ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, நசுக்கி, தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனுவாகத் திடீர் எனப் பேரெழுச்சி பெற்று, இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத பெரும் தலைவராக உயர்ந்து நின்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அடித்தளத்தில் திடீரென சிறிய இடறல் பிசிறல் தென்படுவது வெளிப்படை. “புலி அழிப்பு சாதனை”யில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் அவருடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் தற் போதைய சிரேஷ்ட அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன் சேகா, எதிர்கால அரசியலில் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் களமிறங்குவார் என்ற தகவல் செய்தி அடிபடத் தொடங்கியதுமே, ஜனாதிபதி மஹிந்தரின் அரசியல் தளம் தடுமாற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், பல நூற்றாண்டுகள் அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க…
-
- 4 replies
- 346 views
-
-
மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மீது எந்த தடைகளையும் விதிக்கும் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல் குற்ற சாட்டு தொடர்பாக இலங்கையின் படைதுறை அதிகாரிகள், முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயண தடைபோன்ற தடைகளை விதிக்குமா என கேட்டபோதே ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகள் அவ்வாறான திட்டம் இல்லை என குறிபிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் திடகாத்திரமான உறவுகளை மேற்கொண்டுவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 914 views
-
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு (26) பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம், மாதம்பே பகுதியில் உள்ள 67ஆம் வளைவில் இந்த பஸ் தீக்கிரையாகியுள்ளது. தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் இருந்தபோதிலும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. http://tamilworldtoday.com/home http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 545 views
-
-
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் - வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவின் துரோகத்தை அம்பலப் படுத்தும் ஆவணமாக இந்நூல் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்டியும், அரசியல் தளத்தில் ஈழ விடுதலையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் பேசினார். நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப் படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது. …
-
- 0 replies
- 1.7k views
-
-
கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன? போர்த்துக்கேயரால் துவம்சம் செய்யப்பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்தேயுள்ள முற்றவெளி மைதானம் முழுவதும் சோலைகளும் மரங்களும் விருட்சங்களும் விரவிக் கிடந்தன. இவற்றை தமது இருப்பகங்களாகக்கொண்டுதான் ஆயிரக்கணக்கான மான்கள், மந்திகள், பறவை கள், பட்சிகள் வாசம் செய்தன. கோட்டை வாசலிலிருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு பந்தல் அமைத்தது போல் காணப்படும் விருட்சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்றைகள், புதர்கள் என மண்டிக்கிடந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சரணாலயம் போல் காணப்பட்டது. மான்களும் மந்திகளும் ஓடித் திரிந்து, பறவைகளும் பல்லு யிர்கள…
-
- 2 replies
- 530 views
-
-
இலங்கையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதே வேளை பரீட்சை முடிவுகள் இன்றைய தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilstar.org
-
- 0 replies
- 787 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி : நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர் தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் இறுதிகட்ட போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக தஞ்சையை அடுத்த விளார் கிராமம் பைபாஸ் ரோடு அருகே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா கடந்த 6–ந் தேதி நடந்தது. விழாவை முன்னிட்டு அதன் தொடர் நிகழ்ச்சிகள் மாலை நடந்தது. விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். திறப்பு நிகழ்ச்சிக்குழு தலைவர் அய்ய…
-
- 28 replies
- 2.7k views
-
-
இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களிலும், யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டை விசாரணை செய்வதற்கான அமர்வு ஒன்று அயர்லாந்து, டப்ளினில் நடைபெறவுள்ளது. ஜனவரி 14, 15 இல் இடம்பெறும் இந்த விசாரணையில் ஜனவரி 16 இல் முடிவுகள் வரலாம்.சுயாதீனமாக மக்கள் மன்றம் ஒன்றினால் இந்த விசாரணை நடாத்தப்படுகின்றது.இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையினை கண்டித்துள்ளதுடன் ஜனாதிபதி தேர்தல் வரும் வேளை இந்த விசாரணை இடம்பெறுவது அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இலங்கை மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புக்கள் ஆகியன இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக கூறப்படு…
-
- 0 replies
- 748 views
-
-
"வழமைபோல் வாகனங்களில் மக்களை இறக்கி சுலோகங்களில் தமிழை கொலைசெய்தது அரசாங்கம்" இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை சனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவதாக கூறி, கலம் மெக்ரே உட்பட சனல் 4 ஊடகத்தின் செய்தியாளர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று வியாழனன்று (14.11.13) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஏ9 வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சனல் 4 ஊடகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர் வவுனியா மன்னார் வீதிச் சந்திக்கருகில் யாழ் வீதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா அரச செலயக வாயில்வரை சென்றது. ஆர்…
-
- 0 replies
- 396 views
-
-
சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும் – சுரேஷ் இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலை புரியவேண்டுமென்பதுடன், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் குறித்தும் தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார். இன்று( திங்கட்கிழமை) அவர் குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்…
-
- 2 replies
- 340 views
-
-
