Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை, மூதூர் முச்சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். மணல் அகழ்வதற்காக மூதூர் கட்டைபறிச்சான் இராணுவ முகாமிலிருந்து கங்கைப் பிரதேசத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த உழவு இயந்திரம் முச்சந்தியில் திரும்பும்போது சரிந்து விபத்திற்குள்ளானது. இதன்போது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் சிக்கியிருந்த இராணுவத்தினரை பொதுமக்கள் மீட்டு மூதூர் பொதுவைத்தியசாலையில் அனுமதித்ததாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://thaaitamil.com/?p=33078

  2. தமிழகத்தில் பூந்தமல்லி தடுப்பு முகாமில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் செந்தூரன் ‘பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ள உறவுகள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 06ஆம் நாள் அன்று உண்ணாநிலைப்போராட்டத்தைத் தொடங்கினார் என்பது அறிந்ததே. ஆகஸ்டு 06ஆம் நாள் முதற்கொண்டு ஆகஸ்டு 20ஆம் நாள் வரையான 16 நாட்கள் தொடர்ந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின்போது செந்தூரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தமிழக அரசு செவிசாய்க்காத நிலையில், 20ஆம் நாள் முதல், நீரும் அருந்தாது தனது பட்டினிப்போராட்டத்தை தீவிரப்படுத்தினார் செந்தூரன்…

  3. ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர். நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்று ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமி…

  4. [size=4]கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் 1452 ஏக்கர் நிரலப்பரப்பை அதாவது பூநகரியின் நிலப்பரப்பின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை இராணுவம் மேற் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் உள்ள 18 கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள 42 கிராமங்களிலும் ஆங்காங்கே நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் பாவனைக்கு பூநகரிப் பகுதியில் 1452 ஏக்கர் நிலப்பரப்பை உரித்தாகுமாறு படைத் தலைமையகம் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்த நிலப் பகுதியானது பூநகரியின் மொத்த நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியாக உள்ளது.[/size] [size=4]இவ்வாறு உள்ளூர் படைத் தலைமையகங்களின் கோரிக்கைகளுக்கு மேலாக பூநகரியின் பதினொரு இ…

  5. மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது. போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது. சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை. பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை. கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த ப…

  6. [size=4]இலங்கையின் மிகப் பிரபலமான, அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வாரப் பத்திரிகையான சண்டே லீடர் இதழின் ஆசிரியர் ஃப்ரெட்ரிக்கா ஜான்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.[/size] [size=4]இந்தப் பத்திரிகையின் புதிய உரிமையாளர் பத்திரிகையின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியதாகக் கூறப்படுவதை அடுத்து இந்தத் திருப்பம் வந்திருக்கிறது.[/size] [size=4]இந்தப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மூன்றாண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]சண்டே லீடர் பத்திரிகை எப்போதுமே சர்ச்சையிலிருந்து தூர நின்றதில்லை.[/size] [siz…

  7. ஐ.நா பொதுச்சபைக்கான மகிந்தவின் பயணம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012, 02:26 GMT ] [ தா.அருணாசலம் ] ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்த போதும், திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். வரும் 26ம் நாள் பிற்பகல் அமர்வில் அவருக்கு உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீரென அவர் இந்தப் பயணத்தைக் கைவிட்டுள்ளார். …

  8. [size=4]இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 300 விவாகரத்துகள் இடம்பெறுவதாக மேல்மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்தில் இணையும் இருவருக்கிடையில் ஏற்படும் புரிந்துணர்வற்ற தன்மையே விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ௭னவும் அந்த ஆய்வின் போது தெரியவந்துள்ளது.[/size] [size=4]திருமணமாகி ஒரு வருடத்துக்குள் பெரும்பாலான விவாகரத்துகள் இடம்பெறுவதாகவும் 18 வயதுக்கு குறைந்த தாய்மார் 3, 892 பேர் இலங்கையில் இருப்பதாகவும் மேல் மாகாண சமூக சேவையாளர் பணிப்பாளர் அனுஷா கோகில பெர்னாண்டோ தெரிவித்தார்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  9. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தினால் அதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி உலகின் எந்தப் பகுதியிலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனை இந்தியா மௌனமாக வேடிக்கைப் பார்க்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களை இந்தியா வன்மையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு இடத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு பிரதமர் அனுமதிக்க மாட்டார் என அவர…

