ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
[size=4]ஆட்சியில் இருந்த போது, இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., இப்போது இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அ.தி.மு.க,. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[/size] [size=4]கட்சியின் பொது செயலரும், முதல்வருமான ஜெ., தலைமையில் இன்று அ.தி.மு.க, செயற்குழு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பு : இந்த தீர்மான விவரம் வருமாறு: [/size] [size=4]ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்கள் கொன்று குவித்த நேரத்தில் எவ்வித செயல்பாடும் இல்லாமல் ஆட்சியில் இல்லாத நேரத்தில் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்காக மாநாடு நடத்துவ…
-
- 2 replies
- 541 views
-
-
பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை: - யசூசி அக்காஸி [sunday, 2012-08-26 11:24:46] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்குபாரியளவில் சேவைகள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாக இலங்கைக்கான ஜப்பானின் விசேடபிரதிநிதி யசூசி அக்காஸி தெரிவித்துள்ளார். வடக்கு மக்களை பொருளாதார, சமூக, அரசியல்,உளவியல் ரீதியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் 98 வீதம் பூர்த்தியாகியுள்ள போதிலும், மக்களின் பல தேவைகள் இன்னமும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீளஇணைக்கப்படும…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழ் மன்னனான எல்லாளனை சிங்கள மன்னன் துட்டகைமுனு அனுராதபுரத்தில் தோற்கடித்ததாக ஒரு வரலாறு சொல்கிறது.அதேவேளை, தேசத்தாய் பார்வதி அம்மா கர்ப்பமுற்று தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தன் வயிற்றில் சுமந்தபோது, திருவேங்கடம்பிள்ளை வேலுப்பிள்ளை ஐயா அவர்களுடன் அனுராதபுரத்தில் தங்கியிருந்தார். அந்த காலப்பகுதியில், எல்லாள மன்னனுடைய சமாதிக்கு அருகில் மாலை வேளைகளில் போய் உட்கார்ந்ததாகவும், அதனை பார்த்த சில பௌத்த பிக்குகள், தமிழ் கர்ப்பிணி பெண்ணொருவர் சமாதிக்கு அருகில் தொடர்ச்சியாக உ;டகார்வது, தமது சித்தாந்தத்துக்க ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என கருதியதால், பார்வதி அம்மா எல்லாளன் சிலைக்கு அருகில் அமைர்வதை அச்சுறுத்தல் மூலம் தடுத்திருந்தார்கள். ஆனால், சிங்கள பௌத்த பேரினவாத்துக்கு எதிர…
-
- 0 replies
- 844 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை மஹிந்த அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோரைத் தேடியறியும் குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது. மனித உரிமை அமைப்புகள் பல தெற்கிலிருந்து அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன. வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்னால் மு.ப. 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச காணாமல்போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணி திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு காணாமல் போனோரைத் தேடியறியும் குழு அழைப்புவிடுத்துள்ளது. அதேவேளை, அன்றைய தினத்தில் வட…
-
- 0 replies
- 414 views
-
-
பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவுநிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும் நடைபெற்றுள்ளது. தமிழர் தாயகத்தில்14.08.2006 அன்று சிங்கள கொலைவெறி அரசின்பறக்கும் இயந்திரக்கழுகள் அதிகாலை ஏவிய குண்டுவீச்சினால் 61 பள்ளி மாணவிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்அரவணைப்பும், ஆறுதலான உறவுகளும் என்று பெற்றவர்கள் யார் என்றுதெரியாவிட்டாலும் பெருமிதத்தோடு தேசியத்தலைவரின் அரவணைப்பில் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் கோழைத்தனமாக கொல்லப்பட்டு 6 வருடங்களாகி விட்டது. என்று மனதையும், நினைவையும்,விட்டு மாறாத குழந்தைகளின் நினைவு நிகழ்வையும், றாஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுதூக்குத்தண்டனை கைதிகளின் விடுதலைக்காக தண்டனையை இரத்துச்செய்ய கோரி தீக்கு…
-
- 0 replies
- 417 views
-
-
அன்றும் போராளி இன்றும் போராளி - சஞ்சயன் அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தே…
-
- 12 replies
- 1.9k views
-
-