சிறீ லங்கா படையின் முக்கிய தளபதிகள் வெளிநாடு சென்றால் அங்கு கைது செய்யப்படும் ஆபத்து காணப்படுவதாக சிறிலங்கா சட்ட பேராசிரியரும் அமைச்சருமான பீரிஸ் கூறியுள்ளார். http://epaper.virakesari.lk/ArticleImage.aspx?article=23_12_2009_001_004&mode=1
-
- 0 replies
- 809 views
-
-
வடக்கிலுள்ள குடும்பங்கள் மாவீரர் தினத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக் கூறுவதை, தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திட்டம் கூட்டமைப்புக்கு இல்லை என தெரிவித்துள்ள அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கட்சியின் அலுவலகங்களில் சிறிய நிகழ்வுகள் நடத்தப்படும் என்றார். விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க நேரடியாகவோ மறைமுகமாகவே எடுக்கப்படும் முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றம் என அரசாங்கம் இன்று அறிவித்தது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அட…
-
- 0 replies
- 363 views
-
-
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினுடைய பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டதும் சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமாருக்கு (ரமேஸ்) எதிராக உறுதிப்படுத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஆளும்கட்சி (கூட்டமைப்பு) மற்றும் எதிர்க்கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியிருந்ததும் நீங்கள் யாவரும் அறிந்ததே. கடந்த 21.11.2013 ஆம் திகதி கூடிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உப தவிசாளர் கந்தையா தர்மலிங்கம் நிச்சயம் கலந்து கொள்வேன் என சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு உறுதியளித்து விட்டு இறுதி நேரத்தில் காலை வாரியதும் தெரிந்ததே. இப்போது என்ன நடக்கிறது? தொடர்ச்சியாக இரு தடவைகள் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டால் தவிசாளரின் பதவிக்காலம் உடனட…
-
- 0 replies
- 371 views
-
-
கடும் வாகன நெரிசல் : மடுவில் மக்கள் அவதி வருடாந்த மடுத்திருவிழா இன்று காலை 9 மணியளவில் முடிவுற்ற போதிலும் பொலிஸார் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யாத கராணத்தினால் பாரிய போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக, மடுத்திருவிழாவிற்கு சென்ற யாத்திரிகர்கள் சுமார் 3 மணி நேரமாக வாகன நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர் என தெரிவித்தார். http://www.virakesari.lk/article/23177
-
- 0 replies
- 171 views
-
-
(பழுலுல்லாஹ் பர்ஹான்) அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்பட…
-
- 6 replies
- 770 views
-
-
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துகையில் அரசை கவிழ்க்க எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள் அவர்களுக்கே சனி பிடித்த அரசு என்கின்றார் ராஜித ஜெ.ராஜன் சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவரும்போது இந்த அரசாங்கத்தை நெருங்கவோ அல்லது கவிழ்க்கவோ எவரும் எஞ்சப்போவதில்லை என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார். குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாலும், இலஞ்ச ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலும் அடிக்கடி ஆஜராகிக்கொண்டிருப்பவர்களுக்கே இது சனி பிடித்த அர சாங்கம். மாறாக நாட்டு மக்களுக்கல்ல எனவும் அவர் தெரிவித…
-
- 0 replies
- 206 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்மது ஹஸ்தூனின் மனைவியான தற்போதும் மர்மமாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்லது புலஸ்தினி மகேந்ரனின் கீழேயே, பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு இஸ்லாமிய தேசமொன்றுக்கான 'பையத்' செய்துகொள்ளப்பட்டுள்ளதாக சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சாராவின் கீழ் பயிற்சி பெற்று, இஸ்லாமிய தேசம் ஒன்றினை உருவாக்க பையத் எனும் உறுதி மொழியை 16 பெண்கள் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர், 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்த…
-
- 1 reply
- 297 views
-
-
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கவில்லை – அமெரிக்கா எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடுநிலையானது என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலில் அமெரிக்க ஒருபக்கச்சார்பாக நடப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை வன்மையான கண்டிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் வன்முறைகளற்றதாகவும் நடைபெறவேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது. இந்த த…
-
- 2 replies
- 446 views
-
-
அனுராதபுரம் - விகாரகல்மில்குளம் பிரதேசத்தில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ருவன்திகா மாரபன உத்தரவிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=100022&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 453 views
-
-
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு .இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைக…
-
- 12 replies
- 1.5k views
-
-
பங்குத் தந்தை ஜெபமாலையுடன் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள். மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தாங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக பிபிசி தமிழோசையிடம் கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை. இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என…
-
- 3 replies
- 791 views
-
-
எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி…
-
- 0 replies
- 241 views
-
-
Published by T. Saranya on 2022-02-24 15:28:30 (எம்.மனோசித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் காணி அபகரிப்பு நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்டமாக ஆரம்பித்துள்ள போராட்டத்தினை வடக்கு, கிழக்கிலும் பாரியளவில் தொடர்வோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அ…
-
- 0 replies
- 242 views
-
-
என்.ராஜ் யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர். வடக்கிற்கான பிறீமா மா விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதில், யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும் எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் ஒரு காரணத்தை கூறின. எதிர்வரும் நாட்களில் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மாவின் அளவினை உடனடியாக குறைக்க உள்ளதாகவும் தெரிவித்த…
-
- 4 replies
- 375 views
-