  10. மரவெள்ளி தோட்டத்திற்குள் வைத்து 14 வயதுச் சிறுமி 23 வயது இளைஞனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த சிறுமியின் மல்லாகத்தைச் சேர்ந்த தூரத்து உறவினர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லா சமயம் மேற்படி சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.இதன்போது குறித்த சிறுமியின் வீட்டிற்கு பின்புறமாக இருந்த மரவெள்ளித் தோட்டத்திற்குள் அச் சிறுமியை அழைத்துச் சென்று அங்குவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து தம்பிச் சென்றுள்ளார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதன் பின்னர் அச் சிறுமியின் பெற்றோரால் கோப்பாய் காவல்துறையில் …

  11. [size=4]துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான ஜனநாயக ரீதியான பலமான ஒரு நிலையை கிழக்கு தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி தந்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களின் ஆணையை துச்சமாக மதித்து அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ௭ம்.பி தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தலைமைப் பதவியில் இன்று இருந்திருந்தால் மக்கள் ஆணையை மதித்து தமிழ் முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளை மதித்து ௭வருக்கும் அடி பணியாமல் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஒரு நல்லா…

  12. [size=4]உலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "செப்ரெம்பர் 30 அளவில் மெனிக் பாம் முகாம் வெறுமையாகிவிடும். அடுத்த வாரமளவில் இங்குள்ள 1185 இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவர்" என மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் 23 அல்லது 24ல் இடம்பெயர்ந்து மெனிக் பாம் முகாமில் வாழும் 827 பேர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரைச் ச…

  13. யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ குகனேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன் தலைமையில் நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகனேசன், யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் இடம் பெற்ற தேடுதல் …

  14. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமை பங்களிப்பை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து இந்தியா இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படலாம் அல்லது இந்தியத் தரப்பினர் இலங்கையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கலாம் என்று எதிர்ப்பாhக்கப்படுகிறது. இதன்போது இலங்கையின் ஜனாதிபதியினால் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்தியா, கூட்டமைப்பை கேட்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள…

  15. சொந்த ஊர் செல்ல முடியாமல் மு.காவினர் கொழும்பில் முடக்கம் வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக மு.கா., அரசுடன் இணைந்து கொண் டதையடுத்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது சொந்த ஊர் செல்லமுடியாமல் கொழும்பில் திண்டாடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பெற்றுக்கொண்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமாயின், மு.காவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்குகளைச் சூறையாடிய மு.கா. அனைத்தையும் மறந்து அரசிடம் சரணாகதியடைந்தது. இப்போது மக்கள் விழிப்படைந்துவிட்டதை மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்…

  16. கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி நியமனங்கள் தொடர்பில் தற்போது இந்தக் கட்சிக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ளதாகவும் இதன் காரணமாகக் கட்சி பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கிடைக்கவுள்ள அமைச்சுகளை இந்தக் கட்சியின் தலைவரான ரவுப் ஹக்கீம் தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதன் காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளனர் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை, கட்சியின் உயர்பீடத்தின் அனுமதியைப் பெறாமலேயே முஸ்ல…

  17. “ஒரு பலம்வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களி;ன் விடிவுக்காக உலகத்தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்” என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விடுத்த அழைப்பை சத்திய வாக்காக சிரமேந்கொண்டு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் தமிழின விடுலைக்காக ஓயாது களமாடிவருகின்றனர். இன்றும் அந்த விடுதலைப்பாதையில் நின்று வழுவாது “எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற முழக்கத்துடன் ஜெனீவாவில் அலைகடல் எனத்திரண்டுள்ளது மறத்தமிழர் கூட்டம். முள்ளிவாய்க்கால் போர்க்களம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது மக்களை வெளியேவிடுங்கள் நாங்கள்(உலகம்) அவர்களது பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்துகின்றோம் என்று அழைத்த உலக நாடுகளும் உலகமகா சபையும் மூன்று வருடங்களாகியும் ராசபக்ச…

