ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
கொழும்பின் சொத்து சீனாவுக்கு விற்பனை! இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபம் [size=2]Sunday, August 12, 2012, 3:57[/size] [size=3]கொழும்பின் பிரதான சொத்து ஒன்றை சீனாவுக்கு ஒதுக்கியுள்ளமை குறித்து இந்தியா, இலங்கையிடம் தமது கடும்[/size] [size=3]ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.[/size] [size=3]புதுடில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சு இலங்கை வெளியுறவு அமைச்சிடம் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=3]கொழும்பின் காலி வீதிக்கும் டுப்லிகேசன் வீதிக்கும் முகப்பாக உள்ள விட்டால் ப்லுஸ்டெட் மற்றும் நிறுவனம் (Whittal Boustead and Company) சீனாவின் விமான உற்பத்தி நிறுவனமான CATIC க்கு வழங்கப்பட்டுள்ளது.[/size] [size=3]இந்த சொத்து விற்பனை தொகை குற…
-
- 1 reply
- 810 views
-
-
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளிக்கும் நாடுகளி மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை நிறுத்த தவறின், சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் வழமை நிலையைக் கொண்டுவருவதிலும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு அவை தடைப்பட்டு போகலாம் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இன்றைய காலத்தில் பயங்கரவாதம் பல வடிவங்களில் வெளிப்பட்டு பல நாடுகளையும் பாதித்து வருகின்றது. கூட்டுச் செயற்பாடு, தகவல்களை பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைப்பு என்பவை மூலமே இந்த நாசகார சக்திகளை ஒழிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இழந்தவற்றை ஈடுசெய்தல், அறவிடுதல், அரவணைத்தல் என்பவையே பலனளிக்கும். சகல பிரச்சினைகளுக்கும் பொருத்தமான சர்வ நிவாரணி என்று எதுவுமில்லை.' நியாயமான…
-
- 0 replies
- 493 views
-
-
திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் இன்று இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் இன்றைய நாளைக் கழித்தனர். தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர். ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிருந்து திரு. சிவந்தன் அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து…
-
- 0 replies
- 371 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றஞ்சாட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்…
-
- 0 replies
- 204 views
-
-
உன்னிச்சைக் கிராமத்தில் பள்ளிவாயலுக்கு தீ வைப்பு. உன்னிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடரியினால் நேற்று மாலை வெட்டித் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து உன்னிச்சைக் கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை ,பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீடு நேற்று சுமார் 12.30 மணிக்குப் பிறகு முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பெண் வளர்த்து வந்த ஆடுகளுக்கும் எரியூடடப்பட்டுள்ளதாகவும் இதேவேளை உன்னிச்சை முஹ்யித்தீன் ஜூம்மாப் பள்ளிவாயலுக்கும் இரவோடு இரவாக தீ வைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளியின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ளதாகவும் மேலும் ஏனைய பகுதிகள்; சேதமடைந்துள்ளதாகவும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்த…
-
- 4 replies
- 744 views
-
-
[size=3] ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும் சிதைந்து போகும் சின்னங்களும்-01 [size=4]இலங்கையில் எங்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுகின்றதோ அங்கெல்லாம் அதிக பாதுகாப்பும் அவ்விடத்தை முக்கியத்துவப்படுத்தி சிறப்பு கவனிப்புக்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களை பொருத்தவரை இது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் அறிந்ததே. யாழ்பாணத்தில் எத்தனையோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்ற போதும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலவற்றை தவிர ஏனைய வரலாற்று முக்கியம் வாய்ந்த இடங்கள் கவனிக்கப்படாது விட்டு