ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். திகதி: 20.08.2010, “எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப்போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப்பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்” (விடுதலைப்புலிகளின் சர்வதேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன்அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால…
-
- 1 reply
- 1k views
-
-
ஆக 20, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 4,763 முறைப்பாடுகள் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்தார். பதிவு
-
- 0 replies
- 565 views
-
-
வடபகுதி மக்களின் வைப்புக்களை மிகவேகமாக கவர்ந்து செல்லும் தென் இலங்கை நிதி நிறுவனங்கள் அவற்றில் 10 விழுக்காடு பணத்தினை கூட அவர்களின் அபிவிருத்திக்காக செலவழிப்பதில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் முன் நாள் மக்கள் வங்கி தலைவர் இராஜன் ஆசிர்வாதம் அவர்கள். நேற்று முந்தினம் அரச ஆணைக்குழுவிற்கு முன்னால் தனது சாட்சியத்தை அளித்த இராஜன் ஆசீர்வாதம் அவர்கள் மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் வடபகுதி மக்களுக்கு அபிவிருத்தி பணிகளில் அவர்கள் நிதியே பயன்படுத்தப்படவேண்டும். வடபகுதி மக்களின் அபிவிருத்தியானது அந்த பகுதி மக்கள் முற்று முழுதாக ஈடுபாடு கொண்டவகையில் அமையவேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய அபிவிருத்தி பணிகள் அவ்வாறு இல்லையெனவும் கூறியுள்ளார். Eelanatham.n…
-
- 1 reply
- 816 views
-
-
மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான அமைப்பின் தொண்டர்கள் வழக்கு தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என மன்னிப்பு சபை கூறியுள்ளது. ஆசியாவிற்கான அதன் பேச்சாளர் ஜொலண்டா பாஸ்கால் அவர்கள் தனது அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தனியான , சுயாதீன விசாரணை குழு ஒன்றினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜொலண்டா. இந்த சர்வதேச விசாரணையினை கொல்லப்பட்ட பணியாளர்களின் சார்பாக வழக்காடி வந்த சட்டவாலர் ரத்தினவேல் அவர்களும் வரவேற்றுள்ளார் Eelanatham.net
-
- 0 replies
- 626 views
-
-
தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது அனலை நிதிஸ் ச. குமாரன் கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்" என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது. குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் …
-
- 0 replies
- 932 views
-
-
. நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-புறக்கணிக்க வேண்டும்: கங்குலி பாய்ச்சல் கொல்கத்தா: ஒரு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இவர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாய்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி. வீரேந்திர ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேண்டும் என்றே நோ பால் போட்டு அசிங்கமாக நடந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கதை நாறிப் போயுள்ளது. அனைத்து முன்னாள், முன்னணி வீரர்களும் இலங்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் செளரவ் கங்குலி இதுகுறித்துக் கூறுகையில், விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் பு…
-
- 10 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ். இளைஞன் விடுதலை! வியாழன், 19 ஆகஸ்ட் 2010 11:04 பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட யாழ். இளைஞன் நேற்று மாலை பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார். நேற்று முன்தினம் பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்…
-
- 1 reply
- 956 views
-
-
Shanghai Cooperation Organisation (SOC) இந்த குழுமத்தில் முழு உதவியே புலிகளை அழிக்க உதவியுள்ளது. இந்த நாடுகளின் அதிசிறந்த தொழில் நுடப உதவியே புலிகளின் ஆயுதபலத்தை நிர்மூலமாக்கியது! குறிப்பாக மனித உடல் வெப்பநிலையை வைத்து கண்ணகாணிக்கும் ராடர் தொழில்நுடபம் முதல் ஆட்லறிகள் மோட்டர்கள் மற்றும் சுடுகலன்களின் இருப்பிடம் அறிந்து உடன் தாக்கும் ஏவுகணைகள் பல இந்த யுத்தத்திற்கு கொடுத்து உதவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் நோக்கு பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தம் வலயத்தில் இல்லாது ஒழிப்பது. இன்று இந்த அமைப்பில் இந்தியா பாகிஸ்தான் ஒரு பார்வையாளராக வந்துள்ளதுடன் இலங்கையும் அங்கந்துவத்தை வேண்டி நிற்கிறது! 2 லட்சம் ஆட்பலம் அமரிக்காவை விஞ்சும் சீனாவின் யுத்த தொழில் நுட்ப உ…
-
- 25 replies
- 3.9k views
-
-
