ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
“ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
மீள்குடியேற்றப்பட்டோரின் உதவிகைள நிறுத்துகிறது அரசு! March 29th, 2012 அன்று வெளியிடப்பட்டது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வந்த உதவிகள் எதிர்வரும் யூன் மாதத்துடன் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக இந்த வேலைத் திட்டம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகத்தின் அனுசரணையுடன் 2007ஆம் ஆண்டு 06ஆம் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சின் இணக்கப்பாட்டுடன் ஐ.நா. அகதிகளுக்கான அலுவலகம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து வந்தது. இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், ஆ…
-
- 0 replies
- 487 views
-
-
அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.7k views
-
-
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடையாது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரணடையாது தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய முறையில் புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சுமார் 12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளிக்…
-
- 6 replies
- 999 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு உருவாக்கம் முழுமையடைந்துள்ளது. கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/63666
-
- 0 replies
- 278 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) 2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலை…
-
- 4 replies
- 507 views
- 2 followers
-
-
அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச Sep 05, 2019 | 2:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் விமானத்தில் வந்த ஆறு அமெரிக்கர்கள், ஹில்டன் விடுதியில் தங்கச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முன…
-
- 3 replies
- 486 views
-
-
கடலில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்; குளத்தில் நீராடிய இளைஞன் பலி; கிணற்றில் வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம் இப்படியான துன்பம் மிகு செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய இழப்புகள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். நீச்சல் தெரிந்திருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்க்க முடியும் என்பது நிறுதிட்டமான உண்மை. எனினும் பொதுவில் நீச்சல் பயிற்சி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் மேலை நாட்டவர்கள் பிள்ளை பிறந்து ஒரு வருடத்தை நெருங்குகின்ற போதே பிள்ளைக்கு நீச்சல் பயிற்சி கொடு க்க ஆரம்பித்து விடுவர். மேலை நாட்டில் நீச்சல் பயிற்சி என்பது கட்டாயமானது. ஒவ்வொரு பிள்ளையும் நீச்சல் பயிற்சியை கட்டாயம் கற்றிருக்க வேண்டும். …
-
- 1 reply
- 1k views
-
-
காலி – திலிதுற தோட்டத்தில் புதுவருட தினத்தன்று தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் கத்திகள், தடிகள், பெற்றோல் குண்டுகள் சகிதம் வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இதேவேளை இந்த சம்பவத்துடன் பிரதேச அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிரதே…
-
- 0 replies
- 681 views
-
-
வெள்ளத்தினால் வவுணதீவு நல்லம்மாமடு அணைக்கட்டு சேதம் - புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1,050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகிறோம். இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் எமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிதும் சேதமடைந…
-
- 0 replies
- 147 views
-
-
பாதாள குழுவின் முக்கிய ஆவணங்கள் பொரளையில் கண்டுபிடிப்பு பாதாள உலக கழவினின் குற்றவாளி ஒருவரது என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை பொரளை காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சற்றிவளைப்பு சோதனையின் போது இவ் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959
-
- 0 replies
- 580 views
-
-
கத்தி படத்தை உதாரணம் காட்டிய ரஞ்சன் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தன் உரையின் போது விஜயின் கத்தி படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் இந்த அமைச்சின் பிரதியமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றுகையில், அண்மையில் தென்னிந்திய இயக்குநர் தயாரித்து நடிகர் விஜய் நடித்த கத்தி படம் பார்த்தேன். அதில் நடிகர் ஒருவர் நாயகன் விஜயைப் பார்த்து கம்யூனிஸ்ட் வாதம் தொடர்பாக சுருக்கமாக விளக்கமொன்றைக் கேட்பார். அதற்கு நாயகன் விஜய் தான் நன்றாக வயிறு நிறைய உண்ட பின்னர் மேலதிகமாக உண்ணும் ஒவ்வொரு உணவும் மற்றையவருடையது. இதுதான்…
-
- 0 replies
- 793 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தீமானித்துக்கதாகத் தெரிவித்துள்ள மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாள நாயகம் கணேஷ் வேலாயுதம், தமது ஆதரவின் ஊடாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். யாழ். ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள், தங்களுடைய நலன்களையே பெற்றுக் கொண்டார்கனெனவும் மக்களுடைய நலன்கள் தொடர்பாக அவரகள் சிந்தித்ததே கிடையாதெனவும் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான ஒரு நிலையினை கருத்தில் கொண்டும் தற…