[size=5]இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு [/size] [size=4]அரசுக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பலம்பொருந்திய இரு மேற்குலக நாடுகளும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கிவருகின்றன என்று அரச புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது என அறியமுடிகின்றது. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றும், அது தொடர்பிலான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகிறது. நாட்டில் அண்மைக்காலமாக அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வர…
-
- 3 replies
- 592 views
-
-
தெற்கில் பாணந்துறைக்கு அருகாமையில் மூழ்கிவரும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்யை கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 – 10 கடல் மைல் தொலைவில் பரவி வருகின்றது.. இந்த எண்ணெய்க் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் ஊறப்படுகின்ரது. சுமார் 20 – 30 தொன் எரிபொருளுடன் பாணந்துறை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்று மூழ்கிவருவதாக மேர்சன்ட் ஷிப்பிங் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன கூறியுள்ளார். வழக்கொன்றின் காரணமாக நான்கு வருடங்களாக இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.தேர்மோபிலே சியெரா எனும் இக்கப்பல், கிரேக்க நாட்டிலுள்ள கப்பல் நிறுனவமொன்றுக்கு சொந்தமானதாகும். கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் பாணந்துறை கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்த…
-
- 29 replies
- 1.8k views
-
-
[size=4]கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சரானது நான் போட்ட பிச்சையினாலேயே. ஆனால், அவர் மீண்டும் முதலமைச்சராவார் என பகல் கனவு காண்கிறார் எனத் தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். நேற்று மட்டு வாழைச்சேனையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:[/size] [size=4]கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. இதன் காரணமாகத்தான் பிள்ளையான் முதலமைச்சராக வந்தார். எனவே அவர் வகித்த முதலமைச்சர் பதவியானது. நான் போட்ட பிச்சை. இதை மறந்துவிட்டுத்தான் அவர் தற்போது எனது சகோதரிக்கு எதிராக பிரசாரம் செய்து திரிகின்ற…
-
- 1 reply
- 497 views
-
-
[size=4]நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]வாழைச்சேனையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரகார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். வாழைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத்இ சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.[/size] …
-
- 2 replies
- 554 views
-
-
ஓர் இனம் தனது பெருமைகளை, வரலாற்றுப் பொக்கிங்களை, இனமான அறிஞர்களை அறிய விரும்பாதவிடத்து அந்த இனம் உலகில் அழியும் இனங்களின் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்ளும் என துணிந்து கூறலாம். எனவே இனப்பற்றை ஏற்படுத்தவேண்டுமாயின் அந்த இனம் சார் வரலாற்றுப் பெருமை களை அறிவதற்கான ஏற்பாடுகளை செய்வது அவசியம். அந்த வகையில் எங்கள் தமிழ் இனம் தன்னிடம் இருக்கக் கூடிய வரலாற்றுப் பெருமை களை, தமிழ் அறிஞர்களை; இளம் சமூகம் அறிதலுக்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். அவ்வாறான ஏற்பாடுகளைச் செய்யும் போது, அரசியல் பாகுபாடுகளோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கோ இடம் கொடுத்தல் ஆகாது. அவ்வகையில் யாழ்ப்பாண நகரம் மற்றும் தற்போது அழகுபடுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் எங்கள் தமிழ் …
-
- 1 reply
- 653 views
-
-
சாரதி தூங்கி விட்டதால் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த 13 பேர் விபத்துக்குள்ளாகினர் - பெயா் விபரம் வெளியானது! [Monday, 2012-08-27 10:27:02] இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த 13 பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜோன் (வயது 28), மட்டகளப்பு பகுதியை சேர்ந்த குமுதா(45), நேசலட்சுமி (43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்கள் ஆண்டனி இருதயராஜ் (32), அஞ்சலின்(22), அகிலன் (20), அருள்தாஸ் (32), அரசன் (3) உள்பட 17 பேர் சுற்றுலாவாக தமிழகத்தை சுற்றிப்பார்க்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். அவர்கள் சென்னையில் சுற்றுலா வான் ஒன்றை வா…
-
- 0 replies
- 810 views
-
-
