ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 05:00 PM அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் சமீபத்தில் அதிகரித்து வருவதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவதானித்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்பவர்களின் சமூக ஊடகக் கணக்குகளுடன் தொடர்பாடல்களை/ ஊடாட்டங்களை மேற்கொள்வதை அல்லது அவற்றினூடாக வழங்கப்படும் தகவல்களை நம்புவதைத் தவிர்த்து, அமெரிக்கத் தூதரகத்தையோ அல்லது அதன் அதிகாரிகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எந்தவொரு கணக்கினதும் நம்பகத்தன்மையினை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எமது தூதரகத்தின் மிகவும் துல்லியமான மற்றும் மிகவும் புதுப்பிக…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்! வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர் அதன்படி அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன் இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியா…
-
- 1 reply
- 271 views
-
-
அமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்;டுள்ளதாக வெளியான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த விபரங்கள் காணப்படுவதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளத…
-
- 1 reply
- 228 views
-
-
The Toronto Coalition to Stop the War is Toronto's city-wide anti-war coalition, comprised of more than 70 labour, faith and community organizations, and a member of the Canadian Peace Alliance. www.nowar.ca Please forward widely. Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES" Act now! Stop the genocide of Tamils! EMERGENCY RALLY Thursday, January 29 6:00pm United States Consulate 360 University Avenue Toronto TTC: Osgoode or St. Patrick - and - CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West Toronto TTC: St. Clair Pre…
-
- 11 replies
- 2.6k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், யானைகளுடன் வந்த பௌத்த பிக்குகள், தேங்காய்களை உடைத்து எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். கோட்டே, கங்காராமய விகாரையின் பௌத்த பிக்குகள் குழுவொன்றும், விகாரைக்கு வரும் பக்தர்களும் இணைந்து நேற்று அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால், காலி வீதியில் பெருமளவு தேங்காய்களை உடைத்ததால், அந்த வீதி ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கங்காராமய விகாரையில் நடைபெற்ற நவம் பெரகரவுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பெருமளவு யானைகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களால் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்ற…
-
- 3 replies
- 526 views
-
-
அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி கொழும்பில் சுமார் 300 படையினர் குவிப்பு செவ்வாய், 03 மே 2011 07:58 பாகிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அல்-கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பின்லேடனின் மரணத்தை தொடர்ந்து பேரணிகள் நடைபெறலாம் எனக்கருதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்பிரிவின் கலகம் அடக்கும் பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 300 படையினர் அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபடுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையின் நலன்களைச் சீரழிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கை பற்றி கருத்து வெளியிட்ட போதே கோதாபய இவ்வாறு கூறியுள்ளார். மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயகத்தை ஏற்படுத்த, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிகாரங்களைக் கொண்டு எல்லாவற்றையும் செய்த போதிலும், அமெரிக்கத் தூதரகம் அவற்றை வலுவற்றதாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி மீது குற்றம்சாட்டுவது நியாயமற்றது என கோதாபய கூறியுள்ளார். சில வங்குரோத்…
-
- 2 replies
- 684 views
-
-
அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது என அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான எவ்வித தாக்குதல் முனைப்புக்கள் பற்றிய தகவல்களும் கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவ…
-
- 1 reply
- 353 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 341 views
-
-
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார். தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் வகையில், கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. காலையுணவுடன் நடந்த இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை. சிறிலங்கா அதிபருடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளிவிவகாரச் செயல…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி! – விளக்கம் கோர தீர்மானம்!! இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஏ.சிஸன் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து இலங்கை அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து விளக்கம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளின் செய்தியாளர்களைக் கடந்த வாரம் சந்தித்திருந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் தனது கருத்துக்களைத் வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை, மின் கட்டணங்கள் அதிக…
-
- 1 reply
- 641 views
-
-
