ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
இலங்கை ஹோட்டலில் அசி்ன் சல்லாபக் கூத்து :சிக்கியது ஆதாரம்.! இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின். அதுமட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களது எதிர்பினையும் மீறி அண்மையில் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்று ராசபக்ச அரசின் விருந்தாளியாக தங்கியிருந்து சமுக சேவையாற்றிய அசின் ஆடிய ஆட்டங்கள் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள இலங்கை சென்ற அசின் கொழும்பு கொட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத வேளையில் ராசபக்சவின் விருந்தாளியாக இருந்தது போக மீதமிருந்த நேரத்தில் தான் இவ்வாறு தொ…
-
- 40 replies
- 19k views
-
-
வெளிநாடுகளின் அழுத்தங்களால், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை! - ஐ.நா பொதுச்சபைத் தலைவரிடம் ஜனாதிபதி மஹிந்த எடுத்துரைப்பு. Top News [Thursday, 2014-05-08 09:51:06] வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ்ஷிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ், நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். இதன்போது, முப்பது வருட யுத்தத்தின் பின் வெற்றி கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த தெளிவுபடுத்தினார். தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அத…
-
- 0 replies
- 460 views
-
-
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் எனச் சிரேஷ்டஅமைச்சர்கள் சிலர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதமானதானால் வரவேற்கத்தக்கவையே. ஏனெனில் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னேற்றம் காண்பதற்கும் அமைதிச் சூழ்நிலை தோற்றுவதற்கும், இது சிலவேளை உதவக்கூடும். ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரு…
-
- 6 replies
- 1.9k views
-
-
‘7 தாய்மார் உயிரிழப்பு’ “வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில், 300 நாட்களையும் தாண்டிய நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு, அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை. அவர்களில் 7 தாய்மார் இறந்துள்ளனர். அவர்கள் இறக்கும்போது கூட, எனது கணவர், பிள்ளைகள் எப்போது வருவார்கள் எனும் கேள்வியுடனேயே இறந்துள்ளனர்” என, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி மு.செல்வராணி கேட்டுக்கொண்டார். “சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த ஏற்புடைய நடவடிக்கையை எடுங்கள்” என்றும் அவர் குற…
-
- 0 replies
- 220 views
-
-
புலிகள் இயக்கத்தில் வேலை பார்த்தவர்களும் புகலிடம் கோரி நியூசிலாந்தில் விண்ணப்பிக்க சந்தர்ப்பம்! வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 08:38 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சொந்தமான சரக்குக் கப்பலில் பிரதம பொறியியலாளராக வேலை பார்த்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்புக் கிட்டி உள்ளது. புலிகளால் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கப்பலில் வேலை பார்த்திருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தை வந்தடைந்தார். அங்கு அகதி அந்தஸ்துக் கோரினார். நியூசிலாந்தின் அகதி அந்தஸ்துக்கான பரிசீலனைகள் சபை இவர் தொடர்பாக விசாரணை நடத்தியது. கப்பலின் ஆயுதக் கடத்தல் நடவடிக்கைகள் குறித்தும், புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிகப்பெரும் பணக்காரர்கள் மட்டுமே கனவு செய்து பார்க்க கூடிய உலகின் அதிநவீன சொகுசு விமானம் நேற்று மான்செஸ்டர் விமான நிலையத்திற்கு வந்தது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு சொந்தமானது இந்த விமானம். A380 எனப்படும் ஏர் பஸ்ஸில் மேல் தளத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்காக சாம்பேன் பார் உள்ளது. இதில் ஒருமுறை பயணம் செய்து விட்டால் போதும் இந்த விமானத்தின் உபசரிப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த விமானத்தின் டாய்லெட் வசதிகள் கூட பிற விமானங்களை விட வித்தியாசமானதாகவே இருக்கும். இதன் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள தாராள இட வசதிகளும் , பிற வசதிகளும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. 500 இருக்கைகளை கொண்ட இந்த சொகுசு விமானம் தினமும் மான்செஸ்டரில் இருந…
-
- 0 replies
- 856 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டை:- 26 மே 2014 (2013 இறுதிப் பகுதியில் இராணுவத் தளபதியுடன் பாதுகாப்புச் செயலர் மலேசியாவில்) தமிழீழ விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று முக்கிய உறுப்பினர்களை மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவு மற்றும் ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்கள், மலேசிய பணம், விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பொரு…
