ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீசிய பலமான காற்று காரணமாக விமானநிலையத்தினுள் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் பல விளம்பரப் பதாதைகளும் உடைந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இதன் காரணமாக சில விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=5115
-
- 0 replies
- 533 views
-
-
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் 20 க்கும் அதிகமான படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அவற்றில் இருந்த 20 மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கின்றது. பலமான காற்றினால் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 396 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=5125
-
- 0 replies
- 436 views
-
-
மாகாண சபை அதிகாரங்களை மறுசீரமைக்கும் யோசனை அமைச்சரவையில் இந்த வாரம் சமர்ப்பிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) அவசரமாக கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15062
-
- 2 replies
- 514 views
-
-
சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் மிருக பலி பூசையைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னேஸ்வரம் ஆலய பிரதமகுருவிற்கும், உதவி குருவிற்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15065
-
- 1 reply
- 414 views
-
-
வட மாகாண தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=15100
-
- 0 replies
- 586 views
-
-
வட மாகாண சபைத் தேர்தலில் சாதாரண வேட்பாளராக போட்டியிட்டால், அந்த மாகாண சபையின் முதலமைச்சர் பதவியைத் தான் ஏற்கப்போவதில்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அந்நாள் ஊடகப் பேச்சாளராக பணியாற்றிய வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=14838
-
- 18 replies
- 1.6k views
-
-
மிகச் சிறந்த நட்பு நாடு இலங்கை - சீனா புகழாரம் மிகச் சிறந்த நட்பு நாடாக இலங்கை திகழ்கின்றது என சீனா புகழாரம் சூட்டியுள்ளது. பல ஆண்டுகளாக இலங்கை சீனாவின் நட்பு நாடாக திகழ்வதாக அந்நாட்டு துணைப் பிரதமர் மா காய் தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் வர்த்தகக் கண்காட்சியொன்றில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரட்னவிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி, சீன ஜனாதிபதியுடன் முக்கிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த இணக்கப்பாடுகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு சீனா வழங்கி வரும் சகல உதவிகள…
-
- 3 replies
- 584 views
-
-
தன்னை சீரழித்த இராணுவ சிப்பாயை அடையாளம் காட்டினார் சிறுமி! வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுங்கேணி சேனைப்பிலவில் பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பக் காத்திருந்த இந்தச் சிறுமி அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். பின்னர், பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள பற்றைக்குள்ளிருந்து இந்தச் சிறுமி மீட்கப்பட்டிருந்தாள். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் இராணுவ சிப்ப…
-
- 1 reply
- 807 views
-
-
மாகாணங்கள் இணைவதை ரத்து செய்ய இலங்கை யோசனை ? "அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது" --டக்ளஸ் - பி.பி.சி இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை…
-
- 5 replies
- 900 views
-
-
13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன்னோடியாக மாகாணசபைகள் திருத்த உத்தேச (விசேட ஏற்பாடுகள்) சட்டவரைவு கொண்டு வரப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்ததையடுத்து, அதனை அடுத்தவார அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அந்தத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்யும் முன்னோடியாகக் கொண்டுவரப்படும் அவசர சட்டவரைவு என்பவற்றை ஆராயவிருந்த காரணத்தால் இந்த அமைச்சரவைக் கூட்டத்த…
-
- 1 reply
- 802 views
-
-
அரசாங்கம் ஏன் அவசரப்படுகிறது - மைக்கல் பெரேரா கேள்வி யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அம்மக்கள் வாழ்ந்த இடங்களில் வாக்குரிமையை வழங்குவதை எதிர்க்கவில்லை. ஆனால் இவ்விடயத்தை விரிவாக ஆராயாது பேச்சுவார்த்தைகளை நடத்தாது அவசர அவசரமாக அரசாங்கம் ஏன் தேருநர்களை பதிவு செய்தல் விசேட சட்டமூலத்தை கொண்டு வருகின்றது என ஐ.தே.கட்சி எம்.பி.ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். தேருநர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதன் போது எதிர்க்கட்சி தரப்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா இக் கேள்வியை எழுப்பினார். அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுக…