விடப்பட்டன என்பது கவலைகுரியதே. அந்த வகையில் யாழ்பாண வாழ் தமிழனாக எனது மன வேதனையை வெளிப்படுத்துவதே இப்பதிவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]வேலூரில் நாளை நடைபெற உள்ள இந்து ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமைய கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-[/size] [size=4]இந்து மக்கள் கட்சி சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை இந்து, ஈழ ஆதரவாளர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமையக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். தி.மு.க. நடத்த உள்ள டெசோ மாநாடு காங்கிரஸ் கட்சிக்கும், ராஜபக்சேவுக்கும் ஆதரவாகவே நடத்தப்படுகிறது.[/size] [size=4]எங்களுக்கு எந்த தடை விதித்தாலும் தனித்தமிழ் ஈழம் தீர்மானத்தை நிறைவேற்றுவோம். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாத…
-
- 2 replies
- 952 views
-
-
[size=4]புலம்பெயர் தமிழர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. 22 பேரைக் கொண்ட புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளே குமரன் பத்மநாதனின் ஏற்ப்பாட்டில் இவ்வாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.[/size] [size=4]யுத்த வலய தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மனிதாபிமான விவகாரங்கள், வடக்கு கிழக்கு புனரமைப்பு, புனர்வாழ்வு போன்ற விடயங்கள் தொடர்…
-
- 2 replies
- 410 views
-
-
ஈழத் தமிழர்கள் அழுது துடிப்பது இன்று நேற்றல்ல.காலாகாலமாக அனுபவிக்கின்ற பெரும் துயரம் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை ஒரு கணம் புரட்டிப் பார்த்தால், இக்காலப் பகுதிக்குள் ஆட்சியில் இருந்த அரசுகளின் கட்டளைப்படி தமிழர்களின் பிரதேசங்கள் மீது நடத்திய எறிகணைத் தாக்குதல்கள்,விமானக் குண்டு வீச்சுக்கள் என எல்லையற்ற நாசகாரங்கள் நடந்தேறின. 1995இல் யாழ்ப்பாணத்தில் மேற் கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கையால் தமிழ் மக்கள் தங்கள் தேட்டங்கள் அத்தனையையும் இழந்ததுடன் மிக மோசமான இடப் பெயர்வையும் சந்தித்தனர். இதற்கு மேலாக 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பெரும்போர் 3 ஆண்டுகள் உக்கிர சன்னத மாடி, வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களை காவுகொண்ட துயரம் இன்னமும் நீ…
-
- 0 replies
- 418 views
-
-
[size=2][/size] [size=2]தமிழ்க் கொலை.[/size] [size=2]மொழிப் பிரயோகம் சரியாக அமையாவிட்டால் அம் மொழிக்குத் தான் கேடு. தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற தொன்மை வாய்ந்த மொழி. மொழியியல் வல்லுனர்களே போற்றிப் பாராட்டும் சிறப்புக் கொண்டது. ஆனால், தமிழுக்கு அரச கரும மொழி அந்தஸ்து பெற்ற எமது நாட்டில் சில அரச காரியாலய பெயர்ப் பலகைகளில் கூட சரியான சொற் பிரயோகங்களைப் பார்க்க முடிவதில்லை.[/size] [size=2]கீழுள்ள பெயர்ப் பலகையில் 'இலங்கை மின்சார சபை' என இருக்க வேண்டிய நிலையில் 'இலங்கை மீன்கார கபை' எனவும் 'பாவனையாளர் சேவை மத்தியஸ்தானம்' என வர வேண்டிய இடத்தில் 'பாவனையானர் உவை மத்நியஸ்தான' எனவும் 'கடுவான வீதி, ஹோமாகம' என்பது 'கடுவான விதி, ளூமாகம' எனவும் மிக மோசமான எழுத்துப் பி…
-
- 2 replies
- 647 views
-
-
[size=4]எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு விமானமொன்றில் ஏற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் கனேடிய எல்லை சேவைகள் முகவரக அதிகாரியொருவர், தாதியொருவரும் அனுப்பப்பட்டுள்ளனர். தமக்கு மோசமான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கனேடிய மகளும் பேத்தியும் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணுக்கு அனுசரணை வழங்குவதற்கு பதிலாக அகதி அந்தஸ்து கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்னர். 'அவர் அங்…
-
- 10 replies
- 998 views
-
-