-
- 0 replies
- 674 views
-
-
வவுனியா பிராந்தியத்துக்கான இராணுவ தலைமையகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் சிப்பாய்கள் மூவர் காயம் அடைந்துள்ளார்கள். களஞ்சியத்தைத் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததால் இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. காயப்பட்ட மூவரும் வவுனியா அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10115:2010-09-10-10-26-50&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 698 views
-
-
ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற கூட்டணி உருவாகியது. தற்போது தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈபிஆர்எல்எவ் இற்குமிடையில் ஆசனப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றியுள்ளது. வவுனியா நகரசபைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வேட்பாளர்களை நியமிப்பதற்கு நாடாளுமன்ற உற…
-
- 1 reply
- 288 views
-
-
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மைய…
-
- 0 replies
- 616 views
-
-
2020 ஆம் ஆண்டு வரையில் தேசிய அரசாங்கம் கலையாது பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்கவே தீர்மானம் என்கின்றனர் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்கள் (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் கால எல்லை 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கும். அடுத்த பொதுத் தேர்தலின் பின் னரும் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுக் கவே நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையி லான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு காலம் நிறைவுக்கு வந்தாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாக்குறுதி கள் மீறப்படவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்…
-
- 0 replies
- 159 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாண…
-
- 2 replies
- 369 views
-
-
புலிகளின் சர்வதேச தலைவர்களை நோர்வே ஒப்படைக்க வேண்டும் - அந் நாட்டுப் பிரதமரிடம் மகிந்த கோரிக்கை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 06:31:02| யாழ்ப்பாணம்] norway_mahindaதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தலைவர்க ளை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச, நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கிடம் கேட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 65-வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூ யோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நோர்வேப் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச் சந்திப்பின்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். தமிழீழ…
-
- 10 replies
- 935 views
-
-
அண்மையில் இனக்கொலை நடந்த நாடு - தில்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடக்க விழாவில் இலங்கையணிக்குக் கிடைத்த அறிமுகம். கடந்த இரவு புது தில்லியில் 19 ஆம் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகியது. அதில் ஆரம்ப தொடக்க விழா பெரும் எடுப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவின் ஒரு கட்டத்தில் இப்போட்டிகளில் பங்குபற்றும் நாட்டணிகளை ஒரு இந்திய அழகி வழிநடத்திச் செல்ல அவரைத் தொடர்ந்து அந்தந்த நாட்டிற்குரிய தேசியக் கொடிகளைக் காவும் வீரருரும் அவருக்குப் பின்னால் அந்தந்த நாட்டு அணி வீரர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். இங்கிலாந்து, அவுஸ்த்திரேலியா, நைஜீரியா, நியூசிலாந்து என்று அணிகள் அணிவகுத்துச் சென்றபின்னர் இந்திய அணி மண்டபத்தினுள் நுழைய இசையமைப்புகள் வானைக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
அளுத்கம விவகாரம் தொடர்பில் நேற்று பிரதமர் டி எம் ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றி கலந்து கொண்டு அஸ்வர் எம். பி உரையாற்றினார். அவர் தனதுரையின் போது மேலும் தெரிவித்ததாவது; அளுத்கம சம்பவமானது ஒரு துரதிஷ்டமானது இதனை குறுந்தகவல் மூலமாக சர்வதேச மயப்படுத்தி அரசை வீழ்த்த உள்ளூர் சக்திகள் முற்படுவதாகவும் எனவே இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இவாறான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்தார். http://metromirror.lk/?p=36401
-
- 2 replies
- 492 views
-
-
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும…
-
