ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143390 topics in this forum
-
மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ‘அரசிடம் புள்ளிவிபரம் இல்லை’ இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறார் நலத்துறை துணையமைச்சர் தெரிவித்தார். ஆனால், நாட்டில் சிறார் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ். மாநகர சபையின் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்ததோடு கலாசார சீரழிவுகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டதனாலேயே யாழ். கோயில் வீதியில் உள்ள “நாது’ விடுதி இழுத்து மூடப்பட்டது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மேலதிக விளக்கங்களுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ். நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த மாதம் 23 ஆம் திகதி யாழ். மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் அந்த விடுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த விடுதி உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கிவந்தது தெரியவந்தது. அத்த…
-
- 0 replies
- 627 views
-
-
இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்டஅபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலை கட்டிடம், அதிபர் விடுதி, கணணி பிரிவு என்பனவற்றை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர்.அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேலும் கூறியதாவது: இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குல…
-
- 6 replies
- 863 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி யுனிசெப்புடன் இணைந்து சிறுவர் போராளிகளை விடுவித்ததமையை அடுத்து அக்கட…
-
- 7 replies
- 1.3k views
-
-
பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட சுமார் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியான போலியான இந்திய நாணயத்தாள்கள், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஊடுருவ செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய போலி நாணயங்கள் குறித்த தேசிய விசாரணைகள் குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போலி நாணய அச்சிடும் முகவர்களால் அச்சிடப்பட்ட இவ்வாறான நாணயத்தாள்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், ஹொல்லேண்ட் போன்ற நாடுகளில் பரவியுள்ளன. இது தொடர்பில் தொடர்சியாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், புலக்கத்தில் உள்ள 28 தொடக்கம் 30 சதவீதமான போலி நாணயத்தாள்களை காவற்துறையினரால்…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய அரசாங்கம் தனது குடிவரவுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை சட்டங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு கிரிமினல்கள் ஐக்கிய இராச்சியத்தில் நுழைவதை தடுப்பதற்கும் நாடுகடத்தல்களை தவிர்ப்பதற்கும் குடியேறுபவர்கள் தமது குடும்ப வாழ்க்கையை சொந்த நிதியியில் மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்படுகிறது. குடும்ப குடிவரவு சலுகைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதையும் அரச சேவை மீதான அழுத்தங்களை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பிரித்தானிய குடிவரவுக் கொள்கையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு…
-
- 1 reply
- 980 views
-
-
யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளதுடன், இடமாற்றத்திற்கு தமது கடுமையான எதிர்பையும் வெளியிட்டிருக்கின்றனர். திருமதி.பொன்னம்பலம் ஓய்வுபெற்ற பின்னர் அதிபராக திருமதி இராஜினிதேவி முத்துக்குமாரன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபராக எந்த விதமான முன்னறிவித்தலுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்தே இன்று பிற்பகல் 2மணி தொடக்கம் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த திடீர் இடமாற்றத்திற்கு அமைச்சர் ஒருவரே காரணம் என பாடசாலை சமுகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதிபருக்கும் அவருக்கும…
-
- 0 replies
- 638 views
-
-
பூசா தடுப்பு முகாமில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னால் பெண் போராளி ஒருவரின் சகோதரியை பணயமாக்கி குறித்த முன்னால் பெண் போராளியை மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ள சம்பவம் வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருகையில். வெளிநாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காக அண்மையில் தொடர்ச்சியாக முன்னால் போராளிகளை புணர்வாழ்வளித்து கட்டம் கட்டமாக சிறிலங்கா அரசு விடுவித்து வருவதாக நாடகமாடிவருகின்றது. அதன்படி அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குறித்த பெண் போராளி வன்னியில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கை பரவலாக இடம்பெற்று வரும் நி…
-
- 0 replies
- 790 views
-
-
கணபதிப்பிள்ளை உதயகாந்தனின் கொலைக்குக் காரணம் தனிப்பட்ட பிரச்சினைதான் எனக்கூறப்பட்ட போதிலும், அதன் பின்னணியில் இனம்தெரியாத ஆயுதக்குழு ஒன்று சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவரின் சடலம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை தெரிந்த்தே. அவரின் சடலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திறப்பும்தலைக்கவசமும் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளையில் அவர் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் சிம் அட்டையும் செயலிழந்த நிலையில் அங்கு இருந்தன. சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் அவரின் மோட்டார் சைக்கிள் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இருந்து பம்பலப்பிட்டிபொலிஸாரி…
-
- 0 replies
- 849 views
-
-
லீனா மணிமேகலை பிடிபட்டார்! by வினவு, June 12, 2012- பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார். காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள், ______________________________________________ புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘JUSTICE’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜ°டி° கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31…
-
- 1 reply
- 3.6k views
-
-
தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது. எதிர்வரும் (யூன்) 15 - 16 - 17ம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளிலும், சர்வமத வழிபாட்டுத் தலங்களில் , இதற்கான ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ,அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்ட…
-
- 1 reply
- 458 views
-
-
முள்ளிவாய்க்காலில் சல்லடை போட்டு தேடுதல் செய்யும் இராணுவத்தினர் பொதுமக்கள் மத்தியில் பீதி முள்ளிவாய்க்கால் பகுதியை சல்ல டை போட்டு அங்குலம் அங்குலமாக இராணுவத்தினர் தேடிவருகின்றனர் என அப்பகுதியிலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தன.யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய பிற்பாடும், ஆன ந்தபுரம், சாலை, வலைஞர்மடம், புதுமாத்தளன்,இரட்டைமுள்ளிவாய்க்கால் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதியை இராணுவத்தினர் தொடர்ந்தும் கடும் தேடுதலுக்கு உள் ளாக்கி வருகின்றனர். இங்கே காணப்படும் மனித எலும்புக ளை உருக்கி உக்கவைக்க சில திரவங்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். இதனைத் தவிர விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த இராணுவத் தளபாடங்கள், ஆ…
