ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வது மட்டும் தான் நாங்கள், பயணம் மட்டும் தான் எங்களது. ஆனால், எமது பாதையும், அதன் செல்திசையும், அதன் முடிவிடமும் - வேறு ஆட்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது, வேறு ஆட்களால் - வெளி ஆட்களால். 'புதினப்பலகை'க்காக தி. வழுதி. தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை உறுதி செய்வதற்கான போராட்டம் ஒரு தொடர் அஞ்சல் ஓட்டம் போன்றது. அது மிக நீண்ட ஒரு பாதையில் பயணிக்கின்றது. வகைவகையான புவியமைவுத் தன்மைகளுக்கு ஊடாக, விதவிதமான காலநிலைச் சூழல்களை ஊடறுத்து, பல பத்தாண்டு காலங்களைக் கடந்து, அந்தப் பாதை செல்கின்றது. எங்களுக்கு முன்னாலும் பலர் இந்தப் போராட்டக் கோலைக் கொண்டு ஓடினார்கள், இப்போது நாங்கள் ஓடுகிறோம். தொடக்க ஓட்டக்காரர்களாய் களமிறங்கிய பலர் இப்போது உயிரோடு கூட இல்லை, இப்போது…
-
- 6 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை பிரித்தானிய அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசு மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பிரித்தானியா ஒரு சுதந்திரமான நாடு. அங்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்தவகையில், ராஜபக்சவின் லண்டன் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மாறாக, பிரித்தானிய அரசின் உயர் மட்டச் சந்திப்புகளுக்கான அனுமதிகள் எதையும் ராஜபக்சவினால் பெறமுடியவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்…
-
- 4 replies
- 888 views
-
-
-
உலக வங்கியிடம் மீண்டும் மீண்டும் கடன் பெறுகிறது இலங்கை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலும் கடன்களை பெறும் நடவடிக்கையில் இலங்கை இறங்கியுள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கை மேலும் இரண்டு பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இப்படியான கடன்களை பெறுவது, இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததையே வெளிக்காட்டுகிறது என்று கொழும்புப் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார். வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றிருந்தாலும், எந்த நோக்கிற்காக அந்தக் கடன்கள் வாங்கப்படுகின்றனவோ, அந்த நோக்கத்திற்காக மட…
-
- 2 replies
- 610 views
-
-
மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் ! …
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய அரசியாரின் வைரவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற பிரித்தானியாவுக்கு சென்றிருக்கும் எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும் எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக எம்மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த இராஜபக்சவை அரசியாரின் அந்நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஐரோப்பிய தமிழர்களால் கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப் படுகின்றன. இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம் கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்க…
-
- 0 replies
- 945 views
-
-
சிங்கள பௌத்த ஊடுருவல்களுக்கு இடமளித்து சிங்களப் பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணத்தை மாற்ற உதவுவதாக தெரிவித்துள்ள மாணவர்கள் கடந்த வருட பல்கலைக் கழக உள்வாங்கலில் கூட விஞ்ஞானபீடத்தில் அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் மாணவர்களின் மொத்த தொகையை விட அதிகம் என்றும் இதற்கு விஞ்ஞான பீட மூத்த பேராசிரியர் ஒருவரே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர் ஆக்கிரமிப்பின் அடுத்த நகர்வு யாழ் பல்கலையிலும் “பொசன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று பொசன் விழா கொண்டாடப்படவுள்ளது. யாழ் பல்கழலக்கழக வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறானதொரு வைபவம் இடம்பெறுவதுடன் தமிழ் மக்கள் இந்துக்கள் வந்தேறு குடிகள் என்றும் விவாதங்கள் பொய்ப்பரப்புரைகள் இடம்பெற்றுக் கொண்டுள்ள வேளையில், இவ் வைகாசி வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 2 replies
- 1.5k views
-
-
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்…
-
- 10 replies
- 907 views
- 1 follower
-
-
இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷன்கிரி லா பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள், இலங்கையின் தந்திரோபாயங்கள் தொடர்பில் ஆர்வம் காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோபாய ராஜபக்ஷ, முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். பயங்கரவாத ஒழிப்பு, சட்டவிரோத ஆட்கடத்தல் தவிர்ப்பு போன்ற விடயங்களில் இலங்கைப் பாதுகாப்பு தரப்பின் தந்திரோபாயங்கள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் உலகின் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 484 views
