Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு காந்தி சிலை உடைப்பு விவகாரம் _ மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் மேலவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று மேலவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நேற்று முன்தினம் இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் அகமட் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அது தொடர்பாக இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இலங்கை அரசுடனும் கிழக்கு மாகாண அரசுடனும் இந்தியா தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும்…

    • 5 replies
    • 647 views
  2. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம…

    • 26 replies
    • 3.8k views
  3. முள்ளிவாய்க்காலில் மடிந்த மாவீரர்களிற்கும் மக்களிற்கும் கனேடியத் தமிழ் அமைப்புக்கள் கொடுக்கும் மரியாதை.

  4. புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்: 04 மே 2012 புலிகளின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெறலாம்:- விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளீர் அணியின் முன்னாள் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமியிடம் சிறைச்சாலையில் வைத்தே வாக்குமூலங்களை பெற நீதிமன்றம் இன்று ரகசிய காவற்துறையினருக்கு அனுமதி வழங்கியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆஜரான ரகசிய காவற்துறையினர், மேலதிக விசாரணைகளுக்காக தமிழினியிடம் வாக்குமூலத்தை பெறவேண்டியிருப்பதால், அதனை சிறைச்சாலையில் வைத்து பெற்றுக்கொள்ள அ…

  5. நேசக்கரம் ஏப்றல் 2012 மாதாந்த கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள். நேசக்கரம் ஏப்றல் 2012 மாதாந்த கணக்கறிக்கை.

    • 0 replies
    • 839 views
  6. சிதைந்து கிடக்கும் வாகனங்களைப் பார்வையிடும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம். பி இலங்கையில் இறுதிப் போர் நடந்த பகுதிகளில் ஒன்றான வெள்ளாம் முள்ளி வாய்க்கால் ஊடான பாதை முதல் தடவையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் இந்த வீதி வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர…

  7. கிழக்கில் கைதான 38 தமிழர்கள் எங்கே? கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இரகசிய கைதுகள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்தல் போன்றன மீண்டும் தமிழர்களிடையே பீதியினை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் திருமலை மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 38 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் ஆனால் இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்களுக்குத் தெரியாது. இவ்வாறு பிபிசி செய்தியாளர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கூறியுள்ளார். இதனால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாகக் கூற…

  8. பாரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நடைபெற்று 3வது வருட முடிவில் இம் மேதினத்தை கொண்டாடுகின்றோம். யுத்தம் முடிந்துவிட்டாக இலங்கை அரசு கூறினாலும் தமிழ்த் தேசத்திற்கு எதிரான இன அழிப்பை சிறீலங்கா அரசு முன்னரிலும் பார்க்க தீவிரப்படுத்தியே வருகின்றது. தமிழ் தேசத்தின் இருப்பை பாதுகாப்பதிலும் தமிழ் தேசிய உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் எமது தேசம் பலத்த சவால்களை சந்தித்து நிற்கின்றது. அந்த சவால்கள் சிங்கள தேசத்திலிருந்தும் எமக்குள்ளிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. சிங்கள தேசத்தின் சவால்களை அடையாளம் காணுகின்ற நாம் எமக்குள்ளிருந்து வரும் சவால்களை அடையாளம் காண திணறுகின்றோம். சிங்கள பௌத்த பேரினவாதம் முன்னரைவிடவும் அதன் உச்சியில் நிற்கும் இந்நிலையில் தமிழ் தேசிய உணர்வை இல்லாத…

  9. பிரிவினையை கைவிட்டு தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைவரும் உறுதி பூண வேண்டுமென இன்றைய வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கோரிக்கை விடுத்துள்ளார். புத்த பெருமானின் போதனைகள் சீரான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறந்த மார்க்கங்கள் என தெரிவித்துள்ள அவர், கடந்த வெசாக் பண்டினையின் போது உதயமான சிறீசம்புத்தவ ஜயந்தி வருடத்தில் இலங்கை வாழ் பௌத்தர்கள் அதற்குரிய முக்கியத்துவம் அளித்து செயற்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்துக்களின் சக்தி வழிபாட்டுக்குரிய சிறப்பு தினமாக கருதப்படும் இன்றைய சித்திரா பௌர்ணமி தினம் பௌத்தர்களுக்கும் மிக…

    • 2 replies
    • 1k views
  10. குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர் பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 updated 05-05-2012 போட்டி முடிவுகள் முதலாவது போட்டி தெல்லிப்பளை நாமகள் மற்றும் இளவாலை சென் அன்ரனிஸ் A ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை சென் அன்ரனிஸ் A அணி 04 கோல்களை அடித்து 04 : 03 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி இளவாலை சென் அன்ரனிஸ் B மற்றும் அராலி சில்வஸ்ரார் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவாலை சென் அன்ரனிஸ் B அணி 02 கோல்களை அடித்து 02 : 00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. மூண்றாவது போட்டி இளவாலை சென் லூட்ஸ் A மற்றும் அச்செழு வளர்மதி ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. இதில் இளவ…

  11. மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த சகோதரிகளான இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். 4 வயதும், 6 வயதுமான இரு சகோதரிகளை தாயர் பாத்துக் கொள்ளுமாறு சொல்லி அயல் வீட்டுக்கரர் ஒருவரிடம் ஒப்பதைடத்துவிட்டு கடை ஒன்றுக்கு சென்றுள்ள வேளை குறித்த நபர் இரு சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மங்குளம் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொண்கள் நோயியல் பரிவில் அனுமதிக்கப்பட்டு ச…

