Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவாரா? November 30, 2018 இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே, புதிய பிரதமருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2018/105144/

  2. தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கு சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை [ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 07:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தென்னிந்தியாவில் உள்ள சில அரசியல்கட்சிகள் சிறிலங்கா எதிர்ப்பு உணர்வை இந்தியாவில் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க இத்தகைய பரப்புகளை உடனடியாகக் நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா எதிர்ப்புணர்வுகள் பரப்பப்படுவதால் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் தென்னிந்தியாவில் நெருக்கடிகளை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். …

  3. மீண்டும் ஆட்சிக்காக... மந்தி,ர தந்திரங்களை நாடும் மஹிந்த. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக மீண்டும் மந்திர தந்திரங்களை நாடியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னர் மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டு அதனடிப்படையில் செயற்பட்டார் என கூறப்பட்டது. மேலும் அந்நம்பிக்கைகளில் அடிப்படையில், தனது கைகளில் பல்வேறு விதமான ஆபரணங்களை மஹிந்த அணிந்ததுடன் வஜ்ஜிராயுதத்தை ஒத்த சிறிய ஆயுதமொன்றை தனது கையில் எந்நேரமும் வைத்திருந்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக புலியின் நகம் போலுள்ள சிறிய ரக ஆ…

  4. கீரிமலை ஜனாதிபதி மாளிகையை வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை adminOctober 26, 2023 காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது. அதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியினால், தொழில்நுட்ப பூங்கா உட்பட 8 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை சீமேந்து தொ…

  5. நஞ்சற்ற உணவுப்பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாக வாரந்தோறும் 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் (முழiஉய) கொய்க்கா நிதி அனுசரணையின் கீழ் வேல்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை முறை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் நஞ்சற்ற உணவுப் பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாகவும் வாரந்தோறும் நடைபெறவுள்ள இந்த 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளிலான திட்டம், பிரதேச செயலக வளாகத்தில் இன்று முதற் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. …

    • 0 replies
    • 330 views
  6. மனித எச்சங்களைப் பார்க்கும்போது தமிழின அழிப்பு புலனாகின்றது - அனந்தி சசிதரன் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ள உறவுகளினுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில் கடந்த வாரம் இரும்புக் கம்பியினால் கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் மீட்கப்பட்டமையானது மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு மக்கள் அடிமைகளாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வடக்கு மாகாண மகளிர் மற்…

  7. [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஓகஸ்ட் 2011, 07:50 GMT ] [ அ.எழிலரசன் ] கடந்த காலங்களில் சிறிலங்காவின் யுத்த தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான முதலாவது பயணமாகஅவர்களுக்கு இது அமைந்துள்ளது. 160 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 10 பாடசாலை மாணவர்கள் டில்லிக்குத் தாம் செல்லவுள்ள செய்தியைக் கேட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்தார்கள். இந்தியாவின் சுதந்திர நாளை முன்னிட்டு அங்கு சென்றுள்ள இந்த யாழ்ப்பாணத்து மாணவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் ஒருவார காலத்தில் அந்நாட்டு மாணவர்கள், உணவுவகைகள், வாழ்க்கை முறைமை, வரலாற்று ரீதியான நினைவுச் சின்னங்கள் போன்ற பல்வேறு விடயங்களை அறியவுள்ளனர். "இது உண்மையில் மிகவ…

  8. மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும் மேலும் படங்களுக்கு இதனைகிளிக்செய்யவும்

  9. இரண்டானதா இலங்கை..? டெல்லியில் திடீர் குழப்பம்! வெளியாகும் சிக்கல்கள்! [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 01:22.10 AM GMT ] இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார். இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் பாரிய சவாலாக மாறலாம். சீனா இந்தியா இடையில் முறுகல் ஆரம்பிக்குமா..? எனும் பல விடயங்கள் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்…

    • 0 replies
    • 602 views
  10. தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும் - சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களது கிணறுகளில் மழைநீருடன் சேறும் சேர்ந்துள்ளதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், இதனால் தங்களது நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாம்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…

  11. 27 NOV, 2023 | 04:44 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) நடிகர் அஜித் நடித்த ''சிட்டிசன்'' என்ற படத்தில் ''அத்திப்பட்டி''என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும். மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை அவுஸ்திரேலியாவின் நிறுவனமும், அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழ…

  12. முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களைப் பலவந்தமாகக் குடியேற்றி இப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. இந்த நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களினூடாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடக்குகிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பது இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த பல்வேறு ஆட்சியாளர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியஇ…