[size=4]மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை தொலைபேசியில் அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் செல்ல மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டார். கடந்த ஜுலை மாதம் 18ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றைத் தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக மன்னார் நீதிமன்றத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதோடு குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் றிஷாட் ப…
-
- 0 replies
- 658 views
-
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ற அரசியல் கோமாளி...? ' துன்பம்' என்று ஒப்புக்கொள்கிறார் - ஈழதேசம் செய்தி..! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சொல்லிக்கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் நேற்று மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். துன்பத்தில் உள்ளவர்களிடம் 'தனி ஈழம்' என கூறி திசை திருப்பி வாழ்வை குலைப்பது தவறான போக்கு என்று செப்பியுள்ளார். தி.மு.க., நடத்திய டெசோ மாநாடு தேவையில்லாதது. இலங்கையில் உள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே துன்பத்தில் உள்ளவர்களிடம் 'தனி ஈழம்' என கூறி திசை திருப்பி அவர்களது வாழ்வை குலைப்பது தவறான போக்கு என்று கூறியுள்ளார். ஆக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இலங்கையில் தமிழ் மக…
-
- 0 replies
- 528 views
-
-
உலகிலேயே முதலாவது எண் கோண வடிவ நீர்த்தடாகம் அமைத்து ஈழத் தமிழ் இளைஞன் சாதனை.! Friday, August 24, 2012, 17:03 [size=3][size=1][size=4]யாழ் பண்டத்தரிப்பில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் உலகிலேயே முதன் முறையாக எண் கோண வடிவிலான நீர்த்தடாகம்[/size][/size] [size=4]ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த் தடாகத்தை மல்லாகத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பொறியியலாளர் அமைத்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகளில் முற்றுமுழுதாக இளைஞர்களே பணியாற்றியுள்ளனர். யாழில் தென்னிந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞரின் முயற்சி அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தென்னிந்திய கட்டடக் கலைக்கு மிஞ்சியதாக இந்த இளைஞனின் படைப்பு அமைந்துள்ளது.[/si…
-
- 24 replies
- 2.2k views
- 1 follower
-
-
சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலிப் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கோயிலுக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவாள புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளோர். மிருகபலிக்கு எதிராக புத்தபிக்குகளின் காரூண்யம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இதே பிக்குகள்தான் தமிழர்களை கொல்ல வேண்டும் என போர்க்கொடி பிடித்திருக்கிறார்கள். http://thaaitamil.com/?p=30139
-
- 7 replies
- 1.1k views
-
-
டெசோ மாநாடு முடிந்தும், முடியாத ஈழத் தமிழர்களின் அவலமும்..! ஈழதேசம் பார்வையில்..! ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை ( ஆச்சியை அல்ல..! ) பறிகொடுத்துள்ளது தி.மு.க., என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என்று கனிமொழி கூறியுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானத்தை விளககி நடந்த பொதுக் கூட்டத்தில் தான் இவ்வாறு கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின். கடந்த 12 - ம் தேதி நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துக் கூறத்தான் இந்த கூட்டம். அவை பெயருக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அவற்றை செயல்படுத்தக் கோரி தீர்மான நகலை ஐ.நா.சபையிடம் நேரடியாக கொடுக்கவிருக்கிறோம். நா…
-
- 0 replies
- 1k views
-
-
ஈரானில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து "நலம்" விசாரிக்கப் போகிறார் மன்மோகன்சிங்? Published: திங்கள்கிழமை, ஆகஸ்ட் 27, 2012, 10:24 [iST] டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஹ்ரானில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் அணிசேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ஈரானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நாளை புறப்பட்டுச் செல்கிறார். அவர் 3 நாட்கள் அங்கு தங்குகிறார். இந்த பயணத்தின் போது வெளிநாட்டுத் தலைவர்களையும் மன்மோகன்சிங் சந்திக்க உள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர…
-
- 1 reply
- 483 views
-
-
கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர். 4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81710/language/ta-IN/article.aspx
-
- 8 replies