சிறீலங்கா இராணுவத்தில் இணைக்கப்படுகிறார் கே.பி – பிரிகேடியர் பதவி வழங்க அரசு திட்டம் திகதி:18.08.2010 சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் சிறீலங்கா இராணுவத்தில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்க கோத்தபாயா முன்வந்துள்ளதாகவும் கொழும்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் முன்னாள் போரளிகளை ஒன்றுதிரட்டி ஊர்காவல்படை ஒன்றை (துணைஇராணுவக் குழு) அமைப்பதற்கும் அதற்கு கட்டளை அதிகாரியாக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நியமிப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஊர்காவல் படையணியின் முகாம் வன்னியில் அமைக்கப்படவுள்ளது. எனினும் இதந்கு எதிரா…
-
- 27 replies
- 3.1k views
-
-
புதன்கிழமை, 18, ஆகஸ்ட் 2010 (16:45 IST) இலங்கை கோரிக்கை: கனடா நிராகரிப்பு கப்பலில் வந்த தமிழர்கள் அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசின் கோரிக்கையை கனடா அரசு நிராகரித்துள்ளது. சன் சீ என்ற கப்பலில் பிரிட்டீஸ் கொலம்பியா கடற்கரைக்கு இலங்கை தமிழர்கள் சென்றடைந்தனர். அவர்கள் 500 பேரும் வான்கூவர் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கூடாது என இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் கனடா அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கடிதத்தில் தண்ணீர், கழிப்பிடம், படுக்கை, குடிநீர் இல்லாமல் கொடுமையான துன்பத்தில் 4 மாதங்களாக பயணம் செய்து வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்காக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியை கோருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மிக்கா சிங்கப்புலியிடம் தெரிவித்தனர். சந்தேக நபர்களுக்கு விடுதலைப் புலி உறுப்பினரான மலேஷியவைச் சேர்ந்த ராஜன் என்பவர் நிதி வழங்கினார். இவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஒரு மில்லியன் ரூபா அனுப்பியிருந்தார் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். குற்ற புலனாய்வு பிரிவினரின் புலனாய்வு சுருக்க அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர…
-
- 2 replies
- 861 views
-
-
ஐக்கிய நாடுகளின் உதவி இன்றி எதனையும் சாதிக்க முடியாது. அவர்கள் எமக்கு எவ்ளவோ உதவி செய்திருக்கின்றார்கள். இன்னும் அவர்கள் எமக்கு தேவை. ஐக்கிய நாடுகள் சபை எமக்கு பல வழிகளில் உதவியுள்ளது. அவர்களுடன் வேலை செய்ய நாம் என்றுமே மறுத்ததில்லை இவ்வாறு உருக உருக பேசியுள்ளார் பசில் இராஜபக்ஷ. இந்த உருகலின் பின்னால் பல பாரிய நகர்வுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. Eelanatham
-
- 1 reply
- 978 views
-
-
விலங்கு மாட்ட வந்தது போலீஸ் துண்டிக்கப்பட்ட கையுடன் ஈழப்பெண். இலங்கையில் இருந்து 3 மாத கப்பல் பயணத்திற்கு பின்பு கனடா சென்றுள்ள 490 இலங்கைத்தமிழர்கள் தற்போது தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கைது செய்து விலங்கு மாட்டி விசாரித்து வருகிறார்கள். 490 பேரில் 55 குழந்தைகளும், 63 பெண்களும் உள்ளனர். இதில் 6 குழந்தைகள் பெற்றோரை போரில் பறிகொடுத்தவர்கள். 2 பேர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளனர். அவர்களை முகாமுக்கு கொண்டு செல்லும் முன்பு கைது செய்வதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஒரு பெண்ணிடம் விலங்கு மாட்ட கைகளை காட்டும்படி கூறினார்கள். அந்த பெண் ஒரு கையை மட்டும் காட்டினார். மற்றொருகையை காட்டும்படி போலீசார் கூறியபோது போரில் தனது கை துண்டிக்கப்பட்டுவிட்டது என…
-
- 4 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் சதி தொடர்கிறது‐ 19 August 10 05:36 am (BST) கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணிகளிலிருந்து அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி அந்தக் காணிகளைக் கைப்பற்றும் வர்த்தக நடவடிக்கையொன்று அரசியல் தலையீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாசிகுடா உள்ளிட்ட அருகிலுள்ள கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி அவர்களின் காணிகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதுடன் அந்தக் காணிகள் விடுதிகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு அதிக விலையில் விற்பனை ச…
-
- 1 reply
- 471 views
-
-
டொரான்டோ மேயர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர் ரோப் போர்ட்(Rob Ford) சிட்டி டிவி(CP24) இல் நடந்த விவாதத்தில், கப்பலில் வந்த வந்த தமிழ் அகதிகளை மற்றும் வேறு குடிவரவாளர்களை டொராண்டோவுக்குள் அனுமதிக்க முடியாது என்று வாதிடுகிறார். டொரான்டோ வாக்காளர்களே உங்கள் வாக்குகளை தமிழ் சமுகத்திற்கு அதரவு அளிக்கும் வேட்பாளர்களுக்கு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
-
- 4 replies
- 1.3k views
-
-
எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்! எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன. இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
யார் பயங்கரவாதத்தை ஆரம்பித்தார்கள்? நாங்கள்தான்; நாங்கள் அவர்களைக்கொன்றோம், அவர்கள் மனைவிகளை கொன்றோம், பிள்ளைகளை கொன்றோம், அவர்கள் வீடுகளை உடைத்தோம், கடைகளை சூறையாக்கினோம். இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. இவ்வாறு கூறியுள்ளார் மங்கள முனசிங்க. தெற்கில் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மற்றவர் மீது பொறாமையுடனும் அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடும் செயற்பட்டனர். இதன் பின்னர் வடக்கில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் உற்சாகமின்றிச் சோர்வுடன் காணப்பட்டது. அதன் விளைவாகவே ஒரு கட்டத்தில் அனைத்த…
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போருக்கு பிந்திய மீழ் கட்டுமானம் தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் நிருபாமா கலைஞர் கருணா நிதியை சந்தித்து பேசியுள்ளார் 45 நிமிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வருகின்ர கிழமை நாட்களில் இரு உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பிலேயே பேசியதாக குறப்படுகின்றது. இருவரை அனுப்புவது தொடர்பில் பேசினார்களா? அல்லது அனுப்பிய பின்னர் எப்படி அறிக்கை விடுவோம்? அதிகாரிகள் திரும்பி வந்த பின்னர் எப்படி அறிக்கை விடப்போகின்றோம் என்பது தொடர்பில் பேசினார்களா? Eelanatham.net
-
- 2 replies
- 907 views
-
-
அரசை வேவு பார்க்கும் நடவடிக்கையில் கருணா ஈடுபடுத்தப்பட்டார்! பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்த ஒஸ்ரின் சாட்சியம் வியாழன், 19 ஆகஸ்ட் 2010 05:07 . . அரசை வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் கருணாவை தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தினர். ஆனால் அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி அரசுடன் சேர்ந்து கொண்டார் என்று பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று கொழும்பில் சாட்சியம் வழங்கினார். ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது பாதுகாப்பமைச்சுச் செயலாளராக இருந்தவர் இவர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது. செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள ம…
-
- 2 replies
- 669 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் ஏற்பாடு செய்துள்ளன. 950 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து செ…
-
- 0 replies
- 572 views
-
-
http://www.yarl.com/files/100817_parameswaran.mp3 நன்றி: ATBC
-
- 10 replies
- 2.5k views
-
-
ஆக 19, 2010 / பகுதி: செய்தி / செஞ்சோலை மீது கண்வைத்திருக்கும் கே.பி மாவீரர்களின் பிள்ளைகளையும் பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக தேசியத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் இயக்கப்பட்டுவந்த செஞ்சோலையைத் தமது பொறுப்பில் தருமாறு கே.பி இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுள்ளாராம். செஞ்சோலைக்கென வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிதியுதவிகள் வருவதைத் தெரிந்துகொண்டுள்ள கே.பி, இதைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டு குழந்தைகளைப் பராமரிப்பதை நிறுத்திவிட்டு தான் அமைத்துள்ள வடக்குக் கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் (NERDO) என்ற அமைப்புக்கு அந்த நிதிகளைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளார். செஞ்சோலை குழந்தைகளை மன்னார் மாவட்ட பங்குத்தந்தை ஒருவர் பொறுப்பாக இயக்கி வ…
-
- 1 reply
- 959 views
-
-
நாடுகடந்த அரசை உருவாக்கிய நோக்கம் வேறு! விரைவில் உருத்திரகுமார் என்னுடன் இணைவார்! கே.பி பரபரப்புத் தகவல்!!! பிரிவினைவாத நோக்கத்துடனோ அல்லது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் திட்டத்துடனோ நாடுகடந்த அரசை தான் உருவாக்கவில்லை என்றுஇ சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், உருத்திரகுமாரனுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விரைவில் தன்னுடன் உருத்திரகுமாரன் இணைந்து கொள்வார் என்றும், கே.பி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கே.பி கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்: “சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற…
-
- 45 replies
- 3.9k views
-
-
ஆக 19, 2010 / பகுதி: செய்தி / பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது. செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால் மேற்படி …
-
- 0 replies
- 668 views
-