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வடக்கு மாகாணசபை, பொது அமைப்புகள், உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,“அமெரிக்கத் தூதுவரின் யாழ். வருகை, வடக்கு மாகாண மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை. அவருக்கு எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போது. அதற்கான நிவாரணங்களை அளிப்பதாக எந்த வாக்குறுதியையும் அளிக்கவி…
-
- 0 replies
- 378 views
-
-
டுவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசனை அழைத்து கண்டிக்கும் முடிவை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரணைப்பாலை சென்.அந்தனீஸ் மைதானத்தை, 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று அமெரிக்கத் தூதரகத்தினால், டுவிட்டர் பதிவு ஒன்று கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தப் பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ வலைப்பதிவில் இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்…
-
- 0 replies
- 399 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர எச்சரித்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் ஒன்றில், 2010ம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகளை முதலில் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்குமாறு அம்பாறை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தாக கூறப்பட்டிருந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரே தம்மிடம் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் புற்ரெனிஸ் கூறியுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீடத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நாளை காலை யாழ்ப்பாணம் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், மாலை யாழ்.கிறீன்கிறாஸ் ஹோட்டலில் இந்தச் சந்திப்பை நடத்தவுள்ளார் என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார். இதன்போது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி சார்ந்த முக்கிய விடங்கள் குறித்து பேசப்படும் என்று சுமந்த…
-
- 0 replies
- 397 views
-
-
23 JAN, 2025 | 06:46 PM (செ.சுபதர்ஷனி) நாட்டில் ஏற்படக்கூடிய மருந்து தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் சகல அரச வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான விசேட செயற்றிட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் அவசரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (21) சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன். வட மாகாண விவகாரங்கள் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலை நடத்தினேன். குறிப்பாக, நிலையான தேசிய நல்லிணக்கம் மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துர…
-
- 0 replies
- 286 views
-
-
வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப்பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத்திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினைகள், அதிகரித்துள்ள இராணுவத் தலையீடு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் க…
-
- 3 replies
- 731 views
-
-
அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் By NANTHINI 07 FEB, 2023 | 05:24 PM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட படங்கள் https://www.virakesari.lk/article/147652
-
- 3 replies
- 889 views
- 1 follower
-
-
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்புச்சபைக்கு செல்கிறார்! [Wednesday 2014-07-09 09:00] இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கான அமெரிக்காவின் உதவி பிரதிநிதியாக நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த முடிவு தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிச்சேல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.seithy.com/breifNews.php?newsID=112821&category=TamilNews&language=ta…
-
- 0 replies
- 273 views
-
-
சிறிலங்காவுக்குள் இருக்கும் பிரச்சினையை உள்நாட்டுக்குள்யேயே தீர்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கத் தூதுவர் அதிகளவில் தலையிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அரசியல், சமூக, சமயப் பிரமுகர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டுப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவரிடம், "உங்களின் கருத்துக்களை எங்களிடம் திணிக்க வேண்…
-
- 6 replies
- 690 views
-
-
அமெரிக்கத் தூதுவர் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்துள்ளார்:- 30 அக்டோபர் 2013 சந்திப்பு குறிப்பு குறித்து முதலமைச்சர் மற்றும் அமெரிக்க தூதுவர்ர் ஆகியோர் அளித்த விளக்கம் ஒலிவடிவில் இணைப்பு:- அமெரிககத் தூதுவர் வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கைகுலுக்கும் முதலமைச்சர் மற்றும் அமெரிக்க தூதுவர்களுக்கிடையில் கொழும்பு ரட்மலானை இந்துக் கலலூரியின் முன்னாள் அதிபர் மன்மதராஜனும் காணப்படுகிறார். ஆமெரிக்கத் தூதுவர் சிசன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். வடக்கில் வாழ்வாதாரம் மற்றும் கல்வி அபி…
-
- 7 replies
- 621 views
-
-
அமெரிக்கத் தூதுவர் வன்னி விரைவு: கூட்டமைப்யையும் சந்திக்கிறார் Wednesday, September 21, 2011, 12:08 வன்னியின் இன்றைய நிலவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பியுட்டனிஸ் இன்று அங்கு பயணமொன்றை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது அரச அதிகாரிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிய வருகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னிக்குப் பொறுப்பான கட்டளைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனையும் அவர் கிளிநொச்சியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 1.1k views
-