ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்:-ரோபோ. இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும்- ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ளஅவர்- பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து நாடுகளும் ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக …
-
- 7 replies
- 975 views
-
-
வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்: முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தகவல்! [Friday, 2011-10-14 10:46:54] மூன்றுநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி ட்ருவான் ட்ரென் சங்க் இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவருடன், அந்த நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் 60 வர்த்தகர்க பிரமுகர்களும் இலங்கை வந்தடைந்தனர். இதற்கிடையில் இன்றைய சந்திப்பின் போது பல முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல், பாதுகாப்பு, முதலீடுகள், நிதி, மற்றும் தொழிற்பயிற்சி வழங்கள் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்…
-
- 0 replies
- 556 views
-
-
தான் செய்யாத குற்றத்திற்காக ஏன் பிடியாணை அனுப்பப்படுகின்றது என போர்க்குற்றவாளி மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக தனக்குப் பிடியாணை அனுப்பப்படுகிறது எனவும் மஹிந்த குற்றம் சுமத்துகின்றார்.. இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடாகத்தான் எமக்குப் பிடியாணை அனுப்புகின்றனர். எமது கையில் கொடுக்காமல் இவற்றை பத்திரிகைகளின் ஊடாக அனுப்புகின்றனர். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகளே இவ்வாறான பிடியாணைகளை அனுப்புகின்றன என்றார் மஹிந்த.. ஆனால் அமெரிக்காவில் மஹிந்தர் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற வாக்கில் பிடியாணையைப்பெறாமல் ஓடோடி வந்ததனை உலகமே அறியும். அற நனைஞ்சவனுக்கு கூதலும் இல்லை குள…
-
- 0 replies
- 1.1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 00:21 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களும் மும்பையில் இருந்து நேற்று அதிகாலை கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 8ம் நாள் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தை அடுத்த ஜெயநாத் எனப்படும் சிறிநாயகி சமிந்த ரவி (வயது 32), மொகமட் சர்பாரர் சிப்லி (வயது 28) ஆகிய இரு சந்தேகநபர்களும், கடந்த 9ம் நாள் மும்பைக்குத் தப்பிச் சென்றிருந்தனர். இவர்கள் இருவரையும் கைது செய்து நாடுகடத்தும் படி சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகளின் மூலம் இந்தியா…
-
- 0 replies
- 929 views
-
-
[Thursday, 2011-10-13 12:55:12] நீதிமன்ற உத்தரவை மீறி பொதுச்செயலாளரான தனது அனுமதியோ அனுசரணையோ இன்றி யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் நடத்தித் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றது என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தலைவராக எஸ்.கனகராஜாவும், பொதுச் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் புதிய நிர்வாக சபையே சட்டரீதி யாகச் செல…
-
- 4 replies
- 691 views
-
-
[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 08:51.33 AM GMT ] சனல்-4 இன் ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று Alliance of Liberals and Democrats of Europe கட்சியின் தலைமையில் S&D, Green/EFF,EFA,GUE/HGL ஆகிய கட்சிகளின் துணையுடன் Amnesty International, International Crisis Group, Humanrights watch ஆகிய அரசசார்பற்ற மனிதநேய அமைப்புகளின் ஆதரவுடன்... ...200க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ள சிறிலங்காவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிராகான 'சிறிலங்காவின் கொலைக்களம்' கொலைகளின் சாட்சிகள் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Ana Gomes உண்மைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்ற முக்கியதுவத…
-
- 1 reply
- 971 views
-
-
அகதிக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்புந் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஒஸ்ரேலியா அறிவிப்பு அகதிக் கோரிக்கையாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தைக் கைவிடுவதாகவும், அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஒஸ்ரேலியாவில் ஆராயப்படுமெனவும் ஒஸ்ரேலிய அரசு அறிவித்தது. ஒஸ்ரேலிய அரசின் திட்டம் சட்டவிரோதமானதென அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு ஜூலியா கிலாட்டின் அரசு முற்பட்டபோதிலும், சிறுபான்மை அரசான அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டைக் கடைப…
-
- 3 replies
- 707 views
-
-
இல்லாத ஒரு முகவரியில் (50 Lothian Road, Festival Square, Edinburgh EH3 9WJ) பொய்யாக ஒரு டிரஸ்ட் இருபதாக சொல்லி பொய் கணக்கு காட்டி மாட்டி கொண்டுள்ளார் இந்த ராஜபக்சே கூட்டாளி. இந்த காசில் இலங்கைக்கு அடிக்கடி விடுமுறையில் போய் உல்லாசமாக இருந்தவருக்கு வெகு விரைவில் வைக்கப்படும் ஆப்பு. விசாரணை தொடர்கிறது. BBC New (Summary): http://www.bbc.co.uk...1013_fund.shtml பி.கு.: இது மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளிலும் சிக்கியுள்ளார் இவர். இந்த பின்னணியில் இலங்கை பிரச்சினையும் ஒன்று. Daily Mail (Detail): http://www.dailymail...s-Grayling.html