-
-
யாழ்ப்பாணம் - நைனாதீவு கடற்கரைப்பகுதியில், அங்கிருந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சமயம் அது வெடித்ததில் 15 அகவையுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.45 அளவில் இவ் வெடிப்புச் சம்பவம் நைனாதீவு 8ம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் வெடிபொருட்கள் பற்றிய விழிப்புனர்வு போதாமையினால் இவ்வாறான அனர்த்த சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 2 replies
- 547 views
-
-
உலகத்தின் முன் தமிழீழ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத முகமாக காட்டி, 21ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் மாபெரும் இனப்படுகொலையை செய்து விட்டு, இன்று வெற்றிவீரன் போல், காமன்வெல்த் நாடுகளின் அங்கத்துவ நாடாகவும், பிரித்தானிய காலனித்துவ நாட்டின் இன்றைய அரச அதிபர் என்ற அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பிதழ் விடப்பட்ட நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழின படுகொலையை நியாயப்படுத்தலாம் என்று சென்ற வருடம் ஓக்ஸ்போர்ட் நகரைவிட்டு விரட்டப்பட்ட மகிந்த இன்று பிரித்தானிய அரசின் விருந்தாளியாக பிரித்தானிய மகராணி எலிசபெத்தின் வைர விழாவில் பங்குபற்ற இங்கிலாந்து வருகிறார். 20ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் போஸ்னியாவில் ஐக்கியநாடுகள் சபையின் அமைதி பாதுகாப்பு படை நிற்கத்தக…
-
- 0 replies
- 867 views
-
-
சிறீலங்கா ஆட்சியாளர் மகிந்த ராயபக்ச இங்கிலாந்து மகாரணியின் 60 தாவது முடிசூட்டு விழாவில் பொதுநலவாய நாடுகளின் சார்பில் கலந்துகொண்டு உiயாற்றுவதை நிறுத்தக் கோரி இலண்டன் வாழ் தமிழ் உறவுகளால் 06.06.2012 நடத்தப்படவுள்ள எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நியுசிலாந்து வாழ் தமிழர்களால் 05.06.2012 செவ்வாய்க் கிழமை மலை 4.30 மணிக்கு ஒக்லண்ட் டொமினியன் வீதியில் பல்மொறல் வீதிச் சந்தி அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படவுள்ளது. இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்குபற்றுவதன் ஊடாக எமது உணர்வுகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவோம். தமிழ் இளையோர் அமைப்பு நியுசிலாந்து. http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%…
-
- 0 replies
- 642 views
-
-
அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான சட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அமுல்படுத்தப்படவுள்ளன என அரசாங்கம் நேற்று தெரிவித்தது. உலக சூழ்நிலைக்கேற்ப நாம் செயற்பட வேண்டியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இலங்கையில் அல் கயீடா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புயை சக்திகள் உள்ளன என அரசாங்கம் நம்புகிறதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல மழுப்பலாக பதிலளித்தார். 'நோயை குணப்படுத்துவதைவிட தடுப்பது சிறந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை' உலகின் ஏனைய பாகங்களில்…
-
- 0 replies
- 459 views
-
-
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற - “கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானிய மகாராணி ஏன் மதியஉணவில் பங்கேற்க வேண்டும்?“ என்று கேள்வி எழுப்பியுள்ளார் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கென் ரோத். தனது ‘ருவிற்றர்‘ பக்கத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கு எதிரான போராட்டங்கள் லண்டனில் தீவிரமடைந்துள்ளன. ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்றிரவு பெருமளவில் தமிழர்கள் திரண்டு நின்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதேவேளை நாளை மறுநாள் மாலை 7 மணிய…
-
- 0 replies
- 1.9k views
-
-
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனைச் சந்திக்க விருப்பம் வெளியிட்டுள்ளார். http://www.puthinapp...?20120604106325
-
- 0 replies
- 499 views
-
-
அபிவிருத்தி நிதியின்றி மாகாண சபை திண்டாட்டம்:-குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் மற்றும் ஆளுநர் சந்திரசிறிக்கான ஆடம்பர பங்களா அமைப்பு வேலைக்கென வடமாகாணசபையின் நிதிகள் சுரண்டப்பட்டுவிட்டதால் இவ்வாண்டில் புதிய வேலைதிட்டங்களையோ அவசர திருத்த வேலைகளையோ எதனையும் செய்யமுடியாத நெருக்கடி ஏற்பட்;டுள்ளது. யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினால் கட்டி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் பிரச்சாரத்துடன் நாமலின் இளைஞர்களுக்கான நாளை அமைப்பு நீச்சல் தடாக வேலைகளை முன்னெடுப்பதாக கூறப்பட்ட போதும் அது இடை நடுவில் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாமலின் செல்ல அ…
-
- 0 replies
- 421 views
-
-