-
- 1 reply
- 573 views
-
-
வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடருக்கான தயார்படுத்தல்களை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மனிசா குணசேகரவே மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நகர்வுகள் ஏதும் இந்தக் கூட்டத்தொடரில் இடம்பெற வாய்ப்பில்லை என்பதால், இவரே இம்முறை சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. அண்மைக்காலமாக சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வந்ததால், சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகார ஆலோசகரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவே பங்கேற்று வந்தது. ஆனால், இம்முறை மகிநத …
-
- 0 replies
- 690 views
-
-
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப் பீட மாணவி ஒருவர் பகிடிவதை என்ற போர்வையில் தனக்கு நேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தக் கடிதத்தை பல்கலைக்கழக உபவேந்தர் உயர்கல்வி அமைச்சர் எஸ்பி.திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் பொருளாதார தடைகளிலிருந்து இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு 6 மாத காலத்திற்கு விதிவிலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, மலேஷியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இவ்விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இந்நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்துக் கொண்டமையே இதற்கான காரணம். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 11 நாடுகளுக்கு இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அணுவாயுதங்களை ஈரான் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் சர…
-
- 0 replies
- 1k views
-
-
நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் …
-
- 26 replies
- 2.1k views
-
-
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு நபர்கள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் லண்டனில் கல்வி பயிலும் குறித்த தமிழ் வர்த்தகரின் மகனின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது. லண்டனில் கல்வி பயிலும் வர்த்தகரின் மகனைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி அவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்க்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். தமக்கான கப்பப் பணமான 50 லட்ச ரூபாவையும் ஸ்ரேலிங் பவுணாக வழங்குமாறு கோரியுள்ளனர். மேல் மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒ…
-
- 0 replies
- 558 views
-
-
வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியில் இருந்து வருகின்ற திருமுறிகண்டி கிராமத்தில் உள்ள தமக்குச் சொந்தமாக காணிகளில் தாங்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும், இராணுவத்தின் பொறுப்பில் உள்ள அந்தக் காணிகள் தங்களிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக்கோரி, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். இந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை அதியுயர் பாதுகாப்பு வலயம் என பிரகடப்படுத்தி இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வந்துள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாத காரணத்தினாலேயே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யப்படவில்…
-
- 0 replies
- 431 views
-
-
தமிழ்மக்களின் முதன்மை தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காம முருகன்ஆலய வளாகத்தில் உல்லாச விடுதி அமைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது! கதிர்காம முருகன் ஆலய வளாகத்தில் நிலத்தினை கையகப்படுத்தி அங்கு உல்லாச விடுதிஅமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் கோரிக்கையினை இரத்து செய்யுமாறு நீமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பினை கையகப்படுத்தி அங்கு விளையாட்டு திடல் உல்லாச விடுதிகளை அமைக்கும் முயற்சியினை சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக வி…
-
- 0 replies
- 503 views
-
-
ஐ.நாவின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டது! ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பன ஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியிலில் சேர்க்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசனின் கருத்து அமெரிக்க ராஜாங்கக் கொள்கைககளுக்கு அமைவானது என அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட சிசன் அண்மையில் இலங்கையில் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்க ராஜாங்கக் கொள்கைகளுக்கு அமைவானதே என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய தூதுவர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக வெளிவிவகார செனட்சபையில் சிசன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். மனித உரிமை விவகாரம், வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், வட மாகாணசபை தேர்தல் உள்ளிட்ட சில விடங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். அமெரிக்கத் தூதுவரின் கருத்துக்கும் அமெரிக்க ரா…
-
- 2 replies
- 792 views
-
-
-
- 0 replies
- 553 views
-
-
யாழ் பரமேஸ்வரா சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் மது போதையில் சென்ற சிங்கள குழுஇளைஞர்கள் உந்துருளியில் பயணித்த தமிழ்இளைஞர்கள் இருவரை கடுமையாக தக்கியுள்ளார்கள். ஊர்தி ஒன்றில் சென்று கொண்டிருந்த 6பேர் அடங்கிய சிங்கள இளைஞர்கள் உந்துருளியில் சென்ற இருவரை மறித்து கடுமையாக தாக்கியுள்ளார்கள்.ஊர்தியால் உந்துருளியினை மோதி விழுத்திவிட்டு அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் மீது கடும் தாக்குதலினை நடத்தியுள்ளார்கள். வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்த பரித்தானியாவில் இருந்து சென்ற இளைஞனும் இன்னும் ஒருவரும் சென்று கொண்டிருந்த போது ஊர்தி செல்வதற்கு பாதை விட்டுக்கொடுக்காததன் காரணத்தால் இவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை சிங்கள இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இரு…
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை ஊழல் மோசடிகளை வெளிக்கொணர்ந்த வைத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பழிவாங்கப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை வெளிக்கொணர அரச வைத்திய சங்கம் மேற்கொண்டிருந்த நிலையில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டமை திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச வைத்திய சங்கத்தின் யாழ்.கிளையினர் இது தொடர்பில் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால் பணிப்புறக்கணிப…
-
- 1 reply
- 965 views
-