்த்தி முகாமையாளர் அந்த வங்கியில் பணியாற…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கடலுக்கு அடியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக அந்நாட்டின் புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார். இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த மாற்றம் காரணமாக அதிகளவிலான நிலநடுக்கத்தை இலங்கை எதிர்நோக்கியிருக்கிறது என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இலங்கையின் கிழக்கே கடலுக்கு அடியில் மிதமான நிலநடுக்கம் உருவானது பதிவாகி இருக்கிறது. ரிக்டர் அளவ…
-
- 1 reply
- 394 views
-
-
முடிவுக்கு வந்தது சம்பூர் இழுபறி - குர்ஷித் முன்னிலையில் உடன்பாடுகள் கையெழுத்து [ செவ்வாய்க்கிழமை, 08 ஒக்ரோபர் 2013, 01:25 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் முன்னிலையில், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மும்மொழித் திட்டத்துக்கான உதவி மற்றும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகள் நேற்று கையெழுத்திடப்பட்டன. இதில், சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான எட்டுப் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்வில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கல…
-
- 2 replies
- 551 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விநாயகர் சிலை ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இன்று காலை அலரி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வு முடிந்ததும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மரத்தினாலான அழகிய விநாயகர் சிலை ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பரிசாக வழங்கினார். அதேவேளை, பதவியேற்பு நிகழ்வு முடிந்த பின்னர், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் பிரமுகர்களுக்கு சிறிலங்கா அதிபர் தேனீர் விருந்தளித்தார். இதன்போது, சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்து செயற்படத் தயாராக இருந்தால், வடக்கின் அபிவிருத்திப் பணிகளை இணைந்து மேற்கொள்ளத் தாம் தயார், என்று சிறிலங்கா அத…
-
- 7 replies
- 998 views
-
-
மஹிந்த முன் பதவியேற்றமைக்கு ஒபாமாவுக்கான தமிழர் கண்டனம் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தது, ஜனாதிபதி மஹிந்தவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேயன்றி, ஜனாதிபதியைக் காப்பாற்றுவதற்கு அல்ல என்றும், ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்வது தமிழ் மக்களின் முதுகில் குத்தும் செயல் என்றும் கண்டித்துள்ள ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, பதவியேற்ற ஒக்ரோபர் 7 ஆம் திகதியைத் துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தும், தாய்க்குலத்தை மானபங்கப்படுத்திய மஹிந்த முன்பாக விக்னேஸ்வரன் சத்தியப்பிர மாணம் செய்வது ஜனாதிபதியை போர்க் குற்றங்களிலிருந்து தப்ப…
-
- 1 reply
- 460 views
-