  12. அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை(04-05-20112) மெல்பேர்ண் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. Refugee Action Collective (RAC) அமைப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் அகதிகளுக்காக குரல்கொடுக்கும் பல செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியாவுக்கு கடல்வழியாக வரும், இலங்கைக் குடிமக்கள் தொடர்பிலான விவகாரம் குறித்து, சிறிலங்கா அரச தரப்புடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவென அவுஸ்திரேலியா குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சர் Chris Bowen, இரண்டு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை சிறிலங்காவுக்கு சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே …

  13. சிறிலங்காவின் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 36 வயதான கிருஸ்ணவேணி நக்கீரன் என்கின்ற நான்கு பிள்ளைகளின் தாயார் தனது நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இது வரை இரு தடவைகள் நாட்டை விட்டு வெளியேறி பின் மீண்டும் திரும்பி வந்துள்ளார். இவர் தனது பதினாறாவது வயதில் அதாவது 1990ல் முதன் முதலாக தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். µ ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பனது என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருந்த இவரது குடும்பத்தவர்கள் இராண்டவது தடவையாக 1998ல் இந்தியாவுக்கு சென்றிருந்ததனர். இந்நிலையில் இவரது குடும்பத்தவர்கள் 2010ல் அதாவது விடுதலைப் புலிகள் யுத்தத்தின் போது தோற்கடிக்கப்பட்டு ஒரு ஆண்டின் பி…

  14. கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறிய சிறிலங்காப் படைத்தரப்பு, தற்போது அந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை வெளியிட்டால் துப்புரவு செய்ய முடியும் என்று ஐ.நா அபிவிருத்தித் திட்டத்திடம் கேட்டுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பில் கிளஸ்டர் குண்டின் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ள போதிலும், ஐ.நா அபிவிருத்தித் திட்டம் அதற்கான நியாயமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளனர். கிளஸ்டர் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பிரதேசத்தை வெளிப்படுத்தினால், அங்கு சிறிலங்கா இராணுவத்தினர் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்ப…

  15. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான குழுவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜீன் லம்பேர்ட் தலைமையில் ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். தமது பயணத்தின் முடிவில் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவியான ஜீன் லம்பேர்ட், “அபிவிருத்தி வேலைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரந…

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேச…

    • 0 replies
    • 436 views
  17. “சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண வலியுறுத்துவதுடன் நின்று விடாமல், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கவும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும்.“ இவ்வாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சிறிலங்கா சென்று திரும்பிய சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இந்தியப் பிரதமரின் பணியகத்தில் இடமபெற்ற சந்திப்பின் போது, சுஸ்மா சுவராஜ் குழு தமது பயணம் தொடர்பாக தயாரித்த அறிக்கை மன்மோகன்சிங்கிடம் கையளிக்கப்பட்டது. நேற்றுக்காலை 10 மணி தொடக்கம் சுமார் 45 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப…

    • 0 replies
    • 656 views
  18. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தேசியக் கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=18056

    • 0 replies
    • 562 views
  19. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான குழுவைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜீன் லம்பேர்ட் தலைமையில் ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். தமது பயணத்தின் முடிவில் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவியான ஜீன் லம்பேர்ட், “அபிவிருத்தி வேலைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரந்துரைகள…

    • 0 replies
    • 440 views
  20. "அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும். இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். ராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி, அந்தப் பகுதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட, இந்தியாவில் இருந்து நிபுணர்களை அனுப்பிட வேண்டும்' என, பிரதமரிடம் சுஷ்மா தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் போருக்கு பின், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா சார்பில், 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அங்கு தமிழ் பகுதிகளில் வீடு கட்டித் தரும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை பார்வையிடவ…

  21. கொழும்பு: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததால், அதற்கு பிரதியுபகாரமாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்திய அரசு வாக்களிக்க முடிவு செய்ததாக இலங்கையின் திவயின என்ற நாளிதழ் ஒரு செய்தியைப் போட்டுள்ளது. இந்த நிமிடம் வரை தங்களுக்கு எதிரான ஒரு நீர்த்துப் போன தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது குறித்து பொங்கிப் பொறுமிக் கொண்டுள்ளனர் இலங்கையர்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று அவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், திவயின என்ற நாளிதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், ஜெயலலிதாதான் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்படக் காரணம் என்பது போல…

  22. கிண்ணியா, எழிலரங்கு மைதானத்திற்கு அருகிலுள்ள பிரதேச வீடொன்றிலின் நிலத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை புகை வெளியாகியுள்ளது. கழிவுப் பொருட்களைப் புதைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் காலை 11.00 மணியளளவில் குழி தோண்டிய போது புகை வெளியாகியுள்ளது. குறித்த வீட்டு நிலத்தின் மூன்று இடங்களிலிருந்து கடந்த 3 மணித்தியாலங்களா புகை வெளிவந்தவுள்ளமுள்ளன. நிலத்திலிருந்து தீடிரென புகை வெளியாகியமையால் குறித்த பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சமடைந்த பிரதேச வாசிகள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். http://thaaitamil.com/?p=18037

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்க…

  24. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – இயக்குனர் ராம் அவர்கள் வழங்கிய செவ்வி. http://thaaitamil.com/?p=17846

  25. இரு இளைஞர் குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்புவரைச் சென்றதால் மீசாலை சந்தியில் பாரிய மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல மணிநேரம் வரை பொல்லுகள், இரும்புக் கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் மேற்படி மோதல் இடம்பெற்றதால் பலர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. எனினும் மேற்படி மோதலினை சிறிலங்கா பொலிஸார் உட்புகுந்து தடுத்து நிறுத்திய போது அங்கிருந்து இளைஞர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளதால் பாதுகாப்புக் காரணமாக எவரும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மீசாலைப் பகுதி பெண் ஒருவரில் அதே இடத்தினைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கும் மந்திகைப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதலே மேற்படி மேதல் சம்பவத்திற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.