சென்னையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்த, "இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' (டெசோ) இன்று நடக்குமா, நடக்காதா என்ற நிலையில், "ஈழம்' குறித்து பேசும் கருணாநிதி, தான் ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, "ஈழம்' குறித்து பேசியவர்கள் மீது, அவர் தொடுத்த யுத்தங்கள் அதிகம். கடந்த, 1990 ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்த போது, பழ.நெடுமாறன், "தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு' நடத்த திட்டமிட்டார். அந்த மாநாட்டில், "ஈழம்' என்ற தலைப்பில், கண்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தவிர, மாநாடு தொடர்புடைய, சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், 1996ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இ…
-
- 1 reply
- 964 views
-
-
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரி…
-
- 1 reply
- 1k views
-
-
[size=4]சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இம்மாநாட்டில் தான் பங்குபற்றுவதாக தான் உறுதிப்படுத்தவில்லை என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கலைஞர் கருணாநிதி தொலைபேசியில் தாம் கலந்து கொள்வது பற்றி உரையாடிதாகவும் ஆனால் தாம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார். இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதில்லை…
-
- 5 replies
- 981 views
-
-
http://puthiyathalaimurai.tv/new/ ஹிந்து ராம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றி புதிய தலைமுறை தொலைக் காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் குணசேகரன் கேள்விகளால் துளைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். எந்தக் கேள்விக்கும் ராமிடம் நேர்மையான பதில் இல்லை
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]இலங்கை குடிவரவு குடியகழ்வு சட்டங்களில் பாரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]குடிவரவு, குடியகழ்வுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நாட்டில் அண்மைக்காலமாக சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்போருக்கும் அதற்கு துணை நிற்போருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் …
-
- 1 reply
- 928 views
-
-
[size=5]'சாட்சி பாதுகாப்பு' சட்டமூலம் தயாரிப்பு நடவடிக்கை ஆரம்பம்[/size] [size=4]அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள 'சாட்சி பாதுகாப்பு' சட்டமூலத்தை தயாரிக்கும் வேலைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள், தராதரங்களுக்கு அமைய இலங்கையில் இவ்வாறான சட்டத்தை கொண்டுவரும்படி சர்வதேச நிறுவனங்கள் இலங்கையிடம் கேட்டிருந்தன. இந்த சட்டமூலத்தை சட்டவரைஞர் திணைக்களம் தயாரித்து வருகிறது என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார். சட்டமா அதிபர் இதை அங்கீகரித்ததும் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அவர் கூறினார். [size=5]ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் ரவூப…
-
- 2 replies
- 353 views
-
-
இலங்கை அரசாங்கம் தற்பொழுது மேற்கொள்வதற்கு ஒரே ஒரு விடயமே உள்ளது. அந்த வகையில் சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைகளை அங்கீகரிப்பதுடன் அரசியல் அமைப்பில் சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமாக விரைவான அதிகாரப் பரவலாக்கல் ஒன்றுக்கு செல்லவேண்டும் ௭ன்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவரும் பொருளியல் வல்லுனருமான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் வரலாற்று ரீதியான வெற்றியை அடைந்துள்ளது. இதன் பொருட்டு இலங்கை அரசாங்கம் பல தியாகங்களை செய்துள்ளது. இந்த வெற்றியை யாரும் குறைவாக கணி ப்பிடக்கூடாது. இந்தியா இலங்கைக்கு மிகவும் நன்றிக்கடனைக்கொண்டுள்ளது. அத்துடன் புலிகளுக்கு ௭திரான வெற்றியில் இந்தியாவுக்கே அதிக பயன் கிட்டியுள்ளது ௭ன்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்கத்த…
-
- 2 replies
- 948 views
-
-