    • 0 replies
    • 511 views
  13. பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்! பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.…

  14. ஏராளமான பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தி நிற்க பிள்ளையார் முருகனுடன் சப்பறம் மீதமர்ந்து அடியவர்களுக்கு காட்சி கொடுத்தாள் தெல்லிப்பளை துர்கை அம்மன் thx http://newjaffna.com/index.php

  15. அவுஸ்திரேலியாவிலே அகதித் தஞ்சம் கோரிய தமிழ் ஏதிலிப் பெண்ணொருவர் விரக்தியின் விளிம்புநிலையில் நின்று தனக்கான நீதிக்காக மன்றாடும் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு இச்செவ்வி வழங்கப்பட்டுள்ளது, ரதினி எனப்படும் இந்த ஈழத்துப்பெண் தனது மூன்று வயதுக் குழந்தையுடன் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி கடந்த ஆண்டு வருகைதந்திருந்தார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரிவந்திருந்த நிலையில் தாயகத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஆபத்துக்களையும் தொடர்ந்தும் எதிர்கொண்டதால் தனது குழந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாகப் புறப்பட்டார் ரதனி. அவுஸ்திரேலிய அரசின் புதிய குடவரவுச் சட்டத்தின்படி இத்…

    • 0 replies
    • 733 views
  16. யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் செயற்றிட்டம் ஆரம்பம் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். இதற்கு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானதெனக் குறிப்பிட்டுள்ள அவர், இறந்தவர்களை நினைவுக்கூர இது அவசியமெனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பி…

  17. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்துமா கடற்பிராந்தியத்திற்கான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை-புரட்சி (தாயகம்)- 'யார் இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவைக் கட்டுப்படுத்துவார்கள். இருபத்தோராம் நூற்றாண்டிலே இந்து மாகடலே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். அதுவே உலகின் தலைவிதியையும் தீர்மானிக்கும் மாகடலாகவும் விளங்கும்."- அல்பிரட் மகான் (அமெரிக்க கடற்படை அட்மிரல் 1840-1914) இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையானது தற்போது சர்வதேச மயப்பட்ட பிரச்சினையாக கணிக்கப்படுவதற்கும் பன்னாட்டு சமூகங்களின் தலையீடுகள் பல்வேறு வடிவங்களில் காணப்படுவதற்கும் மிகவும் வலுவான பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றிலே இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே கேந…

  18. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படைக் காடையர்கள் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கவே விடாமல் அட்டூழியம் செய்து வருகிறது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்று மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழ…

  19. யாழில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி – சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் கைது January 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; நேற்று இரவு கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இவ்வழிப்பறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கொள்ளையர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் உருக…

  20. பெரு வெற்றியை பெற்றுத்தரும் வகையில் நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி, மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் அவர்கள் வல்லவர். தலைவர் அவர்களின் போர் நுட்ப முறைகளை இன்று உலக நாடுகளின் இராணுவ மேதைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள், புகழ்கின்றார்கள் என்று "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார். புலிகளின் குரலின் கிளிநொச்சி வானொலி மன்றத்தின் முத்தமிழ்கலை அரங்க நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கரும்புலிகள் நாளை முன்னிட்டு புலிகளின் குரல் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையால் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வினையடுத்து இந்த சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் நடத்தப்பட்டது. …

  21. அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…

    • 5 replies
    • 1.3k views
  22. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்! 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொதுத் தேர்தலை எதிர்வரும் 2025 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் எனக் கூறப்பட்டதுடன், இந்த வருடத்தில் குறைந்தது 3 தேர்தல்களாவது நடத்தப்படும் …

  23. வன்னி இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மற்றும் படையினரிடம் சரணடைந்தவர்களில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அடுத்த வருட ஆரம்பத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியூயோர்க்கில் தெரிவித்துள்ளார். . வன்னி இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,500 போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலைகள் மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் வரையிலானோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யடும் எனவும் கூறியுள்ளார். . சரணடைந்த மற்றும் கைது…

  24. அச்சுவேலி நகர்ப்பகுதியில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தார். தண்டப் பணத்தைச் செலுத்தத்தவறின் 3 மாதகாலம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் கூறினார். அச்சுவேலி நகரப் பகுதியில் போதைப்பாக்கு விற்பனை செய்த கடை உரிமையாளரை கடந்த ஜனவரி மாதம் காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர். கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று, வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பு வாசிக்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார். http://www.tamilmirror.lk/146194#sthash.JwIJKbBH.dpuf

  25. 22 JAN, 2024 | 07:44 PM இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, “நோய்த் தடுப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.