ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
[size=4]இலங்கையில் தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசின் தடையை நீக்கக் கோரி இந்திய தீர்ப்பாயத்தில் சத்தியவோலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிட்ஸர்லாந்தின் இணைப்பாளர் சிவனேசன் எனப்படுபவர் இந்தச் சத்திய ஓலையை சென்னையில் உள்ள சட்டத்தரணியான ராதாகிருஸ்ணன் மூலம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், சிவநேசன், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை எதிர்த்து வாதங்களை முன் வைத்துள்ளார். தமிழ் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்காகவே விடுதலைப்புலிகள் போராடினர் எனவும் இந்தியாவில் தற்போது விடுதலைப்புலிகளின் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்ல…
-
- 2 replies
- 491 views
-
-
பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில் ஸ்டாலின், டி.ஆர்.பாலு - வைகோ, ராமதாஸ் பங்கேற்பார்களா? [ஸுன்டய், 2012௰௨8 07:56:00] லண்டனில் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கும், பிரிட்டன் தமிழர் பேரவை மாநாட்டில், தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர், இந்த மாநாட்டை புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களின், மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,சபை, மற்றும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் மனுக்களை கொடுக்க தி.மு.க., முடிவெடுத்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஐ.நா., சபையில் அளிக்கவுள்ள, டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் வரை…
-
- 4 replies
- 762 views
-
-
அகில கால மீளாய்வு அமர்வுகளில் 99 நாடுகள் இலங்கை குறித்து பேசவுள்ளன 28 அக்டோபர் 2012 அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே இலங்கை தொடர்பான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள், வட மாகாணசபைத் தேர்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, செக்குடியரசு, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தின் போது ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக…
-
- 0 replies
- 389 views
-
-
யுத்தத்தின் பின்னர் பிளக்கும் கோதபாயவும் அமெரிக்காவில் சந்தித்தனர் – விக்கிலீக்ஸ் 28 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கான அமெரிக்க முன்னாள் தூதுவர் ரொபர்ட் பிளக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் அமெரிக்காவில் சந்தித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை;கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமளவலான இடம்பெயர் மக்களை துரித கதியில் மீள் குடியேற்ற வேண்டுமென ரொபர்ட் பிளக், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளார். தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள…
-
- 0 replies
- 383 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிஸ் இணைப்பாளர் கோரிக்கை 28 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு அந்த அமைப்பின் சுவிட்சர்லாந்து இணைப்பாளர் பி.சிவநேசன் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள தடையை நீக்குமாறு அவர் கோரியுள்ளார். சென்னை சட்டத்தரணி ராதகிருஸ்ணன் என்பவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு சட்டவிரோத செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புலிகள் செயற்படவில்லை என இணைப்பாளர் சிவநேசன் சட்டத்தரணியின் ஊடாக தெரிவித்துள்ளார். சிவநேசன் புலிகளின் இணைப்…
-
- 0 replies
- 318 views
-
-
திருகோணமலையில் மாதாவின் திருச்சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது By M.Nesamani 2012-10-27 10:51:27 திருகோணமலை பாளையூற்று மாதா அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மாதாவின் திருச்சொரூபம் நேற்றிரவு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருச்சொரூபத்தின் தலை மற்றும் கை ஆகியவை சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=1320
-
- 3 replies
- 481 views
-
-
40 தமிழக மீனவரை நடுக்கடலில் சிறைபிடித்தது சிங்களக் கடற்படை Published: சனிக்கிழமை, அக்டோபர் 27, 2012, 18:09 [iST] ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத் தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை 40 மீனவர்களை கைது செய்திருக்கிறது. அதாவது ஒரு படகுக்கு ஒருவர் என விடுவித்துவிட்டு மற்ற அனைவரையும் கைது செய்திருக்கிறது. கரை திரும்பிய மீனவர்களின் இந்த தகவலால் ராமேஸ்வரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. http://tamil.oneindia.in/news/2012/10/27/tamilnadu-40-tn-fishermen-arrested-lankan-navy-163764.html