- 2.1k views
-
-
உடைந்துபோன சிறிலங்கா - மேற்குலக உறவுகளை ஒட்டவைக்கப் போகிறதாம் ஜப்பான் [ திங்கட்கிழமை, 27 ஓகஸ்ட் 2012, 01:49 GMT ] [ தா.அருணாசலம் ] மனிதஉரிமைகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளால் சீர்குலைந்து போயுள்ள மேற்குலகுடனான உறவுகளை சீர்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உதவ ஜப்பான் தயாராக உள்ளதாக மூத்த ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபரைத் தாம் சந்தித்தபோது இதுபற்றி எடுத்துக் கூறியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் இடையிலான உறவுகளை விருத்தி செய்யும் முற்சிகளில் உதவத் தயாராக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க ஆ…
-
- 0 replies
- 542 views
-
-
[size=4] [/size] [size=4]உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகக் கடமையாற்றி வந்த பசீர் சேகுதாவூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.[/size] [size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் சற்று முன்னர் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, 'அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அரசில் அமைச்சர் பதவியொன்றைப் பெறுவதற்காக, தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து, தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்ல…
-
- 6 replies
- 627 views
-
-
சென்னை: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திமுகவின் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மூலம் விரைவில் ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு அனுப்பி வைப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழ் ஈழம் என்று குரல் கொடுத்தவர்கள் இன்று எதிர்ப்பு குரல் தெரிவித்தால் என்ன பொருள்? நாதஸ்வர இசை முழங்கும்போது பக்கத்தில் உள்ள இன்னொரு வித்வானும் அதற்கு ஏற்றார் போல் நாதஸ்வரம் வாசித்தால் தான் கச்சேரி களைகட்டும். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொடுக்க நானும், சில தமிழக தலைவர்களும் சேர்ந்து டெசோ மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அந்த மாநா…
-
- 8 replies
- 1.2k views
-
-
1984 நவம்பர் 30ம் திகதி மாலை 6.30 மணி. பலாலி இராணுவ முகாமில் இருந்து ஒரு பெல ரக ஹெலிகொப்டர் புறப்பட்டது. அப்போது பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்து முதலாவது சிங்க ரெஜிமென்டின் சி கம்பனிக்கு கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் சரத் பொன்சேகா. அவருக்கு கீழ் பணியாற்றிய கப்டன் அருண ஜெயதிலக, லான்ஸ் கோப்ரல் குரே, கோப்ரல் ரத்நாயக்க ஆகியோரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்தக் ஹெலியை பிளைட் லெப்டினன்ட் அஜித் தாப்ரே செலுத்தினார். அது ஒரு கண்காணிப்பு பயணம். யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள கடலில், படகுகளில் விடுதலைப்புலிகள் வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டியது அவர்களின் பணி. அப்போதெல்லாம் இரவு நேரங்களில் ஹெலியிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் பாய்ச்சப்பட்டு இந்தத் தேடுதல் நட…
-
- 0 replies
- 791 views
-
-
மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாறையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்தர ராஜபக்ச உரையாற்றவிருந்தார். அதற்காக அலங்காரங்களுடன் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையே இன்று காலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது. இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்கா…
-
- 5 replies
- 848 views
-
-
வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைப்பு. நாடாளுமன்ற தெரிவுக்கான வன்னி தேர்தல் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மொனராகல மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்தே, ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. 2009இல் வன்னி தேர்தல் மாவட்டதில், 270,701 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2010இல் இந்த எண்ணிக்கை 236,449 ஆக குறைவடைந்தது. 2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 221,409 வாக்களர்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால், வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கான ஆசன ஒதுக்கீடு ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்ட…
-
- 5 replies
- 733 views
-