-
- 5 replies
- 1.5k views
-
-
மலேசிய கடற்படைக்கு சொந்தமாக கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. நாளைய தினம் வரை இந்த கப்பல் கொழும்பு துறைமகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மலேசிய கப்பலில், 11 அதிகாரிகளும், 39 சிப்பாய்களும் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை 23 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் மற்றும் 175 கடற்படையினருடன் அமெரிக்காவின் கப்பல் ஒன்று இலங்கை சென்றுள்ளது. காலி துறைமுகத்திற்கு அருகில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்புகளை அதிகரித்து கொள்ளும் நோக்கில், பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleVi…
-
- 0 replies
- 714 views
-
-
இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு கிடைக்காத பாதுகாப்பு முல்லேரிய கொலையாளியான துமிந்த சில்வாவிற்கு கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி தான் வைத்தியசாலையில் சிகச்சைப்பெற்று வந்த தருணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விடவும் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொன்ற நபருக்கு தற்போது அரசாங்கம் பூரண பாதுகாப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளைக்கொடி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி அங்கிருந்த ஊடகவியலாளர…
-
- 0 replies
- 628 views
-
-
அமெரிக்க பங்குச் சந்தை நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மென்ஹட்டன் நீதிமன்றில் ராஜ் ராஜரடனத்திற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அமெரிக்க மாவட்ட நீதவான் ரிச்சர்ட் ஹொல்வெல் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பாரிய பங்குச் சந்தை நிதி மோசடி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தரப்பினர் எதிர்பார்த்தனை விடவும் அரை மடங்கிற்கும் குறைவானளவு தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது. ராஜ் ராஜரட்னத்திற்கு சுமார் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதுடன், அவ்வாறான தண்டன…
-
- 0 replies
- 634 views
-
-
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது அக்கிரமம் என சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மேலும் துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர், விமானத்தில் இருந்து இறங்க விடாமல், அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளாரை, விம…
-
- 0 replies
- 553 views
-
-
அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சாஅரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. . பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. . அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிர…
-
- 5 replies
- 806 views
-
-
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அந்தக் கொள்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதால் நாட்டுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பங்குச்சந்தையின் அதிகரிப்பைக் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியாது. சமூக அபிவிருத்திக் கொள்கையை கடைப்பிடிக்கும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் 2 ஆவது மாநாடு நேற்று புதன்கிழமை ராஜகிரியவிலுள்ள மத்திய வங்கி கணக்கியல் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும் ஊவா மாகாண சபையின் உறுப்பினரும் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கப் பொதுச் செயல…
-
- 2 replies
- 1.2k views
-
-
யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் இன்னும் சில மணி நேரங்களில் இது தொடர்பான மேலதிக செய்தியை ஈழதேசத்தில் எதிர்பாருங்கள். http://www.eeladhesa...ndex.php?option
-
- 9 replies
- 1.9k views
-
-
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராம மக்கள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டை துப்புரவு செய்வதற்கு கிராம அலுவலரின் ஊடாக பிரதேச செயலாளரின் அனுமதியினைப் பெற்று கொட்டும் மழையிலும் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் விசேட அதிரடிப்படையினர் எட்டுபேரை அடாவடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்படுகையில் நெடுங்கேணி காவல்நிலைய பொறுப்பதிகாரி அருகில் இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சிவில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு காவல்துறை இருக்கையில் இவர்கள் ஏன் கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றுச் செல்ல வேண்டும் என்று மக்கள் கவலடையந்துள்ளனர். இந்த நாட்டில் சிரமதானம் செய்வதுகூட தவறானதா என்று கேட்கும் கிராம மக்கள், வீதியோரத்தில் இருக…
-
- 2 replies
- 778 views
-
-
சிறிலங்கா அரசு தமிழர்க்கு நல்ல தீர்வை வழங்காது: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Thursday, October 13, 2011, 16:57 சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செனல்-4 வின் இலங்கையின் ‘கொலைக் களம்’ ஆவணக் காணொளி காண்பிக்கப்படுவதற்கு முன்னரே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த செனல்-4 ஆவணக் காணொளியின் தயாரிப்பாளரான கெலம் மெக்யார், தனது …
-
- 2 replies