-
- 0 replies
- 580 views
-
-
வடபகுதி தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு முயற்சி! வாக்காளர் பதிவு சட்டமூலத்தை அரசாங்கம் ஏன் அவசர அவசரமாக கொண்டுவருகின்றது. வடபகுதி தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கே தவிர வேறெதற்கும் அல்ல என ஐ.தே.கட்சி எம்.பி. ரி.எம்.சுவாமிநாதன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்காளர் பதிவு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே ரி.எம்.சுவாமிநாதன் எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலாத்காரமாக பறிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அரசு அவசர அவசரமாக வாக்காளர் பதிவுத் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அத்தோடு புதிதாக தேர்தல் முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்த சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக ஐநா சபைக்கும், இந்தியாவுக்கும் அல்லது எந்த ஒரு உலக நாட்டுக்கும் இலங்கை அரசு எந்த வித உறுதிமொழியும் கொடுக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுவது உண்மைக்கு மாறான வெட்கமற்ற பொய்யுரை ஆகும். யுத்தம் முடிந்த இரண்டு நாட்களில் இலங்கை வந்த ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன்பின்னர் 21/05/2009 என்று திகதியிடப்பட்டு கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட எழுத்து மூலமான அதிகாரப்பூர்வமான இலங்கை அரசு- ஐநா சபை கூட்டறிக்கையில், இலங்கை அரசாங்கம் 13ம் திருத்தத்தை அமுல் செய்வதுடன், தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதை மேலும் அபி…
-
- 0 replies
- 701 views
-
-
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து ‘4 சீசி ரிவி’ கமராக்களில் மட்டுமே பதிவாகியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் ‘32 சீசி ரிவி’ கமராக்கள் இருக்கின்ற போதும் அவற்றில் நான்கில் மட்டுமே தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இவற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தெரிவான முறையில் காட்சிகள் பதிவாக வில்லை என குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் சாட்சி கூறியுள்ளனர். தீ பரவிய நேரம் நள்ளிரவு 12.36 என தெரிவிக்கப்பட்ட போதும் மின்சார தொழிநுட்பவியலாளர்கள் அதிகாலை 1.0…
-
- 0 replies
- 538 views
-
-
அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தேர்தலை நடத்தியதாக சர்வதேசத்துக்கு ஜனாதிபதியினால் அறிவித்தல் விடுப்பதற்கான நாடகங்களாகவே 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான கோஷங்கள், எதிர்ப்புகள் அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்காளர்களை பதிவு செய்தல் விஷேட ஏற்பாடுகள் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=5097
-
- 0 replies
- 412 views
-
-
ஊடக நெறிமுறைகள் குறித்து இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக இருப்பதாகவே பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அரசின் இந்த முன்நகர்வு பல்வேறு மட்டங்களில் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கம் ரசனைக்கு எதிராகவும், நாட்டின் அற நியமங்களுக்கு எதிராகவும் செய்தி வெளியிடக் கூடாது என்கிறது இந்த சட்டத்தின் முதல் விதி. நாட்டின் வெளி உறவுகளை கெடுக்கும்படி செய்திகளை வெளியிடக் கூடாது, மத மாச்சர்யங்களை உருவாக்கக் கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விடயங்களையோ, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் விடயங்களையோ, நிர்வாக அமைப்பு, நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தின் மாண்பை குறைக்கும் செய்…
-
- 1 reply
- 360 views
-
-
"மீண்டும் பழைய வரலாற்றுக்குச் செல்லவே ஒவ்வொரு முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. அதனைவிடுத்து பல்லின மக்கள் கொண்ட தேசத்தை பரந்த மனப்பாங்குடன் ஆட்சி புரிய அரசு முன்வர வேண்டும்" என்று ஆயர் இராசப்பு ஜோசேப் மேலும் குறிப்பிட்டார். மாகாணங்களுக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் இல்லாதொழிக்கும் வகையிலான சட்டவரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழர்களை இங்கிருந்து விரட்டுகின்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்தகால வரலாறுகளுக்கு மீளச் செல்ல எத்தனிக்கின்றனர். இலங்கையில் பல மொழி ப…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த உதவியளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பத்தரமுல்லவில் அமைந்துள்ள நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம் செய்துள்ளார். அமெரிக்காவின் உதவியுடன் இந்த நவீன ஆய்வு கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இந்த உதவியின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார். இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் துறையின் மேம்பாட்டுக்கு தேவையான வசதிகளை இந்த ஆய்வு கூடம் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=84507&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 367 views