-
- 3 replies
- 821 views
-
-
[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்ட அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அதன் செயற்பாடுகளை இந்த பிரச்சினை பாதிக்காது என்றும் கூறினார். கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' எது எப்படியிருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்கள…
-
- 4 replies
- 766 views
-
-
[size=4]தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், சட்டப்பேரவை கூட்டத் தொடர், சட்டமன்ற வைர விழா தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த கூட்டத்தில், ஐ.நா.வில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டார…
-
- 0 replies
- 796 views
-
-
தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு வெலிக்கடையில் நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகள். PHOTOS, சிறீலங்கா | ADMIN | OCTOBER 26, 2012 AT 09:23 சிறீலங்கா இராணுவத்தினரும், கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான கொடுமைகளைச் செய்ததாக வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிற்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்…
-
- 28 replies
- 2.1k views
-
-
[size=4]பதின்மூன்றவாது சட்டத்தில் இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போது மக்கள் பயப்படுவ…
-
- 1 reply
- 873 views
-
-
[size=4] [/size] [size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், அரசாங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாகவே இறுதி தீர்வை எட்ட முடியும்.[/size] [size=4] [/size] [size=4]இந்த கருத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயாமாஸ்ட்டர் எனப்படும் தயாநிதி த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.[/size] [size=4] [/size] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக இனி ஒன்றிணைய முடியாது.[/size] [size=4] [/size] [size=4]விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக முழுமையாக தோல்வியடைந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]எனினும் வெளிநாடுகளில் இருந்து அரசியல் ரீதியான அழுத்தங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வழங்க முடியும் என்று…
-
- 21 replies
- 2.3k views
-
-
[size=4]காணாமல் போனோரை நினைவு கூறும் 22ஆவது தேசிய நினைவூட்டும் நிகழ்வு, சீதுவை, ரத்தொலுவ சந்தியிலுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான சுதந்திர முறைமையை அமுல்படுத்துமாறும் காணாமல் போனவர்களை திருப்பித் தருமாறும் அவர்களது குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும்' கோரிக்கை விட்டனர். இந்நிகழ்வின் இறுதியில், காணாமல் போனோரின் உறவினர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத…
-
- 2 replies
- 628 views
-
-
அனுராதபுரத்தில் அரபு மத்ரஸா இனந்தெரியாதோரால் தீக்கிரை. சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:43 அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையி…
-
- 11 replies
- 1.2k views
-
-
[size=4]உலகப் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் அளவில் இலங்கையர்களின் தொழில்நுட்ப அறிவு விருத்தியடையவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உலக வங்கியின் பொருளாதார அறிவு சுட்டெண் தரவரிசையில் 2000 ஆம் ஆண்டில் 87ம் இடத்தை வகித்து வந்த இலங்கை, தற்போது 101ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதை அவ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மக்களிடையே தொழில் நுட்ப அறிவு குறைவடைந்துள்ளதாகவும் இவ்வாறு குறைவடைவதற்கு காரணம் இலங்கைப் பல்கலைக்கழக முறைமை தொழில்சார் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை எனவும் அது குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக உலக தரத்திலான தொழில் வாய்ப்புக்களுக்காக போட்டியிடக் கூடிய வகையில் பல்கலைக்கழக கல்வி முறைமை அமையவில்லை என அந்த …
-
- 3 replies
- 955 views
-
-
[size=4]13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார். இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது …
-
- 4 replies
- 1.2k views
-
-