  18. யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிபவர்களது விபரங்களை திரட்டும் பணியில் சிறிலங்கா படை புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த விபரங்கள் திரட்டப்படுவது தொடர்பாக வெளியிடங்களுக்குத் தெரியப்டுத்தக் கூடாது என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.குறிப்பாக தீவுப் பகுதியில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் இருந்து வெளியானவர்களுடைய வீடுகளுக்கு நேரடியாக தம்மை சிறிலங்கா படையின் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு செல்லும் புலனாய்வாளர்கள் அவர்களுடைய விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னாள் போராளிகளை பின்தொடரும் நடவடிக்கைகளி…

  19. முல்லைத்தீவில் தமிழ் தேசியமக்கள் முன்னணியினரின் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுதிரும்பிக் கொண்டு இருந்தஅக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் மீதுமோட்டர் சைக்கிளில் வந்த இனம் தெரியாதநபர்கள் கல்லுவீசித்தாக்குதல் மேற்கெண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரனகளைமேற்கொள்டுள்ளனர். வாகனத்தின் கண்ணாடிதாக்குதலுக்கு இலக்காகியது. THX http://newjaffna.com

  20. விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் வீழ்ச்சி என்று கருதிவிடக்கூடாது. ஒரு வரலாற்று அத்தியாயம் புதைக்கப் பட்ட முல்லைத் தீவில் நாங்கள் இன்று புதிய ஒரு அத்தியாத்தை தொடங்கியிருக்கின்றோம். நாங்கள் எழுப்பிய கோஷங்கள் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு இது விளங்கியிருக்கும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கோப்பாப்பிளவு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: 'அழிவுகளையும் அடக்கு முறைகளையும் ஒடுக்குமுறை களையும் தான் ராஜபக்ஷ அரசாங்கம் வடபகுதி மக்க ளுக்கு பெற்ற…

  21. [size=4][/size] [size=4]இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு யோசனையை அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் 7 உறுப்பினர்கள், காங்கிரஸ் சபையில் சமர்பித்துள்ளனர். இந்த யோசனை மூலம் 5 விடயங்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.[/size] [size=4]இறுதிக்கட்ட போரில் நடந்த போர்க் குற்றங்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணைக்குழுவை நியமிக்க இணங்குதல், கைதுசெய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு சுதந்திரமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியன இந்த யோசனைகளில் பிரதானமான யோசனைகளாகும். 450 பேர் கொண்ட அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை 177 என பெயரிடப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  22. [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட மதியுரை நிறுவனத்தினுள், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research என்ற மதியுரை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரப் பின்னணியுடனேயே, இந்த மதியுரை நிறுவனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணிக்கு அமர்த்தியிருந்தது. இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை செய்து கொண்ட பின்னர், குறிப்பிட்ட நி…

  23. [size=2][size=4]கிளிநொச்சிவரை சக்திவாய்ந்த மின்பரிவர்த்தனை நிலையம்;[/size][/size] [size=2][size=4]25ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைப்பு[/size][/size] [size=2][size=4]வடமாகாண மின்விநியோக நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கை[/size][/size] [size=2][size=4]மின்சாரத்தை சீர்குலைத்தோருக்கும் பாகுபாடின்றி மின்சாரம்[/size][/size] [size=3][size=4]அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]வவுனியாவில் இருந்து கி…

  24. வன்னியில் மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம் ஆனால் அந்த மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களுக்கான போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை ஆனால் இந்த கேளிக்கைகில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையில் அவர்கள் செயற்ப்பாடுகள் அமைகின்றனவா ? இந்திய சபாநயகர் மீரா குமார் கொழும்பில் நடத்திய இரவு விருந்தில் சில காட்சிகள். http://thaaitamil.com/?p=32992

  25. [size=5]தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் [/size] [size=5](1890-இல் எடுக்கப்பட்ட படம்)[/size] [size=3]க் கண்காட்சி 19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் பாண்டிச்சேரியில் (இன்றைய புதுச்சேரியில்) புகைப்படக் கலையின் வளர்ச்சி பற்றி காண்பிக்கிறது. தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் (1890-இல் எடுக்கப்பட்ட படம்)[/size][size=1] [/size] [size=1][size=3]இந்தக் கண்காட்சி 19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் பாண்டிச்சேரியில் (இன்றைய புதுச்சேரியில்) புகைப்படக் கலையின் வளர்ச்சி பற்றி காண்பிக்கிறது. தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.