ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இறுதி மாதத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளமையானது இலங்கை அரசிற்கு மேலும் அழுத்தம் அதிகரிப்பதாகவே நோக்கர்கள் கருதுகின்றனர். நேர்வேயின் அமைச்சரும், இலங்கைக்கான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயில் இருந்து வெளியாகும் Aftenposten நாளிதழுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை அரச…
-
- 0 replies
- 623 views
-
-
ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர், Herve Ladsous இது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஆலோசனைக்குழுவின் தீர்மானம் மற்றும் சவேந்திர சில்வாவின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் நேற்றையதினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். எனினும் அவர் அதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை. எனினும் ஷவேந்திர சில்வா ஆலோசனைக்குழுவில் இ…
-
- 0 replies
- 503 views
-
-
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வது உறுதி என்றபோதிலும், கூட்டøமப்பை பிரதிநிதித்துவப்படுத்தி யார் யார் சொல்வது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதோடு ஜெனீவாவில் தமது செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பு விரிவாகக் கலந்துரையாடவுள்ளது. http://www.virakesari.l…
-
- 1 reply
- 545 views
-
-
கைதடி வடக்கிலுள்ள காணியொன்றில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏறக்குறைய 32 பரப்புக் காணியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழு வேகத்துடன் இப் பணிகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த முகாம் அமைப்பதற்காக பிரதேசத்திலுள்ள தனியார் காணிகளில் படையினர் பல பனை மரங்களைத் தறித்துள்ளனர். நாம் ஒரு பனை மரம் தறிப்பதென்றாலும் அனுமதிகளைப் பெற வேண்டும். ஆனால், எவரின் அனுமதியின்றியும் படையினர் பெருந்தொகை பனை மரங்களைத் தறித்து வருகின்றனர் என மக்கள் கூறியுள்ளனர். சீமெந்துக் கற்களைப் பயன்படுத்தி நிலையானதாக அமைக்…
-
- 0 replies
- 466 views
-
-
யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக இருந்த தமிழரை நீக்கி சிங்களவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை! யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய தமிழரான ரி.இந்திரனை அப்பதவியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவ்விடத்திற்கு சிங்களர் ஒருவர் நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மாவட்ட பதில் பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழரான ரி.இந்திரன் கடமையாற்றி வருகின்றார். இவரது பதவிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. அத்தோடு இவர் தலைமையிலேயே ஈ.பி.டி.பி இனரால் யாழ்.நகரில் நடாத்தப்பட்ட சுமங்கலி விபச்சார விடுதியும் முற்றுகையிடப்ப…
-
- 1 reply
- 520 views
-
-
வரும் மார்ச் 5 ஆம் திகதி ஐநா முன்றலில் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே. (காணொளி இணைப்பு)22 Feb 2012 http://www.tamilthai.com/newsite/ கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே. வரும் மார்ச் 5 ஆம் திகதி ஐநா முன்றலில்.
-
- 0 replies
- 454 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவரது காலில் ஏற்பட்ட கடும் வலி தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிறிலங்கா அதிபர் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் அமெரிக்கா - இலங்கை மின்னஞ்சல் சமர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை வரைவதற்கு அமெரிக்காவுடன் இலங்கை நெருங்கிச் செயற்படுவதாக அமெரிக்கா மேற்கொள்ளும் பிரசாரத்திற்கு எதிராக பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது. பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளுக்கும் இலங்கைத் தூதுவர் திருமதி தமாரா குணநாயகம் எழுதியுள்ள இக்கடிதத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதரகமும் ஜெனீவாவிலுள்ள சர்வதேச அமைப்புகளும் அங்ககத்துவ நாடுகளின் ஆதரவை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் தான…
-
- 2 replies
- 1k views
-
-
Jusqu’à 5 ans de prison ferme en appel pour des membres des Tigres tamouls!TFI http://0.gravatar.co...%3D26&r=GPosted by Admin on Feb 22nd, 2012 and filed under Info. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entrDes peines allant jusqu’à cinq ans de prison ferme ont été prononcées mercredi par la cour d’appel de Paris contre cinq hommes présentés comme membres des Tigres tamouls, reconnus coupables d’avoir organisé un racket de la diaspora en France pour financer des opérations au Sri Lanka.La plus forte condamnation a été prononcée à l’encontre de Nadaraja Matinthiran, un responsable présumé de…
-
- 4 replies
- 2.3k views
-
-
கொழும்பின் கடற்பரப்பு ஊடாக பயணிக்கும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு “ரக்னா லங்கா” என்ற பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஷவுக்குச் சொந்தமான இந்த (தனியார்) நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது தெரிந்ததே. கொழும்பு கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் ஐம்பது நிறுவனங்கள் தற்போது இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கப்பல் குறிப்பிட்ட நிறுவனங்கள் பெருந்தொகைப் பணத்தை “ரக்னா லங்கா” நிறுவனத்துக்கு வழங்கவுள்ளன. . சேமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து தமது கப்பல்களைப் பாதுகாப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமணம் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தொடர்ந்தும் தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறார். நியமணம் தொடர்பில் - ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அவர் விமர்சனக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன. நவனீதம்பிள்ளையின் கடிதம் பற்றிய தகவல்கள், ஐக்கிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில் முக்கிய பதவி வகித்தால், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்…
-
- 17 replies
- 1.1k views
-
-
வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற "சிறிலங்காவின் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு தாமும் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அலிஸ்ரெயர் பேர்ட் த…
-
- 10 replies
- 946 views
-
-
பிப்ரவரி 27 தொடங்கி ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஜெனீவாவில் திரண்டு சர்வதேச போர்குற்ற விசாரணை தேவை என்று போராடவேண்டும்.. அதுவே நமக்கு விடியலை தரும் என்றும், ஜெனீவா நோக்கி பல நாட்களாக மேற்கொள்ளும் தமிழ்த்தம்பிகளின் நடைப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள் என்றும் சீமான் பேச்சு.. http://youtu.be/u1xuQnakl5o http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 743 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் பிரதி வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட அமைதி காக்கும் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பிலான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு ஆசிய நாடுகள் குழுவின் சார்பில் மேஜர் ஜெனரல் சவேந்திர நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த ஆலோ…