-
- 0 replies
- 361 views
-
-
61 நாட்களில் மேம்பாலம் அமைத்து வீதி அபிவிருத்தி அமைச்சு சாதனை கொழும்பு பேலிய கொடயில் ரயில் வீதிக்கு மேலாக 300 மீற்றர் நீளமான மேம்பாலம் ஒன்றை 61 நாட்களில் நிர்மாணித்ததன் மூலம்நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசு நிகழ்த்தியிருந்தது. பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தில் சுமார் 300 மீற்றர் நீளமான மேம்பாலத்தை அந்த நாட்டு அரசு 66 நாட்களில் நிர்மாணித்தது. இச்சாதனையையே தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கண்டி பிரதான வீதியில் களனி ரயில் கடவையை ஊடறுத்துச் செல்லும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ஐக்கிய இராச்சியத்தின் 200 கோட…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தென்கொரிய விஜயம், இலங்கைக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுத்தருவதாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிடுகின்றார்.தென்கொரிய விஜயம் தொடர்பில் தெளிவூட்டும் சந்தர்ப்பத்திலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தினைக் கூறினார். கொரியாவின் பாரிய நிறுவனங்களிடம் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அவர்கள் திருப்தி வெளியிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அந்தநாட்டு தொழிலதிபர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் 23,000 இலங்கையர்கள் கொரியாவில் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கையை வருடாந்தம் அதிகரிப்பதற்கு கொரிய அ…
-
- 0 replies
- 364 views
-
-
கோத்தா வென்றாலும் ரணில் தான் பிரதமர் Oct 07, 2019 | 3:25by கி.தவசீலன் in செய்திகள் அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால், ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”ஐதேகவுக்கு இப்போது எந்த தலைமைத்துவப் பிரச்சினையும் எழவில்லை. கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து ஆண்டுகளுக்கு – 2024 வரை, தலைவர் பதவியில் இருப்பார். இது தொடர்பாக எந்தப் பிரச்சி…
-
- 1 reply
- 527 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம். இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களு…
-
- 3 replies
- 636 views
- 1 follower
-
-
வாய்ச்சவடால் அறிக்கைகளால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது 25.03.2008 மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும் பன்னாட்டு நிறுவனங்களும் சுமத்திவரும் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் பெருகிக் குவிந்துகொண்டு போக, அவற்றைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பினால் வெள்ளம்போல பாயவிடப்பட்ட ஏமாற்று அறிவித்தல்களும், அத்தியாயங்கள், அத்தியாயங்களாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளும், உச்ச ஸ்தாயியில் முன்னெடுக்கப்பட்ட பிரசார செயற்பாடுகளும் கடைசியில் பயனின்றித் தோற்றுப் போய்விட்டன என்று ஆங்கில வார இதழ் ஒன்று தனது வாராந்த அரசியல் விமர்சனத்தில் அப்பட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
கணவன் தமிழ் அரசியல் கைதியாக சிறையில்..! கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் பெண் [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 07:46.09 AM GMT ] வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு வைத்து 2009 செப்ரெம்பர் 24 ஆம் திகதி நிர்மலாதேவியின் கணவன் கந்தையா குணநாதன் கைது செய்யப்பட்டார். அதன் போது தனது 7 வயது மகளுடன் முகாமில் தனிமையில் இருந்து விடுதலையாகி தற்போது கோவில்புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 510 views
-
-
புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், புகையிரதத்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் …
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 4 replies
- 1.9k views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷத் தெரிவித்திருப்பது அரசியல் நாடகமென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் பெற்றுத்தரப்போவதாக தெரிவித்திருப்பது தேர்தல் வாக்குறுதியெனவும் அவர் விமர்சித்துள்ளார். "39 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இனவாதம் பேசி தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம…
-
- 1 reply
- 428 views
-
-
நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம் January 19, 2025 9:41 am இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகள் மற்றும் சுற்றியுள்ள நிலம் நீண்ட காலமாகப் பயன்படுத…
-
- 0 replies
- 138 views
-
-
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலர் கிலாரி கிளிங்டனை நேற்றைய தினம் சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவது தொடர்பான அறிக்கை ஒன்று பீரிஸினால் கிளாரி கிளிங்டனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவினை மேலும் அதிகரித்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் அமைச்சர், அமெரிக்க வர்த்தக குழுவினரையும் சந்தித்துள்ளார். காணொளி இணைப்பு..... http://akkinikkunchu.com/new/index.php?option=com_cont…
-
- 0 replies
- 778 views
-