- 5 replies
- 1.7k views
-
-
நாட்டின் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் நோக்கத்திற்காக செயற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலனாய்வுத் துறை அதிகாரிகள் தமது கடமைகளுக்கு அப்பால் அரசியல் நோக்கோடு ஒருபோதும் செயற்படவில்லை. அவ்வாறு அவர்கள் செயற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுக்கிறேன். எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் தேசிய ப…
-
- 0 replies
- 381 views
-
-
’அரசியலிலிருந்து விலகப்போவதில்லை’ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில், இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எவ்வாறாயினும் அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது நடைபெற்றுவரும் சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அரசியலிலிருந்து-விலகப்போவதில்லை/150-210814
-
- 3 replies
- 389 views
-
-
சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓஸ்லோ குழுவினருக்கு உலங்குவானூர்தி ஏற்பாடு செய்தமை தொடர்பில் சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சுவிஸ், சூரிச்சிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 6 பேர் கொண்ட குழு புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நோர்வே தரப்பினருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை வரைக்கும்தான் உலங்குவானூர்தி ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையிலிருந்து விடுதலைப் புலிகளின் …
-
- 0 replies
- 845 views
-
-
70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி. வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் மூலம் 2009 ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்த இரத்தக்களறி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யமுனாதேவியின் பேரப்பிள்ளைகளில் நான்கு பேர் அவர்களது பெற்றோரை இழந்தார்கள். மற்றைய நான்கு பேரப்பிள்ளைகளுக்கும் தந்தை ம…
-
- 2 replies
- 788 views
-
-
யாழில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணிகள் இல்லை – சபையில் சுட்டிக்காட்டினார் சிறிதரன். காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு குடியிருக்க காணிகள் இல்லாத நிலையில், பளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டினார். இந்த காணிகளை குறிப்பிட்ட மக்களுக்கு வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கும் கடிதம் எழுதிய போதும்…
-
- 0 replies
- 230 views
-
-
சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை இரவோடு இரவாக குடியேற்ற முடியுமானால் வலி வடக்கு பகுதி மக்களை ஏன் இதுவரை மீள்குடியேற்றவில்லை? வலி. வடக்கு மக்களுக்கு இந்த ஆனைக்குழு ஏதாவது நல்லது செய்யுமா? என்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பொதுமகனான சா.தங்கராசா கேள்வி எழுப்பினார். எம்மை அங்கு மீள் குடியேற்றுமாறு கோரி நாம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தோம். அதேகாலப் பகுதியில் தான் வடக்கு, கிழக்கைப் பிரிக்க வேண்டுமெனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வலி. வடக்கில் மக்களை குடியமர்த்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு கிழக்கையும் பிரிக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் வடக்கு கிழக்கு பிரிப்புதொடர்பான தீர்…
-
- 1 reply
- 661 views
-
-
படையினரைத் தண்டிக்க முனைந்தால் கடுமையாக எதிர்ப்போம்! - ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை [Wednesday 2014-07-23 09:00] இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நவநீதம்பிள்ளை நிறுவிய குழுவிற்கு பதிலாக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் நியமித்தமை அரசாங்கத்தின் தகுதியில்லாத நடவடிக்கை என்று ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பில், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபையின் உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில், இந்த செயற்பாட்டின் ஊடாக, இதுவரையிலும் கொண்டிருந்த நிலைப்பாடு, கொள்கை ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்ட…
-
- 0 replies
- 396 views
-
-
எதிர்ப்புக்களும் அவசியம் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை, ஆதரவு வழங்குவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடமான தீர்மானத்தை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அது ஆணித்தரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்…
-
- 0 replies
- 189 views
-
-
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…
-
- 0 replies
- 247 views
-