-
-
அண்மைக்காலமாக பல முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்ததோடு, தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல கடந்தவாரத்தில் கிழக்குப் பிராந்தியல் பல கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததும் நினைவூட்டத்தக்கது. மேலும், http://tamilworldtoday.com/?p=14674
-
- 3 replies
- 585 views
-
-
Jun 5, 2013 சிங்கள ஆதிக்கக் கனவினுள் தீக்குச்சி கிழித்து எறிந்தவன்.- ச.ச.முத்து (தியாகி சிவகுமாரனனின் முப்பத்திஒன்பதாவது ஆண்டு நினைவாக.). அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சி நிறைந்த ஒரு இறுதி நிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தா…
-
- 5 replies
- 635 views
-
-
தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைகளுக்குத் திரும்ப விரும்பாத போதிலும், ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணத் தவறினால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நேற்றுமுன்தினம் மாலை உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது.. கடந்த அறுபது ஆண்டுகளில் பதவிக்கு வந்த அரசுகளின் இனஒடுக்குமுறைகள்தான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்தது. 13வது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து அதனை நீர்த்துப் போகச் செய்ய…
-
- 4 replies
- 804 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் மறுமலர்ச்சி பெறும் என்ற அச்சத்துடன் இலங்கை அரசு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது சார்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களை கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெளிநாடு வாழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என இலங்கை நினைப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளின் செயல்பாடு எதுவும் இல்லை என கூறியுள்ளது. இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் நிதியுதவி ச…
-
- 1 reply
- 559 views
-
-
அரசாங்கத்திலுள்ள ''றோ'' முகவர்களின் தேவைக்கமைய 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14790
-
- 4 replies
- 1.3k views
-
-
மரத்தில் நிர்வாணமாக பதுங்கியிருந்த சிப்பாய் அகப்பட்டார் - கிளிநொச்சி கிராஞ்சியில் சம்பவம்!! 05 ஜூன் 2013 கிளிநொச்சி கிராஞ்சிப் பகுதியிலுள்ள மொட்டையன் குளம் என்ற இடத்திலுள்ள மக்கள் வாழிடங்களுள் உட்புகுந்த இராணுவச்சிப்பாயென நம்பப்படும் நபர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.பொதுமக்களிடம் சிக்கிய வேளை குறித்த சிப்பாய் நிர்வாணமாகவே நின்றிருந்ததாக தெரியவருகின்றது. பயணப்பை சகிதம் வந்த அந்த சிப்பாய் உட்புகுந்த வேளையில் ஆண்கள் யாரும் அங்கிருக்கவில்லை. அச்சிப்பாயின் வேறுபட்ட நடத்தையினை அவதானித்த அப்பகுதிப் பெண்கள் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பாடசாலை அதிபர், மாதர் சங்கத்தினர் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மேற்குறித்த கிராம அபிவிருத்திச் சங்கத் தலை…
-
- 5 replies
- 752 views
-
-
அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் திருத்தச் சட்டம் குறத்து பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் தேவைப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எனவே, மாகாணசபைத் திருத்தச் சட்டம் குறித்த உத்தேச வரைவுத் திட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது. உத்தேச சட்டத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு ஒரு வார கால அவகாசம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அதி உயர் பீடத்தினர் இது குறித்து ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபை அதிகாரங்களை திருத்தி அமைக்கும் வகையில் அரசாங்கத்தினால் அவசர சட்டமாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த குறித்த உத்தேச சட்டத்…
-
- 1 reply
- 481 views
-