-
- 5 replies
- 1k views
-
-
அரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிடலாகாது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-23 09:40:22| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திவரும் மனித உரிமை அமைப்புகள் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன. ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்காவின் பங…
-
- 5 replies
- 713 views
-
-
இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை உலகறியச் செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களின் உயிரிழப்பையிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்.... ஈழத்தமிழ் மக்களுக்கும் அம்மையார் மேரி அவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருந்து வந்துள்ளது. பல்வேறு ஆபத்துக்கள் மத்தியிலும் அவர் இலங்கைத் தீவில் நடைபெற்ற போரின் போது மிகவும் துணிச்சலுடன் செயல் பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட கொலைகள…
-
- 1 reply
- 525 views
-
-
வெள்ளைக்கொடியுடன் சென்ற நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சென்ற 300 பேர் முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில்,கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு நேரடி சாட்சியமான மேரி கொல்வின் என்னும் புகழ் மிக்க பத்திரிக்கையாளர், சிரிய ராணுவத்தால் ஏவு கணை வீச்சால் கொல்லப்பட்டுள்ளார். வீரமிகுந்த இந்த பத்திரிக்கையாளருக்கும், இவருடன் சேர்த்து கொல்லப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த புகைப்படக் கலைஞர் ரெமிஓக்லிக் அவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு தமிழ் நாடு மாநிலக்குழு தனது இரங்கலையும் அஞ்லியையும் செலுத்திக் கொள்கிறது. வருகின்ற மார்ச் மாதம் 27 தேதி, ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் தனது விசாரணையை தொடக்கவிருக்கிறது. இந்த நிலையில் மேரிக்கொல்வின் மீதானத் தாக்குதல் கூடுதல் ச…
-
- 0 replies
- 532 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு இலங்கை அரசாங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருவம் அதேவேளை சவேந்திர சில்வாவும் பதவி நிக்கம் செய்யப்பட்டுள்ளமையானது அரசுக்கு பெரும் நெருக்கடிகளை உண்டுபண்ணியுள்ளது! இந்தத் திட்டத்தை முறியடிக்க நாட்டு மக்கள் அனைவரும் அணி திரண்டு போராட்டம் நடத்த வேண்டுமென விமல் வீரவன்ச. வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நநடத்துமாறு விமல் வீரவன்ச கோரியுள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களி…
-
- 1 reply
- 476 views
-
-
ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்பதை விட அரசுக்கு வேறு வழியில்லை; மனோ கணேசன் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையை சமர்பித்து அதில் சொல்லப்பட்டுள்ள சிபாரிசுகளை குறிப்பிட்ட திட்டவட்டமான காலவரையறைக்குள் நடைமுறைபடுத்துகிறோம் என ஐநா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் அளிப்பதை தவிர இன்று இந்த அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது. என ஜனநாய மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் தொடர்பில் மனோ கணேசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில், ஐ.நா செயலாளரின் அறிக்கைக்கு பதிலடியாக, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை இந்த அரசாங்கம்தான் நியமித்தது. இன்று அரசாங்கத்தில…
-
- 1 reply
- 793 views
-
-
பாடசாலைகளுக்கு பறக்க இருக்கிறது சுற்றுநிருபம்:- இலங்கையின் மத்திய மாகாண முஸ்லீம் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வேடமிட்டு, நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த சம்பவம் காரணமாக, மத்திய மாகாண முதலமைச்சர் கடுப்பாகிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறான நிகழ்வுகள் அரச தலைவருக்கும், அரசாங்கத்தின் கௌவரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இனிவரும் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தோற்றத்திற்கு ஈடான வகையில் உடையணிந்து, நாடகங்களையோ, நிகழ்ச்சிகளையோ பாடசாலை மாணவர்களை கொண்டு நடத்த வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிடுமாறு, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா தற்போது கூறியுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். எனினும் இது தொடர்பான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை இலங்கை ஆதரவிக்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் புதுடில்லிக்குச் செல்லவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு இந்தியத் தலைவர்களுக்குக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. எனினும் அந்தப் பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து புதுடில்லி தொடர்ந்து அமைதி காத்து வருகின்றது. இந்த விடயத்தில் புதுடில்லி எந்தத் தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிக்கக்கூடும் என்ற எதிர்வுகூறல்களும் உள்ளன. இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்…
-
- 2 replies
- 788 views
-
-
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது. இறையாண்மையுடைய நாடொன்றின் உள்விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பு பலம்பொருந்திய நாடுகளுக்கு கிடையாது. நாட்டு மக்களே இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஜனநாயாக ரீதியாக நிமமிக்கப்பட்ட அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளை எவரும்விமர்சனம் செய்யக் கூடாது. இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ரஸ்யா தொடர்ச்சியாக ஆதரவளி…
-
- 3 replies
- 601 views
-
-
சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழுவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாகநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் நேற்று இடம்பெற்ற ஐ.நா செயலாளர்நாயகத்தின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வாகலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த ஆலோசகர் குழு கூட்ட அறையில்சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லைஎன்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை எனவும்தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய - பசுபிக் வலய நாடுகளால் ஐக்கியநாடுகள் …
-
- 0 replies
- 679 views
-
-
தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் - வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். ழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு …
-
- 1 reply
- 569 views
-