[size=3][size=4]சென்னை: என்னிடம் இருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் படத்தைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உணர்வாளர் க.சி.வாசன்.[/size][/size] [size=3][size=4]சென்னையில் அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை உருவாக்கியவர் க.சி.வாசன். ஆட்டோ என்பதன் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி-auto).[/size][/size] [size=3][size=4]இவரது தானிக்கு (ஆட்டோ) தனிச் சிறப்பு உண்டு. தானி எங்கும் தமிழரின் குரலாகத் தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக்குமரன். திருவள்ளுவர் படங்கள் , உள்ளே பிரபாகரன் படம் என்று இருக்கும்.[/size][/size] [size=3][size=4]பயணிகள் பலரும் உள்ளே ஏறியவுடன் ஒலிக்கும…
-
- 3 replies
- 811 views
-
-
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன. இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது. கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
இருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக “புதிய தலைமுறை” தொலைக்காட்சியின் செய்தியாளர் சக்தி கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே திரு. சிவந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். நேற்று திரு. சிவந்தன் உண்ணாநிலைப்போரட்டத்தை மேற்கொண்டுவரும் கூடாரத்துக்கு வந்த “புதிய தலைமுறை” தொலைக்காட்சியினர் அவரது விரிவான நேர்காணலை ஒளிப்பதிவு செய்தனர். ரெசோ மாநாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாகவும், இம்மாநாட்டின் மூலம் தமிழ் ஈழம் அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த…
-
- 1 reply
- 933 views
-
-
சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவுக்கு எதிராக சிங்களத்தேசியவாதிகள் கடும் தாக்குதல் தொடுத்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான விடுதலைப் புலிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், 383 பேர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அந்தக் கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் அனைவருக்கும் சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், போர…
-
- 1 reply
- 900 views
-
-
[size=4]அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரியதாஸ் டெல்றொக்சனின் பூதவுடல் இன்று மாலை 4 மணிக்கு யாழ்.நீதிமன்ற அனுமதியுடனும், யாழ். பொலிஸாரின் பாதுகாப்புடனும் குருநகர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. யாழ்.பொலிஸாரினால் நேற்று முன்தினம் யாழ். நீதிமன்றில் குறித்த இளைஞனின் சடலத்தை நேற்றைய தினம் 4 மணிக்கு அடக்கம் செய்யுமாறும் மரண ஊர் வலத்தில் குடும்பத்தினர் மட்டுமே காணப்படல் வேண்டும் என்றும் அத்தோடு வாத்திய(பான்ட்) முழக்க மின்றி அடக்கம் செய்வதற்கும் யாழ். நீதிமன்ற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனைப் பரிசீலித்த யாழ்.நீதிவான் மா.கணேசராஜா, பொலிஸாரினால் குறிப் பிடப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும…
-
- 0 replies
- 840 views
-
-
[size=4]லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது.[/size] [size=4]இந்நிலையில் சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பன்னாட்டுத் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் என பரந்துபட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியமான பணியாக அமைந்துள்ளது.[/size] [size=4]யூலை 22ம் திகதி நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுப் பேரணியிலிருந்து இன்று வரை பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு…
-
- 2 replies
- 391 views
-
-
[size=4][/size] [size=4]தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் பங்குகொள்ள நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண இன்று சென்னை பயணமாகவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கருணாரட்ண முன்னதாக சமர்ப்பித்திருந்த வீஸா அனுமதிக் கோரிக்கை இந்திய தூதரகத்தால்ட மறுக்கப்பட்டிருந்தது. ஆயினும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது.[/size] [size=4]அத்துடன் தான் அம் மாநாட்டில் கலந்து கொள்வதை தடுக்க பலமான பின்னணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கருணாரட்ண குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று கருணாரட்ண இந்தியா செல்வதற்கான வீஸா அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர் மாநாட்ட…
-
- 0 replies
- 309 views
-