ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் காணியில்லாமல் அந்தரிக்கும் நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு அரச காணி ஒன்றில் "ஹோட்டல்' அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகினறது. கோப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில், அக்கரை கிராமத்தில் சிவன் கோயில் அடைப்புப் பகுதியிலேயே இவ்வாறு ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணி 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்குரிய காணியாகவே இருந்தது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் இந்தக் காணியில் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கிய போதும் காணி உறுதிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ் வீட்டுத்திட்ட மக்களுக்காக அருகில் விளையாட்டு மைதானத்துக்கும் காணி ஒதுக்கப்பட்டி…
-
- 0 replies
- 534 views
-
-
நூற்றுக்கும் மேற்பட்ட ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிறைச்சாலைகளில் தண்டனை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை, ஊழல்மோசடி, கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் N;பரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐம்பது அரசியல்வாதிகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்து அரசியல்வாதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஏனையவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலப்பகுதியிலேயே அதிகளவான ஆளும் கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்ப…
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கையில் நான்கு வகையான இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஜமாத்தீ இஸ்லாம், தாயுதித் ஜமாத், தாப்லீக் ஜமாத் மற்றும் ஜமாத்தீ முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2004ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டாட் இதனை அனுப்பி வைத்துள்ளார். பாகிஸ்தான் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்சியை பதிவு செய்வது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்ட…
-
- 4 replies
- 679 views
-
-
தமிழ் ஈழ மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை போன மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 05.04.2013 வெள்ளிக்கிழமை காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ராஜபக்சே உருவப்படத்திற்கு செருப்புகளால் ஆன மாலைகளை அணிவித்து, துடைப்பத்தால் அடித்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13830:rajapakse-seruppu&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 668 views
-
-
டெல்லி: இந்திய எம்.பிக்கள் குழு வரும் 8-ந் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இக்குழுவில் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் எவருமே இடம்பெறவில்லை. இந்திய எம்.பிக்கள் 6 பேர் அடங்கிய குழு வரும் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செளகதா ராய், காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்ஷித், கெளட் யாஷ்கி, பாரதிய ஜனதாவின் பிரகாஷ் ஜவ்தேகர்,அனுராக் தாகுர், பகுஜன் சமாஜ் கட்சியின் தனஞ்ஜெய் சிங் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இந்திய தொழில் கூட்டமைப்பான பிக்கியின் இரு பிரதிநிதிகளும் இலங்கை செல்கின்றனர். இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் யாழ்ப்பாணத்துக்கும் செல்கின்றன…
-
- 1 reply
- 330 views
-
-
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான - சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழ…
-
- 2 replies
- 522 views
-
-
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகிய இருவரும் தம்மை கடத்திச்சென்று சித்திரவதைகளை மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கடத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பாக அவர் வெள்ளவத்தை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை வழமை போன்று தான் கொழும்பு சென்றிருந்த நிலையில் வெள்ளவத்தைப்பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணியளவில் தன்னை கைத்துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற அங்கயனின் தந்தையாரான இராமநாதன் தமது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.அத்துடன் சுமார் ஜந்து மணிநேரமாக தனித்து வைத்து சித்…
-
- 1 reply
- 528 views
-
-
கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்-வைகோ பிரதமர் பாதுகாப்புத் துறை அமைச்சருக்குவைகோ அவசர வேண்டுகோள்! இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வணக்கம். துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி ஏப்ரல் 2 ஆம் நாள்இ தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்று (6.4.2013 ) அதிகாலையில் தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து 120 ஈழத்தமிழர்கள் இரண்டு படகுகளில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர் பெண்கள் குழந்தைகள். தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் அவர்கள் சென்ற படகுகளில…
-
- 0 replies
- 439 views
-
-
