ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். . நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநா…
-
- 10 replies
- 780 views
-
-
அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது. K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons [TamilNet, Sunday, 23 October 2011, 23:13 GMT] As per order issued on the 13th day of October 2011, by the United States District Judge, Colleen Kollar-Kotelly of the District Court of District of Columbia, with respect to Civil Action No. 11-00235 (CKK) Dr. Kasippillai Manoharan, et al. v. Percy Mahendra Rajapakse, the Court Summons and the Complaint are published here in full. The 29-page complaint is published as a single PDF document, and as 29 separate jpg images…
-
- 3 replies
- 1.4k views
-
-
April 17, 2019 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து கோத்தாபயவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில், கடந்த 7ஆம் திகதி கலிபோர்னிய…
-
- 4 replies
- 687 views
-
-
02 AUG, 2024 | 05:24 PM இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதா்களால் உருவாக்கப்படும் பேரழிவுகரமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அவற்றுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை தரமுயர்த்தும் நோக்குடன், Montana National Guardஉம், அமெரிக்க பசிபிக் விமானப்படைகளும், இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொள்கின்றன. மீண்டெழும் தன்மையுடைய, செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு மற்றும் அனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகியவற…
-
-
- 5 replies
- 309 views
- 1 follower
-
-
09 NOV, 2023 | 08:14 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று வியாழக்கிழமை (09) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கிடையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது மற்றும் பயிற்சி தொடர்பான விடயங்கள் கலந்துரைய…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
அமெரிக்க பட இயக்குனர் 'நகோலா பேசலி நகோலா' கைது..?! வன்மையாக கண்டிக்கும் ஈழதேசம்..! கருத்துரிமைக்கு எதிரான கைது இது...! என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..? ;இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்' என்ற படத்தை எடுத்து அதை யூடுயூப் பில் போட்டு அதைப் பார்த்த முஸ்லிம் மக்கள் உலகம் முழுதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சென்னையில் பத்தாயிரக்கணக்கில் அமெரிக்க அலுவலகத்தை முற்றுகை இட்டனர் தமிழக முஸ்லிம் மக்கள். ஒரு மூன்று நாள் சென்னையின் அமெரிக்க தூதரகம் லீவு விட்டு விட்டார்கள் என்றால் அவர்களின் கோபத்தை...பெரிய அளவில் வெளிப்படுத்தி இருந்தார்கள். அப்படி அவர் என்ன தான் அந்தப் படத்தில் முகமது நபியை கேவலப்படுத்தி இருந்தார். முகமது நபி என்பவர் ஒர…
-
- 4 replies
- 819 views
-
-
திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
-சுபுன் டயஸ் பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது' என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59434-2013-02-22-15-55-58.html
-
- 16 replies
- 909 views
-
-
அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் 30 ஜூன் 2013 அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிப…
-
- 2 replies
- 426 views
-
-
அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு ரணிலுக்கு ஆலோசனை பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு செவ்வாய்க்கிழமை, மாலை அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தது. 21/4 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதன் போது, அவர்கள் சிறிலங்கா பிரதமருக்கு விளக்கியுள்ளனர். கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோர…
-
- 0 replies
- 629 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான ருத்திரகுமாரன் விசுவநாதனைச் சந்திக்கும் திட்டமில்லை எனத் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொழும்பிலிருந்து புறப்பட்டுச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அந்நாட்டு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் உட்பட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், அதற்கான தீர்வின் விரைவான அவசியம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர். அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்குச் செல்லும் கூட்டமைப்பினர் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சந்தித்துப் பேசவுள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்க பரப்புரை நிறுவனங்களை நட்டாற்றில் கைவிட்ட மகிந்த ஆட்சி FEB 21, 2015 | 11:43by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன. போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிறிலங்கா வோசிங்டனில் நண்பர்களை வளைத்துப் போடுவதற்காக, பத்தாயிரக்கணக்கான டொலர்களை மாதம் தோறும், இந்த பரப்புரை நிறுவனங்களுக்கு முன்னைய அரசாங்கம் செலுத்தி வந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்தே, அமெரிக்க பரப்புரை நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்ப…
-
- 0 replies
- 358 views
-
-
இரண்டு சிரேஷ்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் சிறீலங்காவுக்கு விஜயம் செய்து அதன் இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவை சந்தித்து புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு வன்னியில் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான மனிதாபிமானப் போர் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி கூறியுள்ளார். புலிகளின் பகுதியில் உள்ள மக்களை விடுவிக்க இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் புலிகளிடம் இருந்து தப்பி வரும் மக்களுக்கு சரியான பராமரிப்பு ஏற்பாடுகளையும் தாங்கள் செய்து கொடுத்துள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இதேவேளை புலிகளின் பயங்கரவாதத் தாக…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்…
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 11 செப்டம்பர் 2012 அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போ…
-
- 6 replies
- 854 views
-
-
அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன் : கோத்தாவுக்கும் எனக்கும் எதிராகவே புதிய சட்டம் : பசில் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டத…
-
- 0 replies
- 213 views
-
-
(நா.தனுஜா) கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க ப…
-
- 1 reply
- 543 views
-
-
இலங்கை போன்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பெரிய நிகழ்வுகளின்போது தாக்குதல்களை நடத்துவது பயங்கரவாதிகளுக்கு இலகுவானதாக இருக்கும். இதன் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்பது பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை. இருந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்க பிரஜைகளுக்கும், இலங்கையில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களுக்கும் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரித்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. எனினும் இலங்கைக்கு பயணிக்கும் தமது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் போதுமானதாக அமையவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்க பிரஜைகளை அவதானத்துடன் இருக்கும் படியும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு ப…
-
- 1 reply
- 683 views
-
-
இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதித் துணைச் செயலாளர் ஸ்டீவ் மான் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்க தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் அமைதி முயற்சிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். ஸ்டீவ் மானின் பயணத்தை அமெரிக்க தூதுவரகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்
-
- 1 reply
- 1k views
-
-
[size=3] [size=4]தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவின்ர் அமெரிக்க குழுவினரை நேற்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பில் கஜெந்திரகுமர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க குழுவினருடனான சந்திப்பின்போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை சர்வதேசம் சமூகம் ஏற்றுக்கொண்டு இதற்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் போராடி வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு இவற்றிற்கு மேலாக தமிழ் மக்களின் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு வளங்களும் சூறையாடப்பட்டு வருகி…
-
- 1 reply
- 435 views
-
-
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய நிர்வாகம் குறித்து வாழ்த்து தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அநுர குமாரவுடன…
-
- 2 replies
- 182 views
-
-
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இல்லை என்று அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அந் நாட்டின் குடியுரிமையை நீக்கிக் கொண்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது டுவிட்டர் பதிவொன்றில் அமெரிக்க பிராஜாவுரிமையை கோத்தாபய ராஜபக்ஷ கைவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றிதழ்களையும் பதிவேற்றியிருந்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் அமெரிக்கப் பிரஜை என்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அதனை கைவிட்டு மா…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்? முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட “அமெரிக்க பிரேரணை” என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும் மாறாக தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் ஆளும் அரசாங்க கட்சிகள் யாவும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளே உள்நாட்டு பிரச்சினையை தீர்க்கவும், அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணவும் அவசியமானது எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளசையாவன… அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பதுபோல் எமது பிரச்சினைகளை நாம் மட்டுமே பேசி தீர்க்க முடியும். …
-
- 2 replies
- 734 views
-