இரண்டாவது ஈழத்தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:49 புகலிடம் கோரியிருந்த சிறிலங்காத் தமிழர் ஒருவரின் கோரிக்கை அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டு ஒக்ரோபர் 31 அன்று மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். இதற்கான உத்தரவை அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்படும் நிலையில் பிரித்தானிய உயர் நீதிமன்றமானது சிறிலங்கர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள அதேவேளையில், தற்போது அவுஸ்திரேலியாவானது தனது நாட்டில் தஞ்சம் புகு…
-
- 0 replies
- 542 views
-
-
அரசியல் தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பு தமது தரப்புக்கெதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் உரிய வகையில் பதிலளிக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக் கடைப்பிடிக்குமானால் தீர்வு விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அரசு தள்ளப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்றுமுன் தினம் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது என “உதயன்’ கூட்டமைப்பின் தலைவர் இரா.ச…
-
- 0 replies
- 594 views
-
-
தடைபோடும் கடற்படை - மாதகல் மீள்குடியேற்றம் 27 அக்டோபர் 2012 குளோபல் தமிழ் செய்தியளார் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மாதகல் மேற்கு மக்கள் இலங்கை கடற்படையின் தடைகளால் அல்லாடுகின்றனார்கள். யாழில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மாதகலும் உள்ளடங்குகிறது. மாதகல் மேற்கு மக்கள் கடந்த பலந வருடங்களாக தமது குடிநிலத்தை கோரி வந்தார்கள். மக்கள் அகதிமுகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வந்தார்கள். இந்நிலையில் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்படுவதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் அறிவித்தையடுத்து அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். 22 வருடங்களின் பின்னர் இந்த மக்கள் மீள்குடியேற இலங்கை கடற்படையினர் அ…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாத…
-
- 4 replies
- 1.3k views
-
-
'பதின்மூன்று பிளஸ்' எவ்வேளையும் 'பதின்மூன்று மைனஸ்' ஆகலாம்! - பனங்காட்டான் [Friday, 2012-10-26 12:30:36] கடந்த இரண்டு வாரங்களாக முக்கிய பேசுபொருளாக இருப்பது பதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டம். ராஜீவ்-ஜே.ஆர். ஒப்பந்தத்தின் மூலங்களின் ஒன்றான பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஊசலாடுகின்றது. மகிந்த ராஜபக்சவினால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட உறுதிகளில் ஒன்று பதின்மூன்றுக்கும் அப்பால் (பதின்மூன்று பிளஸ்). இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பதின்மூன்றாவது திருத்தம் போதாது. அதற்கும் மேலே சென்று (பதின்மூன்று பிளஸ்) தீர்வு காணப்படும்� என்பது இதன் அர்த்தம். இது ஓர் அறுந்த கயிறு (நேர்மையற்ற வாக்குறுதி) என்பது புரியாமல் இதனை மன்மோகன் சிங் …
-
- 4 replies
- 994 views
-
-
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார். இந்தியா சென்ற அவர் முதலில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நா…
-
- 6 replies
- 646 views
-
-
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பு ! தமிழர் தாயக அரசியலின் சமகால நிலைவரம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்பாடுகளை முன்னிறுத்தி பிரான்சிலர் அரசியல் கருத்தாடல் களத்திற்கான அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெறவுள்ள இக்கருத்தாடலில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்க இருப்பதோடு மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவுள்ளார். இதேவேளை 'இலங்கை இனநெருக்கடி விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சியும் - தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடும் ' என்ற கருப்பொருளில் மக்கள் மற்றும் கருத்தாளர்கள் பங்கெடுக்கும் கருத்து…
-
- 10 replies
- 1.2k views
-
-
[size=4] [/size] [size=2][size=4](பாருக் தாஜுதின்)[/size][/size] [size=2][size=4]கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள மலேஷிய கொடி தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை செய்த 15 பேரின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கப்பலின் உரிமையாளர்கள் தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கவும் மனுதாரர்களின் சம்பளத்தை வழங்காமல், கப்பலை இலங்கையின் நியாயாதிக்கத்துக்கு அப்பால் கொண்…
-
- 0 replies
- 731 views
-
-
‘நேசம்2012′ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம் “நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான பரிசளிப்பு வழங்குவதற்காக எமது…
-
- 4 replies
- 760 views
-