Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொ…

  2. யாழ் சிறைச்சாலையில் பெண்ணொருவர் செய்த செயலால் வசமாக மாட்டுப்பட்டார்! சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவரே சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள தனது கணவரைப் பார்க்கச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகளின் பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ளார். இதன் போது அவர் கொண்டுவந்த சவர்க்காரத்தினுள் கஞ்சா இருப்பது சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுச…

  3. இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில…

    • 3 replies
    • 584 views
  4. சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM

  5. உழவர் திருநாளாம் தைத்திருநாளை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பானை ஏற்றி பொங்கல் பொங்கியமையை இன்று பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக இருந்தது. விவசாயிகள் அனைவரும் வயலில் விளைந்த அரிசியில் இன்றைய தினம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி செலுத்துவர். அதன்படி வீடுகள், ஆலயங்கள்,வியாபார நிலையங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் பொங்கல் செய்வது வழக்கம். அதற்கமைய இன்றைய தைத்திருநாளிலும் பல்வேறு இடங்களிலும் கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. இதேவேளை, ஆலயங்களிலும் விசேடவழிபாடுகளும் ரதோற்சவமும் இடம்பெற்றன. மேலும் வழமைக்கு மாறாக இம்முறை வெடி ஓசை வானைப்பிளக்க மிகவும் உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. …

  6. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100302_eraa_thurairatnam.mp3

  7. யாழ் உதயன் பத்திரிகையில் இளைய தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கான விமர்சனம் தவறான முறையில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து இன்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகை காரியாலத்திற்கு முன் கூடிய விஜய் ரசிகர்கள் யாழ்ப்பாண மாப்பிள்ளை விஜய்யிடம் உதயன் மன்னிப்பு கேட்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊடகவியலாளர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் நேர்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=101898&category=EntertainmentNews&language=tamil

    • 37 replies
    • 4.4k views
  8. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹரகம ஜனசபையில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நிதியமைச்சரின் சகோதரர் ஜனாதிபதி மற்றும் மற்றொரு சகோதரர் பிரதமர். நிதியமைச்சர் வேண்டுமென்றே இந்த நாட்டை ஏன் வீழ்த்துகிறார்? தன் சகோதரர்களை சிக்கலில் தள்ளுகிறார்? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. “இலங்கையில் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமெரிக்கா முயற்சித்தது. சாலையில் சென்று நின்றோம். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்…

  9. தடுத்துவைக்கப்பட்டோர் மீது சித்திரவதை! தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும்,…

  10. ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை : யாழ். சிறையில் கைதி மீது தாக்குதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

  11. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக வெளிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, புளொட் என்பனவற்றிற்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த சம்பவம் நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல்கள் பலவற்றில், எம்.ஏ.சுமந்திரனின் சில நடவடிக்கைகளை, அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, கண்டித்து வருபவர் சி.சிறிதரன். குறிப்பாக, தன்னை மையப்படுத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், தானே அனைத்தையும் செய்வதை போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்சியின் உள்ளக கூட்டங்களில் சிறிதரன் சுட்டிக்காட்டி வந்…

  12. சமூக வலைத்தள முடக்கத்தை... நீக்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை! சமூக வலைத்தள முடக்கத்தை நீக்குமாறு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில் நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து கைப்பேசி சேவை வழங்குநர்களிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் இன்று காலை அறிவித்திருந்தா…

  13. திங்களும்... நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். https://athavannews.com/2022/1275827

  14. திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் பொறியில் சிக்கியிருக்கும் வேட்பாளர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுங்கள் என அவுஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழக செயலாளர் விக்கிரமசிங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இலங்கைத் தீவில் தமிழர் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து வரும் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தும் வகையில் இனங்கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். சத்திரப் பிரசித்தி வாய்ந்த திருகோணம…

    • 4 replies
    • 708 views
  15. மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்குப் பயணம் Share மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் அவர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலமைகளை அவர் ஆராயவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/34317.html

  16. உறுப்பினர்களை... விலைக்கு வாங்கி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது – விமல்! உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் எப்படி பேச்சு நடத்துவத…

  17. அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு... எதிராக, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நபடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளதற்கு அவரது சொந்த ஊரிலே மக்கள் எதிப்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர். நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என இதன்போது மக்கள் தெரிவித்துள்ளனர். …

  18. கைதி­கள் விடு­விக்க அரசு அறிவுறுத்து ShareTweet தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் சட்­டடி­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கைதி­கள் தவிர்ந்த, ஏனைய கைதி­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அங்கு நில­வும் தாம­தம் கார­ண­மா­கவே கைதி­க­ளின் விடு­தலை பிரச்­சி­னை­யா­ கின்­றது. இவ்­வாறு அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார். அரச தக­வல் திணைக்­க­ளத்தில் அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, அநு­ரா­த­பு­ரம் சி…

  19. சர்வதேசத்தின் பங்களிப்போடு... தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டும் – வேலன் சுவாமி சர்வதேசத்தின் பங்களிப்போடு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கு வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்க் கட்சிகளின் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”தமிழ் கட்சிகளிடையே இன்று இரண்டாவது சந்திப்பு நிறைவடைந்திருக்கிறது. நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தமிழ் கட்சிகள் என்…

    • 5 replies
    • 480 views
  20. ஏப்ரல் 24ல் இந்தியாவில் இடம்பெறவுள்ள மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாட்டின் அரசியலில் ஈழத்தமிழர் விவகாரமும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கட்சிகள் இந்திய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுகின்ற நிலைகாணப்படுகிறது. காங்கிரசின் முன்னால் கூட்டணிக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்துள்ளது. இதேபோன்று தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு மிகப் பெரிய திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ், 1988ல் தனியாகப் போட்டியிட்டது போ…

  21. மட்டக்களப்பு புதிய அரச அதிபராக மா.உதயகுமார்? மட்டக்களப்பு மாவட்ட புதிய அரச அதிபர் நியமனத்திற்கு இதுவரை இருந்துவந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது மட்டுநகர் மாநகர ஆணையாளராக ஏற்கனவே கடமையாற்றி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற மா.உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெற்று விரைவில் கடமையை பொறுப்பேற்கவுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சாள்ஷ் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக இடமாற்றலாகி கடந்ந 01/10/2017,ம் திகதி சென்றபின் முல்லைத்தீவு அரச அதிபரான திருமதி ரூபாவதி கேதீஷ்வரனை மட்டக்களப்பு அரச அதிபராக நியமிக்க சில அரசியல் வாதிகள் முயற்சியில் இறங்கியபோதும் இது கைகூடவில்லை. இந்நிலையி…

    • 0 replies
    • 483 views
  22. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும்... மே 03 ஆம் திகதி, Alert ஆக இருக்கவும்“ பாரிய ஊழல்கள் தொடர்பான... முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன? எதிர்வரும் 03ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. “சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும்.‘ என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அநுர பதிவிட்டுள்ளார். இப்பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்…

    • 1 reply
    • 168 views
  23. சக்தி டிவி செய்திகள் 8PM (19-10-2017)

  24. இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் - ஆணையை பிறப்பித்தார் ஜனாதிபதி நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தற்போது அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/127053

    • 13 replies
    • 834 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.