சிறிலங்காவுக்கு தெற்கே சீன அணுசக்தி நீர்மூழ்கியின் ஊடுருவல் அதிகரிப்பு [ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 14:18 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு தெற்கே சீன அணுசக்தி நீர்மூழ்கியின் ஊடுருவல் அதிகரிப்பு [ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 14:18 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குத் தெற்கே, சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை இந்தியக் கடற்படை அவதானித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்ச்சியாக ஊடுருவி வந்துள்ளதாகவும், சிறிலங்காவுக்கு தெற்கே குறைந்தது 13 தடவைகள் இந்த ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாகவும் இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. ஆகப் பிந்திய ஊடுருவல் கடந்த பெப்ரவரி மாத…
-
- 1 reply
- 702 views
-
-
நட்டாற்றினில் கோல்டன் கீ முதலீட்டாளர்கள்! மகிந்த கும்பலை கூட்டுச்சேர்க்க மறுத்தமையினால் இழுத்து மூடப்பட்டுள்ள கோல்டன் கீ நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர்களை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் மொத்தப் பணப் பெறுமதி 9179 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோல்டன் கீ வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக செலத்துமாறு செலிங்கோ குழும நிறுவனத்தின் கோல்டன் கீ நிறுவனம் வங்குரோத்து நிலையை அடைந்ததன் காரணமாக அதில் பணத்தை முதலீடு செய்த பெரும் எண்ணிக்கையான வைப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிப்பாளர் சபையின் சொத்துக்களை விற்…
-
- 1 reply
- 633 views
-
-
ஏட்டிக்குப்போட்டி! இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டினில் புதுக்கட்சி!! இலங்கை அரசினது அனுசரணையுடன் இராணுவ புலனாய்வு பிரிவு தமிழ் தேசிய முன்னணி' எனும் அரசியல் கட்சியினை திறற்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது என்று அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் வீதி, பூந்தோட்டம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அக் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் இம் மாநாடு காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதுடன் பிரதேச அமைப்புகள்,மாவட்ட அமைப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாகவும் ஊடகப் பேச்சா…
-
- 1 reply
- 775 views
-
-
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க ஒத்துழைக்கும் எந்தவொரு கட்சிக்கும் எதிர்வரும் தேர்தலில் ஆதரவு வழங்கத் தயார் என நியாயமான சமுதாயத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என நேற்று கூடிய தேரர்கள் கருத்து முன்வைத்ததாக இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சோபித்த தேரர் குறிப்பிட்டார். இந்த சட்டத் திருத்தம் குறித்து ஏனைய மதத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் அது குறித்து அரசியல் கட்சிக…
-
- 4 replies
- 657 views
-
-
வடக்கு தாக்குதல்களினில் தமிழ் இளைஞர்கள் ! வடக்கு தாக்குதல்களினில் தமிழ் இளைஞர்கள் ! வன்னி மற்றும் யாழ்குடாநாட்டினில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டுவரும் மர்ம தாக்குதல் நடவடிக்கைகளினில் திட்டமிட்டு தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சியினில் இடம்பெற்ற கூட்டமைப்பு அலுவலகம் மீதான தாக்குதல் மற்றும் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல்களென அனைத்திலும் இவ்வாறு தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. பெரும்பாலும் இராணுவப்புலனாய்வு பிரிவினருடன் தொடர்பு பட்ட பொதுநபர்களே தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.எனினும் அவர்களை வழிநடத்துவதினில் படைப்புலனாய்வு பிரிவினரே இருந்ததாக கூறப்படுகின்றது.அவர்களே சம்பவ இடத்திற்கு ஆட்களை தருவ…
-
- 0 replies
- 777 views
-
-
ஊடகங்கள் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் நீதியமைச்சர் ஹக்கீம் இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது எனவும், 'உதயன்' கிளிநொச்சி அலுவலகம் மீதும், ஊழியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அதன் புதிய அத்தியாயம் எனவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இந்தோனேஷியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை அவசரமாக முடித்துக்கொண்டு அமைச்சர் ஹக்கீம் வியாழக்கிழமை அதிகாலையில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 'உதயன்' மீதான தாக்குதல் பற்றிக்…
-
- 1 reply
- 576 views
-
-
அரசுக்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் - ஹிஸ்புழ்ழா எச்சரிக்கை அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் அரசுக்கு வழங்குகின்ற ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக பொதுபலசேனா எனும் பெயரில் இங்குகின்ற சிங்கள பேரினவாத இயக்கம் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உண்டுபன்னுவதோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிக மோசமான நிலையில் செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், அரசாங்கத்தின் உயர் அமைச்சர்களிடமும் கட்சித் தலைவர்களிடடமும் தொடர்ச்சியாக நாம் பேசி வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள…
-
- 2 replies
- 656 views
-
-
சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா ? ஹக்கீம் இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார். அந்தச் சம்பவத்தில் கைதான 14 பேரும், கடையின் உரிமையாளர் தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது விசனத்துரியது என்பது மட்டுமல்லால் அதன் பின்னணியில் சந்தேகங்கள் இருக்கின்றன…
-
- 5 replies
- 621 views