திருட்டுத்தனமாக சற்று முன் குற்றவாளி ராஜபக்ஷ் லண்டனைச் சென்றடைந்துள்ளார். நேற்று தமிழ்கள் திரண்டு இருப்பதை அறிந்த மகிந்த லண்டன் செல்லாமல் வேறு ஒரு நாட்டில் தங்கி இருந்து பின்னர் இன்று திருட்டுத்தனமாக லண்டனைச் சென்றடைந்துள்ளார். http://thaaitamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/
-
- 1 reply
- 993 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்லத் தயாராக இல்லை என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன. 2009இல் விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக் குவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2008ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதுவும் இருதரப்புப் பயணமாக அமையவில்லை. சார்க் மாநாட்டுக்காகவே அவர் இலங்கை சென்றார். கடந்த 2010 ஜுன் மாதம் புதுடெல்லிக்கு இருதரப்புப் பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைத்திருந்தார். …
-
- 3 replies
- 978 views
-
-
மனிதகுலத்திற்கு எதிரான திட்டமிட்ட பாரிய தமிழினவழிப்பை மேற்கொண்ட போர்க்குற்றவாளியான சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் வர்த்தகமன்றக் கூட்டத்தில் எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 10:30 மணிக்கிடையில் உரையாற்றவுள்ளார். இந்த போர்க்குற்றவாளி மகிந்தவின் உரை லண்டனில் உள்ள மான்சன் கவுசில் (Mansion House, London, EC4N 8BH (Tube: Bank) நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, மகிந்தவுக்கான மதியவிருந்து பொதுநலவாய நாடுகளின் செயலகம் அமைந்திருக்கும் லண்டன் மால்பொறோக் கவுசில் (Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX (Tube: Green Park)) நடைபெறவுள்ளது. அங்கே இனவழிப்புக் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த திட்ட…
-
- 0 replies
- 801 views
-
-
இலங்கையை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா பல வளிகளில் முயற்சிக்கிறது எனவும் இந்த இலக்கை அடைவதற்காக பிரிவினைவாதிகளுடன் அது சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார். 'இலங்கையின் பூகோள அமைவிடமும் அதன் இயற்கை வளங்களும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை, இதனால் நாட்டை சீர்குலைக்க முனையும் பிரிவினைவாத அமைப்புகளை அமெரிக்கா சார்ந்திருந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது' என அவர் கூறினார். மாரவிலவில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற அமெரிக்காவினதும் ஏனைய சக்திகளினதும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு இதுவே காரணம் என அமைச்சர் வீரவன்ஸ தெரிவித்தார். இதனால்தான் அமெரிக்…
-
- 1 reply
- 734 views
-
-
யாழ் இளைஞர் யுவதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.முகமட் அஸமீ கபூர் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மட்டக்களப்பின் மாநாகர சபை உறுப்பினராக உள்ள இந்நபர் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை பிரித்தானியா, கனடா மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் தந்திரமாக பல இலட்சங்களை மோசடி செய்துள்ளார். ஆனைக்கோட்டை, உரும்பிராய், அச்சுவேலி, திருநல்வேலி, கோப்பாய், சுன்னாகம் ஆகிய பிரதேசங்களைச் சேந்த இளைஞர் யுவதிகளிடம் 50, இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்துள்ளார் என விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் …
-
- 55 replies
- 3.1k views
-
-
ல்லாயிரக்கணக்க மக்களை துடிக்க துடிக்க கொலை செய்த கொடியவன் ராஜபக்சே லண்டன் வருகிறான். அவனை விரட்ட அனைத்து தமிழ் மக்களும் புறப்படுங்கள் வைகோஅழைப்பு. http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/
-
- 0 replies
- 810 views
-
-
மனிதநேயத்துக்கெதிரான மாபெரும் இனப்படுகொலையை மேற்கொண்ட போர்க் குற்றவாளி மகிந்த இராஜபக்சஆற்றவிருக்கும் உரையினை நிறுத்தக்கோரியும் பொதுநலவாய அமைப்பின் மனிதாபிமானத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் இச்செயலைக் கண்டித்தும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் ஐரோப்பியவாழ் தமிழ்ப்பெண்களுக்கு ஒர்அவசரமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள். தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த மகிந்த இராஜபக்சவை பிரித்தானிய மாகாராணியின் வைரவிழாவிற்கு அழைத்திருப்பது தமிழ்மக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடு எனவும், போர்க்குற்றம் புரிந்து தமிழ்மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்த மகிந்த இராஜபக்ச லண்டன் மண்ணில் காலடிவைப்பதை ஒருபோதும் அனுமதிக் கூடாது எனவும் ,…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது. நேசம் உற்பத்திகளின் அடுத்த கட்டமாக பயிற்சிபெற்ற 11பெ…
-
- 26 replies
- 4.1k views
-