- 928 views
-
-
முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். முல்லேரியா பகுதியில் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். _ http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 1 reply
- 579 views
-
-
எதிர்வரும் ஒக்ரோபர் 31ம் நாளுடன் உலக சனத்தொகை 7 பில்லியனை எட்டுவதாகவும், சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்காவும் பல சவால்களை சந்திக்கும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பினால் சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. வேலையின்மை அதிகரிப்பதுடன், சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிரச்சினைகளையும் சிறிலங்கா சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடாக சிறிலங்கா மாறி வருவதாகவும், ஐ.நா சனத்தொகை நிதியம் கூறியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிறிலங்காவின் சனத்தொகையில் 10 வீதம…
-
- 1 reply
- 1.3k views
-
-
குச்சொழுங்கையில் நடைபெறும் இலஞ்சக் கலாசாரம் அபிவிருத்தியில் உன்னதமான முன்னேற்றத்தை அடைந்த நாடுகளில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என்பன சீராக நேர்மையாக அமைந்திருப்பதைக் காண முடியும். அங்கு இலஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. குறிப்பாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதில் அந்நாட்டுப் பொலிஸாரின் பங்கும் பணியும் காத்திரமானது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பொலிஸார் இலஞ்சம் வேண்டுவதை இலக்காகக் கொண்டு செயற்படுவர். இலஞ்சம் வேண்டும் போது அவர்கள் சட்டத்தை, ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் போகும். இப்போது யாழ்.குடாநாட்டில் ஒழுங்கைகளில் பொலிஸார் நின்று மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களின் தலைக்கவசம் உள்ளிட்ட விடயங்களை பார்வையிடுகின்றனர். முக்கிய வீதிகளில் கண்டபாட்…
-
- 3 replies
- 868 views
-
-
ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். . இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து …
-
- 10 replies
- 1.5k views
-
-
துமிந்த சில்வாவே தனது கைத்துப்பாக்கியால் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தலையில் சுட்டார் என்று கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மனின் வாகனச் சாரதி பரபரப்பு வாக்கு மூலம் வழங்கியுள்ளார். கார்ச் சாரதியான போல சமன் என்றழைக்கப்படும் லியனகே சமன் சாந்த பெரேரா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத் திலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் என கொழும்பு மேலதிக நீதிவான் பிரசன்ன டி அல்விஸ் முன்னிலையில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுச் கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதியி…
-
- 0 replies
- 713 views
-
-
வழமைபோல் இம்முறையும் பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கே முதலிடம்;ஆகக் கூடிய தொகையாக 22,994 கோடி ஒதுக்கீடு எதிர்வரும் ஆண்டுக்கான உத்தேச வரவு, செலவுத்திட்டத்தில் ஆகக் கூடிய தொகை நிதி ஒதுக்கீடாகப் பாதுகாப்பு அமைச்சுக்கு 22,994 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கடுத்த அதிகூடிய தொகையாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச் சுக்கு 14,456 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கென 12,977 கோடி ரூபாவும், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கென 11,362 கோடி ரூபாவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கென 10,457 கோடி ரூபாவும் நிதி மற் றும் திட்டமிடல் அமைச்சுக் கென 12,421 கோடி ரூபாவும், சுகாதார அமைச்சுக்கெ…
-
- 0 replies
- 553 views
-
-
பிரேம்குமாருக்கு புலி ஆதரவாளர்கள் பணம் வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவு விசாரணை 13 அக்டோபர் 2011 ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு தலைவராகக் கருதப்படும் பிரேம்குமார் குணரட்னத்திற்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் பிரேம்குமாருக்கு பண உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா மற்றும் ஸ்கென்டினேவிய நாடுகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவிற்கு பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களான திமுத்து அட்டிகால்ல மற்றும் வருண ராஜபக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இறுதிப் போரில் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட மன்னார் சிறுவர்களின் நிலை தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்தியது. மன்னாரிலுள்ள சிறுவர் இல்லங்களுக்குச் சென்ற ஆணைக் குழு அதிகாரிகள் சிறுவர் இல்ல இயக்குநர்களுடன் உரையாடியதோடு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் கதைத்து அவர்களுடைய விவரங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது போர் இடம் பெற்ற காலத்தில் நீண்டதூர இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று கடைசியில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் சில சிறுவர்களுடைய தந்தையர்களை பாதுகாப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துக் சென்றுள்ளனர். போரின்போது தாய்இ தந்தையரைப் பறிகொடுத்த சிறு…
-
- 0 replies
- 708 views
-