-
-
உதயன் நாளிதழ், மாணவர்களையும், வற்றாப்பளை கிராமத்தையும் கொச்சைப்படுத்தி கவிதை வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு முள்ளியவளையில் கல்விச்சமூகத்தால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிடுள்ளது. நேற்று பிற்பகல் தண்ணீருற்றுக்கிராமத்தில் உள்ள நெடுங்கேணி சந்தி எனப்படுகின்ற இடத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியை சென்றடைந்தது. அங்கு உதயனுக்கு எதிராக கண்டன உரைகள் இடம்பெற்றதை அடுத்து உதயன் பத்திரிகை மக்களால் தீயிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முள்ளியவளை வித்தியானந்தக்கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம் உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் உட்பட பெருமளவானோர் பங்குகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் த…
-
- 48 replies
- 3.6k views
-
-
இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி, தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது பெரும் எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது. லண்டனில் வாழ்கின்ற தமிழ் மக்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொள்கின்றனர். மேலும், தொடர்ச்சியாக மக்கள் பேரலையாக அணி திரண்டு வருவதால் லண்டன் மாநகர் குலுங்குகின்றது. லண்டன் ஆர்ப்பாட்ட பேரணியின் நேரடி ஒளிபரப்பு வீடியோ காண....
-
- 1 reply
- 768 views
-
-
தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், இந்திய அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று வரும் 9 ஆம் தேதியன்று இலங்கை செல்ல உள்ளது. 6 பேர் கொண்ட இக்குழுவில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 9 ஆம் தேதியன்று இலங்கை செல்லும் இக்குழு, மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சென்று, அங்குள்ள சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். அதன்பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் இவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இக்குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என்…
-
- 8 replies
- 818 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இல்லையாயின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்திருக்க முடியாது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் இல்லாதிருந்தால் பயங்கர வாதத்தைத் தோற்கடித்திருக்க முடியாதிருந்திருக்கும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அக்காலகட்டங்களில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளும் பாராளுமன்றத்தினூடாக இடம்பெற்றன என தெரிவித்த அமைச்சர்; உரிய சமயத்திலேயே ராஜித சேனாரத்ன போன்றவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் எனவும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அரசியலமைப்பைத் திருத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு கின்றனவா எனவும…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையாகும் விதத்தில் எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் மாதாந்தம் 515 ரூபாயிலிருந்து 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை தொழிலாளர்கள் உற்பத்தித்திறனையும் தொழிற்திறனையும் அதிகரிப்பதில் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் கூறியுள்ளது. அதன்படி, 25 வேலைநாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தொழிலாளி ஒருவரின் வருகை 75 வீதத்தை தாண்டினால் அவருக்கு …
-
- 3 replies
- 815 views
-
-
அடுத்த தலைமுறையும் போராடும் நிர்பந்தம்! - ஈழ நிதர்சனம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 12:18 GMT ] [ அ.எழிலரசன் ] செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். "என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ..." என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்? - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன், இப்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர். ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பா…
-
- 2 replies
- 587 views
-
-
மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. யாழ்.மாவட்டத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சூவீகரிக்கும் பகிரங்க அறிவித்தல்கள் இந்த மாதம் யாழ்.மாவட்டக்காணி சூவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. மக்களின் பார்வைக்காக இந்த அறிவித்தல்கள் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் அதன் யாழ்.மாவட்ட காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 374 views
-
-
பொது பல சேனாவிற்கு அரசு நேரடியாக ஆதரவளிக்கவில்லை - ரிஷாத் பதியுதீன் இலங்கையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்ற பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்கு அரசாங்கம் நேரடியாக ஆதரவளிக்கிறது என்று கூறமுடியாது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவிக்கிறார். ஆனால் அரசாங்கத்தில் பொது பல சேனாவை ஆதரிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பொது பல சேனா அமைப்பே தங்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பில்லை என்று கூறியிருப்பதாகவும் அதேபோல அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட அந்த அமைப்பை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பதாகவு…
-
- 10 replies
- 1.4k views
-